Friday, March 20, 2026

வாழ்வின் தருணங்களையும் கலையாக்கிய இரு கலைஞர்கள்...


செர்பியாவைச் சேர்ந்த மேடைக் கலைஞர் மரீனா அப்ரமோவிக்கின்(Marina Abramovic) புகழ்பெற்ற உணர்ச்சிகரமான படைப்பான  The Artist is Present என்கிற கலைநிகழ்வு 2010 ல் நியூயார்க்கில் நடந்தது. 



மரீனாவின் 40 வருட கலைப் படைப்புகளான மேடை நாடகங்கள்,  ஒலிப் படைப்புகள், காணொளிப் படைப்புகள்,  புகைப்படங்கள், தனிநபர் மேடை நிகழ்த்து-கலைகள்(peformance arts),மற்றும் அவருடைய முன்னாள் காதலரும் கலைஞருமான உலாய் (Frank Uwe Laysiepen aka Ulay) உடன் மற்றும் பிற கலைஞர்களுடன் அவர் இணைந்து நிகழ்த்திய கூட்டு நிகழ்த்து-கலைகள் என்று அனைத்து படைப்புக்களையும் சேர்த்து காட்சிப் படுத்திய நிகழ்வு தான் 'The Artist is Present'. மூன்று மாதங்கள் நடந்த இந்த  நிகழ்வில் மரீனாவின் அனைத்து கலைப் படைப்புக்களை பார்ப்பதோடு அவரையும் பொதுமக்கள் நேரடியாக சந்திக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கலைப் படைப்புக்களோடு கலைஞரையும் நேரில் சந்திக்கும் நிகழ்வு நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தில் (MoMA) சுமார் 3 மாதங்கள் (736 மணிநேரம்) நடைபெற்றது.️ அதன் முக்கிய ஒரு நிகழ்வாக மரீனாவை பார்வையாளர்கள்  நேருக்கு நேர் சந்திக்கும் வித்தியாசமான ஒரு நிகழ்வும் இருந்தது. 

அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு அரங்கில் மரீனா ஒரு நாற்காலியில் அசையாமல் அமர்ந்திருப்பார். அவருக்கு நேர் எதிரே காலியாக ஒரு நாற்காலி இருக்கும். பார்வையாளர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த நாற்காலியில் அமரலாம். சந்திக்கலாம். ஆனால் உரையாடக் கூடாது.

பார்வையாளர் சந்திப்பின் விதிமுறைகள்:
பார்வையாளர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர் முன்னால் அமர்ந்திருக்கலாம். ஆனால் பேசக்கூடாது, ஒருவரையொருவர் தொடக்கூடாது. வெறும் கண்களால் மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும்.

மரீனா ஒவ்வொரு நாளும் 8 மணிநேரம் முதல் 10 மணிநேரம் வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும் வரை உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல், கழிவறை கூட செல்லாமல் பார்வையாளர்களை சந்திக்க அமைதியாக அமர்ந்திருந்தார். அவரது கலைப் படைப்புகளை காட்சிப்படுத்திய அந்த 3 மாதங்களும் அமைதியாக அமர்ந்திருந்து பார்வையாளர்களை இப்படி சந்தித்தார்.  

மக்களின் அனுபவம்:
இந்த நிபந்தனைகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் அவர் முன் அமர்ந்தனர். அவரை பார்த்தபடியே உட்கார்ந்திருந்தனர். பல நிமிடங்கள் மரீனாவின் கண்களை உற்றுப் பார்த்தபோது, மக்கள் தங்களுக்குள் இருக்கும் சோகம், வலி அல்லது மகிழ்ச்சியை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதனர். மரீனா அவர்களுக்கு ஒரு 'கண்ணாடி' போல இருந்து, அவர்களின் மன உணர்வுகளை அவர் பிரதிபலித்தார்.

இந்த நிகழ்வின் போது நடந்த மிக முக்கியமான சம்பவம் மரீனாவின் முன்னாள் காதலர் உலேயும் (Ulay)அந்த பார்வையாளர் சந்திப்பு நிகழ்விற்கு வந்ததுதான்.

மரீனாவும் உலாயும் 12 ஆண்டுகள் இணைந்து கலைப் பயணமும், காதல் பயணமும் மேற்கொண்டவர்கள்.  1988ல் அவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்தனர். அதன் பிறகு 20 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ இல்லை. அவர்களுடைய பிரிவையும் கூட ஒரு கலைப்படைப்பாக அவர்கள் உருவாக்கி வெளியிட்டிருந்தனர்.

மரீனா பார்வையாளர்களை சந்திக்க அந்தப் பெரிய ஹாலில் கண்களை மூடி அமர்ந்திருக்கும்போது, உலாய் அவருக்குத் தெரியாமல் வந்து எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். கண்களைத் திறந்து பார்த்த மரீனா, அதிர்ச்சியில் உறைந்து போனார். எந்த வார்த்தைகளும் பேசாமல் கண்களாலேயே இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டனர். விதிமுறையை மீறி, உலாயின் கைகளைத் தொட்டு அவர் அழுத அந்த ஒரு நிமிடம் உலகையே நெகிழச் செய்தது.

இந்த கலை மக்களுக்கு என்ன சொல்கிறது..?
இந்த அவசரமான உலகில், ஒருவருக்கொருவர் நேரத்தைச் செலவிடுவதும், அமைதியாக ஒருவரின் கண்களைப் பார்ப்பதும் அருகிப்போய்விட்டது.

இருத்தல்" (Presence) என்பது எவ்வளவு வலிமையானது என்பதையும், வார்த்தைகள் இன்றி மௌனத்தின் மூலமே ஆழமான அன்பைப் பரிமாற முடியும் என்பதையும் இக்கலை விளக்கியது.

மரீனாவும் உலேயும் சந்தித்த அந்த நிகழ்வு கீழே...

The Artist is Present.



மரீனா - உலாய். The Great Wall Walk.

மரீனாவும் உலாயும் 1988-இல் பிரிந்தபோது, அதை கலைப்பூர்வமாக அறிவிக்க சீனப் பெருஞ்சுவரில் (The Great Wall Walk)மேற்கொண்ட அந்த வித்தியாசமான பிரிவினைப் பயணம் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமா?

மரீனா மற்றும் உலாயின் காதல் மற்றும் கலைப்பயணம் எவ்வளவு தீவிரமானதோ, அதே அளவு அவர்களின் பிரிவும் உலகத்தையே வியக்க வைத்தது.

1988-இல் அவர்கள் மேற்கொண்ட அந்த கலைப் பயணத்தின் பெயர் "தி லவ்வர்ஸ்" (The Lovers).

இதோ அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிவின் பின்னணி:
அவர்களது காதலை தங்கள் காதலை உலகிற்கு வித்தியாசமாக அறிவித்து செய்துகொள்ளத் திட்டமிட்டனர். அதை ஒரு கலையாகவே வெளிப்படுத்தினர். அதன்படி அவர்கள் இருவரும் சீனப் பெருஞ்சுவரின் இரு முனைகளிலிருந்தும் கிளம்பி ஒருவரை நோக்கி ஒருவர் நடந்து வந்து, நடுவில் வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்வதாகத் திட்டம். 

ஆனால், சீனாவிடம் இந்த நடைப் பயணத்துக்காக அனுமதி பெறுவதற்குள் 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டு, பிரிவது என்று முடிவெடுத்துவிட்டனர். திருமணத்திற்காகத் திட்டமிட்ட அதே பயணத்தை, அவர்கள் தங்களின் பிரிவை (Breakup) அறிவிக்கும் கலைப் பயணமாக மாற்றினார்கள்.

அதன்படி,
மரீனா: மஞ்சள் கடலின் கரையில் (Shanhaiguan)இருந்து சீனப் பெருஞ்சுவரில் கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
உலாய்: கோபி பாலைவனத்தின் (Gobi Desert) பகுதியிலிருந்து சீனப் பெருஞ்சுவரில் மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.

இறுதிச் சந்திப்பு
இருவரும் கரடுமுரடான மலைப்பாதைகள் மற்றும் கடுமையான வானிலையைக் கடந்து தலா 2,500 கிலோமீட்டர்கள் நடந்தனர். நடுவில் இருந்த விடுதிகளில் தங்கினர். சரியாக 90 நாட்களுக்குப் பிறகு, அவர்களின் பாதைகளின் நடுப்பகுதியில் சீனப் பெருஞ்சுவரில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.

அவர்கள் சந்தித்துக் கொண்டபோது, ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்து அழுதனர். அப்படி சிறிது நேரம் சிரிப்பு, அழுகை, உணர்ச்சிப் பெருக்கு போன்ற கலவையான உணர்வுகள் எழ நின்றிருந்தனர். கைகுலுக்கியபடியே நின்றிருந்த அவர்கள், மீண்டும் ஒரு வார்த்தை கூட பேசாமல் எதிர் திசையில் நடந்து சென்றனர். அதுவே அவர்களின் அதிகாரப்பூர்வமான பிரிவாக அமைந்தது.

ஏன் இது ஒரு சிறந்த கலையாகக் கருதப்படுகிறது..?
சாதாரண மனிதர்கள் சண்டையிட்டோ அல்லது வெறுப்பிலோ பிரிவார்கள். ஆனால், ஒரு நீண்ட கால உறவை இவ்வளவு பெரிய தியாகம் மற்றும் பயணத்தின் மூலம் "கௌரவமாக", கலை வடிவமாக முடிவுக்குக் கொண்டு வந்தது இதுவே முதல் முறை. காதலைப் போலவே பிரிவையும் மிக உயர்ந்த கலையாக அவர்கள் மாற்றிக் காட்டினர்.

மரீனாவும் உலேயும் தங்கள் பிரிவுப் பயணத்தை கலை வடிவமாக உருவாக்கிய , The great wall walk இணைப்பு கீழே.



இந்தக் கடைசி சந்திப்புக்குப் பிறகு சுமார் 22 ஆண்டுகள் கழித்துத்தான்,  முன்பு குறிப்பிட்ட "The Artist is Present" நிகழ்வில் அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

An Interesting article about Marina and Ulay's life together.


Marina and Ulay. About their great wall walk.


Marina's works. In MoMA website.  


Saturday, March 15, 2025

புதிய கல்விக் கொள்கை 2025. மும்மொழிக் கொள்கை என்கிற வேஷம் போட்டு வந்திருக்கும் இந்தித் திணிப்பு.





தற்போது வந்துள்ள பாஜகவின் புதிய மும்மொழிக் கொள்கை என்பது நேரு காலத்திலேயே கொண்டு வரப்பட்ட இந்தியை மூன்றாவது மொழியாக திணித்த கல்விக் கொள்கையின் மேக்கப் போட்ட வேறு வடிவம் ஆகும்.

70 வருடமாக இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசுகளான காங்கிரஸும் தற்போது பாஜகவும் தொடர்ந்து முயன்று வந்துள்ளன.

உண்மையில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவதுதான் இந்தியாவை ஆளும் சங்கிகளின் திட்டம். அது ஆர்எஸ்எஸ்ன் கோட்பாடுகளில் எழுதப்பட்டு இருக்கும் திட்டம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களில் பெரும்பாலோர் பிராமணர் மற்றும் உயர்சாதியினர். அவர்களில் பெரும்பாலோர இந்துத்துவ அமைப்புகளான ஆர்எஸ்எஸ் போன்றவற்றில் ஈடுபாடு அல்லது தொடர்பு கொண்டவர்கள். அம்பேத்கர் மட்டுமே ஒரு தலித். ஆனால் அவர் மட்டுமே அவர்கள் எல்லோரையும் விட படித்தவர். அறிவாளி. அம்பேத்கரை சட்டம் இயற்றும் குழுவின் தலைவராகப் போட்டது நேரு மற்றும் காந்தியடிகளின் அழுத்தத்தாலேயே. இவை எல்லாவற்றையும் தாண்டி அரசியலமைப்பு சட்டம் 343லியே இந்தி வலியுறுத்தப்படுகிறது. தென் மாநிலங்கள் போராடிய பின்புதான் ஆங்கிலமும் இருக்கட்டும் என்று சேர்த்துக் கொண்டார்கள்.

2019 ல் கஸ்தூரிரங்கன் என்கிற பிராமணர் தலைமையிலான குழு இந்த புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியது.

ஏன் முன்று மொழி வந்தது ?  சுதந்திரம் அடைந்தபோது ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்தது. அரசு அலுவல்கள் இப்போதுவரை பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான்.

இந்த 70 வருடங்ஙளில் ஆங்கிலம் உலக அளவில் முக்கியமான அறிவியல் மொழியாக வளர்ந்துவிட்டது. உலகின் பெரும்பாலான நாடுகளிடையே தொடர்பு மொழியாக ஆங்கிலம் வந்துவிட்டது. ஆங்கிலத்தின் இந்த பெரும் வளர்ச்சி ஆங்கில மொழியை தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டது. இந்தி மொழி இன்னும் அதே வளர்ச்சியில்லாத நிலையிலேயே தொடர்கிறது. தமிழ் கூட அறிவியல் வார்த்தைகள் சேர்த்து தன்னை புதிதாக வளர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

பெருமளவு அறிவியல் மற்றும் அனைத்து உலக முன்னேற்றங்களின் கருவியாக , உலக மக்களின் தொடர்பு ஊடகமாக வளர்ந்து கொண்டே வருகிறது ஆங்கிலம். இதே ஆங்கில மொழியை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் தாய் மொழியை முதல் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் படித்தால் இந்தியாவையே உலகத்துடன் இணைத்துவிட முடியும். இந்தியாவில் மாநிலங்களிடையேயான மொழிப் பிரச்சனைக்கு ஆங்கிலம் மிக எளிய தீர்வாக அமையும்.

ஆனால் அதைச் செய்ய சங்கிகள் விரும்பவில்லை. அவர்களுடைய நோக்கம் இந்தியாவில் இருந்து ஆங்கிலத்தை விரட்டிவிட்டு அங்கே சமஸ்கிருதத்தை கொண்டு வருவதாக ஆகிப் போனது.

அதனால் தான் மும்மொழி என்று மூன்றாவதாக ஆங்கிலத்தை தள்ளிவிட முயல்கிறார்கள்.

மும்மொழியை சொல்லி  ஏற்கனவே இந்தியைத் திணித்த சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ சிலபஸ்கள் எல்லாம் ஒன்றிய அரசின் கல்வித் திட்டங்கள்.அதன் மூலம் படித்தால் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் பலரும் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தேடி ஓடினார்கள். (இன்றைக்கு நிலைமையே வேறு. அரசுத் துறைகளை வரிசையாக விற்றுக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு. அரசுத்துறை வேலைகளே இல்லை. குறைந்த படியே இருக்கின்றன. இதில் எங்கே போய் ஹிந்தி படித்து ஒன்றிய அரசில் வேலை வாங்குவது )

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இருந்தாலும், நடைமுறையில் அந்த மூன்றாவது மொழியாக ஹிந்தியே கற்றுத் தரப்படுகிறது.

எப்படி ? மூன்றாவது மொழியாக தமிழ்நாட்டில் தமிழை ஒருவர் விருப்ப பாடமாக படிக்க. வேண்டும் என்றால் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் வேண்டுமல்லவா ?

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து சொச்ச கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சிபிஎஸ்ஈ பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழ் சொல்லித் தரும் ஆசிரியர்கள்  இல்லை. வட மாநிலங்களில் இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களில் ஹிந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் கற்றுத் தரப்படுவதில்லை. இதுதான் அவர்கள் மும்மொழிகளை அமல்படுத்தும் லட்சணம்.

ஆக, இவர்கள் நோக்கம் இவர்கள் செய்யும் செயல்களில் தெளிவாக தெரிகிறது. மும்மொழி என்று இந்தி பற்றி பேசாமல் இருப்பதாலேயே இது மும்மொழிக் கொள்கை ஆகிவிடாது.

நேற்று வரை அசைவம் சாப்பிட்ட நரி இன்று முதல் நான் சுத்த சைவம். நான் இந்தியே சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் அதை நம்ப நாங்கள் ஆட்டுக் கூட்டமல்ல.

இருமொழிக் கொள்கையில் ஆங்கிலத்தில் பாஸ் செய்ய முடியாமல் அதில் பெயிலாகி பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்தியவர்கள்‌ ஏராளம்.

ஆங்கிலம் உலகளாவிய இணைப்பு மொழி. அதைப் படித்தால் நல்லது. ஆனாலும் கூட ஆங்கிலத்தை படித்து பாசாக முடியாமல் பெயிலாகும் மாணவர்கள் இருக்கும்போது ,

இந்தியையும் மூன்றாவதாக ஒரு மொழியாக சேர்ப்பதால் அதிலும் பாசாக முடியாமல் பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்துபவர்கள் எண்ணிக்கை இன்னும் பல மடங்குகளாகும்.

ஏதோ சில மாணவர்கள் இயல்பாகவே பல மொழிகளை எளிதில் கற்க முடிபவர்களாக இருப்பதால் எல்லா மாணவர்களும் மூன்று மொழி நான்கு மொழி படிக்கும் வல்லவர்கள் என்பதாக பில்டப் செய்து, மூன்றாவதாக ஒரு மொழியைப் படித்து பாசாகியே தீரவேண்டும் என்று அவர்கள் வாழ்க்கையையே பாழாக்குவது சரியா. 

மூன்று மொழிக் கொள்கையே தவறானது என்று நாம் கேள்வி கேட்கிறோம். இவர்கள் மூன்று மொழி தானே ஈசியா எல்லாரும் படிச்சிடலாம் என்பதும், அதில் இந்தியை மூன்றாவதா எல்லாரும் படிச்சிடுவாங்க என்று நைசாக திணிப்பதும் எப்படி மாணவர்கள் கல்வியை மேம்படுத்தும் ?  உண்மையில் நிறைய மாணவர்களை பள்ளிப் படிப்பை தாண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவே புதிய கல்விக் கொள்கை  வடிகட்டியாக பயன்படுகிறது.

 புதிய கல்விக் கொள்கை மூலம் 3,5,8 வகுப்புகளில் வடிகட்டும் முறை 

மூன்றாவது ஐந்தாவது எட்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்கள் அத்தோடு படிப்பை நிறுத்த செய்யும் ஏற்பாடே ஆகும். முன்பெல்லாம் மாணவர்களை பெயிவாக்கும் முறை இருந்தது. பெயிலான மாணவர்கள் அதே வகுப்பை மீண்டும் படிக்க வேண்டும். தன் வகுப்புத் தோழர்கள் மேல் வகுப்புக்கு போய்விட தான் மட்டும் தன்னை விட இளம் வயதினருடன் மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் அவமான நிலையால் பெயிலான மாணவர்கள் அத்தோடு பள்ளிப்படிப்பை நிறுத்தினர். இதைத் தடுக்கவே கலைஞர் இனிமேல் பத்தாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் யாரையும் பெயிலாக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

மாணவனின் கல்வி தரமாக இருக்க வேண்டும் என்பது இரண்டாவது விஷயம். முதல்‌ விஷயம் அவன் 10 வருடங்கள் பள்ளியில் வந்து படிக்க வைப்பது. பள்ளி அவனுக்கு பாடம் தவிர பல சமூக பண்புகளையும் கற்றுத் தரும் ஒரு இடம்.

சங்கிகள் எப்போதும் தரம் தரம் என்றே சொல்லி ஏழை எளிய மாணவர்கள் படிப்பதையே கெடுக்க‌ நினைப்பார்கள்.

குலக்கல்வி:

ராஜாஜி 1960 களில் வெளிப்படையாக குலக்கல்வி என்று திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது அதற்கு வேறு கலர் பூசி தொழில் கல்வி என்று பெயிண்ட் அடிக்கிறார்கள்.

இந்தக் கல்வியிலும் மாணவன் தனது குடும்பத்தினர் செய்யும் குலத்தொழிலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறான்.

அதாவது கூலிவேலை செய்பவரின் மகன் பள்ளி நேரத்தில் மதியான பாடத்திற்கு பதிலாக அப்பாவோடு சேர்ந்து கூலி வேலைக்கோ அவர் செய்யும் வேறு எந்த வேலைக்கோ செல்லலாம். அப்பாவின் அல்லது சித்தப்பாவின் தொழிலை மாணவன் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வேறு ஒரு வக்கீலிடம் சென்று அவரிடம் வேலை பார்த்து வக்கீல் தொழிலை கற்றுக்கொள்ள நினைத்தால் முடியாது. புரிகிறதா ?

புதிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளுக்கு எதிரானது:

ஆம். வட இந்தியாவில் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலம் எதுவுமே கிடையாது என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு வட இந்திய மாநிலத்திலும் சுமார் மூன்‌று முதல் ஐந்து‌ வகையான இந்தி அல்லாத மொழிகள் தான் தாய்மொழிகளாக பேசப்பட்டு வருகின்றன.

ஹிந்தி என்கிற மொழியே இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளைக்காரரால்‌ உருவாக்கப்பட்டது.

வடமாநில மொழிகளின் பொதுவான மூலங்களை வைத்து தேவநாகரி எழுத்து வடிவத்தை எடுத்து எழுத்து உருவாக்கி வந்தது தான் இந்தி மொழி. 2025 கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநிலங்களின் மொழிகளை விட்டுவிட்டு, இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஆக்கியதால், இந்த 2025 ஆம் வருட கணக்கெடுப்பின் படி, 220 வட இந்திய மொழிகள் அழிந்து போய்விட்டன. இன்னும் சுமார் 800 மொழிகளுக்கு மேல் அழியும் நிலையில் உள்ளன.

 போஜ்பூரி, ஹரியான்வி, மராத்தி , டோக்ரி, ராஜஸ்தானி, மைதிலி, விரசு போன்ற மொழிகள் அழிந்த வடஇந்திய தாய்மொழிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்.

எனவே இந்தித் திணிப்பு தென்னிந்தியாவை மட்டுமல்ல வட இந்தியாவையே பாதித்திருக்கும் விஷயமாகும்.

இப்போது தமிழ்நாட்டின் எதிர்ப்பை கண்டு வடமாநிலங்களும் தங்கள் தாய்மொழியை பாதுகாக்க வேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டன.

இந்திய அரசியலமைப்பு சட்டமே பிராமணர்கள் பெரும்பான்மை கொண்ட உயர்சாதியினரால் உருவாக்கப்பட்டது. அதில் இருந்த ஒரே அறிஞர் மற்றும்  சிந்தனையாளர் அம்பேத்கர் மட்டுமே. அவரே கூட இந்த ஆரியக் கூட்டங்களின் அழுத்தத்தில் எதை பொது மொழியாக வைக்க வேண்டும் என்கிற சிந்தனையில் கொஞ்சம் குழம்பித்தான் போனார்.

எனவே பெரும்பான்மை ஆரியர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இதுபோன்ற இந்தியை, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் பிரிவுகள் நிறைய உண்டு.

அவற்றை எல்லாம் நீக்க வேண்டும். கல்வி‌ மீண்டும் மாநிலங்களின் உரிமைப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதுவே இந்தியா பல்வேறு இனங்களும் சேர்ந்து வாழும் ஒரே நாடாக தொடர வழிசெய்யும்.

இப்படி இந்தியை பிற‌ மாநிலங்கள் மேல் மறைமுகமாக திணித்தால் இந்தியா துண்டு துண்டாக உடைந்து போகும்.

அதுதான் நீங்கள் விரும்புவதா ?