Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

Monday, November 25, 2024

தளபதி ஜெயம். போராளியின் இறுதி வெடி !





எல்லாம் முடிந்துவிட்டது.

முன்னால் கடல்.
பின்னால் நிலம்.

இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம்.
நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள்.
எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.

வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள்.
சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம்.
எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது.
திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம்.

அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை.
‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’
கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும்.

நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள்.

பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள்.
அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ?
உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும்.
சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம்.

ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கிவிடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை.
எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில்.

அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம்.

ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும்.
இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது.

அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது?
காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேவல.

நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர்கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம்.

இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ?ஆண்டாண்டுகாலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத்தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ?
எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது..

வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை.

ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம்
‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’
என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார்.

என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன்.
இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பட்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது.

இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன்.

எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன்.
இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ?

எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை.

எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது.

எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள்.
உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம்.
உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும்.

மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும்.
எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும்.

விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள்.
இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும்.
எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன்.
‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’

வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?!

அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும்.

‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’

இருவரும் தயாரானார்கள்.
குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது.
வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார்.

பட்ட்டீர்ர்….பட்ட்டீர்ர்.. !

‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘

என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை.

பிரிகேடியர் ஜெயம் வீரவணக்கம்-விம்பகம் | ஈழவிம்பகம்\ Eelam Images

———————————————————————-

இக்கட்டுரை ஜெனரல் ஜெயம் அவர்களின் போராட்டத்தின் கடைசி நாள் பற்றியது. விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் ஜெனரலாக இருந்தவர். ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர். இவரது மனைவி நளா. இவரும் ஒரு போராளி. தங்களது இரு குழந்தைகளான சிந்துசை மற்றும் துவாரகனை இயக்கமும் மக்களும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டு இருவரும் போராடி வீரமரணம் அடைந்தார்கள். 

ஜெனரல் ஜெயம் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
https://eelamhouse.com/?p=2173

Friday, October 2, 2015

ஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் !

ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்தீர்மானத்தில்,
  • இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • அத்துடன், காமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  தலைப்பில் போர்க்குற்றம் என்கிற வார்த்தையே இல்லை. இந்த தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு  அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கிரீஸ், லுத்வியா, மான்டினிக்ரோ, போலந்து. ருமேனியா, மாசிடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. நாடு கடந்த ஈழ அரசும், இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையும், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துள்ளன.
இத்தீர்மானத்தைப் பற்றி ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர், சீனா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா, கானா, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள்  உரையாற்றினார். இதை ஓட்டெடுக்கக்கூடத் தேவையில்லாமல் நிறைவேற்றியபின் இந்தியாவின் பிரதிநிதி பேசினார்.
பன்முகத் தன்மையுள்ள நாடாக இலங்கை இருக்க இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி 1980களில் பாடிய பல்லவியையே திரும்பப் பாடினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சிம்பிளாக கதையை முடித்து விட்டார்கள். அப்படியென்றால் கொல்லப்பட்ட லட்சம் தமிழர்களும் பயங்கரவாதிகளா?
இலங்கையின் மீதான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையே முன்மொழிகிறது. நீதி எந்த அளவிற்கு வெளிவரும் என்பது இதிலிருந்தே தெரிகிறது. 
இலங்கையை கழுவும் மீனில் நழுவும் மீனாக தப்பிக்க வைக்க புத்திசாலித்தனமான வார்த்தைகளைப் போட்டு இயற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் முக்கியமான தகிடுதத்தங்கள்.
காமன்வெல்த் - காமன் வெல்த் நாடுகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், சீனா போன்ற ஈழப் போரில் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்ற அரசுகள் கொண்ட அமைப்பு. இந்த காமன்வெல்த்திலிருந்து நீதிபதிகளை அனுப்பி அவர்களை 'சர்வதேச நீதிபதிகள்'என்று கண்துடைப்பு விசாரணை செய்யவே காமன்வெல்த்  அமைப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறிசேனா அரசு - அமெரிக்க அரசு முந்தைய ராஜபக்சே அரசை போர் புரிந்த அரசாகவும் தற்போதைய சிறிசேனா அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அரசாகவும் தந்திரமாகக் குறித்து தீர்மானத்தில் பேசுகிறது. ராஜபக்சே புலிகளுடன் போர் என்று எல்லாத் தமிழர்களையும் கொன்ற போது அவரிடம் ராணுவ அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இலங்கை அரசின் அதிபர் சிறிசேனா. பின் எப்படி சிறிசேனா அரசு நியாயமாக விசாரணை நடத்தும் என்று நம்புவது ?
இலங்கையுடன் இணைந்து - அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வந்த இந்த ஆலோசனையை இந்தத் தீர்மானம் முன்மொழிந்திருக்கிறது. அதாவது திருடனைக் கூப்பிட்டு 'அவனே அவனை விசாரித்து அவனை தண்டித்துக் கொள்ளவேண்டும்' என்று தீர்ப்பு வழங்குவது போன்றது இது. திருடன் தன்னையே தான் ஒழுங்காக விசாரிக்கிறானா என்று மொழி தெரியாத ஊரிலிருந்து நான்கு பெருசுகள் வந்து இதைக் கண்காணிக்கும்.
இவ்வளவு மோசமான நிலைமை தமிழர்களுக்கு உலகில் ஏற்ப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலையை அவர்களை ஆளும் இந்தியாவே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சிங்கள ராணுவத்துடன் இந்தியா இணைந்து போர்ப் பயிற்சி செய்தது. போன மாதம் ஒரு போர்க்கப்பலை இலங்கை கடற்படைக்கு தானமாக வழங்கியது இந்தியா தான். இப்படி தமிழருக்கு பச்சைத் துரோகம் செய்யும் இந்தியாவும் மோடியும் ஒரு நாளில் இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்.

Thursday, September 17, 2015

போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம் தேதி புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் உசைன் ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சம் உள்நாட்டு விசாரணையை மறுதலித்து, மாறாக பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது இலங்கைக்கு வைக்கப்படும் நெருக்கடியாகும். ஆனால் இதில் எவ்வளவு தூரம் விஷயங்கள் வெளிவரும் என்பது கேள்விக்குறியே.

இதுதவிர அறிக்கையிலுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
இறுதிகட்ட போரின்போதும், போருக்கு முன்பாகவும், அப்பாவி மக்கள், இலங்கை ராணுவத்தாலும், விடுதலை புலிகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்தவர்களையும் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தங்களுக்கு எதிராக செயல்பட்டோரை விடுதலை புலிகள் கொன்றுள்ளனர். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்குவர். இரு தரப்பிலுமே மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும், ஒருவர் கூட போர்க்குற்றத்திற்காக இலங்கையில் தண்டிக்கப்படவில்லை.

இலங்கை ராணுவ வீரர்கள், தங்களால் கைது செய்யப்படும், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இறுதி போர் முடிந்த பிறகு, இலங்கை ராணுவத்தினர் அதிக பாலியல் குற்றங்களில் ஈடுட்டுள்ளனர். இந்த பாலியல் பலாத்காரங்களை, ஒரு தண்டனை முறையாக செய்திருக்கின்றனர். விடுதலை புலிகளோடு தொடர்புள்ளவர்கள் என்று தெரிந்தால் அவர்களை இழிவுபடுத்தும் செயலாகவும் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அச்சம், வெட்கம் போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டோர் தங்களது பாதிப்பு குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை முழுமையாக கண்டறிய முடியவில்லை. ஆனால் பெருமளவில் இக்குற்றங்கள் நடந்துள்ளன. இசைப்பிரியா, பாலச்சந்திரன், நடேசன் போன்றோரை சிங்கள ராணுவம் படுகொலை செய்தது தெளிவாகியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி, இலங்கை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். சில பலாத்காரங்களும், அதையொட்டிய டார்ச்சர்களும், மனித குலத்திற்கே எதிரான அளவுக்கு மோசமாக இருந்துள்ளன.

'வெள்ளை வேன்' கலாசாரம் என்று அந்த நாட்டில் அழைக்கப்படும், ஆள் கடத்தலும், அதைத்தொடர்ந்த சித்திரவதைகளும் நின்றபாடில்லை. உலக அளவில் அதிக பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நாடு இலங்கை. ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த இலங்கை அனுமதிப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதையொட்டி தமிழக சட்டசபையில் ஈழப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஏகமனதாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவில் தீர்மானம் இயற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அமெரிக்காவின் இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடு விஷயங்களைப் பட்டியலிடுவது போலத் தோன்றினாலும் இதன் உண்மையான போக்கை அனுமானிக்க வசதியாக உள்ளது.

இந்த அறிக்கையில் அமெரிக்கா தற்போதை சிரிசேனாவின் அரசை பாராட்டியிருக்கிறது. அதே சமயம் முந்தைய அரசு போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது எனக்குறிப்பிடுகிறது. இது ஈழப்படுகொலைகள் அத்தனைக்கும் ராஜபக்சேவை மட்டும் கட்டம் கட்டி காட்டிவிட்டு பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழர் X சிங்களர் இனப்பிரச்சனையை வெறும் போர்க்குற்றமாகச் சுருக்கி முடிக்கிறது. விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளாகக் கருதப்படாமல் போர்க்குற்றம் புரிந்த ஒரு தீவிரவாதக் குழுவாகவே காட்டப்படுகிறார்கள். ஜெயவர்த்தனேயிலிருந்து தற்போதைய ரணில் வரை அனைவரும் தமிழனத்திற்கு எதிராக அநீதியாகச் செயல்பட்டவர்களே !

இந்த விசாரணையில் தமிழர்களை அழித்ததில் இந்தியாவின், அமெரிக்காவின் மற்றும் சீனாவின் பங்கும் மறைக்கப்படும். இதில் நிலைநாட்டப்படுவது அமெரிக்காவின் நீதியாக மட்டுமே இருக்கும். தமிழர்கள் கிடைத்த நீதியை வைத்து சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். தமிழினம் இலங்கையில் அமைப்பு ரீதியாக அழிக்கப்படுவதை இந்த அறிக்கையும் அதன் விளைவுகளும் கண்டுகொள்ளவே போவதில்லை.

Tuesday, September 15, 2015

ஈழப் படுகொலைகள், போர்க்குற்றம் – ஐ.நா வின் கள்ள அழுகை !

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 30-வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. கவுன்சிலின் தலைவர் ஜெத்ராட் உல் உசேன் அதில் ஈழப் படுகொலைகள் பற்றி பேசியதாவது: “இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இறுதிகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளன. பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மனித உரிமை விவகாரங்களில் காட்டும் அக்கறை வரவேற்கத் தக்கது. அதேநேரம் அந்த நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை புதன் கிழமை வெளியிடப்படும். அப்போது சில கடுமையான முடிவுகளும் அறிவிக்கப்படும்.” என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் இந்த அறிக்கை இலங்கை அரசிடம் கடந்த வெள்ளிக்கிழமையை அளிக்கப்பட்டிருக்கிறது. 6 நாட்களில் இலங்கை பதில் அளிக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இலங்கை தரப்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமர வீரா பங்கேற்றுள்ளார்.

மங்கள சமரவீரா ஐ.நா அறிக்கை பற்றி கூறியதாவது: “தென் ஆப்பிரிக்காவைப் பின்பற்றி உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும், இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க அரசின் ஆலோ சனையைக் கோரியுள்ளோம். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியல் சாசனம் வரையறுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இலங்கை அரசு சார்பில் சுதந்திரமான விசாரணை அமைப்பு அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தாலே இதன் போலித்தன்மை தெரியும். முதலாவதாக ‘போர்க் குற்றம்’ என்கிற வார்த்தை. இரு நாடுகளுக்கிடையே தான் போர் நடைபெற இயலும். இலங்கையில் நடந்ததோ உள்நாட்டில், கிளர்ச்சியாளர்களான விடுதலைப் புலிகளுடனான சண்டை மட்டுமே. இந்த உள்நாட்டுச் சண்டையே இரு நாடுகளுக்கிடைப்பட்ட போர் போல நடத்தப்பட்டிருப்பதிலிருந்து தமிழர்கள் வேறு நாட்டவராக, எதிரிகளாகவே நடத்தப்பட்டனர் என்பது தெளிவு. அதனாலேயே இன்னும் தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிற்கிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி அவர்களுக்கான பகுதிகள் சிங்களர் வசமாக்கப்படுகின்றன.

ஐ.நா. கவுன்சில் தலைவர் ஜெத்ராட் போர்க்குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன என்று பொதுவாகத் தெரிவித்துள்ளார். அதே சமயம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனாவை பாராட்டியுள்ளார். இதற்கு விசாரணை கமிஷனை இலங்கை அரசே அமைக்கப் போகிறது. அதாவது தான் செய்த குற்றங்கள் பற்றி தானே விசாரிக்கப் போகிறது. இதன் முடிவு என்னவாக இருக்கும் ?

முடிவு தமிழருக்கு சாதகமானதாக இருக்காது. சிங்களச் சார்பு ராஜபக்சே பலிகடாவாக்கப்பட்டு அவர் மேல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும். அதே சமயம் தமிழர் அழிப்புக்கு இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து செயல்பட்டு விசாரணையை ஒப்புக்கு நடத்தி முடிக்கும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடரும். இந்திய நிறுவனங்களுக்கு இலங்கையில் கான்ட்ராக்டுகள் பல இதற்கு லஞ்சமாகக் கிடைக்கும். இந்திய அரசு தமிழருக்குச் செய்யும் துரோகம் தொடரும். அது மோடியோ அல்லது மன்மோகனோ அல்லது வேறு யாரோவாக இருந்தாலும் சரி.

Monday, March 23, 2015

காலம் தாழ்த்தும் தந்திரம் வாளேந்திய சிங்கள சிங்கத்தின் அரசியல் போர்வாள்! - ஜெயந்தரன்

காலம் தாழ்த்தும் தந்திரம்
அரசியலில் காலம் தாழ்த்தும் தந்திரம் (Delaying Tactics) என்பது ஒருவகை யுத்தமுறையாக பின்பற்றப்படுகிறது. கால தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும். (Justice delayed is justice denied) என்பதற்கு அப்பால் அது நீதி நியாயம் உரிமை என்பனவற்றிற்கான கட்டமைப்பையே சல்லடையாக்கி விடுகிறது. பின்போடுதல் என்பதன் பொருள் இல்லை என்பதாகும். அதிக தாமதம் அதிக தீங்கானதாகும். சிங்களத் தலைவர்கள் தமிழரின் உரிமைகள் தொடர்பான விடயங்களை பின்போடுவதன் மூலம் அதனை தனித்து பின்பு பையவே இல்லாது அழித்துவிடுகிறார்கள். ஒன்றை அதிகம் தாமதப்படுத்துவதன் மூலம் அதனை அதற்குரியவர்களுக்கு தீங்கானதாக்கிவிடுகிறார்கள்.

காலதாமதப்படுத்தல் என்பது எப்போதும் அளவால் பெரிய இனத்திற்கு சாதகமானதாகவும் அளவால் சிறிய இனத்திற்கு பாதகமானதாகவும்
அமைந்துவிடுகிறது. ஆதலால் ஈழத்தமிழர் விவகாரத்தில் சிங்களத் தலைவர்கள் எப்போதும் காலதாமதப்படுத்தல் தந்திரத்தை ஈழத்தமிழருக்கு
எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக எப்போதும் வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிங்கள தலைவர்களிடமும் ஆட்சியாளர்களிடமும்
அரச இயந்திரம் அவர்களது கையில் இருப்பதினால் அதனை அவர்கள் ஒரு முக்கிய கருவியாக்கொண்டு அரச இயந்திரமற்ற தமிழ்மக்களை
காலதாமத்தால் இலகுவாக தோற்கடித்திட முடியும். அதாவது அரச இயந்திரத்தின் கூரிய வாளுக்கு தமிழர்கள் கொடுக்கும் காலதாமத வாய்ப்பு
இலக்காகி வெட்டுண்டு அந்த அரச இயந்திரத்தின் பாரத்துக்குள் அது நசிந்து அழிந்துபோய்விடும். ஆதலால் அரச இயந்திரம் உள்ளவர்களுக்கு
காலதாமதம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்போது அது இயல்பாகவே தமிழரின் இலக்கை அழித்துவிடும்.

இனவெறுப்பை தூண்ட  பௌத்தமதத்தை உபயோகப்படுத்துதல்
சிங்கள அரச இயந்திரம் தெளிவான சித்தாந்தங்களாலும் கோட்பாடுகளாலும் அதற்கு பொருத்தமான நடைமுறைகளினாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசின் அரசியல் யாப்பானது பின்வரும் மூன்று விடயங்களை அப்படியே உள்வாங்கி அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு வெளியான பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையை அப்படியே நிறைவேற்றிய யாப்பாக
இந்த யாப்பு காணப்படுகின்றது. அதாவது பௌத்தத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது (Betrayal of Buddhism) என்ற தலைப்புடைய இந்த
அறிக்கையானது எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் பௌத்தத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை
வற்புறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பௌத்தத்தை அரச மதமாக்கவேண்டும் என்றும் பௌத்த சாசன அமைச்சை உருவாக்க
வேண்டும் என்றும் பௌத்த நிறுவனங்களும் அமைப்புக்களும் ஓங்கி குரல் ஒலித்தன. இந்த அறிக்கை 1956ஆம் ஆண்டு தேர்தலை நிர்ணயிப்பதில்
பெரும் பங்கு வகித்தது. இவ்வறிக்கையின் அபிலாசையை அரசியல் யாப்பு ரீதியாக 1972ஆம் ஆண்டு யாப்பு உட்கொண்டிருந்தது. இதனை 1978ஆம்
ஆண்டு அரசியல் யாப்பு மேலும் வலுவுடன் முன்னெடுத்தது.

பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனை பேணிப்பாதுகாப்பதும் கட்டிவளர்ப்பதும் அரசின் பொறுப்பும் கடமையும் என்று
இந்த யாப்பு கூறுகிறது. இதன் மூலம் ஏறக்குறைய பௌத்தம் அரச மதம் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது என்பதே உண்மை.1953ஆம் ஆண்டு டி.சி.விஜயவர்த்தன எழுதிய விகாரையில் புரட்சி (Revolt in the Temple) என்ற நூலும் அதே ஆண்டு வெளியான ஆதர் விஜயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்க பாஷை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் 1956ஆம் வெளியான மேற்படி பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இணைந்து சிங்கள மக்களினதும் சிங்கள தலைவர்களினதும் அரசியல் மனப்பாங்கை தீவிர வலுவுடன் வடிவமைத்தனர். இம்மூன்று நூல்களும் இன மத விரோதங்களையும் சகிப்புத்தன்மையின்மையையும் பரந்து பட்ட சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவதில் பெரும் பங்குவகித்தன.

மஹாவம்சத்தின் பங்கு
ஏற்கனவே நீண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுப் பகை உணர்வை சுமந்த ஒரு நூலாக மகாவம்சம் காணப்படுகிறது. அந்த நூலில்
இருந்து இன மத பகைமையும் விரோதமும் கருவாக பெறப்பட்டு நவீன இனவிரோத வரலாற்றுக்கு ஏற்ப வடிவமைப்பட்டன. சிங்கள அறிஞர்களினதும் ஆராய்ச்சியாளர்களினதும் எழுத்தாளர்களினதும் தீவிர பங்களிப்புடன் இனவாத அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்டது.
ஆதலால் இந்த அரச இயந்திரமானது தமிழின வெறுப்பையும் அழிப்பையும் தமது இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்ற வகையில் தமிழின பகைமையும் தமிழினத்தை அழிக்கும் மனப்போக்கும் சிங்கள மக்களின் மனங்களில் ஒரு தர்மமாக நியாயமாக கடமையாக வளர்ந்துள்ளது. இதனை பிரதிப்பலிப்பதும் நிறைவேற்றுவதும்தான் எந்த ஒரு சிங்களத் தலைவர்களினதும் எந்த ஒரு சிங்கள அரசாங்கத்தினதும் பணியாகிறது. அதலால் சிங்கள அரச இயந்திரம் அந்த அரச இயந்திரத்திற்கு பின்னால் உள்ள மூளைகள் அதற்கு இசைவான நிர்வாக கட்டமைப்புக்கள் இவற்றை முன்னெடுக்கவல்ல தலைவர்கள் அதன் வழி அரசாங்கங்கள் என்ற அனைத்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரித்துப்பார்க்காது அனைத்தையும் ஒரு திசை வழி இலக்கென பார்க்க வேண்டும்.

அரசியலை மேடையில் காட்சியளிக்கும் தலைவர்களின் சந்தர்ப்பவாத வார்த்தைகளுக்கு உள்ளால் அரசியலை பார்க்காது அதனை அரச இயந்திர
கட்டமைப்புக்கு உள்ளாலும் அந்தக் கட்டமைபுக்குரிய மூலச் சித்தாந்தம் கோட்பாடு என்பனவற்றிற்கு ஊடாகவும் அது வரலாற்று நடைமுறையில்
ஈட்டியிருக்கும் வெற்றி அடைந்திருக்கும் ஸ்தானம் என்பவற்றிற்கு ஊடாகவும் எடைபோடவேண்டும். அப்படி எடை போட்டால் நுனிப்புல் மேயும்
அரசியல் கண்ணோட்டத்திற்கு உட்படாமல் வெறும் சலசலப்பு தளம்பல் அரசியலுக்கு பலியாகாமல் ஏமாற்று வித்தைகளுக்குள்ளும் காலம் தாழ்த்தல்களுக்கு உள்ளும் சிக்குண்டு அழியாமல் ஈழத்தமிழரை பாதுகாப்பதற்கான வழிகளைத் தேட முடியும்.

ராஜபஷ எனும் சுனாமி
ராஜபக்ஷ அரசாங்கம் ஓர் அகால தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வி ஒரு பெரும் அதிசயம் போல் தோன்றுகிறது. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இந்த தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதேவேளை சிங்களமக்கள் மத்தியில் இருந்து ராஜபக்ஷவுக்கு 60 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. ராஜபக்ஷ தோல்வியடைந்தது அதிசயம் போல் தோன்றுவதை விடவும் உண்மையான அதிசயம் இனிமேல்தான் நடக்க இருக்கிறது.

இதுபற்றி முதுபெரும் ஆங்கில பத்திரிகையாளரான டி.மஹிந்தபாலா The Birth and Rise of the Nugegoda Man என்ற ஆங்கில கட்டுரையில் மகிந்த ராஜபக்ஷ ஓரு சுனாமியாய் அதாவது ஆழிப்பேரலையாய் இப்பொழுது இருக்கும் அரசாங்கத்தை நடைபெறவுள்ளதாக கூறப்படும் எதிர்வரும் சூலை நாடாளுமன்றத் தேர்தலில் அடித்துச் சென்றுவிடுவார் என்று கூறுவதன் மூலம் நிகழவிருக்கும் அதிசயத்தை இப்போதே ஆருடம் கூறுகிறார்.

சிங்கள மக்களின் மனப்பாங்கை புரிந்துகொண்ட அனுபவம் வாய்ந்த ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இவர் கூறும் ஆருடத்தை நாம் புறந்தள்ள முடியாது. அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி நுகேகோடவில் நடந்த மாபெரும் பேரணியில் லட்சக்கணக்கில் சிங்கள மக்கள் பெரு வெள்ளமென திரண்டதாகவும் இது ஆழிப்பேரலையாய் இப்போது இருக்கும் அரசாங்கத்தை சூலை மாதத்தில் அடித்துச் சென்றுவிடும் என சிங்கள பேரினவாத மனப்பாங்கிற்கு ஊடாக அவர் அதனை விளக்குகிறார்.

47 வேறுபட்ட கட்சிகளும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யும் இந்திய உளவு அமைப்பான றோவும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களும் இணைந்து மக்கள் எதிர்பாராத விதமாக இரகசிய சதிகாரத்தனமாக ராஜபக்ஷாவை வீழ்த்தி விட்டதாகவும் ஆனால் ராஜபக்ஷாவோ வெளிப்படையான மக்கள் வெள்ளத்தொடர் எழுச்சிபெற தொடங்கிவிட்டதாகவும் அக்கட்டுரையில் அவர் விவரிக்கிறார். மேலும் ஜனவரி மாதம் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தல் 1960ஆம் அண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் டட்லி செனநாயக அரசாங்கம் அமைத்ததுடன் ஒப்பிட்டு பின் அதே ஆண்டு சூலை மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் டட்லி தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக வெற்றிபெற்று அரசு அமைத்தது போல ராஜபக்ஷவின் ஜனவரி தோல்வியையும் சூலையில் வெற்றி பெறக்கூடும் என்பதையும் அக்கட்டுரை விவரித்தது. இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் சிங்கள இனவாத அரசியல் மனப்பாங்கை பற்றி மேற்படி மஹிந்தபால கொண்டிருக்கும் கண்ணோட்டமும் அது மேலும் வீரியத்துடன் எழுச்சிபெறும் என்ற அவரது கருத்தான அடிப்படைகள் புறந்தள்ளப்பட முடியாதவை என்பதுதான்.

இன அழிப்புத் தன்மையோடு வடிவமைக்கப்பட்டு வலுப்பெற்று ஸ்தாபிதம் அடைந்திருக்கும் சிங்கள அரச இயந்திரம் பற்றிய அரசியல் உடற்கூற்றினை (Poitical Anatomy) புரிந்துகொள்ளாமல் அதுபற்றிய அரசியல் பார்வை இல்லாமல் எழுமாத்திரத்தில் அரசியல் அணுகுமுறைகளை மேற்கொண்டால் அது தமிழ்மக்களுக்கு புதைகுழி தோண்டுவதாகவே அமையமுடியும்.

போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப் போகச்செய்ததில் சிங்களம் அடைந்த வெற்றி
‘போர்குற்ற விசாரணையை’ ஒத்திபோட்டமை என்பது இனவாத சிங்கள அரசுக்கு கிடைத்த வெற்றியும் அதன்பொருட்டு தற்போதைய சிறிசேன அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியும் இறுதியில் இராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியும் ஒட்டுமொத்தத்தில் சிங்கள இனப் படுகொலையாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியுமாகும்.

இனப்படுகொலை ஒரு தனிநபருடையதல்ல. அது சகல சிங்கள இனத்தவருடையதுமான ஆதரவுடனும் விருப்பத்துடனும் வரவேற்புடனும் அரங்கேறிய ஒரு கூட்டுமன இனப்படுகொலையாகும். அதற்கான விசாரணையை இல்லாமல் செய்வதில் சிங்கள அரசும் சிங்கள இனவாதமும்
வெற்றி பெற்றுவிட்டன என்பதே உண்மையாகும்.

இங்கு சந்திரிகா-சிறிசேன-ரணில் அரசாங்கம் பதவியில் இருக்கின்றதோ அல்லது இல்லையோ என்பதல்ல பிரச்சனைமீண்டும் ராஜபக்ஷ பதவிக்கு வருவாரா இல்லையா என்பதல்ல பிரச்சனை. யார் பதவியில் இருந்தாலும் ‘போர்க்குற்ற விசாரணையை’ பின்போடுவதில் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதே தந்திரம். இது ஒட்டுமொத்த சிங்கள இனப்படுகொலை கலாச்சாரத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

அரசற்ற படுகொலைக்கு உள்ளான அப்பாவி தமிழ் மக்களை உலக அரங்கில் உள்ள அனைத்து அரசுகளும் சிங்கள அரசு சார்ந்த தத்தம் அரச நலன் கருதி கைவிட்டுவிட்டன. இந்தவகையில் நீதி நியாயங்களுக்கு அப்பாலான அரச நலன் சார்ந்த சர்வதேச உறவு நிலையைப் புரிந்து கொண்டு ஈழத்தமிழரின் உரிமைகளை நிலைநாட்டவல்ல அரசியல் ராஜதந்திர வியூகங்களுக்கு ஊடாக ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் நியாயங்களையும் நிலைநாட்டுவதற்குரிய வழிவகைகளை கண்டறிய வேண்டும். இதில் அதிக பொறுப்புணர்வுடனும் புதிய சிந்தனையுடனும் புத்திக்கூர்மையுடனும் ஆழ்ந்த அரசியல் ஞானத்துடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர் செயற்பட வேண்டும். கரையான் புற்றெடுத்ததுபோல சிங்கள மேலாத்திக்க அரசியல் தமிழ்மக்கள் மீது புற்றெடுத்து தமிழ்மக்களின் தேசிய தன்மையையும் வாழ்வையும் சல்லறையாக்கிவிட்டது. உரிமை, பண்பாடு , அடிமைநிலை என்பனவற்றை புரிந்து கொள்ளவதற்கென ஒரு மனமும் அதற்கான பார்வையும் வேண்டும். ‘ஒருவன் தான் அடிமையாய் இருக்கின்றேன் என்பதை புரிந்துகொண்டாலே அவர் அரைவாசி விடுதலையடைந்துவிடுகிறான்’.

இந்தவகையில் தமிழ்மக்கள் காலதாமதப்படுத்தும் அரசியல் மூலம் மேலும் மேலும் அடிமையாக்கப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சிந்தனை தேவைப்படுகிறது. இந்த ‘போர்க்குற்ற விசாரணையை’ தாமதப்படுத்துவதன்மூலம் மட்டுமன்றி கடந்த 75 ஆண்டுகாலப் பகுதியில் இதேபோல எல்லா வகைகளிலும் அனைத்து துறைகளிலும் காலதாமதப் படுத்தும் தந்திரத்தை பிரயோகித்து தமிழ் மக்களை கருவறுப்பதை சிங்கள இனவாதம் தொடர் வெற்றிகளை ஈட்டிவருகிறது. அதிக தாமதம் அதிக ஆபத்தானதும் அதிக தீங்கானதுமாகும். இனி அடுத்தது என்ன என்ற கேள்வியை தமிழ்த்தரப்பு தன் நெஞ்சில் நிறுத்தி புதிய வழியில்; சிந்திக்க வேண்டும்.
 - ஜெயந்தரன்

Monday, March 2, 2015

இராஜபக்ஷவின் இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்கும் சிறிசேன! -- ஜெயந்தரன்

அரசியல் அழிப்புக்கு வழிகோலும் இராணுவ அழிப்பு; இராணுவ அழிப்பை பின்தொடரும் அரசியல் அழிப்பு; இராணுவ அழிப்பின் மறுபக்கம் அரசியல்
அழிப்பு; இராணுவ வெற்றித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியல் மாளிகை. இதுதான் இன்றைய ஈழத்தமிழர் அரசியல் நிலைகுறித்து
சொல்லப்படக்கூடிய கருத்தோட்டமாகும்.

அரசியலை சம்பவங்களுக்கு ஊடாக அன்றி அதன் தர்க்கபூர்வ வளர்ச்சிப்போக்குக்கு ஊடாக அடையாளம் காணவேண்டும்.
சிங்கள உயர்குழாத்தின் அரசியல் அகராதியில் மிகத்தெளிவான ஒற்றை இலக்கு மட்டுமே உள்ளது. அதாவது தமிழினத்தை எவ்வாறேனும்
அழித்தொழித்துவிடுவது என்பதாகும். இதில் காலகட்ட சூழலுக்கு ஏற்ப சிங்களத் தலைமைகள் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ
ஜனதா விமுக்தி பெரமுனவோ இடதுசாரிகளோ வலதுசாரிகளோ எக்கட்சியினராயினும் தமிழினத்தை அழித்தொழிப்பதில் ஒரே இலக்கை
கொண்டுள்ளனர். பயங்கரவாத ஒழிப்பு என்பதன் பேரில் மேற்படி அனைத்துத்தரப்பினரும் ஒருமுகமாக நின்று ஒத்த கருத்துடன் கைகோர்த்து நின்று இராணுவ ரீதியாக தமிழினத்தை அழித்ததில் முழுப்பங்கு வகித்தனர். இங்கு அரசியலை அதன் செயல்பூர்வ வளர்ச்சி நிலையில் வைத்து நாம்
புரிந்துகொள்ள வேண்டும்.

சிங்களத் தரப்பில் ஈ எறும்பு கூட மிச்சமின்றி அனைவரும் கட்சிவேறுபாடுகளைக் கடந்து சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு செயல்பூர்வமாக ஆதரவளித்தனர். சிங்கள பௌத்த மத நிறுவனங்கள் சமூக நிறுவனங்கள் அரசாங்க நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழங்கள் பாடசாலைகள் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் என அனைத்தும் ஒன்றுகூட மிச்சமின்றி
ஏகோபித்த குரலில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆதரவளித்தன.

தமிழனத்தை ஒடுக்குவது என்பது சிங்கள மக்களின் ஒரு கூட்டுமன முடிவாகும். இது அரசியல், வரலாற்று மற்றும் அறிவியல் அர்த்தத்தில் அதிகம் ஸ்தாபிதம் அடைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் தான் அடைய விரும்பிய இலக்கை இராணுவ அர்த்ததில் சிங்கள அரசு
அடைந்துள்ளது. ஆனால் அது அரசியல் அர்த்ததில் முன்னெடுக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.தமிழினத்தை அழிப்பது பற்றிய சிங்கள இனவாத்தின் இலக்கை 100 புள்ளிகள் என எடுத்துக்கொண்டால் இராஜபக்ஷ தான் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் அதில் 49 புள்ளிகளை அடைந்துவிட்டார். அதாவது 49ஆவது படியில் ஏறிவிட்டார். அந்த இடத்தில் இருந்து 50ஆவது புள்ளியை அல்லது 50ஆவது படியில் ஏறவேண்டிய தேவை அரசியல் அர்த்தம் கொண்டதாக இருந்தது. ஆனால் இராஜபக்ஷவின் கரங்கள் இனப்படுகொலையால் இரத்தம் தோய்ந்திருந்த நிலையில் அதன் அடுத்தகட்ட தேவையான அரசியல் வெற்றியை அதாவது சிங்கள இனவாத தேரோட்டத்தை நடத்த முடியாதவாறு இருந்தது. இந்நிலையில் சிங்கள இனவாதம் அரசியல் தளத்தில் முன்னேறவேண்டிய தேவையை பூர்த்தி செய்வதற்கு பார்வைக்கு முள்ளிவாய்க்கால் படுகொலையில் இரத்தம் தோயாத ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா, சிறிசேன போன்றவர்களின் அரசியல் வருகை அவசியப்பட்டது. அது இப்போது அவர்களுக்கு கைகூடியிருக்கிறது என்பதை அரசியல் ரீதியாக புரிந்துகொள்வதே சரியானதாகும்.

அதாவது இனப்படுகொலைக்கான இராணுவ நடவடிக்கை இனவாதம் வீறுநடைபோடுவதற்கு எதிராக இருந்த அனைத்து தடைகளையும்
நீக்கிவிட்டது. இதனை விரிவாக கூறுவது என்றால் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, பிரதேசம், மக்கள் செறிவு, குடியடர்த்தி மற்றும் சமூக
நிறுவனங்கள், அரசியல் கட்டுமானங்கள் என்பனவற்றை அழிப்பதற்கு அவர்கள் மத்தியில் எழுந்த பல்வகைப் போராட்டங்கள் மற்றும்
ஆயுதப்போராட்டம் என்பன தடையாக இருந்தன. இத்தகைய தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைக்குப் பெயரே இராணுவ நடவடிக்கையாகும். இத்தகைய இராணுவ ரீதியான இனப்படுகொலையின் மூலம் சிங்கள இனவாதம் தமிழ்மக்கள் மத்தியில் இருந்த அனைத்துவகையான சமூக அரசியல் போராட்ட கட்டுமானங்களையும் கூடவே மக்களையும் அழித்தொழித்து உளவியல் ரீதியான ஒரு யுத்தப் பீதியையும் தோல்வி மனப்பாங்கையும் ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் இவ்வாறு இராணுவ ரீதியாக திறக்கப்பட்ட இவ்வினவாத தளத்தின் மீது அரசியல் ரீதியாக மேற்கொண்டு இனவாதத்தை முன்னெடுக்கவேண்டிய அவசியம் சிங்கள இனவாதத்திற்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையால் சிங்கள இனவாதம் களங்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் அது அவமானப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய களங்கம் ஒரு சிலரின் செயல்தான் என்று காட்டி அக்களங்கத்தை சிங்கள இனத்தி;ற்கு உரியதல்லாததாக்க வேண்டிய தேவை சிங்கள இனவாத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்ஷ, கோத்தபாய போன்ற ஒருசிலரின் மீதுமட்டும் விரலைச் சுட்டிக்காட்டி இவ்வின அழிப்புக்
குற்றத்தில் ஈடுபட்ட சிங்கள அரச இயந்திரத்தையும் அதன் பின்னால் இருந்த அனைத்துவகை மூளைகளையும்ää ஊடகங்களையும், அமைப்புக்களையும் இனவாத சிங்கள வெகுஜன மனப்பாங்கையும் மற்றும் இனவாத தலைவர்களையும் விடுவித்து காப்பாற்றும் செயலில் சந்திரிகா,
ரணில், சிறிசேன, ஜேவிபி, ஹெலஉறுமய போன்றவர்கள் தேர்தல் களத்தில் ஈடுபட்டனர்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை படுகொலையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கனகச்சிதமாய்
நிறைவேற்றியது. அதில் அமைச்சராக இருந்த ஒருவர் ரணில் விக்கரமசிங்க. அந்த கறுப்பு ஜுலை படுகொலைக்காக ஐக்கிய தேசிய கட்சியினர்
கவலைப்பட்டதோ அல்லது மன்னிப்புக்கேட்டதோ அல்லது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ அன்றி நிவாரணமோ வழங்கியது இதுவரையிலும் கிடையாது.அதன்பின்பு சந்திரிகா தலைமையில் பதவிக்கு வந்த சுதந்திர கட்சி அரசாங்கம் மேற்படி கறுப்பு ஜுலை படுகொலைக்காக மனிப்புக்கோரியதோ, நீதி வழங்கியதோ அன்றி நிவாரணம் வழங்கியதோ கிடையாது. ஆனால் அதற்கு மேலாக சந்திரிகா அரசாங்கம் இராணுவ ரீதியாக செம்மணி படுகொலையை அரங்கேற்றியது. 600 அப்பாவி தமிழ்மக்கள் செம்மணியில் ஆண், பெண் வேறுபாடின்றி இராணுவத்தால் படுகொலை செய்து புதைக்கப்பட்டனர்.
இதில் ஒன்று கிருசாந்தி எனும் பள்ளி மாணவி பாடசாலை சென்று திரும்பும் வழியில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு குழு பாலியியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் கூடவே அவரது தாயும் சகோதரனும் அயலவரும் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். இப்படி கிழக்கு மாகாணத்திலும் கோணேஸ்வரி என்னும் அப்பாவி இளம்பெண் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பாலியியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் அவரது பெண்ணுறுப்பில் கைக்குண்டு வெடிக்க வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பதும் சந்திரிகாவின் ஆட்சியில் நிகழ்ந்தது.

சந்திரிகாவின் பின் பதவிக்கு வந்த அவரது அதே சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷ சிங்கள மக்களினதும் அனைத்து சிங்கள கட்சிகளினதும்
ஒட்டுமொத்த மனஅபிலாசையான இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றினார். இதில் சுமாராக ஒன்றரைலட்சம் தமிழ் மக்களை கொன்றொழிப்பதன் மூலம் இவ்வினப்படுகொலை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இவ்வினப்படுகொலையை ராஜபக்ஷதான் தொடக்கி நிறைவேற்றினார் என்றில்லை. இதற்கு முன் மேற்படி பலகட்சிகளினாலும், ஆட்சியாளர்களாலும் தொடக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்ததை ராஜபக்ஷ நிறைவேற்றி வைத்தார் என்பது மட்டுமே உண்மை.இதனை சற்று தெளிவாக நோக்குவோம்.

1945ஆம் ஆண்டு இராண்டாம் உலக மகாயுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் கம்யூனிஸ்டுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமாராக 20 வீதத்தினர் சீன இனத்தவராவர். இந்த சீன இனத்தவர் மத்தியில்தான் கம்யூனிஸ்டுக்களின்
ஆயுதப்போராட்டம் பெரிதும் வளர்ந்திருந்தது. அப்போது அங்கு ஆட்சியிலிருந்த பிரித்தானியர் இதற்கு எதிராக கடுமையான இராணுவ
நடவடிக்கையில் ஈடுபட்டனர். பிரித்தானிய தளபதிகளான டெம்பளர், பிரிஜ் என்பவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் கம்யூனிஸ்டுக்கள் முற்றாக தோற்கடிக்கப்பட்டதுடன் கூடவே சீன இனமும் ஒடுக்கப்பட்டுவிட்டது. இந்த இராணுவ நடவடிக்கையை பிரிஜ் என்ற தளபதியின் பெயரால் பிரிஜ் திட்டம்  என அழைப்பர். பிரிஜ், டெம்பளர் போன்ற தளபதிகளின் இராணுவ நடவடிக்கையை பிரதிபண்ணி தமிழினத்தை அழித்தொழிப்பதற்கான ஒரு இராணுவ திட்டத்தை அப்போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அதுலத்முதலி 1987ஆம் ஆண்டு ஆப்பரேஷன் லிபரேஷன் என்றதன் பேரில் முன்னெடுத்தார். இதனை மூன்று கட்டங்களாகப் பிரித்து முதலாவது கட்டமாக ஆப்பரேஷன் வடமராச்சி என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என அப்போது இந்திய அரசு எதிர்த்தது.இப்பின்னணியில் முதலாம் கட்டத்திற்கு அப்பால் இவ் இராணுவ நடவடிக்கையை சிங்கள அரசால் தொடரமுடியாமல் போனது. வடமராட்சியில் தமிழ்மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. இலட்சக்கணக்கில் மக்கள் அகதிகளாயினர். ஒருவகையில் வடமராட்சி சுடுகாடானது. ஆனால் இந்த இராணுவ நடவடிக்கையை வடமராட்சியோடு நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது ஜே.ஆர் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதால் அதனை அவர்களால் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு தொடரமுடியாது போனது. இது இனவாதம் தன் இறுதி இலக்கை அடையமுடியாது போன ஒரு காலகட்ட நிலை. ஆனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழல் தனக்கு சாதமாக இருந்த நிலையில் ஜே.ஆர்.அரசாங்கத்தால் வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட
மலேசிய பாணி பிரிஜ் இராணுவ திட்டத்தை ராஜபக்ஷ முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி வைத்தார் என்பதே உண்மை. அப்போது 1987ஆம் ஆண்டு

ஜே.ஆர். அரசாங்கத்தில் லலித் அதுலத்முதலியால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்பு 2009ஆம் ஆண்டு ராஜபக்ஷ
அரசாங்கத்தில் கோட்பயாவால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கான இராணு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரகட்சியும் இதில் ஒரேமாதியாக செயல்பட்டுள்ளதுடன் கூடவே இடதுசாரி என தம்மை கூறிக்கொள்ளும் தீவிர
இனவாதிகளான ஜே.வி.பி.யினர் ராஜபக்ஷவுடன் மேற்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தம்மையும் இத்தகைய இனப்படுகொலை
வரலாற்றில் ஒரு பங்குதாராக தவறவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் ரணில், சுதந்திர கட்சியின் சந்திரிகா, சிறிசேன, ஜே.வி.பி. என ஆகிய அனைவருமே ராஜபக்ஷவிடம் இருந்து பிரித்து
வேறுபடுத்தி பார்க்கக்கூடியவர்கள் அல்லர். மேற்படி அனைவரும், அனைத்துக் கட்சியினரும் ஒரு தமிழருக்கு எதிரான ஒரு முழுநீள இனவாதத்தின் தொண்டர்களாய் அவ்வப்போதைக்கு உரிய காலகட்ட பங்குகளை ஆற்றியுள்னர். தற்போது முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் சிங்களப் பேரினவாதம் தெளிவாக களங்கபபட்டு அம்பலப்பட்டிருக்கும் போது அதற்கான பொறுப்பு ராஜபக்ஷவை மட்டுமே சாரும் என்பதுபோல ராஜபக்ஷவை கறுப்பு பூனையாக சுட்டிக்காட்டி தாம் அனைவரும் வெள்ளைப்பூனைகள் என மேற்படி நபர்களும் கட்சிகளும் காட்சியளிக்கும் ஒரு நாடகம் இப்போது அரங்கேறியிருக்கிறது. உண்மையான அர்த்தத்தில் இனவாதமானது முள்ளிவாய்க்கால் படுகொலை சாதித்த ஏற்படுத்திய வெற்றித்தளத்தை அடுத்த கட்டத்திற்கு அரசியல் ரீதியில் நகர்த்துவதற்கான இன்னொரு பரிணாம வளர்ச்சியாக தன்னை இனி மேலும் முன்னெடுக்கப்போகிறது என்ற ஆபாயத்தை தமிழ் மக்களும் சர்வதேச சமூகத்தினரும் புரிந்தாகவேண்டும்.

அரசியலை மேலெழுந்தவாரியாக் பார்க்காது அரசியலின் அரசியலையம் (Politics of Politics) அரசியலின் மறுபக்கத்தையும் (Other side of Politics) நாம்
பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலானது ஒரு சிறப்பு தேர்ச்சி மிக்க வித்தை; அது ஒரு கலை; அது ஒரு முறைமை. இயந்திரமானது தனக்கென
ஒரு இயங்கும் முறைமையை கொண்டிருக்கிறது. ஒரு வண்டி தனக்குரிய இயங்கும் முறையை கொண்டிருக்கிறது. அந்த வண்டியின் முறைமைக்கு
உட்பட்டுத்தான் அந்த வண்டியை ஓட்ட முடியும். எழுமாத்திரத்தில் அந்த வண்டியை ஓட்ட முற்படுவது அல்லது மனம்போன போக்கில் ஓட்ட
முற்படுவது என்பது தற்கொலைக்கு ஒப்பான செயல்.
அரசியல் ஒரு முறைமைப்படி இயங்குவதால் அதனை எழுமாத்திரத்திலோ அல்லது மனம்போன போக்கில் இயக்கினால் அந்த இயந்திரத்தின்
முறைமைக்குள் சிக்குண்டு அதற்கு நாம் இரையாக நேரும் அல்லது பலியாக நேரும். ஈழத்தமிழர் அரசியலில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக
இத்தகைய எழுமாத்திர அரசியல் போக்கே மேலோங்கியிருக்கிறது. பொதுவாக ஈழத்தமிழர் தரப்பில் அரசியலை வாழ்வாக கொண்ட முழுநேர
அரசியல் தலைமைகள் இருந்ததில்லை. பகுதிநேர தலைவர்களின் தலைமையில் அரசியல் முன்னெடுக்கப்பட்ட வரலாறே பெரிதும் இருந்ததால்
அத்தகைய தலைவர்களால் ஆழ்ந்த அறிந்த அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமோ வாய்ப்போ அவர்களுக்கு இருக்கவில்லை. குறிப்பாக 1977ஆம்
ஆண்டுவரை இதனைக் காணலாம். அறிவுசார் அரசியலும் அர்ப்பணிப்பான செயல்பாடுகளும் இன்றி ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவிதியை
வெற்றியில் இட்டுச்செல்ல யாராலும் முடியாது.

தமிழ்த்தலைவர்கள் கல்விமான்களாகவும், சட்ட வல்லுநர்களாகவும் இருந்த போதிலும் அவர்கள் முழுநேர தொழிலாக வழக்காடலைச் சார்ந்ததுடன்
பகுதிநேர தலைவர்களாக இருந்த நிலையில் அரசியலை அறிவுசார்ந்து அணுகக்கூடிய நெளிவுசுளிவான பாதையில் வழிநடத்தக்கூடிய இராஜதந்திர
நகர்வுகளுக்கான ஈடுபாட்டை காட்டக்கூடியதற்கான நேரமும் அதற்கான அர்ப்பணிப்பும் அற்ற தலைவர்களாக இருந்த நிலையில் தமிழ்மக்களின்
தோல்வி எழுதப்பட்ட தலைவிதியென பெருமூச்சுடன் நீண்டுசெல்லும் துர்ப்பாக்கியத்திற்கு உள்ளானது. கூடவே தமிழ் அறிஞர்கள் அரச உத்தியோகம் சார்ந்த நலனைக் கொண்டிருந்ததால் அவர்களின் மூளை தமிழ்மக்களின் நலன்கருதி சிந்திக்க மறுத்தது. உத்தியோக வாய்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் என்பன சிங்கள அரசின் கையில் இருந்ததால் அந்த அரசு இயந்திரத்தின் நலனுக்கு வெளியே தமிழ் அறிஞர்களால் சிந்திக்க முடியாது
போனது மட்டுமல்ல அந்த அரசு இயந்திரத்திற்கு உரிய உத்தியோகத்தர்கள் என்ற வகையில் தமிழ் அறிஞர்களும் தமிழருக்கு எதிரான சிங்கள அரசு
இயந்திரத்தின் சேவகர்களாய் நடைமுறையில் செயற்படும் துர்ப்பாக்கியமே காணப்பட்டது. அதாவது தமிழ்த்தலைவர்களும் சரி, தமிழ் அறிஞர்களும்
சரி ஈழத்தமிழர்களின் அரசியலை அறிவுசார் அரசியலாக முன்னெடுக்க முடியாத ஒரு அரசியல் கலாச்சாரத்தையே தமிழ்ச்சமூகம் கொண்டிருக்க
நேர்ந்தது. இத்தகைய அறிவுசாரா அரசியல் கலாச்சாரத்தினதும், அறிவுசாரா அரசியல் பழக்கதோஷத்தினதும் களத்தில்தான் ஆயுதப்போராட்டம்
1970களின் பிற்பகுதயில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆதலால் ஆயுதப்போராட்ட இளைஞர்கள் முழுநேர அரசியலில் ஈடுபடத்தொடங்கிய போதிலும் சமூகத்தில் காணப்பட்ட அறிவுசாரா அரசியல் கலாச்சார விளைநிலத்தில்தான் இவர்களும் முளைவிட நேர்ந்தது. இதனால் தமிழ்மக்களின் அரசியலில் அறிவுசார் அரசியல் வறண்ட நிலத்து பயிராக நீடிக்க நேர்ந்தது என்ற உண்மை நாம் தெளிவாக புரிந்தாக வேண்டும். அதனை புரிந்து கொள்ள தவறினால் இனிமேலும் நாம் அதை நிவர்;த்தி செய்து முன்னேற வழியிருக்காது. விருப்பு வெறுப்புக்களை கடந்து நோயை நோயாக
அடையாளம் கண்டு அதற்காக மருத்துவத்தை மேற்கொண்டு நாம் முன்னேற தயாராக வேண்டும்.இந்தவகையில் நாம் நடந்து முடிந்த தேர்தலையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நாம் பரிசீலித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழர்கள் தயாராகவேண்டும்.

வெளிப்படையாக பார்க்கும் போது ராஜபக்ஷ இனப்படுகொலை செய்தமை எம் கண்முன் நிற்பதினால் ஒருவகை பழிவாங்கும் உணர்வோடு அவருக்கு
எதிராக மக்கள் விரலை நீட்டுவது இயல்பு. அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் இங்கு நாம் இலாப நட்ட கணக்கை சரிவர போட்டாகவேண்டும்.
ராஜபக்ஷவுக்கு எதிராக நிற்கும் சந்திரிகாவுக்கு இப்போதுதான் ஞானம் திறபட்டுவிட்டது என்றில்லை. பண்டாரநாயக்க குடும்பத்திற்கு எதிராக
ராஜபக்ஷ குடும்பம் தலையெடுத்தபோது அதை தாங்கமுடியாத பண்டாரநாயக்க குடும்பத் தலைவி முதலைக் கண்ணீர்விட்டு தமிழ் மக்களின்
வாக்குகளை பெற முற்பட்டதை நாம் மறக்கக்கூடாது. ரணிலும் சேனநாயக்க குடும்பத்தின் இறுதி வாரிசு ஆவார். அவரும் தனது குடும்ப ஆதிக்கத்திற்கும் தமது கட்சி நலனுக்குமாக ராஜபக்ஷவை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தது. தமிழரை ஒடுக்கிய சந்திரிகாவும், ரணிலும் தமிழரின் வாக்குகளால் ராஜபக்ஷவை வீழ்த்தும் தந்திரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இவர்கள் இனவாதிகளாகவும், இனப்படுகொலையாளர்களாகவும் கடந்தகால வரலாற்றில் தம்மை தம்செயற்பாடுகளால் நிருபித்துள்ளனர்.
ஆனாலும் இப்போது அவர்கள் தமிழ்மக்களின் வாக்குக்களினால் தமது எதிரியான ராஜபக்ஷவை வீழ்த்த முடிந்தது என்ற வகையில் தம்
முதலைக்கண்ணீருக்கு பதிலாக குறைந்தபட்சம் செயற்படக்கூடிய உடனடியான அரசியல் வெளி அரசியல் அரங்கில் உள்ளது. அதாவது
வடக்கு-கிழக்கு மாகாணசபையை இரண்டாக பிரித்து ஒரு அரசியல் பிரச்சனை மூலம் அல்ல வெறும் சட்டநுணுக்கப் பிரச்சனையின் மூலமே.

அதாவது வடக்கு-கிழக்கு மாகாணங்களை நாடாளுமன்றத்திற்கூடாக இணைக்கவேண்டும் என்பதற்கு பதிலாக அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன
அதனை அரச இதழ் வாயிலான அறிவித்தல் மூலம் இணைத்ததுதான் தவறே தவிர இணைப்பு தவறு என்று தீர்ப்பில் கூறப்படவில்லை. ஆனால்
தீர்ப்பை வைத்துக்கொண்டு ராஜபக்ஷ வடக்கு-கிழக்கு இணைப்பை துண்டாடினார். ஆனால் தற்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கூடான
அறிவித்தல் மூலம் இவ்விணைப்பை சில நிமிடங்களில் செய்திடமுடியும். ராஜபக்ஷவின் அநீதிகளுக்கு எதிராக நீதிக்கொடி தூக்கும் சந்திரிகா, ரணில்,
சிறிசேன, ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட அநீதியை இப்போது தமக்கிருக்கும் அரசியல் சட்ட வாய்ப்பைக்கொண்டு
சிலநிமிடங்களிலேயே வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்துவிடக்கூடிய இந்த நடவடிக்கையை முதலில் மேற்கொள்வார்களா!?

இந்த கேள்வியை மனதில் நிறுத்திக்கொண்டு தற்போது தற்காலிகமாக கிடைத்திருக்கக்கூடிய ஒரு போலி ஜனநாயக அரங்கில் குறைந்தபட்சம்
தமிழ்த்தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் செயற்படக்கூடிய ஒரு வெளி இருக்கவே செய்கிறது. இலங்கையில் செயற்படும் பெரும்பான்மையின
சர்வாதிகாரத்தைத்தான் ஜனநாயகம் என்று சொல்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் (யதழசவையசயைnளைஅ) என அழைப்பர். அதாவது இதனை
தெளிவாக சொல்வதென்றால் பெரும்பான்மையின ஜனநாயக சர்வாதிகாரமாகும். சிங்கள இனத்திடம் காணப்படுகின்ற இத்தகைய கூட்டுமன கட்டமைப்பான கருத்தமைவு எத்தகைய சிதைவும் இன்றி அப்படியே இருக்கின்றது. சிங்கள இனத்தவர்களிடம் காணப்படுகின்ற தமக்கிடையேயான குடும்ப ஆதிக்கப் போட்டியில் தமிழரை தமக்கு சாதகமான துருப்புச்சீட்டாக கையாண்ட அளவுக்கு தமிழரின் உரிமைக்கு எதிராகவும் சிங்கள அரச இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சிங்கள கூட்டுமனத்தை மனமாற்றத்திற்கு உள்ளாக்குவார்கள் என்றில்லை. ஆனாலும் தமிழ்மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்தவர்கள் தற்காலிகமாவேனும் நேரடி அர்த்தத்தில் தமிழருக்கு எதிராக செயல்படமுடியாத ஒரு சூழல் உண்டு. அதேவேளை தமிழருக்கு எதிராக வடிவமைக்கப்பட்டிருக்கும் அரச இயந்திரம் மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம், குடியமைவு என அனைத்துத்துறைகளிலும் தன் திசைநோக்கிய செயற்பாட்டிலிருந்து பின்வாங்கமாட்டாது. இதனை ஸ்தாபிதம் அடைந்திருக்கும் அரச இயந்திர அமைப்பு முறைக்கூடாக சிந்திக்க வேண்டுமே தவிர நபர்களுக்கு ஊடாக அல்ல. சர்வதேச அரசியிலிலும் உள்நாட்டு அரசியலிலும் காணப்படும் வாய்ப்புக்களை கண்டறிந்து அறிவுசார் அரிசியல் அணுமுறையில் நின்று அர்ப்பணிப்புடனான முழுநேர அரசியல் தலைவர்களாகவும் அரசியல் அறிஞர்களாகவும் செயற்படவேண்டிய பொறுப்பு தமிழ்ச்சமூகத்தின் முன்னோடிகள் முன் உண்டு.

அநீதி என்பது இராணுவ நடவடிக்கையிலான இனப்படுகொலை மட்டுமல்ல. தமிழரின் சுயநிர்ண உரிமையை மற்றும் உரிமைகளை மறுக்கும்
அனைத்து செயல்களும் அநீதிதான். ஆதலால் ராஜபக்ஷவின் இராணுவ நடவடிக்கையின் மூலமான படுகொலையை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு
ஏனைய அநீதிகளை அப்படியே செயற்பட விடமுடியாது. கொல்லப்பட்டவர்களை உயிர்ப்பிக்க முடியாது என்று சொல்லி கொல்லப்பட்டதோடு கதை முடிந்துவிட்டது என்பதல்ல. கொல்லப்பட்டதற்கு நீதியின் பெயரால் தண்டனையும் வேண்டும் நிவராணமும் வேண்டும். அதேவேளை பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை இணைப்பது என்பது கொல்லப்பட்டவனை உயிர்ப்பிக்க முடியாது என்பது போன்றதல்ல. ஆதலால் பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை மீண்டும் இணைத்துக்காட்டுவதுதான் நீதி. அத்துடன் தமிழ்மக்கள் இந்த வடக்கு-கிழக்கு இணைப்பைக் கொண்ட மாகாணத்தீர்வை கூட அவர்கள் தமது உரிமைக்கான தேவையை பூர்த்தி செய்ததாக சொல்லவில்லை. அவர்களின் தேவை அதற்கும் மேலானது. எனவே அவர்கள் நீதி என கருதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதற்கான தீர்வை கண்டாகவேண்டும். குறைந்தபட்சம் இன்றைய சிங்களத்தலைவர்கள் உடனடியாக இணைப்பை அறிவிப்பார்களா என்று கேட்டால் அவர்களது ‘ஆம்’இ அல்லது ‘இல்லை’ என்ற பதிலில் இருந்து அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்திக்க முடியும்.

இந்தியாவில் இந்துக்களை நோக்கி முஸ்லிம்களின் உரிமைக்காகவும் உயிர்களை காப்பதற்காகவும் 1947ஆம் ஆண்டு மகாத்மா காந்தி
உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றார். இந்துக்கள் காந்தியின் போராட்டத்திற்கு பணிந்தனர். இப்போது சிங்களத் தலைவர்கள்
சிங்கள இனவாதத்திற்கு எதிராக குறைந்தபட்சம் இப்படி காந்தி இருந்ததுபோன்ற உண்ணாவிரதங்களை மேற்கொண்டு சிங்கள மனப்பாங்கை
மாற்றவும் தமிழர்களின் உரிமை நிலைநாட்டவும் பாடுபடுபட்டால் குறைந்தபட்சம் அவர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வாய்ப்பு இருக்கும். இதற்கு முன்னோடியாக தமிழ்மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்த இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும், இன்றைய புதிய அரசாங்கத்தின்
சூத்திரதாரியான சந்திரிகாவும் இணைந்து இன்றைய அரசாங்கத்தின் பெயரால் சிங்கள இராணுவத்தாலும் அரச இயந்திரத்தாலும் படுகொலைக்கு
உள்ளான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதலில் மன்னிப்பு கோருவார்களா? இவ்வாறு கோரவைக்கவேண்டிய பொறுப்பும், கடமையும்
தமிழ்த்தலைவர்களும் தமிழ்அறிஞர்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் முதற்கண் உண்டு.
---------------------------------------------------------------------------

Wednesday, April 9, 2014

பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழம்

தமிழினத்திற்கு விரோதியாக தமிழனையே நிறுத்துவதுதான் 60 ஆண்டுகளாக சிங்களர்களின் ராஜதந்திரமாக இருந்து வருகிறது. அதில் இன்னும் ஒருபடி மேலே போய் ஷோபாசக்தி, லீனா மணிமேகலை, சந்தோஷ் சிவன் என்று தமிழ்நாட்டு சினிமாத் துறையினரையும் உசுப்பேற்றியுளளார்கள். சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட், தற்போது வெளிவந்த இனம், லீனாமணிமேகலை - ஷோபா சக்தி இணைந்து எடுத்த செங்கடல் போன்ற படங்கள் இதற்குச் சான்று.

ஈழத்திலும் அப்படி சிங்களவர்களை அடிதாங்கி நிற்கும் தமிழர்கள் பலரைப் பார்க்கலாம். கொழும்பு, மலையகம், தெற்குப் பகுதி போன்ற சிங்களர்கள் பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இந்த மனப்போக்கை கொண்டிருப்பார்கள். இப்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அந்தப் போக்கு உருவாகி வருகிறது. சோத்துக்கும், இடத்துக்கும் சிங்களன் தான் கருணைகாட்ட வேண்டும் என்கிற நிலை வரும்போது இந்தக் கேவலங்கள் நிகழுவதை என்னவென்று சொல்ல?உதாரணமாக சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழப் பிரதிநிதிகள் ராஜபக்சேவின் கையால் பதவிப் பிரமாணம் ஏற்றதில் உச்சிகுளிர்ந்து நின்றதைச் சொல்லலாம்.

முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இவர் தமிழன் தான். ஆனால் தமிழர்கள் யாராவது ஆட்டோகிராப் கேட்டால் கூட அலட்சியமாக இருப்பாராம். தன் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட தமிழர்கள் பட்ட துயரத்துக்காக ஒரு வார்த்தை உதிர்த்தில்லை. ஜாலியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்துக்கொண்டே இருந்தார். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது! வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது.. அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்தித்தார்.

அப்போது தமிழர் நிலை பற்றி முரளிதரன் "என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன். மக்களுக்கிடையிலான உணர்வுகளை நேர்ப்படுத்தும் பாலமாக கிரிக்கெட் இருக்கிறது. ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு நன்றி. இவையெல்லாம் நடக்க பெரும் முயற்சிகள் எடுத்தவர்கள் ராணுவத்தினர்தான். இந்த நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். வடக்கில் ஒரு மில்லியன் மக்கள்தான். ஆனால் இப்போது மற்றவர்களை விட அவர்கள் மட்டும்தான் கூடுதல் கவனம் பெற்றுவருகின்றனர்!" என்று மிகுந்த அப்பாவி போல் பேசியிருக்கிறார்.

தனி ஈழம் குறித்தும் அதன் விடுதலை குறித்தும் பாஜக கட்சியின் போடும் இரட்டை வேடம் மிக வெளிப்படையானது. தமிழ்நாட்டில் தெற்கே போகப் போக இவர்களுக்கு ஈழ ஜூரம் அடிக்கும். வடக்கே போகப் போக 'யாரது ஈழத்தமிழர்கள்?' என்பார்கள். அக்கட்சியின் சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா சமீபத்தில் பேட்டியொன்றில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவேற்றதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். இனவெறி மிக்க ராஜபக்சே மத்தியப் பிரதேசத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு சென்ற ஆண்டு வந்தபோது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை வழங்கியவர் பாஜகவின் முதலமைச்சர். அப்போது அதை எதிர்த்து மத்தியப் பிரதேசம் வரை போய் முழங்கிய வைகோ அண்ணன் தான் இப்போது அதே பாஜக கூட்டணியில் அவர்களுக்கு ஆதரவாக முழங்குகிறார்.

உங்கள் கூட்டணியிலுள்ள வைகோவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம் பற்றி இருக்கிறதே அது பற்றி சொல்லுங்கள் என்று எச்.ராஜாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது.."பா.ஜ.க வைப் பொருத்தவரை ஒரு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும். என்பது எங்கள் நிலை. சம தர்மம், சம உரிமை என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் 2004 வரை பேச்சுவார்ததைகள் தான் நடந்து வந்தது. அதன் பிறகு சோனியா காந்தி தலைமையில் வந்த ஆட்சி தான் ராணுவத்தை அனுப்பியது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அதனால் தான் கோத்தபய ராஜபக்சே இது இந்திய போர் என்று சொன்னார்."

கலைஞரோ முள்ளிவாயக்கால் படுகொலையின் போது இங்கிருந்து உண்ணாவிரத நாடகமாடி தன் முகத்திரையை கிழித்துக் கொண்டார். ஜெயலலிதாவோ தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் மறைமுக எண்ணத்தில் பாஜகவை எதிர்த்தே பேசுவதில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவின் வீர உரைகள் என்னவானதென்று நமக்குத் தெரியும். கம்யூனிஸ்ட்டுகளோ தீவிரவாதம் என்ற ஒரு சொல்லில் சிங்களர்களின் அனைத்து அரசு பயங்கரவாதங்களையும், இனப்படுகொலையையும், மறைக்கும் அறிவு ஜீவிகள்!!. அவர்களுக்கு அது அமெரிக்கா சொல்வதுபோல் ஒரு போர்க்குற்றம் மட்டுமே. மொத்தத்தில் தேர்தலில் தமிழர்கள் ஈழத்தை ஆதரிப்போருக்கு என்று வைத்துப் பார்த்தால் நிற்கும் எல்லோரும் அயோக்கியர்களே என்பது தெளிவாகும்.

முரளிதரன், டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற தமிழர்கள் இருக்கிறவரை தமிழினம் கேவலமாய்ச் சாகும் நிலை மாறப்போவதில்லை. இந்தியாவை மாற்றி மாற்றி ஆளும், தமிழர்களை தன்னுடைய நாட்டு இனமாகக் கருதாத காங்கிரஸூம், பாஜகவும் தமிழர்களை ஈழத்தில் அழிக்க வகையாக துணைபோகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்தான் தமிழர் நிலைக்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

Thursday, November 28, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், பாலியல் வன்முறைகள், இனத்தை வன்கலப்பு செய்வது, சிங்களர்களை கொண்டு வந்து குடிவைப்பது என்று இன அழிப்பின் எல்லா விஷயங்களையும் கடந்த 60 வருடங்களாக சிங்கள அரசுகள் செய்த அளவில் சற்றுக் கூட அளவுகுறையாமல் செய்து அதன் உட்சபட்ச வெற்றியையும் ஈட்டியது் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு. ஐக்கிய நாட்டு சபையில் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளின் கள்ளத்தனமான மௌன அங்கீகாரத்தில் தான் இவற்றைப் புரிந்தது. இருந்தாலும் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் தலையீடு இருப்பதால் போர்க்குற்ற விசாரணை ஒன்றை சும்மா உப்புக்கு சப்பாணியாக நடத்தியும் முடித்தது. இத்தோடு நிற்காமல் 2009ல் தொடங்கி உலக திரைப்பட விழா, கிரிக்கெட் போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை கோலாகலமாக நடத்துவதன் மூலம் பிண ஓலத்தை மறைக்கவும் முயற்சி செய்கிறது. இந்த கொலைபாதகச் செயல்கள் அனைத்திற்கும் சர்வதேச நாடுகளில் ஆதரவு தெரிவிப்பவர்களே அதிகம். இதில் கியூபா, சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிஸ்ட்டு நாடுகளும் அடக்கம். ஐக்கிய முண்ணணி தந்திரத்தின் பக்கங்களுக்குள் பாவம் இந்த கம்யூனிச நாடுகளும் சிக்கிக் கொண்டன. இவர்கள் இதற்கு சொல்ல இருக்கும், விரும்பும் காரணம் அனேகமாக அமெரிக்காவுக்கு எதிரான வியூகம் என்கிற சாக்கு தான். இந்தப் பிண்ணணியில் மேலும் தைரியம் பெற்ற ராஜபக்சேவின் அரசு காமன்வெல்த் மாநாட்டையும் நடத்தி மொத்தப் பாவத்தையும் பூசணிக்காயில் மறைக்க முயன்றது.

 இப்படியொரு நேரத்தில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருந்ததையொட்டி, இலங்கை அதை நடத்துவதையும் அதன் மூலம் மறைமுகமாக இந்தியா அதன் படுகொலைப் பாவத்தை கடலுக்குள் கரைப்பதையும் தெரிந்திருந்தாலும் தமிழ்நாட்டில் மக்கள் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லைதான். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திராவிட கட்சிகளல்லாத மற்றைய கட்சிகள் சமத்துவ கட்சி, பெரியார் திராவிட கழகம், சீமானின் நாம்தமிழர், வைகோவின் மதிமுக, திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறனின் அமைப்பு போன்ற பல கட்சிகள் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தி, ரயில்களை மறித்து தமிழ்நாட்டு மக்களின் அடி ஆழத்தில் உள்ள அதிருப்தியை மத்திய அரசுக்கு கொஞ்சம் வெளிக்காட்டினர். இந்தப் போராட்டங்கள் தொலைக்காட்சிகளில் செய்திகளாக காட்டப்பட்ட வேளைகளில் தான் நம் தமிழ் மக்களும் ஈழப் படுகொலைகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டனர். கலைஞர் கருணாநிதி வழக்கம் போல 'துரும்பைக்' கூட கிள்ளிப் போடாமல் தனது டெசோ அமைப்பை வைத்து அறிக்கைகள் விட்டு மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்றதும் ஏமாற்றமளிக்கிறது என்று கையை கட்டி நின்றுகொண்டார். அம்மாவின் தீர்மானங்கள் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் யாருக்கும் இதற்காக போராட வேண்டும் எனத் தோன்றாதது ஆச்சரியமான விஷயமல்ல. ஒரு மாநகராட்சி உணவகத் திறப்பு விழா முதல் , ஈழ ஆதரவு போராட்டத்தைக் கூட அம்மா மட்டுமே முன் நின்று நடத்தவேண்டும் என்பது அந்தக் கட்சியின் முக்கியமான கொள்கையல்லவா?

 முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையின் முந்தைய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவே கூடாது என்கிற தீர்மானத்தையும் முன்வைத்தார். உலக சமூகத்தின் பார்வையில் இது முக்கியமான ஒரு தீர்மானமே. ஆனால் மத்திய அரசு வழக்கம் போல இதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கிளம்பிய இத்தகைய எதிர்ப்பு அலைகளை மத்திய அரசு வழக்கம் போல அலட்சியமாக கடந்து சென்றது. மாநாட்டிற்குச் சென்று ராஜபக்சேயுடன் விருந்து சாப்பிடும் மூடில் இருந்த மன்மோகன் சிங் ஜெயலலிதாவின் தீர்மானம் தந்த அழுத்தத்தினால் வயிற்று வலி போன்ற காரணங்களால் வரமுடியவில்லை என்று ராஜபக்சேவுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து லீவ் லெட்டர் அனுப்பியதுடன் இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித்தை வேறு அனுப்பி வைத்தார். ஜெயலலிதாவின் கனவு பிரதமர் ஆவதோடு நின்றுவிட்டதால், அவர் இந்தியா தாண்டி உலகப் பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க விருப்பமில்லாமல் இது வெளியுறவுப் பிரச்சனை எனவே தீர்மானம் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எல்லை வைத்திருக்கிறார்.

 இது தெரியாமல் நெடுமாறன் ஐயா ஜெயலலிதா அம்மையாரின் பரம எதிரியான நடராஜனின் நிலத்தில் நடராஜனின் முக்கிய பணப்பங்களிப்பில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற நினைவுச் சின்னத்தை கட்டினார். அதைத் திறக்க முற்படும் போது தான் அவருக்கு பிரச்சனை வருகிறது. நெடுஞ்சாலைத்துறை முந்திய நாள் அதிகாலையில் வந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தின் காம்பவுண்ட் சுவர் அரசின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது எனவே இடிக்கிறோம் என்று நோட்டீசு கூட கொடுக்காமல் வந்து இடித்துவிட்டார்கள். நெடுமாறன், சீமான், வைகோ, நடராஜன் போன்ற யாருக்குமே தெரியவில்லை யார் இப்படி இடிக்கச் சொன்னதென்று. ஒருவர் மத்திய அரசின் சதி என்கிறார். இன்னொருவர் எனக்கும் அந்த விழாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறார். ஒருத்தர் ஜெயலலிதா ஈழத்தாயே தான் ஆனால் அவர் அரசு இப்படிச் செய்துவிட்டதே என்று திகைக்கிறார். ராஜபக்சே எதுவழியாகவோ புத்தர் போல சிரிக்கிறார்.

 ஆனால் பாருங்கள் இந்த காமன்வெல்த் மாநாட்டில் ஈழப்பிரச்சனையை வைத்து சிக்ஸர் அடித்தவர் பிரிட்டன் பிரதமர் கேமரூன். இவ்வளவு நாளும் ஏன் போர் நடந்த நேரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் வதங்கிய போதும் ஐ.நாவின் பான்கிமூன் இலங்கை வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுச் சென்ற போதும் சும்மா இருந்தவர் திடீரென்று ஒருநாள் சேனல் - 4 டி.வியை பார்த்துவிட்டார் போலிருக்கிறது. உடனே வீராவேசமாக பேசியிருக்கிறார். காமன்வெல்த்தில் நிறைய பணம் ஸ்பான்ஸார் செய்த ஒரு பிரிட்டன் நாட்டு செல்போன் கம்பெனிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். ராஜபக்சேவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது மாறாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று சூடு கிளப்பிவிட்டிருக்கிறார். நம்பமுடியாத நிகழ்வுதான் இல்லையா?

 ஈழப்பிரச்சனையின் போக்கை தீர்மானிக்கும் கருவியாக இருந்த பிரபாகரனை இதே பிரிட்டன் உட்பட இந்த நாடுகள் எல்லோரும் சேர்ந்துதான் வேட்டையாடி அழித்தார்கள். முக்கிய காரணி பிரபாகரன் இறந்துவிட்டதால் இனிமேல் இதை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்ள முடியும். ஈழப்பிரச்சனையை அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்சோ, கையில் எடுத்து இலங்கையை மிரட்ட முடியும். அதேபோல இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையின் கூட நின்றுகொண்டு 'அதெல்லாம் ஓண்ணுமே நடக்கலை.. ஒரு அப்பாவி கூட சாகலை.. செத்தது யாரோ அவங்க எல்லாமே எல்.டி.டி.ஈ' என்று சாதித்து பின்புலத்தில் இலங்கையின் தொழில் வர்த்தக லாபங்களை தாங்கள் அடைந்துகொள்ள முடியும். பிரபாகரன் இருந்தவரை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஈழப்பிரச்சனையால் எதுவும் பெரிய பிரச்சனை வந்துவிடவில்லை. ஆனால் இனிமேல் இது உலக வல்லரசுகள் இந்திய கடல் பகுதியில் தங்களது ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள, மற்ற நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க இந்தப் பிரச்சனையை தங்கள் இஷ்டத்துக்கு எழுப்புவார்கள். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஒரு குறியீடாக மாற ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அது தமிழருக்கு விடிவுதரும் குறியீடாகுமா என்பது கேள்விக்குரியதே. ஏனென்றால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு இன்னும் தமிழர் தரப்பிலிருந்து சிங்களருக்கு ஒரு பதிலடி கொடுக்கப்படவில்லை. மாறாக சிங்கள ஆதிக்கத்திற்கு தமிழர்கள் அடிபணிந்து, கேவலப்பட்டு பரிதாபமாக நிற்கும் நிலையே உள்ளது. உள்நாட்டு அகதி முகாம்கள் எனும் சிறைகள் இன்னும் இருக்கின்றன. தமிழர் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்கள் அரசால் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். தமிழர்களை ராணுவம் வீட்டு வாசலில் நின்று கண்காணிக்கிறது. இப்படி ஈழத்தமிழர்கள் வாழ்வில் சீரழிவுகள் மட்டுமேயுள்ளனவேயன்றி முன்னேற்றங்களில்லை.

 இந்தியாவுக்குள்ளே வடக்கத்திய ஆரியர்களும் தெற்கத்திய திராவிடர்களும் இரு எதிர் பிரிவுகளாக இருப்பது போல இலங்கையில் எதிரெதிராக வைக்கப்படும் இனங்களில் சிங்களர்கள் ஆரியர்களாகவும், தமிழர்கள் திராவிடர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஆளும்வர்க்கத்துக்குள்ளே நடந்திருக்கிறது. இந்திய சுதந்திர காலத்திலிருந்து ஆளும் இந்திய வர்க்கம் தமிழனை மதராஸி என்று இழிவாகப் பார்க்கும் எண்ணம் கொண்டே இருந்திருக்கிறது . இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாக அமைக்கப்பட்டதை திராவிடர்களுக்கு எதிரான ஆரியர்களுக்கு ஆதரவான கொள்கையாக இது அமைந்ததுடன் ஒப்பிட்டால் இந்த சிங்கள-ஆரிய பாசம் புரியவரும். திராவிடத் தமிழர்களால் இதை மாற்றவே இயலாமல் போனது. தமிழர்கள் அரசியல் ராஜதந்திர ரீதியாக இது பற்றி பெரிதாகவும் கவலையுற்றதில்லை. இப்போதாவது நாம் இதைக் கருத்தில் கொள்ளவில்லையென்றால் பிற்காலத்தில் ராகுலின் பேரன் இந்தியாவை ஆளும்போது, விஜய் நம்பியாரின் பேரன் சுனில் நம்பியார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் போது, இலங்கை சிங்களர்களின் தேசமாக முற்றிலும் ஆகியிருக்கும்.

 முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்தில் ராஜபக்சே வெற்றிக் கொடி நாட்ட பின்னாலிருந்து மன்மோகன் சிங் கைதட்ட, கேமரூன் கடைசி வரிசையில் நின்றுகொண்டு விசிலடித்து கூட்டத்தை கலைக்கப் பார்க்கிறார். அம்மாவோ கோட்டைச் சுவருக்கு வெளிப்பக்கம் நின்று தீர்மானம் இயற்றுகிறார். நெடுமாறன் ஐயா போன்றவர்கள் இடிந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரின் இடிபாடுகளில் நின்று அம்மாவை எப்படித் திட்டுவது என்று முழிக்கிறார்கள். இத்தகைய நாடகங்களின் முடிவுகள் ஈழத்தின் தீர்வுகளாய் ஆகாது. ஈழ ஆதரவு மற்றும் ஈழ எதிர்ப்பு நாடகங்கள் எல்லாவற்றையும் மக்கள் பொறுமையாக கவனித்தால் மட்டுமே யதார்த்தம் புரியும். மக்கள் கவனிப்பார்களா ? உண்மை வெல்லுமா ? நூற்றுக்கு தொன்னூறு சதவீதம் வாய்ப்பில்லை.

Tuesday, August 6, 2013

ராஜீவ்காந்தியை தாக்கியதற்காக வருத்தப்படவில்லை - விஜிதாமுனி டி சில்வா(vijithamuni de silva)

இலங்கையில் தமிழர்களும் மனுசங்கதான் அவங்களுக்கு ஏதாவது குடுங்க என்கிற அளவில் ஏதோ போனாப்போகுது என்கிற சில உரிமைகளை மட்டும் தரும்விதமாக, முக்கியமாக  நிலத்தின் மீதான உரிமைகள், பாதுகாப்பு, வரி வசூலிப்பு போன்ற அரசின் தன்னாட்சியை உறுதிப்படுத்தும் உரிமைகள் எதையும் ஜாக்கிரதையாகத் தமிழர்களுக்குத் தராமல் நைசாக போடப்பட்டது தான் அரசியல் சட்டப்பிரிவு 13வது திருத்தம். அதற்குப் போடப்பட்டது தான் ராஜீவ்-ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தம்.

இப்படி ஒரு மேம்போக்கான ஒப்பந்தத்தை போட்டதற்கே காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் காந்தியை ஈழத் தமிழரின் விடிவெள்ளி என்று இன்னும் கூத்தாடுகிறார்கள். இந்திய காங்கிரஸ் அரசு கூட இன்னும் அதையே தான் பாவம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவும் இலங்கையும் திரிகோணமலையை அமெரிக்காவுக்குத் தருவது சம்பந்தமாக பேசுவதை சகிக்க முடியாமல் இலங்கையை 'என்னை மீறி யாருடன் நெருக்கம் வைத்தாலும் ஜாக்கிரதை' என்று அப்போது வலியுறுத்த செய்தது தான் ராஜீவ்காந்தி திடீரென்று இலங்கைக்குள் அத்துமீறி இந்திய ஹெலிகாப்டர்களை பறக்கவைத்து சும்மா உணவு போட்ட சம்பவம்.

இவ்வாறான ராஜீவின் மிரட்டலைக் கண்டதும், எப்போதும் தங்களை ஆக்கிரமிப்பவராக இந்தியாவைப் பார்க்கும் சிங்களர்கள், ராஜதந்திரமாக இந்தியாவை வைத்தே தமிழர்களை அழிக்க திட்டத்தை மாற்றிக் கொண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்துக்கு இசைந்தனர். ராஜீவ்காந்தியின் நெருக்குதலால் போடப்பட்ட இந்த அம்சங்களில் பலவற்றை சிங்களர்கள் வெறுத்தனர். இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கையை பல் மத, பல்லின நாடு என்று விவரித்ததை சிங்களர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை சிங்கள நாடு மட்டுமே என்பது அவர்கள் வாதம். மேலும் அது தமிழர் வசிக்கும் பகுதிகளை வடக்கு, கிழக்கு தமிழ் மாகாணங்களாக அங்கீகரித்ததுடன் அவற்றை இணைப்பது பற்றியும் விவரித்தது. தமிழர்களை மைனாரிட்டி இனமாகக் கருதும் சிங்களர்களுக்கு இவ்வாறு தமிழ் மாகணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது மிகப் பெரிய தவறாகத் தோன்றியது. 

இவ்வொப்பந்தத்தின் 13வது சட்டத்திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பையே மாற்றம் செய்யக் கூடியதாக அமைந்தது. அதன் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல் சாத்தியப்படலாம் என்கிற நிலை எழுந்தது. இத்தனைக்கும் 13வது சட்டத்திருத்தம் வரிவசூலித்தல், போலீஸ் துறை, நிலத்தின் மீது உரிமை போன்ற அதிகார உரிமைகளை தமிழருக்குப் பெற்றுத் தரவில்லை. சுயநிர்ணய உரிமைகளைப் பற்றி பேச்சே இல்லை (ஒரு இன மக்கள் ஒரு அரசால் மரியாதையாக நடத்தப்படாத பட்சத்தில் அந்த அரசைவிட்டுப் பிரிந்து தனியாகப் போகும் உரிமையே சுயநிர்ணய உரிமை).
இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் ஒப்பந்தத்தை போட்டபோது இலங்கையின் அரசியல் சாணக்கியத்தனம் வேலை செய்தது. அவர்கள் சரி அதை நிறைவேற்ற இந்தியாவே அமைதிப் படை கொண்டு வந்து ஆயுதங்களை போராளிகளிடமிருந்து வாங்கி அமைதியை நிலைநாட்டட்டும் என்றுவிட்டனர். விடுதலைப் புலிகள் போன்ற சில உண்மையான போராட்டக் குழுக்கள் தவிர மற்ற எல்லாப் போராட்டக்குழுக்களையும் இந்திய அரசு உருவாக்கி மறைமுகமாக வளர்த்து வந்திருக்கிறது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.  எனவே இப்போது தான் கொடுத்த ஆயுதங்களை தானே வாங்கிப் போடவேண்டும் என்கிற நிலை இந்தியாவுக்கு. இதை பெரும்பாலான தமிழர் விடுதலை இயக்கங்கள் எதிர்த்தன. விடுதலைப் புலிகளும் கூட எதிர்த்தனர். சிங்களர்களோ கடுமையாக எதிர்த்தனர். இந்தியாவின் ஆதிக்க மனோபாவம் என்கிற வெறுப்பு சிங்களர் மத்தியில் மேலும் கிளர்ந்தது. சிங்கள அரசு ரகசியமாக தமிழர் விடுதலை இயக்கத்தினருக்கு ஆயுதங்கள் கொடுத்து ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளவும், இந்தியப் படையுடன் சண்டையிடவும் தூண்டிவிட்டது. விடுதலைப் புலிகளை தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்ட இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டது. சிங்களர்கள் நைசாக ஒதுங்கிக் கொண்டனர். இந்திய ராணுவம் ஒழுங்கு நடத்தையில் உலகில் மிக மோசமான ராணுவங்களில் ஒன்றாகும். அமைதிக்கு அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் சீக்கியப் பிரிவுப் படையினர் தமிழர்களைக் கொன்று, சித்திரவதை செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்பு இந்திய ராணுவம் விடுதலைப் புலிகளிடம் அடிவாங்கி ஓடிவந்தது தனிக்கதை.

இப்படி போதுமான அதிகாரம் வழங்க முயலாததால் ஈழத்தமிழருக்கும், இந்தியா நம்மை நிர்ப்பந்திக்கிறது என்று சிங்களவர்களுக்கும் இவ்வொப்பந்தத்தின் மீதான, இந்தியாவின் மீதான வெறுப்பு இருந்தது. இந்நிலையில் தான் இதைக் கையெழுத்திட்டு இந்தியா திரும்ப இருந்த ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இலங்கை ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கிளம்ப இருந்த போது முன் வரிசையில் நின்று கொண்டிருந்த விஜிதாமுனி டி சில்வா என்கிற சிங்கள கடற்படை வீரன் தான் பிடித்திருந்த துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்து ராஜீவ் காந்தியின் தலையைச் சேர்த்து ஓங்கி அடித்தான். ராஜீவ் காந்தி அதைக் கவனிக்காமல் இருந்திருந்தால் அங்கேயே மூளை தெறித்து இறந்திருப்பார். ஆனால் சுதாரித்துக் கொண்ட ராஜீவ் தலை குனிந்து அந்தத் தாக்குதலில் இருந்து தப்பித்தார். அடி அவர் தோள் மேல் விழுந்தது. அவர் இறந்திருந்தால் இந்நேரம் இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டு இருபது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும்.
அவனை இலங்கை ராணுவ கோர்ட் விசாரித்தது. அவனது செய்கையை கொலை முயற்சியாகக் கருதாமல் தாக்குதல் முயற்சியாக மட்டுமே கருதி சாதாரணமாக விசாரித்து ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதில் 21/2 வருடங்களிலேயே சிறையை விட்டு வந்த விஜிதாமுனி டிசில்வா இலங்கை ஒப்பந்த எதிர்ப்புக் குழுவில் முக்கிய தலைவராக இருந்து வருகிறான். இலங்கையில் இசைத்தட்டு சி.டிக்கள் விற்கும் கடையொன்றை நடத்தி வரும் இவனிடம் சமீபத்தில் பேட்டி காணப்ப்ட்டது.

அப்போது பேட்டியில் அவன் கூறிய சில விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை: "ராஜீவ் காந்தி ஒப்பந்த்தில் கையெழுத்திட இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தியதை தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அவரை தாக்கினேன். அவரைக் கொல்லவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் தாக்கினேன். ஏனென்றால் இலங்கையை சிதைக்கும் எண்ணம் கொண்டவர் ராஜீவ். என்னுடைய இந்தச் செயலுக்காக இப்போதும் நான் சந்தோஷப்படுகிறேன். தாக்குதலுக்குப் பின் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் நான் செய்ததற்காக வருத்தப்படவேயில்லை. தான் தாக்கப்படலாம் என்று ஊகித்திருந்தார் ராஜீவ். இதற்காகவே தன்னுடன் பாதுகாவலரையும் அணிவகுப்பில் அழைத்து வந்திருந்தார். ஆனாலும் நான் தாக்கியது குறி தவறிவிட்டது." .. இவ்வளவையும் நஞ்சாகக் கக்கிவிட்டுப் பேசும் விஜிதாமுனி டிசில்வா 'நான் எப்போதும் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. நான் நிறைய சி.டிக்கள் இந்தியர்களுக்குத் தான் விற்றுள்ளேன். எனக்குப் பிடித்தவை இந்தியப் பாடல்கள் தான்' என்றும் கூறிக் கொள்கிறான்.

இவ்வளவுக்குப் பின்னும் இந்திய பூகோளவியல், வரலாற்று ஆய்வாளர்கள் காலையில் எழுந்து இந்து பேப்பர் படிக்கிறார்கள்.  இந்தியாவுக்கு என்ன பிரச்சனை ? ஒன்றுமேயில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். சிங்களன் இந்திய மீனவர்களை, தமிழ் மீனவர்களை அடித்தால் ஒற்றை வரியில் கண்டனக் கடிதங்கள் மட்டுமே வாசிக்கிறார்கள். அமெரிக்கா கிட்டே வந்தால் உறுமிய இ்தியா இன்று சீனாவும் இலங்கையும் பிண்ணிப் பிணைந்து நட்பாகிவிட்டாலும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ராஜீவ் காந்தியை விஜிதாமுனி துப்பாக்கியின் வலுவான பின்பக்கத்தால் அடித்த அடி மிகப் பலமானது. உயிரையும் கொல்லக்கூடிய அளவு வலுவானது. அன்று அவன் அடித்த அடியில் அவர் செத்திருந்தால் இன்னேரம் ஈழத்தில் தமிழர்கொடியும் சேர்ந்து பறந்திருக்கும். ஆனால் இப்போதோ இலங்கையை இன்னும் இந்தியா நயவஞ்சகமாக ஆதரிப்பது இந்திய உயர்சாதி ஆளும் வர்க்கம் சிங்களர்கள் நம் இனம் தானோ என்று நம்புவதைப் போலவே இருக்கிறது. தமிழர்கள் அன்னியர்கள் என்கிற பார்வையில் சும்மா பேச்சுக்கு கண்டிப்பது போல் கண்டிப்பதாகவே இந்தியாவின் நடவடிக்கைகள் இருக்கிறது. இவ்வளவு பெரிய நாடான இந்தியாவிடம் இவ்வளவு வருடங்களாக அசால்ட்டாக மிரட்டி, நயந்து பேசி, உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொள்ள வைத்து இப்படி எல்லா ராஜதந்திரங்களும் செய்து  இன்றைக்கு அமெரிக்கா, சீனா, இந்தியா மூவரிடமும் எல்லாவித உதவிகளையும் பெற்று ஜாலியாக ஐ.நா. சபையில் காலாட்டிக் கொண்டிருக்கிறது.  விஜிதாமுனி டி சில்வா நல்லவன் தான் போலிருக்கிறது. உள்நாட்டிலேயே நமக்கு இருக்கும் போன்மோகன்களையும், போனியாக்களையும், போகுல் பூந்திகளையும் நாம் என்ன செய்து தாண்டி வரப் போகிறோம்.. ?

Wednesday, March 27, 2013

சிங்கள-தமிழ் பிரச்சனையை வடஇந்தியர்-தமிழர் பிரச்சனையாக்க கரியவாசம் செய்த தந்திரம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் முன்பு காலத்தில் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசியவரே என்றாலும் கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்ததே. ஈழத்துக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டத்தில் கூட அவர் வெளிப்படையாக மாணவர்களை ஆதரிக்கவில்லை.

சென்ற வாரம் ஈழமக்களின் துயரங்களை கேள்விப்பட்ட சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனம் வருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்குக் கூட அரசிடமிருந்து எதுவும் நிவாரணங்கள் சென்றதாகத் தெரியவில்லை. ஊடகங்களும் அந்தச் செய்தியை வெளியிடவில்லை. ஒருவேளை இனி ‘நாம் சாவது தேவையில்லை நம்மை சாகடிப்பவர்களை சாகடிப்போம்’ என்கிற போராட்ட உணர்வு எழுந்திருப்பதுவும் காரணமாக இருக்கலாம்.

அம்மையார் மற்றவர்கள் போராடுவதை விட தான் தன் அதிகாரத்தின் மூலம் செயல்களைச் செய்வதையே விரும்புகிறார் என்பதை காட்டும் விதமாக மூன்று நான்கு முறை இந்தியாவுக்கு “நட்பு”ரீதியில்(கொல்றதையும் செஞ்சுக்கிட்டு நட்பு என்னா நட்பு?) விளையாட வந்த சிங்களவர்களைத் தமிழக அரசே வெளியேற்றியது.

இப்போது ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களைக் குறிவைத்து காசு பார்க்க நடத்தப்பட இருக்கும் வேளையில் அதில் இலங்கை வீரர்கள்-நடுவர்கள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகள் எதுவும் சென்னையில் நடக்க விடமாட்டோம் என்று அம்மா அதிரடியாக அறிவித்துவிட்டார். இதே அறிவிப்பை ஈழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சென்று தெரிவித்திருக்கின்றனர். அவர்களுடைய அறிக்கையில் சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாமென்றும், அப்படி விளையாடினால் மைதானத்துக்குள் நுழைந்து போராடுவோம் என்றும் அறிவித்திருக்கின்றனர்.

ஐபிஎல் என்கிற தனியாருக்கு கொள்ளை லாபம் பெற்றுத் தரும் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமிலேயே வெட்கமில்லாமல் இரண்டு சிங்கள வீரர்களை வைத்திருக்கின்றனர். இது போல மற்ற அணிகளிலும் இருக்கும் இலங்கை வீரர்களின் எண்ணிக்கை பனிரெண்டு. இந்தப் பனிரெண்டு பேரும் சென்னையில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐயும் பிரச்சனை எதுக்கு என்று நினைத்து அறிவித்துவிட்டது. ஆனால் அவர்கள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் விளையாடுவார்கள். ஏனென்றால் வட இந்தியர்களுக்கு தமிழன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்று கருதுவதில் கஷ்டம் இருக்கிறது.

இதை உறுதிப் படுத்தும் விதமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் எனும் சிங்களர் வட இந்திய ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊடகங்களுக்கு நைஸாக அனுப்பிய மின்னஞ்சல் (ஈமெயில்) இப்போது அம்பலமாகியுள்ளது. அந்த ஈமெயிலில் அவர் இலங்கையின் சிங்களவர்கள் கி.மு. 300களில் வட இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலிருந்து (கலிங்கம்) வந்தவர்கள் என்றும், அசோகர் புத்தமதத்தை பரப்ப தனது மகள் சங்கமித்ரையையும், மகன் அரிஹத் மஹிந்தாவையும் அனுப்பினார் என்றும், அவர்கள் இலங்கையில் வந்திறங்கி பெருகியவர்களே இன்று சிங்களர்களாக இருக்கிறார்கள் என்றும், எனவே, இந்தியா 12 சதவீதமே இருக்கும் தமிழர்களின் உரிமைகளுக்காக கவனம் செலுத்துவதை விட 75 சதவீதமாய் இருக்கும் வட இந்தியர்களான சிங்களர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழராக இருந்தாலும் பிராமணரான சுப்பிரமண்ய சாமி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா திருத்துவதை தடுக்க அமெரிக்கா சென்று அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேசிப் போராடி இலங்கைக்கு எதிரான வாசகங்கள் ‘இனப்படுகொலை’, ‘சர்வதேச விசாரணை’ வராமல் பார்த்துக் கொண்டார். இது இன்னும் இனப் பிரச்சனை அல்ல சும்மா போர்க்குற்றங்கள் தான் என்று பேசும் தமிழ்நாட்டு தேசியக் கட்சிகள் இப்போதாவது விழித்தெழுந்து கொள்வார்களா?

கரியவாசம் போன்ற இலங்கை நாட்டின் தூதர் எனப்படும் மிகப் முக்கியமான பதவியிலிருப்பவரே சிங்களர்களின் மூதாதையர்கள் வடஇந்தியர்கள் என்கிற கருத்தை முன்வைக்கும் போது நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. ஒருவேளை இதனால் தான் இந்தியா சிங்களருக்குச் சாதகமாகவே இவ்வளவு காலமாக நடந்துவருகிறதா? இலங்கைக்கான இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழர்களைக் காப்பதற்குப் பதில் சிங்கள மூதாதையர்களான வட இந்தியர்களைப் பாதுகாக்கவே அமைக்கப்பட்டதா?  அதனால் தான் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்தே தமிழர்களின் உரிமைகள் படிபடிப்படியாக பறிக்கப்பட்டு இன்று இன அழிப்பு உச்சத்திலிருக்கிறதா ? கி.மு. 300ல் போன சிங்களர்களுக்கு இலங்கை என்றால் அவர்களுக்கு 5000 வருடங்களுக்கு முன்பே அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு இலங்கை சொந்தமில்லையா ? அவர்கள் இலங்கையின் மூதாதையர்கள் இல்லையா ?
தமிழர்களே யோசியுங்கள். இலங்கையின் சிங்களன்-தமிழன் பிரச்சனை இந்தியாவின் வட இந்தியன் -தென்னிந்தியன் பிரச்சனையாக மாற்றப்படுகிறதா ? அதனால் தான் மற்ற மாநிலங்களில் இலங்கை வீரர்கள் ஐபிஎல் மேட்ச் விளையாட அனுமதிக்கப்படுகிறார்களா?

Thursday, March 7, 2013

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மான நாடகம் - இந்தியா தயக்கத்துடன் ஆதரித்தது



ஐ.நா.வில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் 24 ஆதரவு ஓட்டுக்களும், 15 எதிர் ஓட்டுக்களும் பெற்று வெற்றி பெற்றது (உடனே சந்தோஷப்பட்டுக்காதீங்க). 8 நாடுகள் எங்களுக்கு ஓட்டுப் போட இஷ்டமில்லைன்னுட்டு கழன்று கொண்டன. தீர்மானத்துக்கு ஆதரவாக(இலங்கைக்கு எதிராக) ஓட்டுப் போட்ட
அமெரிக்கா, இத்தாலி, மெக்ஸிகோ, ஆஸ்திரியா, நார்வே, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ரோமானியா, உள்ளிட்ட 24 நாடுகளுடன் கடைசிவரை இங்கிட்டா அங்கிட்டா என்று எந்தப் பக்கம் தாவுவது என்று பயங்கரமாக யோசித்து கடைசி வினாடியில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது. தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளில் சீனா, ரஷ்யா, கியூபா (இதுதான்டா கம்யூனிசம்), பங்களாதேஷ், தாய்லாந்து, சவூதி அரேபியா, க்வைத், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் அடக்கம்.

அப்பாடா இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தாச்சீ (சிங்கம் களமிறங்கிடுச்சீ..) இனி ராஜபக்சேல இருந்து கோத்தாபய(முன்னாடி 'ங்' சேக்கலைங்க) ராஜபக்சே வரை எல்லாருக்கும் தூக்குத் தண்டனை நிச்சயம்னு  நாம் நீதி கிடைச்ச சந்தோஷத்துல துள்ளிக் குதிக்க ஏதுமில்லை என்பது தான் உண்மை. இதைப் புரிஞ்சிக்கணும்னா கொஞ்சம் போனவருஷத்துக் கதையை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கனும்.

ஈழத்துல போர் நடந்தப்பவே அமெரிக்காவுல இருந்து சீனாவுல இருந்து இந்தியா வரைக்கும் எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மை என்னான்னா "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற சொல்லாடல்ல கதை கட்டி இந்த உலகமயமாக்கல் காலத்துலயும் தனித்து திறமையா போராட முடிஞ்ச உலகின் சக்தி வாய்ந்த புரட்சி இயக்கமாக (அதாவது தீவிரவாத இயக்கமா) மாறிட்டு இருந்த விடுதலைப் புலிகளை 'கதம் கதம்' பண்றது தான் எல்லா அரசுகளும் ஒன்று சேர்ந்த மையப் புள்ளி என்பது.  போராளிகளின் கதையை பூண்டோடு முடித்த  இலங்கை வெறும் அம்பு மட்டுமே. வில் சீனாவாக, அமெரிக்காவாக, இந்தியாவாகத் தானிருந்தது.

2009ல் மே மாதம் 17ம் தேதி போர் முடிஞ்சதும் ஐ.நா. பத்து நாட்கள் கழித்து 27ம் தேதியில் கொண்டு வந்த ஒரு தீர்மானம் விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக இலங்கை அரசை பாராட்டியும், விடுதலைப் புலிகள் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தது போன்று மகாக் கொடிய பாபங்களைச்(?) செய்ததால் அவர்களை கண்டித்தும் ஓரு தீர்மானம் நிறைவேற்றியது.  மனித உரிமை மீறல்கள் பற்றி அந்த மனித உரிமைகள் கமிஷன் கண்டுக்கவேயில்லை. தீர்மானத்தை(இலங்கையை) 29 நாடுகள் ஆதரித்தன. 12 நாடுகள் எதிர்த்தன.

ஜூன் 2010ல் பான்-கி-மூன், இலங்கைல என்னதான் நடந்துச்சுன்னு ஆராய்ஞ்சு ஒரு ரிப்போர்ட் தாங்க பாக்கலாம்னு ஒரு மூன்று பேரை நியமிக்கிறார். அவங்களும் கிளம்பி இலங்கைக்கு வந்து நல்லா ராஜபக்சே வீட்ல விருந்தெல்லாம் சாப்டுட்டு திரும்பப் போய் நிறைய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது வாஸ்தவம் தான். ஆனால் அதுல விடுதலைப் புலிகளுக்கும் பங்குன்னுட்டு போய்ட்டாங்க. இப்படி இலங்கையை ரொம்ப காட்டிக்கொடுக்காத அந்த ரிப்போர்ட்டே கதிகலங்க வைக்கிற உண்மைகளோட இருந்துச்சா, உடனே பான்-பராக்-மூன் ... சாரி... பான்-கி-மூன் அந்த அறிக்கையை தூக்கி குப்பைத் தொட்டில போட்டுட்டார் செல்லாது செல்லாதுன்னுட்டு.

அதுக்கப்புறமா போனாப் போவுதுன்னு இலங்கைக்கு எதிரான விஷயங்களை இன்னும் குறைச்சிட்டு 2011ல் அந்த அறிக்கையை வெளியிட்டாங்க. அதுல ஐ.நா.க்காரங்க சொன்ன தீர்வு தான் ரொம்ப வினோதமானது. "கொன்னது நீங்களே(இலங்கை).. எனவே நீங்களே ஒரு கமிஷன் 'கத்துக்கிட்ட பாடங்களும்' மறுசீரமைப்பும்ன்ற பேர்ல (LLRC - பேர்ல இருந்தே தெரியுது ஐ.நா. விடுதலைப்புலிகளைக் கொன்னது சரிதான்னு நினைக்கிறது..) ஆரம்பிச்சி விசாரிச்சி நீங்களே தீர்ப்பும் குடுத்துக்கோங்க.."ன்னுட்டாங்க, அதாவது கையும் களவுமா பிடிபட்ட திருடன் கிட்ட போலீஸ்காரன் திருட்டுப் பயலே உன்னைப் பிடிச்சிட்டேன், அதனாலே இப்போ உன்னை நீயே தண்டிச்சுக்கோன்னு சொல்லிட்டு போனா மாதிரி... ஏன்னா ஐ.நா.க்காரவுக ரொம்ப ஸ்ட்ரிக்டாம் அடுத்த நாட்டோட 'இறையாண்மை'ல நுழைய மாட்டாங்களாம். அமெரிக்கா ஈராக்கிலும், இந்தியா காஷ்மீரிலும், சீனா பர்மாவிலும் என்னா பண்றாங்களாம் ?

இதுக்கே ஏதோ பதிவிரதையோட விரல் நகத்தை அன்னிய ஆடவன் தொட்டுட்ட மாதிரி குய்யோ முறையோன்னு ராஜபக்சேக்கள் கத்தி எங்களைத் தொடாதே.. தொட்டா என்ன ஆகும் தெரியுமான்னு சவால்லாம் விட்டு, அதை இந்தியா போய் தாஜா பண்ணின்னு காமெடியா நடந்திருக்கு. அத்தோட இன்னொரு காமெடியா இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதும். இந்தத் தீர்மான வெற்றியானதால் என்ன நடக்கும் ?

ஒன்னும் நடக்காது. இலங்கை தான் நியமிச்ச LLRCயின் செயல்பாடுகளையும், பரிந்துரைகளையும் உடனே  செயல்படுத்த வேண்டும். இது தான் இந்தத் தீர்மானத்தின் வெற்றி வலியுறுத்துவது. (எனக்குத் தெரிஞ்சு LLRCயோட பரிந்துரையெல்லாம், மொத்தமா கொன்னா ஒழுங்கா புதைக்கனும்.. பெரிய தலைங்கலைக் கொன்னா, ரேப் பண்ணி கொன்னா உடனே தடயமில்லாம எரிக்கனும்... அப்படின்ற ரேஞ்சுக்கு தான் இருந்தது).

இதுக்கு ஒரு ஓட்டுப் போடச் சொன்னா ஒருத்தர் "இலங்கை நமக்கு எதிரி நாடில்லை மாறாக நட்பு நாடு"ன்னு பார்லிமண்ட்ல இழுக்கிறார். இன்னொருத்தர் பறந்து போய் ராஜபக்சாவைப் பார்க்கிறார் "பதறாதீங்க ராஜபக்ஷே நாங்க இருக்கோம் சப்போர்ட்டுன்னு காதில ஓதிட்டு வர்றார்". இன்னொருத்தார் 'அவங்க நாட்டு உள்விவகாரத்துல நாம தலையிட முடியாது(திருட்டுத் தனமா எட்டி மட்டும் பார்ப்பாங்க போல)' ன்னு மக்களுக்கு புத்திமதி சொல்ல ஆரம்பிக்க, கடைசியில் பாலச்சந்திரனின் கொலையான வீடியோவைப் பார்த்து தமிழகம் கொதிக்க, இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்கிற 50 வயதானவர் 'ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளி என அறிவிக்க வலியுறுத்தி'தீக்குளித்துவிட்டார். இந்தியா-சோனியா அந்த அளவுக்கு ராஜபக்சேவுக்கு ஸ்ட்ராங் சப்போர்ட்டு.

தமிழகம் நன்றாக தூக்கத்திலும், தொலைக்காட்சி மயக்கத்திலும் இன்னும் வாழ்ந்து வருகிறது.  பாலச்சந்திரன் மரணத்தில் திடீரென்று அது கொதித்து எழுந்ததைக் கண்டு பதறி தமிழர்களை கூல் பண்ணுவதற்காக போடப்பட்ட சந்தர்ப்பவாத ஓட்டே  இந்த இந்தியாவின் ஆதரவு ஓட்டு.

இப்போது சொல்லுங்கள் தீர்மானம் ஐ.நாவில் வெற்றி பெற்றதால் யாருடைய வாழ்வாவது திரும்பக் கிடைக்குமா என்று, இல்லை. ஒருபோதும் இல்லை.