Sunday, March 3, 2013

2.57 லட்சம் கடன் வாங்கினால் திரும்பக் கட்டவேண்டியதில்லை

இப்படியொரு புதிய திட்டம் இந்திய அரசில் சைலன்ட்டாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நிறைய பேருக்கு தெரியாத இந்தத் திட்டத்தின்படி அரசு சாரா வங்கிகளில் ரேஷன் கார்டை மட்டும் காட்டி நீங்கள் வருடா வருடம் 2.57 லட்ச ரூபாய் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதை திருப்பித் தரவேண்டியதில்லை. அந்த வருட இறுதியில் ‘வசூலிக்காத தொகை’(Revenue Forgone) என்று பேங்க்கில் கணக்கெழுதி அதை அவர்களே

தள்ளுபடி செய்துவிடுவார்கள். அடுத்த வருடம் திரும்பவும் புதிதாக இதே போல நாம் கடன் வாங்கிக் கொள்ளலாம். நம் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பதவியேற்றதிலிருந்தே புரட்சிகரமான இத்திட்டம் செயல்பாட்டில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. சும்மா சும்மா மக்குமோ.. என்று அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டத்தால் ஏழைகள், விவசாயிகள், சிறுதொழில் செய்பவர்கள், பெண்கள் என்று பல கோடிப்பேர் பயனடைவார்கள்.

ஓ.. சாரிங்க. தவறுதலா மாத்தி எழுதிவிட்டேன். இந்தத் திட்டம் மேலே சொன்ன மாதிரி நமக்கு இல்லீங்க. அம்பானி, டாடா, மிட்டல், எஸ்ஸார், விப்ரோ போன்ற பணக்கார ஏழைங்களுக்காக, உலகப் பணக்காரங்க லிஸ்ட்ல முன்னுக்கு வரத்துடிக்கும் புரட்சி மிகு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக, போடப்பட்ட ஸ்பெஷல் திட்டமாம். சர்க்குலேஷனை மாத்தி என்கிட்ட சொல்லிட்டாங்க. இந்த கார்ப்பரேட் அரசு திட்டத்தின்படி வருடா வருடம் கார்ப்பரேட்களிடமிருந்து வசூலிக்கவேண்டிய வரி மற்றும் கடன்களை வசூலிக்காத தொகை (Revenue Forgone - கவனிங்க வசூலாகாத தொகையில்லை... அரசு வேண்டுமென்றே வசூலிக்காமல் விட்ட தொகை) என்று பெயரிட்டு தள்ளுபடி செய்துவிடுவார்கள். பட்ஜெட்டில் வரவு செலவில் இந்தத் தொகை செலவுக் கணக்காக சேர்ந்து விடுவதால் பட்ஜெட் வரவு செலவு கணக்கு க்ளீனா டேலியாகிவிடும். எந்த ஆடிட்டரும் குத்தம் சொல்லமுடியாது. ஆமா.

போன வாரம் நம்ம ப.சி அய்யா உலகப் பொருளாதாரப் புளி..சாரி.. புலி... போட்ட பட்ஜெட் கணக்குல அப்படி இந்த 2013 ஆம் வருஷம் கார்ப்பரேட்டுக்கிட்ட இருந்து தள்ளுபடி செஞ்ச பணம் 2.57 லட்சம் தான். மறுபடியும்.. சாரிங்க (ராத்திரி சரக்கு ஓவராயிடுச்சு). அது 2.57 லட்சம் கோடி(2,57,00.00.00,000 ரூபாய்). எம்மாடியோவ் (புளிச்ச ஏப்பம்). இந்தத் திட்டம் 2006ல இருந்தே இருக்குதாம் சத்தமில்லாம. அவ்வளவு பெரிய பட்ஜெட் கணக்குல இத்துனூன்டு ரெண்டு வரியை எவன் கவனிக்கப்போறான்னு நெனச்சிருக்காங்க. அவங்க நினைச்ச மாதிரியே இன்னிக்கு வரைக்கும் இ.காங், சோ.காங், ரா.காங், பா.ஜா. அத்.ஜா, அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, சரிகமப, போன்ற எந்தக் கட்சிகளுக்கும் இது கண்ணுலேயே படலையாம் (காமாலைக் கண்ணுபோல). ஒருத்தரும் ஏன்யா இப்படி வரியையும், விலைவாசியையும் ஏத்தி மக்கள் உசிரெடுக்கிற, இந்த பணக்கார பிச்சைக்காரனுங்களுக்கு இப்படி சைலன்டா குடுக்கிறேன்னு கேக்கவே இல்லீங்க (கம்யூனிஸ்டுகள் மட்டுமே இதுல மனுஷங்க. இந்த மொள்ளமாரித்தனத்தை வெளிய கொண்டு வந்ததே அவங்க தான். பாவம் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண உங்க யாருக்கும் மனசு வரலை. மாத்தி மாத்தி அம்மாவையும், அய்யாவையும் தொங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவங்களுக்கு வந்தது யாரால? எல்லாம் உங்களால தான். ‘உண்டியலடிக்கிறவன்’ தானேன்னு கம்யூனிஸ்ட்டுகளை நக்கலா பேசமட்டும் தானே தெரியும் உங்களுக்கு. நீங்க என்னவோ பிர்லா, அம்பானி பார்ட்டிகள் போல லட்சம் கோடி கவர்ன்மெண்ட்டுகிட்ட இருந்து ப்ரீயா வாங்கறா மாதிரி).

வசூலிக்கப்படாத வருமானம் (Revenue Forgone) இதுவரை..
2005-2006 ல்  2,06,700 கோடிகள்
2006-2007 ல்  2,35,191 கோடிகள்
2007-2008  ல்  2,78,644 கோடிகள்
2008-2009 ல்  4,14,099 கோடிகள்
2009-2010  ல்  5,02,299 கோடிகள்
2010-2011 ல்  2,01,166 கோடிகள்
2011-2012 ல்  2,50,003 கோடிகள்
2012-2013 ல்  2,57,000 கோடிகள் (இது தான் இந்த வருஷத்து கணக்கு) எல்லாமே லட்சம் கோடிகளில். (அவ்வையே...லட்சம்ன்னா என்ன.? கோடின்னா என்ன? லட்சம்கோடின்னா என்ன?)

இந்தப் பணத்தை மட்டும் இந்த கார்ப்பரேட் ஏழைங்க கிட்ட இருந்து வசூல் பண்ணியிருந்தா பஸ் டிக்கெட்டை கி.மீ.க்கு 12 காசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.59 காசு (அப்பா.. ‘புள்ளி 59’ என்னா கணக்கு சுத்தம்?), காஸ் விலையை சிலிண்டருக்கு 15 ரூபாய் அப்படின்னு கவர்மென்ட் பிச்சைக்காரத்தனமா விலைகளை உயர்த்தவேண்டிய அவசியம் வரவே வராது. ஏன்னா இப்படியெல்லாம் விலையை உயர்த்தினாலும் கூட இப்போ அரசுக்கு ஏதோ சில பத்தாயிரம் கோடிகள் தான் தேறுது. அது மாதிரி 20 மடங்கு பணத்தை இப்படி கார்ப்பரேட் ஏழைங்களுக்கு ‘தொழில் வளர்ச்சிக்கு’ன்னுட்டு கவர்ன்மெண்ட் அள்ளிக் குடுத்தாலும் பாருங்க பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் 9க்கும் நடுவுலயே முக்கிக்கிட்டு இருக்கு. ஒருவேளை நாட்டில யாரும் சரியா உழைக்கிறதே இல்லை போல இருக்கு. வேலை பார்க்குற 60 கோடி தடிப்பசங்களும், தடிப்பசங்கிகளும் டெய்லி நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறானுங்க போல இருக்கு.

ஒளிர்கிறது இந்தியா. ஜெய் அம்பானி... சாரி.. ஜெய்ஹிந்த்

ஆதாரங்கள்:
http://exim.indiamart.com/budget-2007-08/statement-revenue-foregone.html
http://indiabudget.nic.in/ub2010-11/statrevfor/annex12.pdf
http://indiabudget.nic.in/ub2013-14/statrevfor/annex12.pdf
http://indiabudget.nic.in/ub2012-13/statrevfor/annex12.pdf

அப்பா.. எங்கள் அப்பா..


சென்ற வாரம் லண்டனிலிருந்து வெளிவரும் சேனல்-4 ன் சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகியது. இப்படத்தில் சரணடைய வந்த 12 வயதேயான பாலச்சந்திரனை முகாமில் பிடித்து வைத்து விசாரித்து சித்திரவதைகள் செய்து பின்  ஈவிரக்கமின்றி சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற தகவல் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியானது.

இதையொட்டி உலகெங்கும் எழுந்த கண்டனக்குரல்களை சிங்கள அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் அசால்ட்டாக அமுக்கி விட்டன. சும்மான்னாச்சுக்கும் இனி வரப்போகும் ஐ.நா கூட்டத்தில் இலங்கை மீது அறிக்கை என்கிற பெயரில் சில கேள்விகள், தகவல்கள் வீசப்படும். அவற்றிற்கு இலங்கை அடிபணிவது என்பது கனவிலும் நடக்காது. இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசு, இந்தியாவை ஆளும் சோனியாவின் அரசுடன் சேர்ந்து அத்தீவில் தமிழர்களை கூண்டோடு இல்லாமல் செய்யும் நாள் விரைவில் வர இருக்கிறது.

சிறுவன் பாலச்சந்திரனின் அநியாயமான படுகொலை வீடியோ வெளியானதையொட்டி  அறிவு மதி எழுதியிருக்கும் கவிதையொன்றை வைத்து ஒரு காணொளி வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. தாஜ்நூர் என்பவர் இசையமைத்துள்ளார். நான்கு நிமிடங்கள் ஓடும் இதை கௌதமன் இயக்கியுள்ளார்.

இறந்து போன பாலச்சந்திரன் தன் தந்தையும் விடுதலைப் புலிகளின் தலைவருமான பிரபாகரனை நோக்கிப் பேசுவதாக எழுதப்பட்ட கவிதை இது. பிரபாகரன் இறந்து போன போராளிகளின், மக்களின் அனாதைக் குழந்தைகளை வளர்க்க மாஞ்சோலை போன்ற இளம் சிறார்கள் இல்லங்களை நடத்தி வந்தார். அவற்றின் மீது கூட சிங்கள ராணுவம் குண்டுகள் வீசி அக்குழந்தைகளை கொன்றது. பிரபாகரனும், போராளிகளும் சிங்கள ராணுவத்திற்கும், சிங்கள அரசிற்கும், சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும் சிம்ம சொப்பனமாய் இருந்தார்களேயொழிய சாதாரண சிங்கள மக்களை இலக்காய் கொள்ளாத பெருந்தன்மை கொண்டிருந்தார்கள். இந்த நாற்பதாண்டு கால போராட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தமிழர்கள் மீதான தொடர்ந்த தாக்குதல்களின் எண்ணிக்கையும் சிங்களர்களின் மீது எப்போதாவது நிகழும் எதிர்வினைகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் மட்டுமே இந்த உண்மை விளங்கும். உலக ஊடகங்கள், ஐ.நா. உட்பட இந்த உண்மைகளை விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்றவர்கள் என்று காட்டுவதற்காக மறைத்தே வந்திருக்கின்றன. இந்த உண்மைகளை, யதார்த்தத்தை மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் இந்த கவிதை இனஉணர்வற்ற தமிழர்களைக் கூட கோபம் கொள்ள வைக்கும்.

என் அப்பாவும், உன் அப்பாவும் நைசாக தங்கள் வாழ்க்கையை மட்டும் சுயநலமாகப் பார்த்ததன் விளைவாகத் தான் இன்று பாலச்சந்திரனும் அவனது தந்தை பிரபாகரனும் போர்க்களத்தில் செத்துப் போனார்கள். பிரபாகரனுடன் சேர்ந்து போராட வர மறுத்த எவ்வளவோ ஈழத்தமிழ்க் குடும்பங்கள் உண்டு. அதற்காக தங்கள் பிள்ளைகளை ரகசியமாய் புலிகளுக்குத் தெரியாமல் காட்டில் அனுப்பிய குடும்பங்களும் நிறைய உண்டு. ஆனால் அவர்களை விடுதலைப் புலிகள் ஏதும் செய்யவில்லை. அவர்களுக்காகவும் சேர்ந்து தான் அவர்கள் போராடினார்கள். ஈழத்தமிழருக்கும், தமிழருக்கும் விடுதலைப் போராளிகளாய்த் தெரியும் அவர்கள் தான் சிங்கள அரசாலும், இந்திய சோனியா அரசாலும், ஐ.நா.வாலும் டெர்ரரிஸ்ட்டுகளாய் பட்டியலிடப்பட்டார்கள்.

தமிழனின் இனம் இன்று இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்கப்படுகிறது. அங்கிருந்து அவன் விரட்டப்படுகிறான். இதுவே நாளை உலகெங்கிலும் இருக்கும் தமிழனுக்கும் நிகழும். அப்போதும் இந்திய அரசு தனக்கு பிடிக்காத மாநிலமான தமிழ்நாட்டு மக்களுக்காக எந்தக் குரலும் எழுப்பாமல் கள்ள மௌனம் சாதிக்கும். இது தான் தமிழின், தமிழனின் தலைவிதி.

இதை மாற்ற மத்திய அரசில் தமிழன் கை ஓங்க வேண்டும். இலங்கையுடனான வெளியுறவுத் துறைக்கு மலையாளி, கன்னடியன், தெலுங்கர்களல்லாமல் தமிழனே தூதராக வரவேண்டும். ஐ.நா.விலும் இலங்கை சம்பந்தமான உறவுகளைப் பேண தமிழனே நியமிக்கப்பட வேண்டும். அதைச் செய்தால் தான் இந்திய அரசு என்கிற நயவஞ்சக நரியை தமிழன் தன் கட்டுக்குள் கொண்டு வந்து தமிழனைக் காக்க முடியும்.

அந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக்கவும்.