உத்தப்புரத்தில் இடிக்கப்பட்ட சுவரின் பாதை வழியே நடமாட்டத்தை தடை செய்வதை கண்டித்தும், அரச மரத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரியும், வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்ப்ட்டு சிறையில் அடைக்கப்பட்ட 16 தலித்துகளை விடுவிக்க கோரியும் மதுரையில் சுமார் 500-1000 பேர் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் சிபிஎம் தோழர்கள். டி.கே.ரங்கராஜன் எம்.பி, நன்மாறன் எம்.எல்.ஏ போன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தான் போலிஸ் தடியடி நடத்தி, தலைவர்களை தரதரவென்று இழுத்துச் சென்று தான் யார் என்று நிறுவியது.
இடதுசாரி நண்பர்கள் இந்நிகழ்வில் நிறைய விஷயங்களை கவனிக்கவேண்டும். முதலாவது, இடதுசாரிகள் தாக்கப்பட்டதற்கு எந்தக் கட்சியும் பெரிதாக கண்டனம் செய்யவில்லை. இரண்டாவது, எம்.எல்.ஏ. எம்.பி என்றும் பாராது இருவரும் அடித்து நொறுக்கப்பட்டிருப்பது. மூன்றாவது, அடித்ததை 'தள்ளு முள்ளு' என்று எளிய வார்த்தைகளில் மீடியாக்கள் முடித்துக் கொண்டது. வைகோ, த.பாண்டியன் போன்றோர் இன்று கண்டன அறிக்கைகள் விட்டுள்ளனர்.
உத்தப்புரம் விஷயத்தில் ஜனநாயக முறையில் சிபிஎம் தோழர்கள் வழக்கம்போல் இரண்டுமணி நேரம் ஆர்ப்பாட்டம் என்று, பிள்ளைப்பூச்சியாக உட்கார்ந்துவிட்டுப் போயிருந்தால் இந்தத் தாக்குதல் நடந்திருக்காது. ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின் நீங்கள் முடிவெடுத்து முடியுங்கள் 'அதுவரை' நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருப்போம் என்று போராட்டத்தை தொடர்ந்ததை கண்டிக்கவே இந்தத் தாக்குதல். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீஸ் மாலை 6 மணிக்கே விட்டுவிட்டதை வைத்துப் பார்த்தால் தோழர்களின் 'தொடர்ந்த போராட்டம்' என்ற எண்ணத்திற்கு லேசாக கலைஞர் வைத்த குட்டுதான் இந்தத் தடியடி என்று தோன்றுகிறது.
தாக்கப்படுவதற்கு சற்று முன், டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியை டி.வி.யில் காட்டினார்கள். அதில் அவர் "உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கவேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்டதன் பின்னும் காவல்துறை உத்தபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தி பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.." என்று சொன்னார். அவர் பேசியதன் தொனி 'கலைஞர் சரியாகத்தான் நடந்துள்ளார் ஆனால் அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை தான் இவ்வாறு நடந்துகொள்கிறது' என்பது போன்று இருந்தது. கலைஞரை குற்றமே சொல்லாமல் காவல்துறையை மட்டும் குற்றம் சொல்லவேண்டிய அவசியம் என்ன ? கலைஞர் சொல்லாமலா அவர்களைப் போட்டு அடித்தார்கள் ? ஏன் கலைஞரை நயந்து பேசவேண்டும்? பின்னால் தேர்தல் கூட்டு சேரமாட்டார்கள் என்று பயமா ? டி.கே.ரங்கராஜன் அப்படிப் பேசியது தவறு.
இத்தாக்குதலிலிருந்து இடதுசாரித் தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், கலகம் இன்றி நன்மை பிறக்காது. அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், போராட்டம் என்று 'யாருக்கும் வலிக்காமல்' போராடினாலோ, 'வலியுறுத்தினாலோ' ஆளும் வர்க்கங்கள் 'கண்டுக்காமல்' சரி சரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மரியாதையா கலைஞ்சு போங்க என்று இருப்பார்கள். மீறி நீங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தீர்களாயின் அதன் விளைவு இதுதான். மீறும் போது தான் கலகம் உருவாகும். எனவே நீங்கள் அரசை எவ்வளவு மீறுகிறீர்களோ அவ்வளவு நல்லது.
மாறாக நீங்கள் அரசிடமும், கலைஞரிடமும் பம்முகிறீர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடாமல் பம்மும் திருமா, கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களின் மத்தியில் சி.பிஎம் தலித் மக்களை தம்மிடம் ஈர்ப்பதற்காக இந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அதில் உண்மை இருப்பதால் நாம் அதை ஆதரிக்கவேண்டும். ஆனால் இதைப் போல மற்ற விஷயங்களிலும் இலங்கைப் பிரச்சனை உட்பட தீவிரமாகப் போராடாத வரை, அத்து மீறாதவரை, அது பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ இருக்கட்டும், சாதாரண கீழ்த்தட்டு, கீழ்நடுத்தர மக்களை சிபிஎம் மின் பால் ஈர்ப்பது கடினம்.
இதே போல் அங்கே ‘ஈழப் பிரச்சனை ஐநாவுக்கு அனுமதியில்லை’ என்ற விஷயம் பெரிதாகிய போது நம் தோழர்கள் கருத்து சொல்லவேயில்லை. செந்தமிழ் மாநாட்டின் “அரசியலைப்’ புரிந்துகொள்ளவே தெரியாதவர்கள் போல அங்கு நடந்த கருத்தரங்கில் காரத் பங்கேற்று கலைஞரை வாழ்த்துகிறார். இவையனைத்தும் சிபிஎம் மின் கூட்டணி அரசியல் எண்ணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டவையன்றி வேறு என்ன ? இது போலத்தான் பெட்ரோலிய விலை உயர்வுக்கு எதிரான போராட்டமும். ‘அமைதியாக’ பந்த் நடத்திவிட்டால் அது ஆளுங்கட்சிக்கு வெற்றி. ஏனென்றால் அமைதியான பந்த்தில் அரசு இயந்திரம் பாதிக்கப்படுவதில்லை. அதன் ‘இமேஜ்’ம் பாதிக்கப்படுவதில்லை. பந்த் நடத்தியதால் அரசு பணிந்திருந்தால் பந்த் வெற்றியடைந்தது என்று பொருள். ஆனால் அரசு பணியவில்லை. இந்நிலையில் இப்போது சிபிஎம்மின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?
இதற்கு சிபிஎம்மிடம் சரியான பதில் இல்லை. பந்த் போன்றதொரு மக்கள் இணைந்த போராட்டத்திற்கே அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த தீவிரமான போராட்டம் என்ன ? போராட்ட வடிவம் என்ன ? அப்படியொரு வடிவம் சிபிஎம் வசம் இல்லாத போது மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற விஷயங்களை நடத்தினால் அரசு வழக்கம் போல் இதையும் கண்டுகொள்ளாது விட்டுவிடும். மக்களும் சிறு சிறு சலுகைகளில் மனத்திருப்தி அடைபவர்களாகிவிட்டதால் இந்தவிதப் போராட்டங்களின் மேல் சலிப்பு அடைவர். இந்தக் குறைகளை சிபிஎம் எப்போது களைந்து போராட்டங்களை பல கட்டங்களாக உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் கொண்டு செல்ல முற்படுமோ, நடத்தும் போராட்டத்தின் வடிவத்தின் மூலம் அரசை கோபப்படுத்த, நெருக்கடிக்கு உள்ளாக்க முடியுமோ, அன்று மக்களும் சிபிஎம்ன் பின் திரள்வார்கள். அன்று தீவிர, அதிதீவிர இடதுசாரிகளும், வலதுசாரிகளும் கூட ஆதரவளிக்கக் கூடும். இடதுசாரிகள் தீவிர கம்யூனிஸ்டுகள் போல் குண்டுகள் வைக்க வேண்டாம். ஆனால் அது போன்ற அதிர்ச்சியை, செயலிழந்த நிலையை அரசு அடையுமாறு செய்ய வேண்டும். ஒரு சிறு அதிர்ச்சி கூட ஏற்படுத்த இயலாத ‘போராட்டம்’ ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.
இக்கட்டுரை எழுதிய அடுத்த நாள் காலை செய்தி ஊடகங்களில் மற்றொரு செய்தி. அது சிதம்பரம் கோவிலில் 'நந்தன் பாதை' யை திறக்க வலியுறுத்தி சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முண்ணணியின் சார்பாக அதன் தலைவர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நந்தன் பாதையை இடித்தே தீருவோம் என்ற முழக்கத்துடன் சென்ற தோழர்களை காவல் துறை கோயில் வாயிலில் தடுத்து நிறுத்தியது. மீற முயன்ற தோழர்கள் 'தள்ளு முள்ளு'க்கு ஆளாயினர். அதாவது அடித்து விரட்டப்பட்டனர். பின்னர் நடந்தது தான் கவனிக்கப்பட வேண்டியது. காவல்துறை சிபிஎம் தலைவர்களுடன் 'பேச்சுவார்த்தை' நடத்தியபின் தோழர்கள் வழக்கம் போல தெற்குவாயில் தெருவில் 'சாலை மறியல்' செய்து கைதாகி வழக்கம் போல் மாலையில் வீடு திரும்பினர். சாயங்காலமே கலைஞர் அறிக்கை விடுகிறார். "கோயிலை தீட்சிதர்களிடமிருந்து அரசு மீட்ட போது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அரசை கோயிலை தொடர்ந்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள அனுமதித்ததுடன், கோவிலில் வேறு எதுவும் புதிய கட்டுமானங்களோ அல்லது பழைய கட்டுமானங்களை இடித்தலோ செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது" என்று.
இதில் உண்மையில் நடந்தது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒன்று சிபிஎம் தோழர்கள் தடையை மீறி நந்தன் சுவரை உடைத்து, அதற்கு போலிஸ் அவர்களை உதைத்து கைது செய்து, அதற்கு தீட்சிதர்கள் ஒருபக்கமும் மறுபக்கம் தோழர்களுக்காக தமிழ்நாடேயும் கொந்தளித்து எழுந்திருந்தால் அது ஒரு சரியான போராட்டம். இல்லை 'கோர்ட் தீர்ப்பை நாங்கள் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம் எனவே கலைஞர் சுட்டிக்காட்டிய கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம்' என்று சிபிஎம் போராட்டத்தை வாபஸ் வாங்கியிருந்தால் அது வேறு வகை. ஆனால் இரண்டும் இன்றி சுவரை உடைத்துவிட்டுதான் மறுவேலை என்று போனவர்கள் காவல்துறையின் ஆலோசனையின் பேரில் சுவரை விட்டுவிட்டு தெருவில் வந்து நின்று வழக்கம் போல் ஆர்ப்பாட்டம் செய்து, வழக்கம் போல் கைதாகி, டிவிக்கு போஸ் கொடுத்தபடி காவல்துறை வேனில் ஏறி, பின் வழக்கம் போல் மாலையில் விடுதலையானார்கள் என்றால் இதன் பொருள் என்ன ? முந்திய நாள் மதுரையில் 'அத்துமீறினால்' என்ன நடக்கும் என்று பாடம் கத்துக்கொண்டதன் விளைவா ? நாம் திருந்த முடியுமா ?
அறிவியல். விஞ்ஞானப் பார்வை. மார்க்சியம். தமிழ். தமிழினம். தமிழ் தேசியம். தமிழீழம். இயற்கை விஞ்ஞானம். மனிதநேயம். தாழ்த்தப்பட்டோர் விடுதலை. சித்த மருத்துவம். மனவியல்
Showing posts with label உத்தபுரம். Show all posts
Showing posts with label உத்தபுரம். Show all posts
Wednesday, July 14, 2010
Thursday, August 6, 2009
உத்தபுரம் – தடைச் சுவற்றில் ஒரு சிறிய காற்று இடைவெளி
மீள் பதிப்பு : 28 அக்டோபர் 2009.
5 ஆகஸ்ட் 2009.
உத்தபுரத்தில் 1989 ல் மேல் சாதியினரான பிள்ளைமார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது, தங்கள் கோயிலில் வழிபாடு செய்யக்கூடாது என 600 மீட்டர் நீளச் சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர். தீண்டாமையின் கோரப்பிடியில் அடிக்கடித் தாக்கப்பட்ட தலித்களிடம் ஒரு மிரட்டல் ஒப்பந்தம் செய்து இதுபோன்ற ஒரு சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர் ஆதிக்க சாதியினர். தனி பள்ளிக்கூடம், தனி பாதை, எல்லாம் தனி. தலித் மக்கள் பிள்ளைமாரிடமிருந்து தள்ளி நிற்க, விலகி வாழ கற்றுக்கொண்டிருந்தனர். அரசு இயந்திரமும் இதற்கு வழி செய்வது போல தனிப் பள்ளிக் கூடம், தனி டீக்கடை என்று ‘எல்லாம் நல்லாத் தான் போய்கிட்டிருந்தது..’ 18 வருஷங்களாக, சி.பி.எம்காரர்கள் 2008 ல் தீண்டாமை பற்றி சர்வே எடுக்கும்வரை. அப்புறம் பிடித்தது தலித்துகளுக்குச் சனி. சி.பி.எம் இதை ஊடகங்களில் கொண்டு வர முயற்சித்தபோது ஊடகவியலாளர்கள் போட்டோ ஆதாரம் கேட்டுள்ளனர். சுவரை இவர்கள் போட்டோ எடுத்து வெளியிட பெரிய சலனம் ஏதுமில்லை. பின்னர் வட இந்தியப் பத்திரிக்கைகளும் இதை எழுத, சுவரில் மின்சாரம் பாய்ச்சி வைத்திருப்பதாக எழுந்த தகவலால் விஷயம் சூடானது.
இச்சுவற்றைப் பற்றி கண்டு வெளிப்படுத்தியது சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு. ஆனால் மாநில அரசோ, தலித் தலைவர்களோ இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆதிக்க சாதிக்காரர்கள் அவர்களின் சொந்த இடத்தில் கட்டிக்கொண்ட சுவர் அது. தீண்டாமைச் சுவரல்ல என்று அரசு விளக்கம் வேறு கொடுத்தது. கலைஞரைச் சந்தித்துவிட்டு நேரே உத்தபுரம் போன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உத்தபுரத்து மக்களிடம் பிள்ளைமார் சார்பில் தன்னை சந்தித்துப் பேசி கிருஷ்ணசாமி சொன்ன தீர்வை ஏற்றுக் கொண்டதாகவும் அதை நிறைவேற்றும் வரை பொறுத்திருங்கள் எனவும் வேண்டிக்கொண்டார். இதற்கிடையில் பிரகாஷ் காரத்தை அழைத்து வந்து அவர் முன்னிலையில் சுவரை இடித்து தேசிய அளவில் இப்பிரச்சனையை கவன ஈர்ப்பு செய்ய சி.பி.எம்மின் குழு முடிவு செய்தது. சி.பி.எம் மின் பங்கு இப்போராட்டத்தில் முக்கியமானது. தேசிய அளவில் இது கவன ஈர்ப்புப் பெற ஆரம்பித்ததை உணர்ந்த தமிழக முதல்வர் கலைஞர் 600 மீ சுவற்றில் 150 மீட்டர் நீளச் சுவர்ப் பகுதியை காவல்துறையினர் கொண்டு இடித்துவிட்டார்.
சுவர் சிறிது இடிந்தது. தீண்டாமைப் பிரச்சனை வெளிச்சமானது.
அதைத் தொடர்ந்து பிள்ளைமார்களும், தலித்துகளும் மோதிக்கொண்டனர். பிள்ளைமார்களுக்கு பக்கத்து கிராமங்களிலிருந்தும் தேவர் போன்ற ‘சம’ சாதியினரின் ஆதரவு கிடைத்தது. கூடவே காவல் துறையின் அதிகாரம் பிள்ளைமார்களின் பக்கம். (காவல் நிலையம் இருப்பதே பிள்ளைமார்கள் பகுதியில்தான்; இடத்தில்தான்.). பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பிய பிள்ளைமார்களும் அவர்களுக்குத் துணைநின்ற சுத்துப்பட்டு முக்குலத்தோரும் வியூகங்கள் வகுத்தனர். முதலில் சற்றுத் தள்ளியிருந்த கிராமத்திலிருந்த முத்துராமலிங்கத்தேவர் சிலை மீது முக்குலத்தோர் ஆட்களே செருப்பு மாலை போட்டு விட்டு தலித்துகள் மீது பழிபோட முயல (அந்த ஊரில் இருந்ததே ஒரே ஒரு தலித் தான்) அங்கிருந்த எஸ்.பி அன்பு சமயோசிதமாக மோப்பநாய் கொண்டு மாலை போட்டவனை பிடித்துவிடுவேன் என்று மிரட்ட, அவர்களே தங்கள் ஆட்களைப் பிடித்து பஞ்சாயத்தில் அபராதம் கட்டவைத்து, சிலையை கழுவிவிட்டுவிட்டார்கள்.
பின்னர் ஒரு நாள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகள் திருமண போஸ்டர் பிரச்சனைக்குரிய உத்தபுரம் அம்மன் கோயில் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பிள்ளைமார்களால் உரிமை நிலைநாட்டப்பட்டு தலித்துகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தலித்துகள், தலித் குழந்தைகள் தவறி உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க கோயிலையொட்டி கோயில் மதிற்சுவர் போல் ஒரு சுவர் கட்டப்பட்டிருந்தது. இச்சுவர் தலித் பகுதியிலிருந்து தலித்துகள் கோயிலுக்குள் வருவதை தடுத்தது. கோயில் கும்பாபிஷேகம் நடக்கவிருந்த சமயத்தில் இந்தச் சுவற்றின் மீது வெள்ளையடிக்கப் பட, இதைத் தொடர்ந்து தலித்துகள் கோயிலினுள் புகுந்துவிடுவார்களோ என பிள்ளைமார்கள் பயப்பட்டனர். இருபக்கமும் கற்கள் பறந்தன.
இதை தினமலர் போன்ற பத்திரிக்கைகள் ஆதிதிராவிடர்கள் பிள்ளைமார்கள் தெருவை நோக்கி பெட்ரோல் குண்டு எறிந்தார்கள் அதனால் சண்டை மூண்டது என திரித்து எழுதின. ஆனால் தலித்துகள் கம்யூனிஸ்ட்டுகளின் அறிவுரையால் தற்காப்புக்கு ஆயுதங்களை வாங்காமல் தவிர்த்திருந்தனர். தலித் ஆண்கள் பலரின் மீதும் வழக்குகள் போடப்பட்டு போலீசால் ‘தேடப்பட’ தலித் ஆண்கள் மொத்தமும் தலைமறைவாயினர். ஆனால் காவல் துறையால் எந்த குண்டுகளோ, ஆயுதங்களோ உத்தபுர தலித்துகளிடமிருந்து கைப்பற்ற இயலவில்லை. காவல் துறையின் வழக்கம் எந்த இடத்தில் போராட்டம் தீவிரமடையுமோ, அவ்விடத்தில் தலித்துகளை ‘போட்டுப் பார்ப்பது’ என்பது. அப்படி உத்தபுரம் தலித்துகளை போட்டுப் பார்க்க காவல் துறை ரகசியமாய் முடிவுசெய்துகொண்டது. இதற்கிடையில் தலித் பெண்மணி ஒருவர் இறந்துவிட ஊரில் ஆண்கள் எல்லோரும் தலைமறைவாய் இருந்ததால் பெண்கள் மட்டுமே சேர்ந்து இறந்தவரை அடக்கம் செய்திருக்கிறார்கள்.
அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கலவரம் வெடித்து, இம்முறை காவல் துறையினர் தலித்துகளின் குடியிருப்புகளுள் நுழைந்து வீடுகளில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அவர்கள் வீடுகளிலிருந்த கொஞ்ச நஞ்ச பொருட்களையும் நொறுக்கினர்.
சி.பி.எம் மற்றும் மார்க்ஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் போன்றோர் இதற்காகப் போராடினர். கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் போன்றோர் ஆர்வமாக வந்து சேர்ந்து போராடவில்லை. இவர்களுக்கு சேர்ந்து போராட அழைப்பு விடுத்ததாக சி.பி.எம் தரப்பு சொல்கிறார்கள். திருமாவளவன் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார் (ஏன் சார்?). சி.பி.எம் போன்ற கட்சிகளுடன் சாதிக் கட்சிகள் இணைந்து போராடுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து ஒரு பொதுவான புரிதல்களுக்குள் வரவேண்டும். சி.பி.எம்மோ நாங்கள் கூப்பிட்டும் அவர்கள் வரத் தயங்குகிறார்கள் என்கின்றனர்.
கிருஷ்ணசாமியோ பிள்ளைமார்கள் வம்பு தும்புக்குப் போகாதவர்கள் என்கிற ரீதியில் ஸர்டிபிகேட் கொடுத்தார். பின்னர் பக்கத்து கிராமம் ஒன்றில் அவர் காரசாரமாகப் பேசிச் செல்ல அவரின் கார் தாக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதைக் கண்டித்து எழுமலை கிராமத்தில் அமைதியான முறையில் சாலைமறியல் செய்த தலித் மக்களின் மீது ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி துப்பாக்கிச் சூடு நடத்தி சுரேஷ் என்கிற 25 வயது தலித் இளைஞரை சுட்டுக் கொன்றார். இதற்கு தனியாக அரசு திருப்பதி கமிஷன் நியமித்தது. அந்தக் கமிஷனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் அரசு அதை இன்னும் வெளியிடவில்லை. கிருஷ்ணசாமி இறந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். ஆனால் வேறு எந்தக் கட்சியுடனும் சேர்ந்து இது பற்றி இனிமேல் பேசக்கூடாது என்று சுரேஷின் குடும்பத்தினர் வாயை அடைத்ததாக சி.பி.எம் தரப்பில் கூறப்படுகிறது.
அ.மார்கஸ் போன்றோர் அடங்கிய உண்மை அறியும் குழு உத்தபுரத்தில் நிலவிவரும் தீண்டாமையின் ரத்தக் கீறலை உறுதி செய்தது. உண்மைப் பிரச்சனையான தீண்டாமைப் பிரச்சனையின் மீது இன்னும் ஒரு விவாதமோ, கேஸோ நடக்கவில்லை. ஊரில் இருந்த ஒரு ஆதிக்கசாதியினன் கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை.
இந்நிலையில், சி.பி.எம் சார்பாக, காவல்துறையினரின் அத்துமீறல் தாக்குதல்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால தீர்ப்பாக காவல் துறையின் தாக்குதலில் காயம் அடைந்த தலித்துகளுக்கு மருத்துவ இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கானது திசை திரும்பி பிள்ளைமார்கள் X தலித்துகள் என்பது போய், காவல்துறை X தலித்துகள் என நிறுத்தப்பட்டிருக்கிறது. இவ் வழக்கின் இறுதியில் காவல்துறை மேல் ஏதாவது எச்சரிக்கைகள் விடப்படலாம். காக்கிச் சட்டைகள் சில சஸ்பெண்ட் பண்ண்ப்படலாம். இதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ய வாய்ப்பில்லை. பிள்ளைமார்களும், கோயிலும், தலித்துகளுக்காக திறக்க வழியில்லை. தலித்துகளைத் தாக்கியவர்கள் மீது சட்டங்கள் இதுவரை பாயவில்லை.
ஆனாலும் காற்றுப் புகாத கான்கிரீட் சுவற்றில் இந்தத் தீர்ப்பு ஒரு சின்ன ஓட்டை என்று நினைத்து ஆறுதலடையலாம். இந்தச் சின்ன வெற்றிக்குப் பெருங்காரணம் சி.பி.எம் தான். இந்த ஓட்டை விரிந்து என்று சுவர் முழுதும் இடியும் ?
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சி எதுவும் தெரியவில்லை.
பின்குறிப்பு:
சி.பி.எம்மின் தீண்டாமை ஒழிப்பு ஆர்வங்களின் காரணங்கள் என்ன என்று ஆராய்ச்சியை நாம் பிறகு தனியே செய்து கொள்ளலாம். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனையை முப்பது வருடங்களுக்கு முன் கேலி செய்து அசட்டை செய்த சி.பி.எம் இன்று காலங்கடந்து அப்பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளது. இதனால் முப்பது வருடங்கள் அதன் வளர்ச்சி தேங்கி நின்றது.
தீண்டாமைக்காக இவ்வளவு ஆழமாக இறங்கிப் போராடிய சி.பி.எம் இந்த நூற்றாண்டில் கண்முன்னே நடந்த கொடூரமான இலங்கை இனப் படுகொலைக்கு ஏன் எச்சில் கையால் காக்கை கூட விரட்டவில்லை ? முத்துக்குமாரின் மகத்தான தியாகத்தை மறுதலித்ததன் மூலம் சி.பி.எம் ஆளும் வர்க்கத்திற்குத் துணையாய்ப் போயிற்றே என்பது எங்கள் வேதனை. அதே போல் இலங்கைப் பிரச்சனையிலும் இன்று சி.பி.எம் தேசிய இனங்களின் போராட்டத்திற்கு எதிரான நிலை எடுக்கிறது. அதை இப்போதாவது உணருமா ?
- அம்பேதன்
5 ஆகஸ்ட் 2009.
உத்தபுரத்தில் 1989 ல் மேல் சாதியினரான பிள்ளைமார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது, தங்கள் கோயிலில் வழிபாடு செய்யக்கூடாது என 600 மீட்டர் நீளச் சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர். தீண்டாமையின் கோரப்பிடியில் அடிக்கடித் தாக்கப்பட்ட தலித்களிடம் ஒரு மிரட்டல் ஒப்பந்தம் செய்து இதுபோன்ற ஒரு சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர் ஆதிக்க சாதியினர். தனி பள்ளிக்கூடம், தனி பாதை, எல்லாம் தனி. தலித் மக்கள் பிள்ளைமாரிடமிருந்து தள்ளி நிற்க, விலகி வாழ கற்றுக்கொண்டிருந்தனர். அரசு இயந்திரமும் இதற்கு வழி செய்வது போல தனிப் பள்ளிக் கூடம், தனி டீக்கடை என்று ‘எல்லாம் நல்லாத் தான் போய்கிட்டிருந்தது..’ 18 வருஷங்களாக, சி.பி.எம்காரர்கள் 2008 ல் தீண்டாமை பற்றி சர்வே எடுக்கும்வரை. அப்புறம் பிடித்தது தலித்துகளுக்குச் சனி. சி.பி.எம் இதை ஊடகங்களில் கொண்டு வர முயற்சித்தபோது ஊடகவியலாளர்கள் போட்டோ ஆதாரம் கேட்டுள்ளனர். சுவரை இவர்கள் போட்டோ எடுத்து வெளியிட பெரிய சலனம் ஏதுமில்லை. பின்னர் வட இந்தியப் பத்திரிக்கைகளும் இதை எழுத, சுவரில் மின்சாரம் பாய்ச்சி வைத்திருப்பதாக எழுந்த தகவலால் விஷயம் சூடானது.
இச்சுவற்றைப் பற்றி கண்டு வெளிப்படுத்தியது சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு. ஆனால் மாநில அரசோ, தலித் தலைவர்களோ இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆதிக்க சாதிக்காரர்கள் அவர்களின் சொந்த இடத்தில் கட்டிக்கொண்ட சுவர் அது. தீண்டாமைச் சுவரல்ல என்று அரசு விளக்கம் வேறு கொடுத்தது. கலைஞரைச் சந்தித்துவிட்டு நேரே உத்தபுரம் போன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உத்தபுரத்து மக்களிடம் பிள்ளைமார் சார்பில் தன்னை சந்தித்துப் பேசி கிருஷ்ணசாமி சொன்ன தீர்வை ஏற்றுக் கொண்டதாகவும் அதை நிறைவேற்றும் வரை பொறுத்திருங்கள் எனவும் வேண்டிக்கொண்டார். இதற்கிடையில் பிரகாஷ் காரத்தை அழைத்து வந்து அவர் முன்னிலையில் சுவரை இடித்து தேசிய அளவில் இப்பிரச்சனையை கவன ஈர்ப்பு செய்ய சி.பி.எம்மின் குழு முடிவு செய்தது. சி.பி.எம் மின் பங்கு இப்போராட்டத்தில் முக்கியமானது. தேசிய அளவில் இது கவன ஈர்ப்புப் பெற ஆரம்பித்ததை உணர்ந்த தமிழக முதல்வர் கலைஞர் 600 மீ சுவற்றில் 150 மீட்டர் நீளச் சுவர்ப் பகுதியை காவல்துறையினர் கொண்டு இடித்துவிட்டார்.
சுவர் சிறிது இடிந்தது. தீண்டாமைப் பிரச்சனை வெளிச்சமானது.
அதைத் தொடர்ந்து பிள்ளைமார்களும், தலித்துகளும் மோதிக்கொண்டனர். பிள்ளைமார்களுக்கு பக்கத்து கிராமங்களிலிருந்தும் தேவர் போன்ற ‘சம’ சாதியினரின் ஆதரவு கிடைத்தது. கூடவே காவல் துறையின் அதிகாரம் பிள்ளைமார்களின் பக்கம். (காவல் நிலையம் இருப்பதே பிள்ளைமார்கள் பகுதியில்தான்; இடத்தில்தான்.). பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பிய பிள்ளைமார்களும் அவர்களுக்குத் துணைநின்ற சுத்துப்பட்டு முக்குலத்தோரும் வியூகங்கள் வகுத்தனர். முதலில் சற்றுத் தள்ளியிருந்த கிராமத்திலிருந்த முத்துராமலிங்கத்தேவர் சிலை மீது முக்குலத்தோர் ஆட்களே செருப்பு மாலை போட்டு விட்டு தலித்துகள் மீது பழிபோட முயல (அந்த ஊரில் இருந்ததே ஒரே ஒரு தலித் தான்) அங்கிருந்த எஸ்.பி அன்பு சமயோசிதமாக மோப்பநாய் கொண்டு மாலை போட்டவனை பிடித்துவிடுவேன் என்று மிரட்ட, அவர்களே தங்கள் ஆட்களைப் பிடித்து பஞ்சாயத்தில் அபராதம் கட்டவைத்து, சிலையை கழுவிவிட்டுவிட்டார்கள்.
பின்னர் ஒரு நாள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகள் திருமண போஸ்டர் பிரச்சனைக்குரிய உத்தபுரம் அம்மன் கோயில் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பிள்ளைமார்களால் உரிமை நிலைநாட்டப்பட்டு தலித்துகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தலித்துகள், தலித் குழந்தைகள் தவறி உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க கோயிலையொட்டி கோயில் மதிற்சுவர் போல் ஒரு சுவர் கட்டப்பட்டிருந்தது. இச்சுவர் தலித் பகுதியிலிருந்து தலித்துகள் கோயிலுக்குள் வருவதை தடுத்தது. கோயில் கும்பாபிஷேகம் நடக்கவிருந்த சமயத்தில் இந்தச் சுவற்றின் மீது வெள்ளையடிக்கப் பட, இதைத் தொடர்ந்து தலித்துகள் கோயிலினுள் புகுந்துவிடுவார்களோ என பிள்ளைமார்கள் பயப்பட்டனர். இருபக்கமும் கற்கள் பறந்தன.
இதை தினமலர் போன்ற பத்திரிக்கைகள் ஆதிதிராவிடர்கள் பிள்ளைமார்கள் தெருவை நோக்கி பெட்ரோல் குண்டு எறிந்தார்கள் அதனால் சண்டை மூண்டது என திரித்து எழுதின. ஆனால் தலித்துகள் கம்யூனிஸ்ட்டுகளின் அறிவுரையால் தற்காப்புக்கு ஆயுதங்களை வாங்காமல் தவிர்த்திருந்தனர். தலித் ஆண்கள் பலரின் மீதும் வழக்குகள் போடப்பட்டு போலீசால் ‘தேடப்பட’ தலித் ஆண்கள் மொத்தமும் தலைமறைவாயினர். ஆனால் காவல் துறையால் எந்த குண்டுகளோ, ஆயுதங்களோ உத்தபுர தலித்துகளிடமிருந்து கைப்பற்ற இயலவில்லை. காவல் துறையின் வழக்கம் எந்த இடத்தில் போராட்டம் தீவிரமடையுமோ, அவ்விடத்தில் தலித்துகளை ‘போட்டுப் பார்ப்பது’ என்பது. அப்படி உத்தபுரம் தலித்துகளை போட்டுப் பார்க்க காவல் துறை ரகசியமாய் முடிவுசெய்துகொண்டது. இதற்கிடையில் தலித் பெண்மணி ஒருவர் இறந்துவிட ஊரில் ஆண்கள் எல்லோரும் தலைமறைவாய் இருந்ததால் பெண்கள் மட்டுமே சேர்ந்து இறந்தவரை அடக்கம் செய்திருக்கிறார்கள்.
அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கலவரம் வெடித்து, இம்முறை காவல் துறையினர் தலித்துகளின் குடியிருப்புகளுள் நுழைந்து வீடுகளில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அவர்கள் வீடுகளிலிருந்த கொஞ்ச நஞ்ச பொருட்களையும் நொறுக்கினர்.
சி.பி.எம் மற்றும் மார்க்ஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் போன்றோர் இதற்காகப் போராடினர். கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் போன்றோர் ஆர்வமாக வந்து சேர்ந்து போராடவில்லை. இவர்களுக்கு சேர்ந்து போராட அழைப்பு விடுத்ததாக சி.பி.எம் தரப்பு சொல்கிறார்கள். திருமாவளவன் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார் (ஏன் சார்?). சி.பி.எம் போன்ற கட்சிகளுடன் சாதிக் கட்சிகள் இணைந்து போராடுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து ஒரு பொதுவான புரிதல்களுக்குள் வரவேண்டும். சி.பி.எம்மோ நாங்கள் கூப்பிட்டும் அவர்கள் வரத் தயங்குகிறார்கள் என்கின்றனர்.
கிருஷ்ணசாமியோ பிள்ளைமார்கள் வம்பு தும்புக்குப் போகாதவர்கள் என்கிற ரீதியில் ஸர்டிபிகேட் கொடுத்தார். பின்னர் பக்கத்து கிராமம் ஒன்றில் அவர் காரசாரமாகப் பேசிச் செல்ல அவரின் கார் தாக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதைக் கண்டித்து எழுமலை கிராமத்தில் அமைதியான முறையில் சாலைமறியல் செய்த தலித் மக்களின் மீது ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி துப்பாக்கிச் சூடு நடத்தி சுரேஷ் என்கிற 25 வயது தலித் இளைஞரை சுட்டுக் கொன்றார். இதற்கு தனியாக அரசு திருப்பதி கமிஷன் நியமித்தது. அந்தக் கமிஷனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் அரசு அதை இன்னும் வெளியிடவில்லை. கிருஷ்ணசாமி இறந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். ஆனால் வேறு எந்தக் கட்சியுடனும் சேர்ந்து இது பற்றி இனிமேல் பேசக்கூடாது என்று சுரேஷின் குடும்பத்தினர் வாயை அடைத்ததாக சி.பி.எம் தரப்பில் கூறப்படுகிறது.
அ.மார்கஸ் போன்றோர் அடங்கிய உண்மை அறியும் குழு உத்தபுரத்தில் நிலவிவரும் தீண்டாமையின் ரத்தக் கீறலை உறுதி செய்தது. உண்மைப் பிரச்சனையான தீண்டாமைப் பிரச்சனையின் மீது இன்னும் ஒரு விவாதமோ, கேஸோ நடக்கவில்லை. ஊரில் இருந்த ஒரு ஆதிக்கசாதியினன் கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை.
இந்நிலையில், சி.பி.எம் சார்பாக, காவல்துறையினரின் அத்துமீறல் தாக்குதல்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால தீர்ப்பாக காவல் துறையின் தாக்குதலில் காயம் அடைந்த தலித்துகளுக்கு மருத்துவ இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கானது திசை திரும்பி பிள்ளைமார்கள் X தலித்துகள் என்பது போய், காவல்துறை X தலித்துகள் என நிறுத்தப்பட்டிருக்கிறது. இவ் வழக்கின் இறுதியில் காவல்துறை மேல் ஏதாவது எச்சரிக்கைகள் விடப்படலாம். காக்கிச் சட்டைகள் சில சஸ்பெண்ட் பண்ண்ப்படலாம். இதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ய வாய்ப்பில்லை. பிள்ளைமார்களும், கோயிலும், தலித்துகளுக்காக திறக்க வழியில்லை. தலித்துகளைத் தாக்கியவர்கள் மீது சட்டங்கள் இதுவரை பாயவில்லை.
ஆனாலும் காற்றுப் புகாத கான்கிரீட் சுவற்றில் இந்தத் தீர்ப்பு ஒரு சின்ன ஓட்டை என்று நினைத்து ஆறுதலடையலாம். இந்தச் சின்ன வெற்றிக்குப் பெருங்காரணம் சி.பி.எம் தான். இந்த ஓட்டை விரிந்து என்று சுவர் முழுதும் இடியும் ?
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சி எதுவும் தெரியவில்லை.
பின்குறிப்பு:
சி.பி.எம்மின் தீண்டாமை ஒழிப்பு ஆர்வங்களின் காரணங்கள் என்ன என்று ஆராய்ச்சியை நாம் பிறகு தனியே செய்து கொள்ளலாம். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனையை முப்பது வருடங்களுக்கு முன் கேலி செய்து அசட்டை செய்த சி.பி.எம் இன்று காலங்கடந்து அப்பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளது. இதனால் முப்பது வருடங்கள் அதன் வளர்ச்சி தேங்கி நின்றது.
தீண்டாமைக்காக இவ்வளவு ஆழமாக இறங்கிப் போராடிய சி.பி.எம் இந்த நூற்றாண்டில் கண்முன்னே நடந்த கொடூரமான இலங்கை இனப் படுகொலைக்கு ஏன் எச்சில் கையால் காக்கை கூட விரட்டவில்லை ? முத்துக்குமாரின் மகத்தான தியாகத்தை மறுதலித்ததன் மூலம் சி.பி.எம் ஆளும் வர்க்கத்திற்குத் துணையாய்ப் போயிற்றே என்பது எங்கள் வேதனை. அதே போல் இலங்கைப் பிரச்சனையிலும் இன்று சி.பி.எம் தேசிய இனங்களின் போராட்டத்திற்கு எதிரான நிலை எடுக்கிறது. அதை இப்போதாவது உணருமா ?
- அம்பேதன்
Subscribe to:
Comments (Atom)