Saturday, December 24, 2011

குடி: கெளடில்யன் முதல் டாஸ்மாக் வரை

குடி: கெளடில்யன் முதல் டாஸ்மாக் வரை
06-டிசம்-2011
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
கேட்க ரொம்பப் புரட்சியாய் தெரியும் இந்த வாசகம் எதற்குத் தெரியுமா ? மஹாராஷ்ட்ராவும் டில்லியும் தங்கள் மாநிலத்தில் குடிப்பவர்களின் வயது 25 என்று ஆக்கிவிட்டதை எதிர்த்துத்தான் இந்தப் புரட்சி வாசகம். வாசகத்தை வழங்கியது நம்ப டைம்ஸ் ஆப் இண்டியா(அமெரிக்கா?)’. இது தான் கார்ப்பரேட்கள் இன்றைய இளைஞர்களுக்கு வழங்கும் சுதந்திரப் பார்வை. தண்ணியடிக்கிறது ஏன் இஷ்டம். நீ (கவர்மெண்ட் தான்) யார் அதைக் கேக்குறது ?’
குடித்துவிட்டு மன்மோகனை மானாவாரியாகத் திட்டினாலும் மெளனமாகக் கடந்து செல்லும் அதே காவல்துறை, நான்கு பேர் சேர்ந்து குடிக்காமல் ஸ்டெடியாக ரோட்டில் நின்று வால்மார்ட்டுக்கு வால்பிடிக்கும் மன்மோகன் என்றால் நம்மைப் பிடித்து ஒரு பத்து நாள் உள்ளே வைப்பார்கள். ஏன் இந்த வித்தியாசம் ?
குடித்திருப்பவன் பலமற்றவன். தனது இயலாமையை மறக்க அவன் குடிக்கிறான். இயலாமையை மறைக்க அவன் ப.சி முதல் பக்கத்துவீட்டு பால்காரன் வரை திட்டுகிறான். அதனால் ப.சிக்கும் பங்கமில்லை, பால்காரனுக்கும் உபத்திரவம் இல்லை.
மக்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாக இருப்பது அரசுக்கு நல்லது. அப்போது தான் அதை நீங்கள் எதிர்த்துக் கேள்வி எழுப்ப மாட்டீர்கள்; போராட விரும்ப மாட்டீர்கள். பெட்ரோல் விலையை என்ன பெட்ரோமாக்ஸ் விலை பத்தாயிரம் ரூபாய் என்றாலும் பேசாமல் வாங்கிப் போவீர்களா இல்லையா ? குவார்ட்டர் கிடைத்தால் பத்தாதா ? வேறென்ன வேண்டும் ?
விடுதலை டவுசர், அறிவுக் கொழுந்து, பகுத்தறிவுப் புலி, சுதந்திரமான சுப்பாண்டி என்கிற பெயர்களாலும் படித்த, அறிவுள்ள ஆண்களும், பெண்களும் குடிக்கின்றனர். என்னிக்காவது குடிச்சால் பரவாயில்லை. என்னிக்குமே குடிப்பவர்களாக இருந்தா என்ன பண்றது. செத்த அன்னிக்கு பீர் ஊத்த வேண்டியதுதான்.
அரசே ஏற்று நடத்தி மக்களை நாசமாவும் ஆக்கி காசும் பார்க்கும் இந்தக் குடி அடிமை டெக்னிக் ஒன்றும் புதியதல்ல. சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் தான் இவர்களுக்கு கைடு(Guide).
அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்கசுராதயக் ஷாஎன ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் அதயாக் ஷாஎனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…” – இது அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட குடி நெறிமுறைகள்.
சோழர்கள் காலத்தில் குடிப்பவர்களிடமிருந்து பூச்சி வரி வசூலிக்கப்பட்டது.
1793-94 ல் தஞ்சை மாவட்டத்தில் ஆங்கிலேய அதிகாரிகளால் வசூலிக்கப்பட்ட கள் வரி 1088 ரூபாய்(700 சக்கமா).
1859ல் பூனாவின் பெரிய சாராய தாதாவான துபாஷ் ஆங்கிலேய அரசு நம் மக்களிடம் விற்பதற்காக 10 ஆயிரம் பேரை வைத்து சாராயம் காய்ச்ச ஆரம்பித்தான்.
1898ல் ஸ்காட்லாண்டைச் சேர்ந்த மெக்டொவல்ஸ் தென்னிந்தியாவில் சரக்கு தயாரிக்க ஆலையை நிறுவியது.
1902-03 ல் அதே தஞ்சை மாவட்டத்தில் கள் வரியாக கிடைத்தது 9,28,000 ரூபாய்.
2010-11 களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் குடியால் வந்த வருமானம் 14,965 கோடி ரூபாய்.
2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்அல்லது 24 ‘ஆஃப்அல்லது 12 ‘ஃபுல்இருக்கலாம்.
இந்தியாவில் இப்போது 35 கோடிப் பேர் குடிகாரர்கள்.
நாம ஸ்..ஷ்..டெடியாத் தான் போய்க்கிட்டு இருக்கோம்.
மேலும் தெளிய படியுங்கள்... http://www.vinavu.com/2011/11/19/drunk/

Saturday, November 12, 2011

உங்களுக்கு 250 பேஸ்புக் நண்பர்கள் இருக்கலாம்... ஆனால் 2பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள்.

உங்களுக்கு 250 பேஸ்புக் நண்பர்கள் இருக்கலாம்... ஆனால் 2பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள். 
- வென்ஸி லூங்க்(Wency Leung)


உங்களுக்கு கணக்கிலடங்கா பேஸ்புக்(facebook) நண்பர்களும், டிவிட்டர் பின்தொடர்பவர்களும் (twitter followers) இருக்கலாம்.
ஆனால் அவர்களில் எவ்வளவு பேர் உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் ?

சமீபத்தில் அமெரிக்காவில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பெற்ற ஒரு ஆய்வின்படி ஒவ்வொருவருக்கும் சராசரியாக 2.03 நெருங்கிய நண்பர்களே உள்ளனர்.

இந்த ஆய்வை நடத்திய கார்னல் பல்கலைக்கழகத்தைச்(Cornell University) சேர்ந்த டாக்டர் மாத்யூ ப்ராஷ்ஹியர்ஸ் இன் (Mathew Brashears) கூற்றுப்படி,இந்த 2.03 பேர் தான்( 2 பேர் தான்) நீங்கள் ஆத்மார்த்தமான நண்பராகக் கருதும் நபர்கள்; உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது நீங்கள் நாடும் முதல் நபர் இவரே. இந்த நெருங்கிய நண்பர்களின் எண்ணிக்கை 1985ல் மூன்றாக இருந்தது. இப்போது 2 ஆகக் குறைந்திருக்கிறது

ஒரு இணையதள ஓட்டெடுப்பில், டாக்டர் ப்ராஷ்ஹியர்ஸ் கடந்த ஆறுமாதங்களில் ஒருவர் தனது முக்கியமான விஷயங்களை பறிமாறிக்கொண்ட நபர்களைப் பட்டியலிடும்படி கேட்டுக்கொண்டார். பதிலளித்தவர்களில் 48 சதவீதம் பேருக்கு ஒரே ஒரு நெருங்கிய நண்பரே இருந்தார். 18 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்கள் 2பேர் இருந்தனர். 29 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்கள் எண்ணிக்கை 2பேருக்கு மேல் இருந்தது. 4 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்களே இல்லை.

இம்முடிவுகளிலிருந்து மனிதனது சமூக வட்டங்கள் குறுகுகின்றன என்று நினைக்கவேண்டியதில்லை. மாறாக நாம் நமது நண்பர்களையும், அறிமுகமானவர்களையும் வெவ்வேறாக வகைப்படுத்துகிறோம் என்று பொருள் கொள்ளலாம். சமூக தொடர்புத் தளங்கள் நம்மை மிக அதிகமான நபர்களுடன் தொடர்புகொள்ள வாய்ப்பளித்திருந்தாலும், மிக நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நாம் மிகச் சிலரையே தேர்ந்தெடுக்கிறோம்.

இதன் பொருள் நாம் சமூகத் தனிமை அடைகிறோம் என்பதல்ல. பதிலாக நம் நண்பர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்; நமக்கு அறிமுகமானவர்களோ அறிவுரைகள்(மட்டும்) வழங்குகிறார்கள்.

ஒரு விஞ்ஞானியின் கருத்துப்படி நமது மூளையின் செயல்பாட்டுத்திறன் நமது நட்புத்தொடர்புகளின் எண்ணிக்கையை பாதிக்கிறது. 2010 ல் வெளிவந்த ஒரு மனிதருக்கு எவ்வளவு நண்பர்கள் தேவை?(How many friends does one person need ?) என்கிற புத்தகத்தில், அதன் ஆசிரியரும் பரிணாம உயிரியல்(Evolutionary Biologist) ஆராய்ச்சியாளருமான ராபின் டன்பர் (Robin Dunbar) சொல்லியிருப்பதன் படி, நமது மூளையால் ஒரே நேரத்தில் அதிக பட்சம் 150 உறவுத்தொடர்புகளை(relationships) மட்டுமே நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு மேல், எவ்வளவு அதிக நண்பர்கள் நமக்கு உண்டோ அவ்வளவு குறைவாகத் தான் நமக்கு அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கமுடியும். இந்த 150-நண்பர்கள் என்கிற வரையறையானது ஒரு அலைவரிசையில் அமைக்கப்படும் நமது உறவுத் தொகுப்புகளை கணக்கில் கொண்டு சொல்லப்படுகிறது. இக்கற்றையின் ஒரு புறத்தில் 5 பேர் வரைகொண்ட நம் நெருங்கிய நண்பர்கள் வருவார்கள்; இவர்களிடம் வாரத்தில் ஒரு முறையாவது நாம் பேசிவிடுகிறோம். இன்னொரு முனையில் ஒரு நூறு பேர் வரை கொண்ட அறிமுகமானவர்கள்; இந்த 100 பேரிடம் நாம் வருடத்தில் ஒரு முறைதான் பேசுகிறோம். அல்லது அடிக்கடி நமக்கு தேவையேயில்லாத / சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி மட்டுமே  பேசுகிறோம்.

மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உங்கள் வாழ்க்கையின் நண்பர்களைப் பற்றி சரியாக பிரதிபலிக்கிறதா ?
---------------------
இக்கட்டுரை பின்வரும் இணையதளப் பத்திரிக்கைக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. 
http://www.theglobeandmail.com/life/the-hot-button/you-may-have-250-facebook-friends-but-only-two-are-close-pals-says-study/article2230818/

- தமிழில் அம்பேதன்.