Friday, August 12, 2011

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (301-400) - பாகம் 4

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (301-400) - பாகம் 4

(201-300) பாகம் 3 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/201-300-3.html
(101-200) பாகம் 2 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html
(1-100) பாகம் 1 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html

301.
"தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டன என்பதை உள்ளிட்ட ஐக்கிய இராஜதானியின் ஈடுபாட்டை மற்றும் என்ன நேர்ந்தது என்பதை சரியாகவும் நம்பகமான முறையிலும் இனங்காண்பதற்காக மற்றும் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்களை இனங்காண்பதற்காகவும்' 2001 - 2009 வரையிலான எட்டு வருடக் காலப்பகுதியொன்றை மறு புறத்தில் ஈராக் பற்றிய விசாரணை பரிசீலிக்கிறது. அதன் ஆணை, எல்.எல்.ஆர்.சி.யுடன் நெருக்கமான சமாந்திரத்தைக் கொண்டதாகக் கூறப்பட்ட போதிலும், தனியார் அல்லது நிறுவக பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்காக அது தெளிவாகவே வடிவமைக்கப்படவில்லை என்றாலும் அது ஆணைக்குட்பட்ட காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான அரசியல் பொறுப்புக்களை ஆராய்ந்து எதிர்காலத்துக்கு அதிலிருந்து பாடங்களைப் பெறுவதைக் குறிப்பதாகவுள்ளது.

தனது விளக்கத்தில் இது பற்றிய புரிந்துணர்வை உறுதிப்படுத்திய சட்ட மா அதிபர், நாட்டின் இடப்பரப்பில் உள்ளவர்களைத் தோதானவாறு பாதுகாப்பதற்காக நீண்ட காலமாக ஒன்றன் பின் ஒன்றாகப் பதவிக்கு வந்த அரசாங்கங்களின் தவறுகளுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கிறது என்றார். இது முக்கியமானதொரு உத்தரவாதம் என்ற போதிலும், சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல்களுக் கான பொறுப்புக்கூறலுக்கான கடமையை நிறை வேற்றுவது போன்றதாக அது இல்லை மற்றும் இருக்க டியாது என்பதோடு, பாதிக்கப்பட் டோன் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான உரிமைகளை மதிப்பதென்றுமாகாது.

302.
பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பான எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை பற்றி ஒன்றுக்கு ஒன்று மாற்றமானதாக அரசாங்கத்தின் பகிரங்க நிலை காணப்படுகிறது. ஒரு புறத்தில், சிரேஷ்ட இலங்கை அதிகாரிகள் கடந்த கால மீறல்கள் தொடர்பில் தண்டனை அளிக்கும் பொறுப்புக்கூறல் அமைப்பாக இல்லாது மீளிணக்கப்பாட்டை நோக்காகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கியதாக எல்.எல்.ஆர்.சி. உள்ளது என்பதை வலியுறுத்துகின்றனர். அதே நேரம் அரசாங்க அதிகாரிகள் விடுக்கும் ஏனைய அறிக்கைகள், சில குறிப்பிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமை கள் மீறல்கள் சம்பவங்களை புலனாய்வு செய்வ தற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர், ஜி. எல். பீஸ், சர்வதேச சட்டத்தின் குற்றஞ்சாட்டப்பட்ட தனியான மீறல்களை ஆராய் வதற்கு "போதியளவாக' எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை இருப்பதாக பகிரங்கமாகத் தெவித்துள் ளார். பின்பொரு சந்தர்ப்பத்தில், தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது, குறிப்பிட்ட குற்றஞ் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கான உகந்த இடம் எல்.எல். ஆர்.சி.யே என அவர்கள் அழுத்தமாகத் தெவித்தனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அங்கத்துவம் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை: (பாகம்) - 17

303. இறுதியாக, எல்.எல்.ஆர்.சி.யின் காலஞ்சார்ந்த ஆணை தெளிவாக 2009, மே 19ஆம் திகதி முடிவுக்கு வருகிறது, என்பதோடு அம்முடிவுத் தேதியில் இருந்து அதற்குப் பின் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னால் நிகழ்ந்த நம்பகமான மீறல்களை எல்.எல்.ஆர்.சி. கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவது அதற்குத் தடையாக இருக்கும்.

304.
அது எவ்வாறு இருப்பினும், அரசாங்கம் அல்லது அதன் முகவர்களை உள்ளிட்ட யுத்தத்தின் எந்தவொரு தரப்பினராலும் புரியப்பட்ட சர்வதேச மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களைப் புலனாய்வு செய்வதற்கான தெளிவான அதிகாரத்தைக் கொண்ட பொறுப்புக்கூறும் பொறியியல் தொகுதியொன்றுக்கான தெளிவான சர்வதேச தரங்களை எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை திருப்திப்படுத்தவில்லை.

2. ஆணைக்குழுவின் சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற தன்மை

305.
குற்றஞ்சாட்டப்பட்ட மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களை புலனாய்வு செய்யும் அமைப்பொன்று சுயாதீனமான, பக்கசார்பற்ற மற்றும் திறமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைச் சர்வதேச சட்டம் தேவைப்படுத்துகிறது. சுயாதீனம் என்பது நிஜ சுயாதீனம் மற்றும் அதுபற்றிப் பகிரங்கமாகக் கருதப்படுவதுமாகும்.


306.
எல்.எல்.ஆர்.சி.யைப் பொறுத்த வரையில், சுயாதீனமாகச் செயற்படுவதற்கான அவர்களது திறன் மற்றும் பக்கசார்பற்ற தன்மை ஆகியவற்றை விட்டுக்கொடுக்கக் கூடிய பாரிய அக்கறை முரண்பாடுகளை குறைந்த பட்சம் அதன் மூன்று உறுப்பினர்கள் கொண்டுள்ளார்கள் என்பதோடு, அவர்கள் சுயாதீனமானவர்கள் என்ற பொதுமக்கள் கருத்துணர்வைப் பாதிப்பதுமாகவுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர்கள் ஏப்பிரல் 2007 தல் டிசம்பர் 2008 வரை சட்ட மா அதிபராக இருந்துள்ளார் என்பதன் படி, எல்.எல்.ஆர்.சி. முன்னிலையில் நேரடியாக இருக்கும் பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் பிரதான சட்ட அலுவலராக கடமைகளைப் புரிந்துள்ளார்.

மேலும், முன்பிருந்த விசாரணை ஆணைக் குழுவொன்றில் ( இலங்கையில் 2005 ஆகஸ்ட் முதல் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு) அவரது செல்வாக்கு பாரியதொரு அக்கறை முரண்பாட்டைக் குறிப்பதோடு, ஆணைக் குழுவின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேச சுயாதீன புத்திஜீவிகள் குழுவின் பாரிய பகிரங்க விமர்சனத்துக்கான காரணமாகவும் அது இருந்தது. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி மாற்றமடைந்து வரும் இராணுவ மற்றும் மனிதாபிமான நிலமைகள் பற்றிய அதன் கருத்துக்களுக்குச் சாதகமாக வாதாடிய ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதுவர் இரண்டாவது உறுப்பினராவர், மூன்றாவது உறுப்பினர் முதலில் வெளிநாட்டமைச்சின் சட்ட ஆலோசகராக இருந்து பின் ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்பட காலப்பகுதி யில் அமைச்சின் சர்வதேச சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகராகப் பணியாற்றினார்.

307.
அவர்களின் ஏனைய தகைமைகள் எதுவாக இருந்தாலும், அத்தகைய அக்கறை முரண்பாடுகளுக்கு ஆளாகியுள்ளவர்கள் தாம் அரசாங்கத்தின் உயர் நிலை அதிகாரிகளாகக் கடமை புரிந்த காலகட்டத்தில் நிகழ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களை பாரபட்சம் இன்றிப் புலனாய்வு செய்து அவற்றுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பான பங்களிப்பை செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் ஒரு அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பது முற்றிலும் பொருத்தமற்றதாகும். எக்கோணத்தில் இருந்து பார்த்தாலும், தாம் உயர் பதவிகளை வகித்த ஒரு அரசாங்கத்தின் அல்லது அவர்களைத் தானாகவே நியமித்த ஜனாதிபதியின் செயற்பாடுகளை அவர்கள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யமுடியும் என எதிர்பார்ப்பது உண்மையிலேயே முடியாத தொன்றாகும். ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் எல்.எல்.ஆர்.சி.க்கு வெளியே ஆனால் அதன் செயற்பாட்டுக் காலப்பகுதியில் பகிரங்கமாக சொன்னவைகள் இது தொடர்பான அச்சங்களை மேலும் வலுப்படுத்துவதாயிருக்கின்றன.

308.
மேலும், விசாரணை ஆணைக்குழுக்கள் அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப் படுத்துவதற்கான பாத்திரத்தைக் கொண்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களைப் போன்ற ஒப்பிடக்கூடிய அமைப்புக்கள் பங்காளர்களின் கலந்துரையாடும் செயற்பாடொன்றினூடாக அமைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்களின் நியதியாகும்: "உறுப்பினர்களிடையே மனித உரிமைகள் துறையில் மற்றும் தோதானவிடத்து, மனிதாபிமான சட்டத்தில் நிபுணத்துவம் உடையவர்களை உள்ளிட்ட அவற்றின் உறுப்பினர்களின் தகமை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை பொதுமக்களுக்கு தெளிவாக்குவதற்கான அடிப்படைத் தத்துவத் தின்படி, குறிப்பாக அவர்கள் "மனித உரிமைகள் மீறல்களுக்கு இலக்காகிய பெண்கள் மற்றும் ஏனைய தோதான குழுக்களின் போதிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.'

309.
எல்.எல்.ஆர்.சி. பற்றிய குழுவின் கேள்விகளுக்கு அதன் எழுத்து மூலமான பதிலில் "எல்.எல்.ஆர்.சி.யின் தொகுப்பு இலங்கையின் பல்லின மற்றும் பன்முக அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தமது துறையில் சிறந்து விளங்கிய பல சமூகங்களைச் சேர்ந்த மாண்புமிக்கவர்களை அது உள்ளடக்கு கிறது' என அரசாங்கம் அழுத்தமாகத் தெவித்துள்ளது. ஆயினும், குழுவின் கருத்துப்படி, எல்.எல்.ஆர்.சி.இன் அங்கத்துவம் இலங்கைச் சமூகத்தின் பன்முகத் தன்மையைப் போதியளவு பிரதிநிதித்துவம் பிரதிபலிக்கவில்லை என்பதோடு, சகல ஆணையாளர்களினதும் பின்னணி மற்றும் நிபுணத்துவம் ஆணைக்குத் தெளிவாகவே சம்பந்தப்பட்டதாயில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒவ்வாத அளவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருந்த போதிலும் அவர்கள் எப்படித் தாக்கமுற்றார்கள் என்பதற்குக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், எட்டு ஆணையாளர்களுள் ஒரு பெண் மாத்திரமே இருக்கிறார்.

அதே போன்று, ஒரேயொரு ஆணையாளர் மாத்திரமே, அவரே ஒரேயொரு பெண் ஆணையாளருமாவார் . தமிழராக இருப்பதோடு, ஒரேயொரு ஆணையாளரே முஸ்லிம் பின்னணியைக் கொண்டவராக இருக்கிறார்.

310.
ஆயினும், மிக முக்கியமாக, அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட முன்னாள் அதிகாரிகளுடன் எல்.எல்.ஆர்.சி. அவர்கள் சார்பில் கனமாக வுள்ள, ஏற்கனவே எடுத்துக் கொள்ளப்பட்ட சுயாதீனம் மற்றும் பாரபட்சம் அற்ற தன்மை போன்ற விடயங்களுக்குப் புறம்பாக இக் காரணி எல்.எல்.ஆர்.சி. பற்றிய பொதுமக்கள் உணர்வைப் பாதித்து, அதனுடன் ஒன்றோடொன்று சேந்து செயற்படவோ அல்லது அதன் பெறுபேறுகளுக்கு நம்பகத் தன்மையைப் பெற்றுக் கொடுக்கவோ என்பது பற்றிய மக்களின் தீர்மானத்தை எடுக்கும் மனநிலையிலும் ஒரு தன்மையை ஏற்படுத்தும்.

311.
இவ்வாறாக, பொறுப்புக்கூறல் பொறித்தொகுதிகளின் சுயாதீனம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்துவதற்கான சர்வதேச தரங்களுக்கெதிரே நிறுத்திப் பார்க்கும் போது எல்.எல்.ஆர்.சி.

அதன் அமைப்புத் தொடர்பாக பாரிய அளவில் குறைபாட்டினைக் கொண்டி ருந்தது. அதன் அமைப்பு அதன் சுயாதீனத்தையும் பாரபட்சமற்ற தன்மையையும், குறிப்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குற்றவகையில் சம்பந்தப் படுத்துவதைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கானதொரு அமைப்பு அது என்ற நியாயத்தை பலவீனப் படுத்துகிறது.

3. எல்.எல்.ஆர்.சி. இன் ஏனைய வடிவமைப்பு அம்சங்கள் (அ) பகிரங்க அறிக்கை விடுத்தல்

312.
எல்.எல்.ஆர்.சி. போன்றதொரு ஆணைக்குழுவின் நடவடிக்கைகள், மேற்கொண்டு புலனாய்வுகளை அல்லது வழக்காடலை நடத்தல், மனிதப் புதை குழிகளில் இருந்து எச்சங்களைப் பரிசோதித்தல், இழப்பீடு, பல்வேறு நிறுவகச் சீர்திருத்தங்கள் மற்றும் மீண்டும் நேராதிருப்பதற்கான உத்தரவாதங்கள் போன்ற இன்னோரன்ன சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடிய அதன் தீர்மானங்களை மற்றும் அதன் பரிந்துரைகளைக் கொண்டதொரு அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் முடிவுற வேண்டும் என சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்கள் குறிப்பிடுகின்றன.

வெளியிடுவதனால் குறிப்பிட்ட ஒருவர் இனங்காணப்பட்டு அதன் விளைவாக அவரது உயிருக்கோ அல்லது பௌதிக பாதுகாப்புக்கோ ஆபத்து நேரக் கூடும் என்பதற்காக மாத்திரம் சிலவற்றைத் தடுத்து மற்றும் சுருக்கி அவை பகிரங்கப்படுத் தப்பட வேண்டும் என்பதையும் சிறந்த பழக்க வழக்கங்கள் தேவைப்படுத்து கின்றன. எல்.எல்.ஆர்.சி.யின் ஆணையோ அல்லது விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டமோ இறுதி அறிக்கை ஒன்றை விடுப்பதைத் தேவைப்படுத்தவில்லை. மக்கள் நம்பிக்கையை பாதித்து, மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையின் செயற்பாட்டுத் தாக்கத்தை மற்றும் பின்தொடர் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவ்வாணைக்குழு அதன் ஆணைக்குப் பதிலளித்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய முடியாத அளவுக்கு இலங்கையின் முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களின் வரலாறு ஒரு உருமாதிரியை எடுத்துக் காட்டுகிறது. எல்.எல்.ஆர்.சி.யின் இறுதி அறிக்கையின் பிரதியொன்று ஐக்கிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றிருந்த போதிலும் அதனை இலங்கை மக்களுடன் பகிர்ந்து கொள்வதே மிக முக்கியமானதாகும். எல்.எல்.ஆர்.சி. அதன் சகல தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை அதிக அளவில் பகிரங்கமாக விநியோகிப் பதை நல்ல பழக்க வழக்கங்கள் தேவைப் படுத்துவதாயிருக்கும்.

(ஆ) பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புக்குப் போதிய நடவடிக்கைகள் இன்மை

313.
எந்த ஒருவனதும் பௌதிகப் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கத்தை நியாயமான மற்றும் எதிர்பார்க்கக் கூடிய மூன்றாம் நபர்களிடம் இருந்து அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்பதை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தேவைப்படுத்துகிறது. சூழ்நிலைப் பொருத்த மனித உரிமைகளை மையமாகக் கொண்ட ஆணைக்குழுக்களின் அமைப்பு விடயத்தில் இத்தரம் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது: "ஆணைக்குழுவுக்குத் தகவலை வழங்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு, பௌதிக மற்றும் மனோதத்துவ நல்வாழ்வு மற்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அவர்களின் அந்தரங்கம் ஆகியவற்றை உறுதி செய்ய பயனுறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படல் வேண்டும்.' இது தொடர்பாக எல்.எல்.ஆர்.சி.க்கு சாட்சியமளிப்பதா இல்லை எனச் சிந்திப்பவர்களுக்கு நிச்சயத் தன்மை, வருவதுரைக்கக் கூடிய மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக இது தொடர்பில் அதன் ஆற்றல் மற்றும் அதிகாரத்துக்கான ஒரு தெளிவான சட்ட அடிப்படை இருத்தல் வேண்டும். பாதிக்கப் பட்டவர்களின் தேவைக்காகவே பெரும்பாலும் பொறுப்புக்கூறல் பொறித்தொகுதிகள் உள்ளன என்பதால் இச்செயற்பாட்டின் மையத்தில் அவர்களை வைத்தல் வேண்டும். இதற்காக, பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் "கண்டிப்பாகச் சுய விருப்பத் தின்' அடிப்படையிலேயே பொதுவாகச் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட வேண்டும் என்பதற்கான ஏற்பாட்டை சர்வதேச தரங்கள் வழங்குகின்றன. சாட்சி பகர்வதற்கு முன்பும் அதன் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிப்ப தற்காக சமூக மற்றும் மனோதத்துவ சேவையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

மற்றும் சாட்சியம் அளிப்போரின் செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். உதாரணமாக கௌத்தமாலாவிலும் சியர்ரா லியோனிலும், இரகசியத் தன்மைக்கான உத்தரவாதத்தையும் பேருவிலும் தென் ஆபிரிக்காவிலும் மனோதத்துவ உதவியையும் அத்துடன் தென் ஆப்பிரிக்காவைப் போன்று சாட்சி களுக்கான முழுமையான பாதுகாப்பு ஆகியவை போன்ற பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கை வரிசையினை ஏனைய நாடுகளின் ஆணைக்குழுக்கள் பாதிக்கப் பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் வழங்குகின்றன.

314.
எல்.எல்.ஆர்.சி.க்கு வழங்கப்பட்ட ஆணையோ விசாரணை ஆணைக்குழுச் சட்டமோ சாட்சியம் வழங்க முன்வரும் ஆட்களுக்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக் கைகளையும் குறிப்பிடவில்லை. மாறாக விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 13ஆம் பிரிவு "சாட்சி வழங்கும் எவருக்கும் நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் சாட்சி வழங்கும் ஒருவருக்கு அத்தகைய நீதி மன்றத்துக்குச் சாட்சி வழங்குவது தொடர்பாக உரித்தாகும் சகல வரப்பிரசாதங்களுக்கும் உரித்தாகும்' எனக் குறிப்பிடுகிறது.

"ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்க முன்வரும் எவருக்கும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்' என எல்.எல்.ஆர்.சி.யின் தலைவர் உறுதியளித் துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த உறுதிப்பாட்டை குழுவினால் உறுதி செய்ய முடியாமலிருக்கிறது என்பதோடு. சாட்சிகளைப் பாதுகாக்கும் எல்.எல்.ஆர்.சி.யின் நடைமுறை பற்றி அதன் எழுத்துமூலமான கேள்விகளுக்கு பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

315.
அதற்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள தகவலின் அடிப்படையில், சாட்சிகளுக்கு குறிப்பான பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குவது தொடர்பான சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குழுவினால் தீர்மானிக்க முடியாதிருக்கிறது. இலங்கையில் மேலோங்கி இருந்த அச்ச சூழல் மற்றும் பயனுறு சாட்சியங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை இன்மையினால் பாதிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்களின் அனுபவம் ஆகியவற்றை நோக்கும் போது இது குறிப்பாகக் கவலைக்குரிய விடயமாகும். பாரிய மீறல்கள் பற்றிய ஆணைக்குழு தொடர்பாக போதிய சாட்சி களுக்கான பாதுகாப்பு இன்மை பற்றி உள்ளார்வமிக்க விமர்சனத்தை ன்வைத்த 2008 ஆம் ஆண்டின் ஐ.ஐ.ஜி.ஈ.பி. யின் கருத்து இங்கு விசேடமாக ஏற்புடைத்தாகிறது.

316.
சாட்சிகளுக்கு மேலும் அதிக பாதுகாப்பை வழங்குவதற்கான 2008இன் உத்தேச சட்டவாக்கத்தை நிறைவேற்ற முடியாமற் போனதைத் தொடர்ந்து, தோதான விடயத்தில் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான மிகக் குறைவான சட்ட அடிப்படையே இலங்கையில் உள்ளது.

4. எல்.எல்.ஆர்.சி.யின் நடைமுறை (அ) சாதகமான நடவடிக்கைகள்

317.
தனது ஆணையை நிறைவேற்று வதில், எல்.எல்.ஆர்.சி.கொழும்புக்கு வெளியே குறிப்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயங்களை மேற் கொண்டது. ஏனைய இடங்களுக்குப் புறம்பாக, வவுனியா (மெனிக் பாம் உள்ளிட்ட), கிளிநொச்சி, ல்லைத்தீவு, ஓமந்தை (தடுப்புக்காவல் காம் உள்ளிட்ட), மட்டக்களப்பு, திருகோண மலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அது அமர்வுகளை நடத்தியது.

கொழும்புக்கு வெளியே அது நடத்திய அமர்வுகளின் போது, குறிப்பாகப் பாதிக்கப் பட்டோரையும் உள்ளடக்கிய கணிசமான எண்ணிக்கையிலான சாட்சிகளிடம் இருந்தும் அவர்களின் அனுபவம் பற்றி நேரடியாக எல்.எல்.ஆர்.சி. சாட்சியங்களைப் பதிவு செய்தது. வடக்கிலும் கிழக்கிலும், குறிப்பாகப் பெண்களை உள்ளிட்ட கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் சாட்சியம் அளிக்க சுயமாகவே முன்வந்தது, இலங்கையில் உண்மையைக் கண்டறியும் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மெய்யானதொரு செயற்பாட்டின் அவசரத் தேவையை உணர்த்துவதாகவுள்ளது.

318.
அவற்றின் செயற்பாட்டின் முடிவில் ஏனைய அத்தகைய ஆணைக்குழுக்கள் பொதுவாக பரிந்துரைகளைச் செய்யும் அதே வேளையில், தடுத்து வைத்தல், நீதியும் அமைதியும், பொது நிருவாகம் மற்றும் மொழி, காணி மற்றும் ஏனைய சமூகபொருளாதார சிக்கல்கள், வாழ்வாதார விடயங்களை உள்ளிட்ட. அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டும் என அது கருதும் விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எல்.எல்.ஆர்.சி. ஏற்கனவே இடைக்கால பரிந்துரைகளைச் செய்துள்ளது. இப்பரிந்துரைகளின் வடிவமைக்கப்பட்ட, அமைச்சுக்களுக்கிடையிலான அமலாக்கத் தொடர் நடவடிக்கை என விளக்கப்பட்டுள்ள வசதியளிப்பை வழங்குவதற்காக முகவர்களிடையிலான ஆலோசனைக் குழு என்றதொரு அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட பொறித்தொகுதியொன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

(ஆ) உண்மையைக் கண்டறிவதில் அல்லது புலனாய்வில் தெளிவானதொரு அணுகுறை இல்லாத நிலை

319.
உண்மையைக் கண்டறிவது பொறுப்புக்கூறலின் அடிப்படை அம்ச மொன்றாகும். கொள்கையளவில், எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை, அது விடயத்தில் தெளிவற்றதாக இருந்த போதிலும், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் அத்துடன் பாதிக்கப்பட்டவர் களின் அனுபவம் தொடர்பானவற்றை உள்ளிட்ட யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றிய உண்மையைக் கண்டறிவதில் அதன் பங்களிப்பை செய்வதை விட்டும் அதனைத் தடுக்கவில்லை. ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு அப்பால், எல்.எல்.ஆர்.சி.யின் உண்மையைக் கண்டறியும் நிலைச்சக்திக்கான பங்களிப்பு அதன் முறைமை மற்றும் அதன் அன்றாட நடைமுறை ஆகியவற்றினால் உருவாக்கப்படுவதாகும். அதன் தீர்மானங் களின் நம்பகத்தன்மை, ஓரளவு அந்த முறைமையின் ஒளிவு மறைவற்ற தன்மையில் தங்கியிருக்கும்.

வடக்கு, கிழக்கில் சாட்சியமளிக்க முன்வந்தோருக்கு நல்லிணக்க ஆணைக்குழு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை: (பாகம்) - 18

320.
கிடைக்கக் கூடிய தகவலை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, உண்மையைக் கண்ட றிவதற்காக அல்லது மீறல்களைப் புலனாய்வு செய்வதற்காக எல்எல்ஆர்சி பிரயோகித்த சகலது மடங்கிய முறைமையினை குழுவுக்குத் தெளிவாய் அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது.

ஏனைய நாடுகளில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் குறிப்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் துஷ்பிரயோகத்தின் உருமாதிரிகள் தொடர்பான இராணுவ நடவடிக்கை பற்றிய உத்தியோகபூர்வ பதிவுகளை, காவல்துறைப் பதிவுகளை மற்றும் நீதிமன்றப் பதிவுகளைப் பெற்று மீளாய்வு செய்வதை உள்ளிட்ட ஏனைய புலனாய்வு முறைகளுடன் சாட்சியங்களைப் பதிவு செய்வது ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளன. சட்ட விரோதமாகத் தடுப்புக்காவலில் வைத்திருப்பது அல்லது பாதிக்கப்பட்டோர் மீதான மோதலின் விளைவுகள் ஆகிய விடயங்கள் தொடர்பான குறிப்பான புலனாய்வுகள் நடத்துதல் மற்றும் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை நம்பகமாக அறிவதற்கான முறைமைகளை அமல்படுத்தல். அறிக்கைகள் பிரதி செய்வோர், ஆய்வாளர்கள், புலனாய்வாளர்கள், தொடர்பாடல் துறைசார்ந்த நிபுணர்கள், பாலியல் வித்தியாசம் பற்றிய நிபுணர்கள் மனநோய் மருத்துவர்கள் ஆகியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பணியாட்டொகுதியினரை அவை தொழிலில் அமர்த்தியுள்ளன. எல்எல்ஆர்சியைப் பொறுத்த மட்டில், அவர்களது சாட்சியம் பதியும் வேலை முக்கியமாக எழுத்து மூலமான சாட்சியங்களைப் பெற்று அவை தோதானவையா என மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் சாட்சியத்தைப் பெறுவதா என்பதை ஆணைக்குழு தீர்மானிக்கும்.

ஐக்கிய நாடுகளுடன் நடத்திய சந்திப்பின்போது, சட்ட மா அதிபர், எல்.எல்.ஆர்.சி.யிடம் 4 ஆராய்ச்சியாளர்கள், 4 காவல்துறை உத்தியோ கத்தர்கள், 4 மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் சில துணை பணியாட்கள் அடங்கிய மொத்தம் 20 பேர்களைக் கொண்ட பணியாட்டொகுதி ஒன்று இருப்பதாக கூறியதோடு, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் மிகவும் இயல்புக்கு மாறான நிலைமை தொடர்பாக உண்மையைக் கண்டறிவதற்குத் தேவையான மூலங்களை விட அது மிகக் குறைவாகவே உள்ளது. மேலும், எல்.எல்.ஆர்.சி. அதன் நடைமுறையில், யுத்தம் மற்றும் மீளிணக்கப்பாட்டின் சர்ச்சைக்குள்ளாகும் மற்றும் அவதானம் குறைவான வரலாற்று அம்சங்களின் பகுப்பாய்வில் இலேசாக ஈடுபடுவதோடு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது புரியப்பட்ட மீறல்கள் மீதான அதன் பாத்திரம் தொடர்பாக இருமனப் போக்கையும் நிச்சயமற்ற நிலையையும் பிரதிபலிக்கிறது.

321.
குறிப்பிட்டது போன்று, நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் சாட்சியங்களை எல்.எல்.ஆர்.சி. பெற்று வந்துள்ளது. சாட்சியங்களை வழங்குமாறு அழைப்பு விடுத்தல் மற்றும் சாட்சிகளைத் தெரிவு செய்தலுக்கான அதன் முறைமை தெளிவற்றதாகவுள்ளதோடு, அது ஒழுங்கானதொன்றல்ல என்ற கருத்தைத் தோற்றுவிப்பதாகவுள்ளது. பாதிக்கப்பட்டோரைப் பொறுத்த வரை, உண்மையைக் கண்டறியும் முயற்சியில் சாட்சியங்கள் சுயமானதாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச தரங்களுடன் அது ஒத்திருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட தகவலை உடையவர்கள் அல்லது பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் அதன் முன் வருவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

322.
எல்.எல்.ஆர்.சி.யின் இணையத்தளத்தின்படி, 2011 ஜனவ இறுதியில் இருந்தவாறாக, கொழும்பில் நடைபெற்ற அமர்வுகளின் போது சுமார் 148 தனி நபர்கள் மற்றும் / அல்லது அமைப்புக்கள் சாட்சியமளித்துள்ளனர். இத்தனி நபர்கள் அரசாங்கத் துறையில் மற்றும் வர்த்தகம், சமூகம் அத்துடன் சிவில் தலைமைத்துவம், உயர்தொழில்சார் அமைப்புக்கள், உயர்கல்வி மற்றும் சிவில் சமூகத்தைச் சார்ந்த சேவையில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்றவர்களை மேவுவதாக இருந்தது. கொழும்பில் நடைபெற்ற அமர்வுகளின் போது, குறிப்பாக ஒரு சாட்சி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நீண்டதொரு அறிக்கையை வாசிப்பதைத் தொடர்ந்து பல மணித்தியாலங்களுக்கு ஆணையாளர்களுடன் சுகமான கலந்துரையாடல் நடைபெறும். குறிப்பாக ஏன் போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வியில் முடிவடைந்தது என்ற தர்க்கத்துடன் கூடிய எதிர்கால மீளிணக் கப்பாடு மற்றும் வரலாற்று ரீதியிலான பிரச்சினைகள் பற்றிய கேள்விகள் இவ்வமர்வுகளின் முக்கிய தொனிப்பொருளாக அமைந்தன. பரவலான பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக இவ்வமர்வுகள் முக்கியமாக மற்றும் எல்.எல்.ஆர்.சி.யின் அதிக நேரத்தைக் குறிப்பதாகவும் இருந்த போதிலும், ஆயுதந்தாங்கிய மோதலின் இறுதிக்கட்டங்களின் போது, குறிப்பாக அரசாங்கம் அல்லது எல்...ஈ. ஈடுபட்டிருக்கலாம் என்ற மீறல்கள் பற்றி அவை மிகக் குறுகிய விளக்கத்தையே வழங்குகின்றன.

323.
சர்வதேச சட்டத்தின் மீறல்கள் பற்றி, பாதுகாப்புப் படையினர் நடந்து கொண்ட விதம் உள்ளாக, நேரடியாக நடவடிக்கை எடுக்கும் போது, எதிர்த்து நிற்காத போக்கே பின்பற்றப்படுகிறது. அவர்களது மிக முக்கிய கடமைகள் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் நேர்ந்தவை பற்றி அவர்கள அறிந்திருந்தனர் என்ற போதிலும், பாதுகாப்புச் செயலாளரும் ஐந்து மிக உயர் பதவி வகிக்கும் இராணுவ அதிகாரிகளும் ஒவ்வொருவராக குறுகிய நேரத்துக்கு மாத்திரமே ஆணைக் குழுவின் ஆரம்ப அமர்வுகளின் போது அதன் முன்னிலையில் சமூகமளித்தனர். இந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானதும், மீறல்கள் பற்றிய பொதுவான குற்றச் சாட்டுக்கள் அல்லது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான சகலதுமடங்கிய வியூகம் பற்றியே அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சர்வதேச ஊடகங்களில் பொதுவாக அறிவிக்கப்பட்ட மீறல்கள் பற்றி குறிப்பான விடயங்களை அபூர்வமாக ஆணையாளர்கள் அணுகினர். "பொதுமக்கள் காயமடைவது மற்றும் கொல்லப்படுவது தொடர்பில் பூஜ்ய சகிப்பு தன்மை' என்ற உறுதிப்பாடுகள் போன்ற குழுவினால் தொகுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாக முரண்பாடான நிலையிலான சாட்சியங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

புலனாய்வு முறைமையின் நலிவையும், பாரிய குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவதில் ஆணைக்குழு வின் திறனை அதிகமாக மட்டுப்படுத்தும் விதத்தில், சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அளவுக்கு அதிகமான மரியாதையை வழங்குவதையும் இது குறிக்கிறது. சிரேஷ்ட அதிகாரிகளின் மற்றும் சிவிலியன் அதிகாரிகளின் சாட்சியம் தொடர்பான இத்தகைய விமர்சனம் அற்ற மற்றும் மரியாதை நிறைந்த அணுகுறை, யுத்தத்தின் இந்த முக்கிய கட்டம் தொடர்பான உண்மைகளை அறிந்து, இலங்கையின் சிவிலியன் மற்றும் இராணுவ தலைமைத்துவதற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அரசியல் அவதானமிக்க விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான எல்.எல்.ஆர்.சி.யின் மனவுறுதியைப் பற்றிய ஆழ்ந்த கேள்விகளை குழுவுக்கு எழுப்புகின்றன.

324.
யுத்தத்தினால் பாதிப்படைந்த பெரும்பாலான சாட்சிகள் உள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கான எல்.எல்.ஆர்.சி.யின் கள விஜயங்களின் போது, அதன் அணுகு முறை பிரதேசங்களிலான சாட்சி முக்கியமாக இருந்த போதிலும், 2011 ஜனவ இறுதியில் இருந்தவாறாக எல்.எல்.ஆர்.சி.யின் இணையத்தளம் 2010 மே மாதம் ஆணைக்குழுவுக்கான ஆணை வழங்கப்பட்ட திகதியில் இருந்து 14 கள விஜயங்களையே குறிப்பிடுகிறது. வடக்கிலும் கிழக்கி லும் சாட்சியம் பதிவு செய்வதற்காக தோதான சாட்சியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட நேரம் மிகக் குறைவாகவே இருந்ததோடு சாட்சியம் வழங்க முன்வந்த அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களுக்குக் சாட்சியம் அளிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் பெண்களாவர்.

இப்பாரிய எண்ணிக்கை மற்றும் அது பற்றி ஆணைக்குழுவின் கவனத்துக்குச் சிவில் சமூகத்தால் கொண்டு வரப்பட்ட போதிலும், இவ்வெண்ணிக்கையிலான சாட்சிகளுக்கு வசதியளிப்பதற்காக அதன் சாட்சிகள் பதிவு செய்யும் அட்ட வணையை எல்.எல்.ஆர்.சி. மறுசீரமைத்ததாகக் தெரியவில்லை. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பாகம் 18 325. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பாதிக் கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் வழங்கக் கூடிய நேரடிச் சாட்சியம் யுத்தத்தின் இறுதிக்கட்டங் களின் போது நடந்தவை பற்றிய உண்மையை அறிந்து கொள்வதற்காக முக்கியமாக இருந்த போதிலும், இச்சாட்சியத்தைப் பதிவு செய்வதற் காக எல்.எல்.ஆர்.சி.யின் மிகக் குறுகிய நேரமே ஓதுக்கப்பட்டுள்ளது. மேலும், மீறல்கள் பற்றி மிகச் செறிவான தகவலைக் கொண்ட சாட்சிகளுக்கு அநேகமாக 15 முதல் 20 நிமிடங்கள் அல்லது சில நேரங்களில் அதற்குக் குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. மேலும், உண்மைகள் மற்றும் சிக்கல்கள் பற்றி சாட்சிகள் அறிந்திருப்பதைக் கண்டு பிடிப்பதற்கு இது போதியளவாக இல்லை என்பதோடு அப்படிச் செய்வது அவர்களுக்கு மரியாதை குறைவாகவும் இருக்கும்.

326.
காணாமல்போதல்கள் அல்லது தேடிக் கொள்ள முடியாத சொந்தக்காரர்களைப் பற்றிய குறிப்பான மீறல்களை வடக்கிலும் கிழக்கிலுமான இவ்வமர்வுகளின் போது பாதிக்கப்பட்டோர் அறிவித்த போதிலும், அவை பற்றித் தொடர்வதற்கு ஆணைக்குழு அவ்வளவாக அக்கறை காட்டவில்லை எனத் தெரிகிறது. தீமைக்குட்பட்டவர்கள் தாமாகவே வழங்கிய சாட்சியத்தின் பகிரங்க எழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்ததில், 2011 ஜனவரி நடுப்பகுதியில் இருந்தவாறாக, 80 சதவீதத்துக்கு மேலான பாதிக்கப்பட்டோர் காணமால்போதல்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத சொந்தக்காரர்கள் அல்லது எந்தெந்த இடங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய சிக்கல்கள் தொடர்பாகவே கேள்விகளை எழுப்பியுள்ளனர். அநேகமாக இவ்விடயங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமைகள் மீறல்களைவிட ஆணையாளர்கள் மனிதாபிமான கவலைகளுக்கு ஆறுதல் அளிக்கவே முனைந்தனர். பல சந்தர்ப்பங்களில், சாட்சிகளிடம் தமது பிரச்சினைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் அவை மேலதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஆணையாளர்கள் கூறினார்கள்.

இப்படியாக எழுத்துமூலம் அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சாட்சிகளிடம் கேட்கப்பட்ட போது, அதற்காக எல்.எல்.ஆர்.சி.யின் படிவங்கள் சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ மாத்திரமே வழங்கப்பட்டு இருந்தன.

327.
பல மட்டங்களில், ஏனைய இடங்களிலும் உண்மையைக் கண்டறியும் முயற்சியின் சிறந்த பழக்கங்களுக்கு இப்பழக்கங்கள் முற்றி லும் மாறுபட்டுள்ளன. இலங்கையில் இருப்பதைப் போன்ற சூழல்களில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் மோதலுக்கு வழிகோலிய வரலாற்று ரீதியிலான காரண காரியங்கள் மற்றும் அரசியல் குறைபாடுகள் பற்றிய பகுப்பாய்வினை உள்ளடக்கியிருந்த போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைக் சட்டத்தின் மீறல்களை ஆவணப்படுத்தி அவற்றைப் புலனாய்வு செய்வதற்கான அதிக முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு போதியளவு புலனாய்வு முறைமை மாத்திரமன்றி இன்னும் உரிமைக்காக நேரத்தையும் ஏனைய வளங்களையும் ஒதுக்க வேண்டியுள்ளது. பாரிய அளவிலான மீறல்கள் நேர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இடங்களில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களுக்கு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக புலனாய்வுகளை மேற்கொள்வதற்காக அதிக எண்ணிக்கையிலான ஆளணி வழங்கப்பட்டிருந்தது, தேவையான விடத்து, பாதிக்கப்பட்டவர்கள் பல மணி நேரம் ஒதுக்குப்புறமாக தம் சாட்சியத்தை வழங்குவதற்கான வசதிகளை பாதிக்கப்பட்டோருக்கு அவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. கௌத்தமாலாவில், பாதிக்கப்பட்டோர் மற்றும் ஏனைய சாட்சிகளிடம் இருந்து வாய்மூலங்களைப் பெறுவதற்காக, குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக மற்றும் பாதிக்கப்பட்டோர் தமக்கு நேர்ந்ததை வாய்விட்டுச் சொல்வதை உறுதிப்படுத்துவதற்காக ஊழி யர்கள் தூர இடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

எல்.எல்.ஆர்.சி. யின் செயற்பாட்டு முறைமை பாரதூரமாக உண்மையைக் கண்டறிவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை என்பதோடு, மீறல்கள் பற்றிய பயனுறு புலனாய்வும் அதனால் நடைபெறவில்லை.


(இ) பாதிக்கப்பட்டோரை மையமாகக் கொள்ளாததொரு அணுகுமுறை

328.
வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப் பட்ட அமர்வுகளும் எல்.எல்.ஆர்.சி. பாதிக்கப்பட் டோரை மையமாகக் கொண்டதொரு அணுகு முறையைக் கொண்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் சுகமாக நடைபெற்ற அமர்வுகளுக்கு மாறாக, காணாமல் போதல்கள் மற்றும் கண்டுபிடிக்க முடியாத அல்லது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆட்கள் பற்றி கேள்விகளை எழுப்பும் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் ஆணையாளர்கள் ஒரு கடுகடுத்த போக்கையே கடைப்பிடித்தனர். அநேகமான சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்பது தொடர்பற்றதாக இருந்தது. ஏனைய சந்தர்ப்பங்களில், பாதுகாப்புப் படையினர் நடந்து கொண்ட விதம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டபோது ஆணையாளர்கள் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் என்பதை மறுக்க முயற்சி எடுத்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியத்தில் ஐயப்பாட்டை ஏற்படுத்துவதற்காக அதில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டினர்.

ஏனைய சந்தர்ப்பங்களில், மனித உரிமைகள் தொடர்பான கேள்விகள் பற்றிய சட்டம் பற்றி ஆணையாளர்களே தவறிழைத்தனர். எல்.எல்.ஆர். சி. பாதிக்கப்பட்டோரை போதியளவு அவர்களது மரியாதைக்கு கண்ணியமளித்து நடத்தவில்லை என்பதோடு, மீறல்கள் மற்றும் தாம் அனுபவித்த அசாதாரணமான துன்பம் தொடர்பான சாட்சியத்தை எல்.எல்.ஆர்.சி. முன்னிலையில் சமர்ப்பிப்பதற்கு நியாயமானதொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வழக்கப்படவில்லை.

329.
கள விஜயங்களின் போது தம் கணவன்மார், சசோதார்கள் மற்றும் பிள்ளைகள் காணாமற் போனது அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளது பற்றி எல்.எல்.ஆர்.சி.க்கு கிடைத்த அதிக அளவிலான சாட்சியங்களைப் பெண்களே வழங்கி கண்ணீர் மல்க அவர்கள் எல்.எல்.ஆர்.சி.யின் உதவியை நாடினர். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான ஆண்கள், போராளிகளும் பொதுமக்களும், கொல்லப்பட்டதால் மிகுதமான பெண்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சுமார் முழுக்க முழுக்க ஆண்களைக் கொண்டிருந்த எல்.எல்.ஆர்.சி. இப்பெண்கள் சாட்சியமளிப்பதற்காக ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரியவில்லை. அதே போன்று தாமாகவே சாட்சி வழங்க மிக தூரம் பணத்தைச் செலவிட்டு வந்தவர்களுக்கும் ஏதும் உதவியைச் செய்யவும் ஆணைக்குழு முனையவில்லை.

330.
சாட்சியம் அளிக்க குறிப்பாக வடக்கி லும் கிழக்கிலும் ன்வந்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை எல்.எல்.ஆர்.சி. வழங்கவில்லை என்ற அறிக்கைகள், சகல பாதிக்கப்பட்டவர் களுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் களுக்கு இச்செயற்பாட்டின் முக்கியத்தை அது மெச்சத் தவறியுள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. தாம் ஆபத்தை எதிர்நோக்கலாம் எனக் கருதி பாதிக்கப்பட்டோர் கதைக்க முன் வராத ஒரு சூழலில் தமது உரிமை மற்றும் தம் குடும்பத்தவர்களின் உரிமை மீறல்கள் பற்றி தாமாகவே பகிரங்கமாக எல்.எல்.ஆர்.சி. முன் னிலையில் அதிக எண்ணிக்கையிலான பெண் கள் கதைக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பல பெண்களுக்குப் பகிரங்கமாக சாட்சியமளிக்க எல்.எல்.ஆர்.சி. மறுத்தது பெண்களுக்கு எதிரான அதுவும் பொறுப்புக்கூறல் பொறித்தொகுதி யொன்றினால் துயர் களையப்பட வேண்டிய யுத்தத்தினால் பாதிப்படைந்த பெண்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டும் பொதுவானதொரு போக்கை உறுதிப்படுத்துகிறது.

331.
வேறு சூழ்நிலைப்பொருத்தங்களில், பாதிக்கப்பட்டோரின் மைய நிலையை மதிக்கும் விசேட முறைமைகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பலர் ஒருவருக் கொருவர் என்றவாறு வசதியான சூழல்களில் தம் சாட்சியத்தை அளிக்க டிந்துள்ளது. உண்மை யைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் பொது வாக மனோதத்துவ ஆதாரத்தைப் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குவதுண்டு.

332.
இறுதியாக, அவர்கள் அனுபவித்த துன்பம் மற்றும் பட்ட காயங்கள் பற்றிப் பாதிக் கப்பட்டோருடன் கலந்துரையாடத் தவறியுள்ளது எல்.எல். ஆர். சி. இழப்பீட்டுக்கான பங்களிப்பை எந்த அளவுக்கு வழங்கும் என்ற ஆழ்ந்த ஐயத் துக்கு இடமளிக்கிறது. இழப்பீட்டை வழங்கும் திறனை அதன் ஆணை உள்ளடக்கிய போதிலும், அதன் ஆணை எவ்வித இழப்பீட்டை மேவுகிறது என்பது பற்றியும் பாதிக்கப்பட்டோர் தாம் நன்மையடையத் தகுதியுள்ளோர் வாதத்தை மெய்ப் பிப்பதற்குய பொறுப்புப் பற்றியும் ஆணைக் குழு விளக்கவில்லை. இவ்விடயங்கள் தொடர் பாக நடவடிக்கை எடுப்பதற்கான எல்.எல்.ஆர். சி.யின் நோக்கத்தை இக்கட்டத்தில் இது பாரிய சந்தேகத்துக்குட்படுத்துகிறதாயுள்ளதும் (ஈ) சாட்சிகளை அச்சுறுத்தல் மற்றும் குறைவான சாட்சிகள் பாதுகாப்பு 333. மேலும், குழுவிடம் இருக்கும் எல்.எல்.

ஆர்.சி.யின் பகிரங்க அமர்வுகளின் எழுத்துப் பிரதிகள் மற்றும் ஏனைய இலக்கியங்களின் அடிப்படையில், சாட்சிகளுக்கு அவர்கள் அளிக் கும் சாட்சியத்தின் பிரயோகம் பற்றி சாட்சியம் அளிக்கு முன் எந்தவிதத் தகவலும் வழங்கப்பட்ட தாகத் தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில், பெயர்கள் குறிப்பிடவில்லை என்பதோடு ஏனைய அத்துடன் ஒத்த சந்தர்ப்பங்களில் அப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ஏனைய சந்தர்ப்பங்களில் பெயர்கள் குறிப்பிடப்படா விட்டாலும் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்கள் போன்ற சாட்சியத்தின் உள்ளடக்கத்தைக் கொண்டு அவர்களை இனங்காண டிந்தது.

"ஆணைக்குழுவுக்கு அவர்கள் வழங்கும் தகவலைக் கட்டுப்படுத்தும் விதிகள் பற்றி' சாட்சியம் அளிக்கும் சாட்சிகளுக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற சிறந்த பழக்கத்தை இது மீறுவதாக உள்ளது.

334.
குழுவின் மிக முக்கிய ஆதங்கமான எல்எல்ஆர்சிக்கு முன் சாட்சியமளிக்கும் சாட்சி களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்ற பின்னணிப் பொருத்தத்தில் எல்.எல்.ஆர்.சி.யின் இக்குறைபாட்டினைக் காணக்கூடியதாகவுள்ளது.

சாட்சிகளுக்கான சூழல் அநேகமாக அச்சுறுத்துவ தாகவும் சில வேளைகளில் எதிராகவும் இருப்ப தாக பல அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. குழு வுக்கு வழங்கிய எழுத்து மூலமான பதில்களில், "இராணுவத்தினருக்கு எல்.எல்.ஆர்.சி. அமர்வு களில் எவ்விதப் பாத்திரம் இல்லை' என அரசாங்கம் வாதிட்ட போதிலும், சில சந்தர்ப்பங் களில் அமர்வுகள் நடைபெறும் அறையில் சீருடை தத்த இராணுவ வீரர்கள் வீற்றிருந்து சாட்சிகளையும் கேட்போரையும் புகைப்படம் பிடித்ததை குழு அறிந்துள்ளது. பாதுகாப்புப் படையினன் சட்டவிரோதமான நடத்தையினைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் போது அமர்வுகளில் அல்லது வெளியே இராணுவ அல்லது உளவுத்துறை அதிகாரிகள் இருப்பது பழிவாங்கும் நடவடிக்கையை அஞ்சும் சாட்சிகளை திடுக்கத்துக்குள்ளாக்குவதாயுள்ளது.

சாட்சிகள் சாட்சியமளிக்கும் போது அடிக்கடி அரசாங்க அதிகாரிகள் இருப்பதும் இதுபோன்றே உள்ளது.

335.
"சாட்சியம் அளிக்கையில் எந்தவொரு அச்சுறுத்தல், கட்டாயப்படுத்தல் அல்லது அலைக்கழித்தல் பற்றிய எதுவிதப் புகாரும் கிடைக்கவில்லை' என அரசாங்கத்தின் எழுத்து மூலமான பதில்கள் கூறியபோதிலும், சாட்சிகள் சாட்சியம் அளிப்பதை அதைரியப்படுத்துவதற்கான தெளிவான முயற்சிகள் பற்றி குழு அறிந்தே உள்ளது. ஒரு சம்பவத்தின் போது அத்தகைய அச்சுறுத்தல் பாரதூரமானதென ஆணையாளர்களால் காணப்பட்டு அது பற்றி விசாரிக்குமாறு அவர்கள் காவல்துறையினரைப் பணித்தனர்.

"அச்சுறுத்தல் அல்லது எதிர்கால விளைவுகள்' பற்றி இனங்கண்டுள்ளதாகவும் ஆணைக்குழு லங்கள் அறிவித்துள்ளன. சாட்சியமளிக்க வேண்டாம் என சாட்சிகளை எச்சக்கை செய்தல், மாகாணங்களில் நடைபெறும் அமர்வுகள் பற்றி நேரகாலத்தோடு விபரங்களை வழங்க வேண்டா மென அதிகாரிகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தும் விதத்தில் ஆணைக்குழுவினை வீற்றிருந்து அவதானிக்கும் நபர்கள் பற்றிய வற்றை உள்ளிட்ட அறிக்கைகள் குழுவுக்குக் கிடைத்துள்ளன.

ஒரே சாட்சி, தான் ன்னர் அளித்த சாட்சியத் துடன் மாறுபட்டவற்றைக் கூறும் நிலைமைகளை உருவாக்கும் விதத்தில் சாட்சிகள் கையாளப்பட் டுள்ளது பற்றியும் குழுவுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. ஆணைக்குழுவின் முன்னிலை யில் தமது சாட்சியத்தைத் திரிபுபடுத்திக் கூறு வதற்கு சாட்சிகள் மீது அழுத்தம் பிரயோகிக்கப் பட்டுள்ளதற்கான சாத்தியக்கூறுகளை இது குறிக்கிறது. சாட்சிகள் வழங்கும் அவதானமிக்க சாட்சியங்களை குறுகிய மற்றும் நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும் போதிய நடைமுறை நடவடிக்கை களையும் குழுவினால் காணமுடியாதிருந்தது.

ஆணைக் குழுவின் தலைவர் பகிரங்கமாக "சாட்சியொருவர் தனியாக எதனையும் சொல்ல விரும்பினால்..(அப்போது) அது பற்றி நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை ஒருவரும் அறிய மாட்டார்கள் என்பதோடு, உங்கள் அடையாளங் களைப் பொறுத்தவரை முழுமையான இரகசியத் தன்மையை நாம் பேணுவோம்' எனக் கூறிய போதிலும், அத்தகைய உறுதி மொழியைக் காப்பதற்கான நிறுவக அமைப்பையோ எல்.எல்.

ஆர்.சி.யின் ஆயுட்காலத்துக்குப் பின் அத்தகைய உறுதிப்பாட்டை காப்பதற்கான செயல்றை அடிப்படையையோ பற்றி குழு அறியவில்லை.

337.
இவ்வாறாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங் களின் போது என்ன நேர்ந்தது என்ற உண்மை யைக் கண்டறியும் பாரதூரமான விசாரணைச் செயற்பாடொன்றின் போது எல்.எல்.ஆர்.சி. முன்னிலையில் சாட்சியமளிக்கும் சாட்சிகளுக்கான நியாயமாக எதிர்பார்க்கக் கூடிய நிலைமை திருப்திகரமாயில்லை. ஆணைக்குழுவின் முன் எவ்வாறு அவர்கள் தோன்ற வேண்டும் மற்றும் அவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது பற்றி குற்றஞ்சாட்டப்பட்ட மீறல் களினால் பாதிக்கப்பட்ட சாட்சிகளுக்கு அநேகமாக அறிவிக்கப்படவில்லை. அவர்கள் சாட்சி யமளிக்கத் தயார் நிலையில் இல்லை என்பதோடு, அவர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் அவர்கள் அலைக்கழிக்கப்படுவதிலிருந்து அவர்கள் போதியளவில் பாதுகாக்கப்படவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழு பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச தரங்களை நிறைவுசெய்யவில்லை: (பாகம்) -19

(உ) ஊடகம் மற்றும் சிவில் சமூகம் : பிரவேசம் மற்றும் அலைக்கழித்தல் 338. எல்.எல்.ஆர்.சி.யின் நடவடிக்கைகள் பற்றி அறிக்கை விடுப்பதன்மூலம் ஒளிவு மறைவற்ற தன்மையை உறுதிப்படுத்துவதில் ஊடகங்கள் மிக முக்கியமானதொரு பாத்திரத்தை வகிக்கின்றன. குறிப்பாக மொரோக்கோ, பேரு மற்றும் தென் ஆப்பிரிக்காவை உள்ளிட்ட ஏனைய நாடுகளில், சம்பந்தப்பட்ட விடயங்கள் மீதான பொது விவாதத்துக்கான பங்களிப்பை வழங்குவதற்காக இது போன்ற ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகள் பரவலாக தொலைக்காட்சியினூடாகக் காட்டப்படுகின்றன. அசாதாரண சந்தர்ப்பங்களில் ஊடகங்களைத் தடுக்கலாம் என்றிருந்த போதிலும், கருத்துக்கள் மற்றும் தகவல்களைப் பெறவும் அதனைப் பரப்பவும் உள்ள தனியார் சுதந்திரத்தை எல்.எல்.ஆர்.சி.

போன்ற அரசாங்க அமைப்புக்கள் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மட்டுப்படுத்து கிறது. அத்தகைய ஏதும் கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படக் கூடியவை மற்றும் சர்வதேசச் சட்டத்தில் குறிப்பிடப்பட் டுள்ளவாறு அது தேவையானது மற்றும் அளவுக்குட்பட்டது என்பதை நியாயப் படுத்தும் பொறுப்பு அரசினைச் சாரும்.

பத்திரிக்கைச் சுதந்திரத்தில் அப்பட்டமாகத் தலையிடுவதைக் குறிக்கும் விதத்தில் சில ஊடகங்கள் அமர்வுகளில் கலந்து கொள்வதை பாதுகாப்பு அமைச்சு தடுத்துள்ளதாக குழுவுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் அடிப்படையில் தெரிய வருகிறது. அமர்வுகளின் போது செய்திகளைச் சேகரிக்கும் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப் பட்டதாக செய்தி அறிக்கைகளும் உள்ளன.

(ஊ) பிரவேசம் மற்றும் செயலின் ஒளிவு மறைவற்ற தன்மை

339.
எல்.எல்.ஆர்.சி. அதன் சகல அமர்வுகளையும் ஒளிவு மறைவற்ற தன்மையுடன் நடத்தத் தவறியுள்ளதாக நம்பகமான அறிக்கைகள் குழுவுக்குக் கிடைத்துள்ளன. உயர் மட்டத்திலும் கூட இக்குறைபாடு உண்மையென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் தமது தகவல் சேகரிப்புக்காக அதிக அளவில் பொதுமக்கள் ஆதரவில் தங்கியிருப்பதோடு, பகிரங்க மற்றும் ஒளிவுமறைவற்ற விதத்தில் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக் களின் நடவடிக்கைகளின் முக்கியமான தொரு அம்சமாகும்.

340.
எல்.எல்.ஆர்.சி.யினைப் பொறுத்த வரை இது ஒரு பகுதியாகவே உள்ளது. 2010 யூன் 18ஆம் திகதிய ஆணைக்குழுவின் அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள முறைமைகளுக்கு அப்பால், சில சமயங்களில் அதன் முக்கிய செயற்பாடுகள் பற்றிய பகிரங்கத் தகவல் இன்மை அதன் செயற்பாட்டின் தன்மையாக இருந்துள்ளது.

பகிரங்க அமர்வுகளின் எழுத்துப் பிரதிகளை வெளியிடுவது அதன் அமர்வுகள் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பகிரங்க அமர்வுகளில் கலந்து கொள்ளும் சாட்சிகளைத் தெவு செய்யும் செயற் பாட்டில் பொதுவான நிச்சயமற்ற தன்மை மற்றும் அதன் அமலாக்கத்தில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அமர்வுக்கானதொரு திகதி நிர்ணயிக்கப்படு முன், "ஆணைக்குழுவின் முன்னிலையில் தோன்றி சாட்சியமளிக்க விரும்புவோர் அனைவரும் முற்கூட்டிய எழுத்து மூலமான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படுவதோடு, சாட்சியத்தின் பெறுமதியின் தொடக்க நிலையை அது நிறைவு செய்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆணைக்குழு அதனை ஆராயும்' என குழுவுக்கு அரசாங்கம் அனுப்பியுள்ள எழுத்துலமான பதில்களில் மாத்திரமே இம்முறைமை மேலும் முழுமையாக விவக்கப்பட்டுள்ளது. ஆயினும், தொடக்கநிலைத் தேவைப்படுத்தல்கள் இனங்காணப்படவில்லை என்பதோடு, அத்தகைய தொடக்கநிலையை நிறைவு செய்யாத காரணத்திற்காக நிராகக்கப்பட்ட சாட்சிகளின் எண்ணிக்கையோ சாட்சிய மளிக்க இருந்தவர்களின் விகிதாசாரமோ பற்றிய தகவல் வழங்கப்படவில்லை. எது எப்படியிருப்பினும், இந்த அணுகுறை வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்ற அமர்வுகளின் போது அனுசரிக்கப்படவில்லை என்பதோடு, பல்வேறு சாட்சிக் குழுக்கள் வெவ்வேறுவிதமாக நடத்தப்பட்டதை அது குறிக்கிறது.

341.
பாதிக்கப்பட்டவர்களின் அமைவிடங்களிலேயே அவர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்ய நடைபெற்ற மிகச் சிறிய எண்ணிக்கையிலான அமர்வு களின் போது கூட, அவர்களின் அமைவிடங்கள், நேரங்கள் மற்றும் முறைமை ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள தாகவே இருந்ததோடு, அத்தகவலை சாட்சியமளிக்கவுள்ளோரும் பொதுமக்களும் பெற்றுக் கொள்வது சிரமமாகவே இருந்தது.

குறிப்பாக, மாகாணங்களில் நடைபெறும் அமர்வுகள் பற்றி பிரதேச மக்களுக்கு அறிவிக்கத் தவறியமை காரணமாக அமர்வுகள் நடைபெறுவதை அதிக மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. எல்.எல்.ஆர்.சி.யின் சார்பில் பொதுமக்களுக்குத் தகவலை வழங்கு வதற்காக மாவட்ட மற்றும் மாகாண அலுவலர்களைப் பிரயோகித்தது.

எல்.எல்.ஆர்.சி.யின் சுயாதீனத் தன்மை பற்றிய தவறான அபிப்பிராயத்தைத் தோற்றுவிப்பதாகவுள்ளது.

(எ) இடைக்கால பரிந்துரைகள் 342. எல்.எல்.ஆர்.சி.யின் அநேக இடைக்கால பரிந்துரைகள் ஏற்கனவே கடந்த காலத்தில் பல்வேறு அமைப்புக் களினால் பரிந்துரைக்கப்பட்டவையாகும் என்பதோடு அரசாங்கம் நாடினால் அவற்றை எவ்விதச் சிரமன்றி அல் செய்திருக்கலாம். ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர்த்து, பொறுப்புக்கூறல் பற்றிய முக்கியமான விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகள் நேரடியாக செயற்பட வில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உதவும் விதத்தில், தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது முக்கியமானதொரு பரிந்துரையாகும் என்ற போதிலும், இன்றுவரை அப்பரிந்துரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. பல்வேறு பொறுப்புக் கூறல் சிக்கல்களைக் கையாளுவதற்கான பரிந்துரைகள் இன்மை மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பிரசுத்தல் பற்றிய அசட்டை குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களைப் புலனாய்வு செய்வதற்கு எல்.எல்.ஆர்.சி.
முன்னுரிமை அளிக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. குழுவுக்கான அரசாங்கத்தின் பதிலுக்கு மாற்றமாக, யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போதும் அதற்குப் பின்னரும் அது நடந்து கொண்ட விதத்தைத் தெளிவாக்கும் அவதானமிக்க அம்சங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குகிறது என்ற தீர்மானத்துக்கு அது வலுவூட்டுகிறது.

5. எல்.எல்.ஆர்.சி. பற்றிய தீர்மானம்

343.
யுத்தத்தின் இறுதிக்கட்டங்கள் மற்றும் மோதலுடன் தொடர்புபட்ட ஏனைய சிக்கல்கள் பற்றிய தேசிய கலந்துரையாடலுக்கு நிலைத்தகவுள்ள சிறப்பான தொரு ஆரம்பத்துக்கான சந்தர்ப்பத்தை எல்.எல்.ஆர்.சி. வழங்குகிறது. பொறுப்புக் கூறல் பற்றி இலங்கையில் என்ன நடக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்துக்கான மாற்றங்கள் பற்றிய தமது நோக்கினை பகிரங்கமாகப் பதிவு செய்வதற்கானதொரு தலமாக பல செல்வாக்குமிக்க அரச சார்பற்ற அமைப்புக்களும் சில சமயத் தலைவர்களும் எல்.எல்.ஆர்.சி.மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளனர். அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் குறிப்பாகப் பாதிக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க முன்வந்தது, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களுடன் தொடர்புபட்ட மற்றும் அதன் விளைவாகத் தாம் அனுபவிக்க நேர்ந்தவை பற்றிக் கூறுவதற்கு அதிகாரபூர்வமான இடவசதி தேவை என்பதை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது.

சில சிரேஷ்ட அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் அத்துடன் இலங்கை பிரமுகர்கள் அவர்களது அணுகுறையை மேம்படுத்துவதற்கு அல்லது போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி முன்னைய அரசாங்கங்களை விமர்சிப்பதற்கும் எல்.எல்.ஆர்.சி. யினைப் பாவித்துள்ளனர்.

344.
 எல்.எல்.ஆர்.சி.யின் நடவடிக்கை நீடிக்கவில்லை என்பதோடு அதன் இறுதி அறிக்கையை இன்னும் அது சமர்ப்பிக்க வில்லை என்பதால் முழுமையானதும் இறுதியானதுமானதொரு மதிப்பீட்டினைச் செய்ய முடியாமலிருக்கிறது. ஆயினும், இச்சந்தர்ப்பத்தில் குழுவினால் சில முக்கிய தீர்மானங்களைக் குறிப்பிடலாம்: (அ) எல்.எல்.ஆர்.சி.யின் ஆணை சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் குற்றஞ்சாட்டப் பட்ட பாரிய மீறல்களைப் புலனாய்வு செய்வதற்கோ மீறல்களின் போக்குக்களையும் அதற்கான பொறுப்பு ஆகியவற்றைப் புலனாய்வு செய்வதற்கான அமைப்பினையோ கொண்டிருக்கவில்லை, மாறாக, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினைவிட சில்கொட் விசாரணையையொத்த அது தனது பிரஜைகளைப் பாதுகாக்கத் தவறிய கடந்த கால அரசாங்கங்களின் அரசியல் பொறுப்புப் பற்றிய பரவலான கருத்து மீதே கவனத்தைச் செலுத்துகிறது.

(ஆ) ஆணைக்குழுவின் அமைப்பு மற்றும் அதன் சில உறுப்பினர்களின் ஆழ்ந்த அக்கறை முரண்பாடு காரணமாக சுயாதீனம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை போன்ற முக்கிய சர்வதேசத் தரங்களை எல்.எல்.ஆர்.சி. திருப்திப் படுத்த டியாமலிருக்கிறது.

(இ) இன்றுவரையிலான எல்.எல்.ஆர்.சி.

யின் செயற்பாடு மற்றும் முறைமை, யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது என்ன நடந்தது என்று மெய்யாகவே உண்மையைக் கண்டறிவதற்காக செயற் படவில்லை என்பதையும் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரதும் பாரிய மீறல்கள் பற்றிய ஒழுங்கான, பாரபட்சமற்ற முறையில் புலனாய்வினை மேற்கொள்ள வில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் இருந்து அவர்களாகவே வேறு வழியின்றி அதிக எண்ணிக்கையினர் ன்வந்தார்கள் என்ற போதிலும் மீறல்கள் பற்றிய முழு விபரங்களையும் அவர்களுக்கு நேர்ந்த தீங்குகளையும் இச்செயற்பாட்டின் ஒரு பகுதியாக கூற அவர்கள் ஊக்குவிக்கப்பட வில்லை என்பதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற ஏனைய குறிப்பான குழுக்களுக்கு நேர்ந்த தெளிவான தீமை பற்றியும் கவனம் செலுத்தப்படவில்லை.

(ஈ) பாதிக்கப்பட்டோரை அவர்கள் கௌரவம் மற்றும் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய முழு மரியாதை யுடனான அல்லது பாதிக்கப்பட்டோரின் சாட்சியத்தைப் பதியும் போது தோதான முறையில் ஆண் பெண் வேற்றுமை அடிப்படையிலான உணர்வுடனான அணுகுறையினை எல்.எல்.ஆர்.சி.

செய்றைமூலம் மெய்ப்பித்துக் காட்டத் தவறியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலுமான அதன் அமர்வுகளின் போது இதனைத் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.

இழப்பீடு பற்றிய முக்கியமான விடயம் பற்றி அது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அது குறிப்பிடவில்லை.

(உ) நிஜமாகவே தனிப்பட்ட ஆபத்து இருந்த சூழ்நிலைகளிலும் சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பினை எல்.எல்.ஆர்.

சி. உறுதிப்படுத்தவில்லை. சில குறிப்பிட்ட சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டனர் என்பதற்கான சாட்சியம் உண்டு.



(ஊ) எல்.எல்.ஆர்.சி.யின் செயற்பாடுகள் போதியளவு ஒளிவு மறைவற்றதாக இல்லை.



345. மொத்தமாக, எல்.எல்.ஆர்.சி.

ஆழ்ந்த குறைபாடுள்ளதாகவும், பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதிக்கான சர்வதேச தரங்களை நிறைவு செய்யாத தாகவும் உள்ளதால், பொறுப்புக்கூறல் செயற்பாடொன்றுக்கான இலங்கை ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகத்தின் இணைந்த உறுதிப்பாட்டை நிறைவு செய்ய டியாததாயிருக்கிறது.

(ஈ) இலங்கையின் நீதித் திட்டம் 346. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களுக் கான பொறுப்புக்கூறலை வழங்கும் அடிப்படை வழியாகவும் பாதிக்கப்பட் டோருக்கு பயனுறு பகாரத்தை வழங்கு வதாகவும் நீதித் திட்டம் இருத்தல் வேண்டும். எல்.எல்.ஆர்.சி.யின் விளைவுகள் எதுவாக இருந்த போதிலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் நீதி வழங்கும் முக்கியமானதொரு பாத்திரத்தை இலங்கையின் நீதித் திட்டம் கொண்டிருக்க வேண்டும். இலங்கை குற்றவியல் நீதித் திட்டம் புலனாய்வு செய்வதற்கான அதன் பொறுப்புக்களை, கடந்த காலத்தில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்ட போதெல்லாம் இப்படியானதொரு போக்கு இருந்து வந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி.

அதன் வேலையைப் பூரணப்படுத்தும்வரை தள்ளிப்போடுவது பொருத்தமானதல்ல பின்வரும் பிரிவு யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு இலங்கையின் நீதி மற்றும் இராணுவ நீதி மன்றங்கள் அமைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பின்வரும் பிரிவு ஆராய்கிறது: 1. அவசரகால சட்டகம் மற்றும் சட்ட மீளாய்வின் விலக்கல்கள் 347. சட்ட மீளாய்வில் இருந்து விலக்களிப்பை வழங்குவது இலங்கையின் சட்ட அமைப்பின் முக்கியமானதொரு வரையறை செய்யும் அமைப்பிலடங்கிய அம்சமாகவுள்ளது. தலில், பிரத்தியேக அல்லது உத்தியோகபூர்வ தவறு அல்லது புறக்கணிப்புக்கு முழுமையான விதிவிலக்கை அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு வழங்குகிறது. அடுத்து, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பலவற்றை சட்டம் கூர்ந்தாராய்வதில் இருந்து அவற்றுக்கு விதிவிலக்கு அளித்து, பொதுவான சட்டங்களில் வேறு சந்தர்ப்பங்களில் ஏற்புடைத்தானவற்றைக் கணிசமான அளவில் தள்ளுபடி செய்து அவற்றின் மீது முழுமையான மேலாதிக்கத்தைக் கொண்டவையாக இலங்கையின் அவசரகால ஏற்பாடுகள் உள்ளன.



348. திருத்தப்பட்டவாறான, 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஓ) இலங்கையின் அவசரகாலச் சட்டகத்தைத் தாங்கி நிற்கிறதோடு அரசியல் யாப்பு அதற்கு முழுமையான சட்டத்தின் அந்தஸ்தையும் வழங்கியிருக்கிறது.

தற்போது அலில் இருக்கும் அவசரகால நிலைமை ஆரம்பத்தில் 2005 ஆகஸ்ட் மாதம் பிரகடனப்படுத்தப்பட்டதோடு, பாராளுமன்றத்தால் மாதந்தோறும் அனுமதிக்கப்பட்டு அது இன்றுவரை தொடர்ந்து அலில் இருந்து வருகிறது.



349. அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்ட பின், "பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணுவதற்கு அல்லது சமூகத்தின் வாழ்வுக்கு அத்தியாவசியப் படும் விநியோகங்களையும் சேவை களையும் தொடர்ந்து பேணுவதற்கு அப்படிச் செய்வது பொருத்தமென்பதால்' பிஎஸ்ஓவும் அவசரகாலச் சட்டங்களைப் பிரகடனப்படுத்துவதை அனுமதிக்கிறது.

2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் விவான மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அவசரகால ஒழுங்குவிதிகள் பிரகடனப் படுத்தப்பட்டு அவை காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு இன்று வரை அலில் இருக்கின்றன. இவ்வொழுங்குவிதிகள் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல், ஆட்களை கண்காணித்தல் மற்றும் தேடுதல், போக்குவரத்தினைக் கட்டுப்படுத்தல், சொத்துக்களைக் கைப்பற்றல் அல்லது எடுத்தல் மற்றும் கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரசுரங்கள், துப்பாக்கிகள் மற்றும் பிரவேசத்துக்கான உரிமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றுக்கான பாரிய அதிகாரங்களை வழங்குகின்றன. அவை யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது அதற்கு ன்னர் மற்றும் அதற்குப் பின்னர் பரவலாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 2010 மே மாதம் வரை அலில் இருந்த அத்திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது தடுக்கப் பட்டுள்ள ஆட்கள் தொடர்பில் இன்று வரை அலில் இருக்கும் 2005ஆம் ஆண்டின் ஒழுங்குவிதிகளின் ஒரு பகுதி, பாதுகாப்புச் செயலாளன் உத்தரவின் பேல், தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு வருடத்துக்கு மற்றும் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்படியான தடுத்து வைத்தலுக்கு அனுமதியளிக்கிறது.



350. அவசரகால ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பாக, திருத்தப்பட்டு பின்னர் 1982 இல் நிரந்தரச் சட்டகமான 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் ஒப்பீட்டளவிலான அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இச்சட்டம் கடும் தண்டனைகளை (பாகம் ஐ) கொண்ட குற்றங்கள் வரிசையினை விளக்குவதோடு, சில பிரசுரங்களைத் தடை செய்வதற்கான (பாகம் ஙஐஐ) அதிகாரங்களையும் கொண்டுள்ளது, கைது செய்தல், தேடுதல், உட்பிரவேசித்தல் மற்றும் கைப்பற்றுதல் (பாகம் ஐஐ) ஆகியவற்றுக்கான வரையறுக்கப்பட்டிராத அதிகாரங்களையும் குறிப்பிடுகிறது. நிருவாகத்தினால் கட்டளையிடப்பட்டவாறாக ன்று மாத இடைக்காலத்துக்குட்பட்டவாறு 18 மாதங்கள் வரையிலான பாதுகாப்புக்காகத் தடுத்து வைத்தலையும் அது கொண்டுள்ளது. மற்றும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அல்லது தொடர்புபட்டதாக ஒருவரை நம்புவதற்கு அல்லது சந்தேகப்படுவதற்கு காரணம் இருந்தால், போக்குவரத்து அல்லது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டளையை இடுவதற்கான ஏற்பாட்டினையும் அது கொண்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, அதற்கு ன்னர் மற்றும் அதன் பின்னர் பாரிய விளைவுகளைக் கொண்ட பிரிவு சட்டம் செறிவாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளது.





சட்டமா அதிபன் சக்தியை சிக்கலாக்கும் பல வடிவமைப்பு குறைபாடுகள் இலங்கை சட்டத்தில் காணப்படுகின்றன: (பாகம்)-20



351. அதனை அல் செய்வதில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அல்லது புறக்கணிக்கப்பட்டவை தொடர்பாக சட்டத்தின்மூலம் பகாரம் தேடுவது பரவலாகத் தடுக்கப்பட்டுள்ளதானது அவசரகாலச் சட்டகத்தின் குறிப்பானதொரு அம்சமாகும்.

அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பில், நீதி மன்ற மீளாய்வுக்கு முழுமையான தடையொன்றை அரசியல் யாப்பு வழங்குகிறது. சட்ட தியான ஆராய்வை தடுக்கும் ன்று தெளிவான மற்றும் விவான பிரிவுகளை பிஎஸ்ஓ குறிப்பிடுகிறது.

"மனப்பூர்வமான உள்நோக்கத்துடன்' மேற்கொள்ளப்பட்ட செயல்களுக்கும் பயங்கர வாத தடைச்சட்டத்தின் (பிஏ) சட்டத்தின் கீழ் இது போன்ற சட்ட மீளாய்வுக்கான தடையுள்ளது.

மேலும், இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளனால் விடுக்கப்படும் தடுத்து வைத்தல் மற்றும் தடைவிதித்தல் கட்டளைகள் சட்டப்படி இறுதியானவை எனக் கணிக்கப்பட்டு அவை எந்தவொரு சட்ட மீளாய்விலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளன. பிஎஸ்ஓ வில் அடங்கியுள்ள தடுத்தல் மற்றும் தண்டனையிலிருந்து விலக்களிப்புப் பற்றிய ஏற்பாடு அதன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளுக்கு ஏற்புடைத்தாகும் என்பதோடு, அவசரகால ஒழுங்குவிதிகளிலும் அதே அணுகுறை மீளக்குறிப்பிடப்பட்டுள்ளது.



352. 2010 மே மாதம் அவசரகால ஒழுங்குவிதிகளுக்கான திருத்தங்களின்மூலம் இத்தடைப் படுத்தும் எந்தவொரு பிரிவும் அகற்றப்படவில்�ல் பாரதூரமான விளைவுகளை அவை கொண்டிருந்த போதிலும், மாற்றமின்றி அவை அப்படியே இருக்கின்றன.

இவ்வேற்பாடுகளின் திரண்ட விளைவுகள் காரணமாக அவசரகால சட்டகத்தின் அமலாக்கத்தின் போது நடந்தேறிய செயற்பாடுகள் அல்லது தவறுகள் பற்றி, குறிப்பாக சந்தேகிக்கப்பட்ட பயங்கரவாதிகள் எனத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் தமது உரிமைகளைக் கோரும் திறன் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



2. சிவில் நீதிமன்றங்களில் குற்றவியல் அதிகார வரம்பு (அ) சட்ட மா அதிபர்: குற்றங்களைப் புலனாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தொடரல் 353. இலங்கையில் குற்றச் செயல்களின் புலனாய்வு மற்றும் வழக்குத் தொடரல் மீது சட்ட மா அதிபருக்கு மிகவும் பரந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, காவல்துறையினர் மற்றும் நீதவான்கள் மேற்கொள்ளும் புலனாய்வுகள் சட்ட மா அதிபன் கட்டுப்பாடு மற்றும் பணிப்புக்கு உட்படுகின்றன. அதேபோன்று, பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் குற்றப் பத்திகை தாக்கல் செய்வதா இல்லையா அத்துடன் குற்றங்களை நெறிப்படுத்திக் குற்றப் பத்திகை தயாத்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வழக்குத் தாக்கல் செய்தல் ஆகிய அத்தனையும் சட்ட மா அதிபன் ஆதிக்கத்தின் கீழே உள்ளன.

இவ்வாறாக சட்ட மா அதிபர் குற்றவியல் நீதி அமைப்பில் மையத்தைக் கொண்டிருப்பதோடு, அதில் அவர் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார். பொறுப்புக்கூறலைப் பயனுறு விதத்தில் மேற்கொள்வதற்கு சட்ட மா அதிபர் திறமையுடனும் சுயாதீனமாகவும் அத்துடன் சட்ட மா அதிபர் செயற்படுவதற்கு அவரை அனுமதிக்கும் சட்டத்தின் சட்டகமொன்றையும் குற்றவியல் சட்ட திட்டம் தேவைப்படுத்துகிறது.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான மீறல்கள் தொடர்பான விடயங்களுக்கு இது ஏற்புடைத்தாகும்.



354. நாட்டின் வரலாற்றில் குறிப்பான சந்தர்ப்பங்களில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மை பற்றி சவால் விடுக்கப்பட்டுள்ளது. அது அண்மைக் காலங்களில் மேலும் நலிவடைந்துள்ளதால், யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றி அரசாங்கத்தின் அல்லது இராணுவத்தின் சிரேக்ஷ்ட அதிகாரிகள் பற்றி அத்திணைக்களம் புலான்யவுகளை மேற்கொள்வது தொடர்பில் இது ஒரு பிரச்சினையாகவுள்ளது. 2010 தேர்தல் களைத் தொடர்ந்து, ஒவ்வொரு அமைச்சின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கசெற் அறிவித்தல் ஒன்று சட்ட மா அதிபர் திணைக்களத்தையும், புதுச் சட்டங்களின் வரைவுக்கான பொறுப்பைக் கொண்ட சட்ட வரைவாளர் திணைக்களத்தையும் ன்பு அவை இருந்த நீதி அமைச்சிடம் இருந்து அகற்றியது.

புதிய "பட்டியலிடப்படாத' திணைக்களங்கள் என இத்திணைக்களங்கள் அரசியல்யாப்பின் 44(2)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டின் இப்போது வருவதோடு. அவை நிறுவக ரீதியில் ஜனாதிபதிச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக இப்போது தெரிய வருகிறது.



355. இலங்கையின் கடந்த கால புலனாய்வுகள் மற்றும் வழக்காடல் பெதும் தேர்ந்தெடுத்க்கப்பட்டவையாகவும் சட்டத்தை அல்படுத்துவது தொடர்பில் அதிகாரத் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டிருந்ததாகவே அன்றி நியாயமாகவும் சசமமாகவும் நீதியைப் பெறுவதற்கானவையாக இருக்கவில்லை.

தடுப்புக் காவலில் நேரும் மரணங்களுக்கு காவல்துறையினருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற சட்ட மா அதிபன் தீர்மானம் நீதியை மறுப்பதாக அமையும் கொடுங்கோன்மையானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு தீர்மானம் ஒன்றை எடுக்கும் அளவுக்கு இருக்கிறது. அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றிய புலனாய்வுகள், அவை பூரணப் படுத்தப்பட்டிருந்தால், அவற்றுக்கு அசாதாரணமான நீண்ட காலம் சென்றுள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் அத்தகைய குற்றச்சாட்டுக்களை விடுக்கும் பாதிக்கப்பட்டோரை கிரமமாக அலைக்கழித்து வந்துள்ளனர். குற்றவியல் விசாரணைகளும் குற்றப்பத்திகை தாக்கல் செய்வதும், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் போன்ற அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அலைக்கழிக்கவும் அச்சுறுத்தவும் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளன.

புலனாய்வுகளை ஆரம்பித்து அவற்றைப் மேற்பார்வை செய்து மற்றும் வழக்காடல் தொடர்பான சட்ட மா அதிபன் அதிகாரங்களை கண்காணிப்பதற்கு நீதித் துறைக்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், நீதிமன்றங்கள் இச்செயற்பாட்டை பிரயோகிக்க தயக்கம் காட்டியுள்ளன. வழக்காடலில் விடாமுயற்சி இல்லாதது பற்றி நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவிக்கும ஒரு சில அபூர்வ சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன.



(ஆ) நீதித் சட்டகத்தின் குறைபாடுகள் 356. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நேர்ந்ததாக நம்பகமாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள முக்கிய நடைமுறை அம்சங்களை மேவும் பல குற்றங்கள் இலங்கை குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் நடைபெற்றிருக்கக் கூடிய பல மீறல்களை புலனாய்வு செய்து வழக்குத் தொடருவதற்கான சட்ட மா அதிபன் சக்தியை சிக்கலாக்கும் பல வடிவமைப்புக் குறைபாடுகள் இலங்கைச் சட்டத்தில் காணப்படுகின்றன.



(டி) உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கணிக்கப்படும் தரப்பினர் நடத்தைக்கு ற்றிலும் மாறாக உள்நாட்டு ஆயுதந்தாங்கிய மோதலின் போதான போர்க்குற்றங்கள், (டிடி) ஒரு குற்றத்தைப் புயுமாறு கட்டளையிடுவது தொடர்பான இராணுவக் கட்டளைத் தளபதிகளின் அல்லது சிவிலியன் உயர் அதிகாரிகளின் பொறுப்புப் பற்றிய தெளிவான ஏற்பாடுகள், மற்றும் (டிடிடி) பதவியில் தாழ்ந்தவர்கள் ஈடுபடும் குற்றங்களைத் தடுப்பது அல்லது அவற்றுக்கான தண்டனை வழங்குவது தொடர்பான இராணுவக் கட்டளைத் தளபதிகள் அல்லது சிவிலியன் மேற்பார்வையாளர்களின் பொறுப்பு வழக்குமரபுப்படி கட்டளை பீட அல்லது மேற்பார்வைப் பொறுப்பு, போன்றவற்றுக்கான தெளிவான ஏற்பாடுகளை இலங்கை சட்டம் வழங்கவில்லை.



357. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை உள்ளிட்ட இலங்கையில் காணாமற் போன அதிக எண்ணிக்கையினரைக் குறிப்பாகக் கருத்திற் கொண்டு, வலுக்கட்டாயமாகக் காணாமற் போதலை குற்றமெனக் குறிப்பிடாதது மேலுமொரு வடிவமைப்புக் குறைபாடாகும்.

கடந்த காலங்களில், இத்தகைய குற்றங்களுக்கு சாதாரண குற்றவியல் ஏற்பாடுகளை நாட வேண்டிய தேவையை இந்நிலை ஏற்படுத்தியது என்பதோடு, பொதுவான சட்டத்தின் கீழான குற்றமொன்றுக்கு வழக்குத் தாக்கல் செய்வதற்குப் போதிய சாட்சியங்களால் நிறுவப்பட்டதொன்றாக அதனை எடுத்துக் காட்டுவது சிரமமாகிறது. கிடைக்கக் கூடிய சாட்சியஙகளின்மூலம் வலுக்கட்டாயமான காணாமற்போதல் ஒன்றுக்கு நிறுவகப் பொறுப்பு தெளிவாக இருந்து தனி நபர் பொறுப்பினை நிரூபிப்பது கஷ்டமாக இருந்த போதிலும், அரச பொறுப்பினை கண்டுபிடிப்பதற்கான தெளிவான சட்டப் பொறித்தொகுதியொன்றையும் காணக் கூடியதாக இல்லை.



358. மேலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்காக பயனுறு பகாரம் வழங்குவதற்கான திறனை இலங்கை குற்றவியல் நீதி அமைப்பின் பலவீனம் சிக்கலாக்குகிறது. தலில், ஆயுதப் படையினருக்கு மட்டுப்படாமல் சட்டத்தை அலாக்கும் கவர்கள் அனைத்திலும் பரந்திருக்கும், பாரிய அளவிலான சாட்சியங்களை அச்சுறுத்தும் நிலையிலும் கூட பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. தமக்கு எதிராகக் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் சித்திரவதை தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தம் பதவிகளில் தொடர்ந்து இருந்து, அவ்வாறாக வழக்கு நடைபெறும் வரை சாட்சிகளை அச்சுறுத்தவும் சில வேளைகளில் கொலை செய்யவும் தம் அதிகாரத்தையும் செல்வாக்கை யும் பிரயோகிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, அநேகமாக எல்.எல்... உடன் தொடர்பு உண்டென்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும், சர்வதேசச் சட்டத்துக்கு ரணான பயங்கரவாத தடைச்சட் டம் (பிஏ) சட்டம், குற்ற ஒப்புதல் ஒன்று பலாத்காரமாக பெறப்பட்டது என்பதை நிரூபிக்கும் பொறுப்பைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்துகிறதால், அதிகாரிகள் தவறான வழியில் கேள்விகளைக் கேட்டு விசாரணை செய்யும் சாத்தியக்கூற்றினை அது அதிகக்கிறது.



(இ) நீதிமன்றங்கள் 359. குறிப்பாக ஆயுதந்தாங்கிய மோதலின் சூழ்நிலைப் பொருத்தத்தில் மேற்கொள்ளப் பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாரதூரமான சட்டத்தால் தண்டிக்கப்படக் கூடிய குற்றங்கள் தொடர்பாக அண்மையில் இலங்கையின் குற்றவியல் நீதிமன்றங்கள் மேற்கொண்ட பூகோளதியிலான அணுகுறையை பற்றிய பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய தரவுகள் மட்டுப்பட்டதாகவேயுள்ளன. அதன் விளைவாக, மேலும் விவான உருவமைப்பை ஊகித்துக் கொள்ளக் கூடிய விதத்தில், யுத்தத்தின் கடைசிக் கட்டங்கள் பற்றிய அதன் பகுப்பாய்வுக்கு நேரடியாகச் சம்பந்தப்பட்ட இரு பாரிய மரபு வழி சார்ந்த ஆதங்கங்களையும் குழு மதிப்பீடு செய்கிறது. இது சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமான காணாமற்போதல்கள் தொடர்பான குற்றங்கள் பற்றிய இலங்கை நீதிமன்றங்களின் செயற்பாட்டைக் குறிப்பதாகவுள்ளன.





சித்திரவதை, காணாமல் போதல் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக பாரபட்சமின்றி புலனாய்வு செய்யவில்லை: (பாகம்)-21





360. இலங்கையில் வழக்குக்கு ந்திய மற்றும் வழக்கு நடைமுறை ஆகியவற்றை உள்ளிட்ட நீதியின் செயற்பாட்டின் சகல கட்டங்களிலும் தாமதமேற்படுவது இயல்பா னதாகவே உள்ளதோடு, மனித உரிமைகள் மீறல் வழக்குகளுக்கு அவை தனித்தன்மை வாய்ந்தனவல்ல.



சுமார் 2 வருடங்களுக்கு மேல் நீடிக்கக் கூடிய புலனாய்வுகள், மற்றும் புகார் செய்பவர்களுக்கு எதிரான அச்சுறுத் தல்கள் அத்துடன் சித்திரவதை பற்றிய குற் றச்சாட்டுக்கள், குற்றவியல் நீதித் திட்டத் தின் நிஜமான மற்றும் கருதப்படும் நியாயத் தைப் பெதும் பாதித்துள்ளன.



நியாயமான தொரு காலப்பகுதிக்குள் வழக்கை நடத்து வதற்கான தெளிவானதொரு உரிமை இல ங்கையின் சட்டத்தில் இல்லையென்ப தோடு, பொருத்தமற்ற கால தாமதம் பற்றி அர சியலமைப்பிலோ அல்லது குற்றவியல் நீதிச் சட்டங்களிலோ தெளிவான நடவடி க்கை மேற்கொள்ளப்படவில்லை. முறைசார் ந்த நடைமுறை விதிகளுக்குப் புறம்பாகச் செயற்படுவதும் பொதுவானதொரு அம்ச மாக தென்படுகிறது. கடத்தல், சட்டவிரோத மாகத் தடுத்து வைத்தல், அல்லது சித்திர வ�த குற்றங்கள் மீது அதிகாரிகளுக்கு எதி ராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் அதி கமானவை திருப்திகரமான சாட்சியமில் லாமை மற்றும் சாட்சிகள் கிடைக்காமை கார ணங்களாக தீர்ப்பின்றி டிவடைந்துள்ளன.

கடந்த ஆண்டுகளில் இலங்கையில் புரியப் பட்ட பாரிய குற்றங்களுக்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட விகிதாசாரம் மிகக் குறைவான 4 சத வீதமே என 2004 ஆண் டின் அறிக்கையொன்று இனங்கண்டுள்ள தோடு இத்துறையில் ஒரு ன்னேற்றத்தை யும் குழு காணவில்லை. குற்றவாளி என அபூர்வமாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளிலும் இழப்பீடு வழங்குவதில் நீதி மன்றங்கள் தயக்கம் காட்டியுள்ளன.



361.அரச அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு மற்றும் கொடூரமான, மனிதத்தன்மையற்ற அல்லது இழிவாக்கும் விதத்தில் நடத்தப்படுவது அல்லது தண்டனைக்கு உள்ளாக்கப்படுவது பற்றிய அறிக்கைகள் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் உள்ளன. (உடனடியாகக் கொலைத் தண்டனையை நிறைவேற்றுதலுடன்) காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஏற்படும் மரணத்துக்கான இரண்டு முக்கிய காரணிகளுள் சித்திரவதையும் ஒன்று எனக் காணப்பட்டுள்ளதோடு, தடுப்புக் காவலில் நேரும் அதிகமான மரணங்கள் தனியொரு அதிகாயின் வரம்பு கடந்த செயலுக்கு அப்பால் அதிகாரிகள் அன்றாடம் தாம் ஈடுபடும் செயற்பாடு காரணமாகவே நிகழ்கிறது என்பதோடு அது விசாரணை செய்யும் போது நேரும் ஒரு விடயம் எனச் சாதாரணமாக கருதப்படுகிறது. சட்டத்தை அல்படுத்தும் அதிகாரிகளினால் நிகழும் குற்றஞ்சாட்டப்பட்ட பரவலான சித்திரவதை, மோசமாக நடத்துதல் மற்றும் காணாமற் போதல்கள் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக, மற்றும் பாரபட்சமின்றிப் புலனாய்வு செய்யவில்லை. சித்திரவதை பற்றிய விடயங்கள் தொடர்பாகப் பதவி நிலையிலான பயனுறு புலனாய்வுப் பொறித்தொகுதி இல்லாதது குறிப்பானதொரு சிக்கலாகவுள்ளதோடு அது சர்வதேச தரங்களையும் நிறைவு செய்யவில்லை.



362. சித்திரவதையைத் தண்டனைக்குய குற்றம் என வகைப்படுத்தும் 1994 ஆம் ஆண்டின் கெட் சட்டம் அமலாக்கப்பட்டதும் மிகப் பாரிய குற்றங்கள் தொடர்பில் அவை எவ்வாறு கையாளப்பட்டன என்பதற்கான உதாரணத்தை எடுத்துக் கொண்டால், சட்ட மாஅதிபர் 34 குற்றப் பத்திகைகளைத் தாக்கல் செய்துள்ளதோடு, இது வரை 3 குற்றவாளியெனத் தீர்ப்பும் 8 விடுதலை செய்தல்களும் நடைபெற்றுள்ளன.

பொலிஸ் பட்சகர் பதவி நிலைக்கு மேல் எந்த அதிகாரிக்கு எதிராகவும் சித்திரவதை தொடர்பான வழக்கினை சட்ட மா அதிபர் தொடரவில்லை.



வலுக்கட்டாயமான காணாமாற்போதல்கள் (கடத்தல் மற்றும் பலவந்தமாக எடுத்துச் செல்லல் போன்ற குறைந்த பாரதூரமான குற்றங்களின் கீழ் பொதுவாகக் குற்றஞ்சாட்டப்பட்ட) விடயங்களில் குற்றவாளியெனக் காணும் விகிதாசாரம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைக் கிடைக்கக் கூடிய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. புகானைத் தொகுப்பதில் நேர்ந்த தாமதங்கள் மற்றும் / அல்லது பிழையாகக் குற்றப் பத்திகையைத் தாக்கல் செய்தல் போன்ற துறை நுட்ப வரையறைகளை போன்று தென்படும் நோக்கங்களுக்காக நீதிமன்றங்கள் இவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்ய விளைகின்றன. பிந்திய விடயத்தில், சட்ட மா அதிபருக்கும் மேல் நீதி மன்றத்துக்கும் அத்தகைய குற்றப்பத்திகைகளைத் திருத்துவதற்கான அதிகாரம் இருந்த போதிலும் பல வழக்குகளில் அவ்வதிகாரம் அதிகாரபூர்வமாகப் பாவிக்கப்படவில்லை.

குற்றவாளியெனக் காணப்பட்ட சந்தர்ப்பங்களில் தண்டனை விதித்தல் சம்பந்தப்பட்ட விடயத்தின் பாரதூரமான தன்மையை நோக்குமிடத்து மிகவும் கடுமையற்றதாகவே மேற்கொள்ளப்படு கிறது.



(ஈ)யுத்தத்தின் கடைசிக் கட்டங்களின் போது நிகழ்ந்த மீறல்கள் தொடர்பான குறிப்பான குற்றவியல் நடவடிக்கைகள் 363. எல்...ஈ உறுப்பினர்களுக் கெதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, அது குற்றச்சாட்டுக்களை நெறிப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாக எழுத்து மூலமான பதில்கள் மற்றும் வாய்லமான வாக்குலங்கள் ஊடாகக் குழுவுக்கான பதில்களில் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.: கடந்த காலத்துக்குச் சயான பதில் வழங்குவது) தற்போது தடுப்புக்காவலில் உள்ள எல்...ஈ உறுப்பினர்களுக்கு எதிராக, உறுதியானதொரு குற்றச்சாட்டை விடுப்பதற்கான சாட்சியங்கள் இருப்பின், குற்றவியல் சிவில் குற்ற வழக்குத் தொடுக்கப்படும். 2008 ஆகஸ்ட் மாதம் தல் இச்செயற்பாடு நடைபெற்று வருகிறது என்பதோடு, பாரிய குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கணிசமான எண்ணிக்கையிலான தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கெதிராக பிஏ இன் ஏற்பாடுகளின் பிரகாரம் அல்லது அவசரகால ஒழுங்குவிதிகள், குற்றவியல் சட்டக்கோவை மற்றும் ஏனைய குற்றவியல் சட்டங்களின் கீழ் நீதி மன்றங்களில் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அத்தகைய சகல விடயங்களிலும் குறைவான தடுப்புத் தண்டனை விதிக்கும் கொள்கைகளே அனுசரிக்கப்பட்டுள்ளதோடு, தடுத்து வைப்பது அல்லாத தண்டனைகளை வழங்கும் பொறித்தொகுதிகள் மீது அவை தாராளமாகத் தங்கியுள்ளன.



364. "கணிசமான எண்ணிக்கை' என்பது, அவை யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் அல்லது வேறு காலப்பகுதிகளுடன் சம்பந்தப்பட்டனவா மற்றும் எவ்வளவு தூரத்துக்குக் குற்றங்கள் பொதுவான சட்டங்களின் படி சாதாரண குற்றங்கள் அல்லது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டதியானதா என ஆழமாகக் கேள்விக்குள்ளாகிய அவசரகாலச் சட்ட ஏற்பாடுகளின் கீழா, என்பன பற்றிய தகவல் குழுவிடம் இல்லை. மேலும், எல்லா விடயங்களிலும் "குறைந்த பட்ச தடுப்புத் தண்டனை' என்பதைக் கடைப்பிடிப்பது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் படி பாரிய மீறல்கள் என வகைப்படுத்தப்படும் நடவடிக்கைக்கு எதிராகப் பதில் அளிப்பதற்குத் தவறுவதாகிவிடக்கூடும்.



கடந்த கால நடவடிக்கைகளுக்கு மற்றும் எல்...ஈ படைகளின் மீறல் பழக்கங்களுக்கு தெளிவான பொறுப்புள்ள சில முன்னாள் சிரேஷ்ட எல்...ஈ தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் குற்றவியல் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதோடு, மாறாக அதன் அரசியல் கட்டமைப்பு மற்றும் வியூ ங்களில் அவர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதற்கான குறிப்பிட்டதொரு விலக்களிப்பு தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவசாந்தி, எல்...ஈ இன் மிக உயர்ந்த அந்தஸ்தைக் கொண்ட பெண் என்பதோடு 2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்களில் ஒரு குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

மெனிக் பாமில் 2009 ஆண்டு மே மாதம் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து குற்றம் சுமத்தப்படாமல் அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



365. சட்ட மா அதிபன் அலுவலகத்தில் தனியானதொரு அலகு இருப்பதாகவும் எல்.எல்.ஆர்.சி. அறிவிக்கும் குற்றம் சுமத்தப்படக் கூடிய விடயங்களைப் புலனாய்வு செய்வதற்கு அது வடிமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இச்சட்டகத்தின் கீழ் மற்றும் எல்...ஈ சம்பந்தப்பட்ட அதன் அணுகுறைக்கு ற்றிலும் மாறுபட்டதாக, எந்தவொரு அரசாங்க அலுவலருக்கும் எதிரான புலனாய்வுகளை ஆரம்பிக்கு முன், காலவரையற்ற எல்.எல்.ஆர்.சி. யின் செயற்பாட்டை அரசாங்கம் பிற்போடுவதாகத் தெகிறது.

"(இராணுவத்தினருக்கு எதிரான) பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக' அரசாங்கம் குறிப்பிட்டுள்ள அதே வேளையில், இவ்வழக்குகள் யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பானவையா என்பதை அது குறிக்கவில்லை 2000 ஆம் ஆண்டில் பொதுமக்களைக் கடத்திச் சென்று கொலைசெய்த குற்றத்துக்காக நான்கு இராணுவத்தினருக்கு எதிரான "மிருசுவில்' முழுமையான நீதிபதிகள் குழாம் ஒன்றின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்கை மாத்திரம் அவ்வறிக்கை தொடர்பாக அது எடுத்துக் காட்டுகிறது.



யுத்தத்தின் இறுதிக் கட்டத்துடன் தொடர்புபட்ட இராணுவத்தினருக்கெதிரான குறிப்பிட்ட எந்தவொரு வழக்கு பற்றியும் குழு அறியவில்லை. இவ்வாறாக, இத்தருணத்தில், யுத்தம் டிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரசின் சிவிலியன் மற்றும் இராணுவத்தினர் புரிந்த குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை குற்றவியல் நிதிச் சட்டம் வழங்கவில்லை என்பதோடு, எல்...ஈ இன் நடவடிக்கைள் தொடர்பாக முறைசார்ந்த விதத்திலான பொறுப்புக்கூறல் அரைகுறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட தாகவும் உள்ளது.



இராணுவ நீதிமன்ற அமைப்பின் குற்றவியல் நீதி மீதான அதிகார வரம்பு 366. இராணுவத்தினர் புயும் குற்றங்கள் தொடர்பில், இராணுவ மற்றும் சிவிலியன் நீதி ஒன்றுபாட்டினை இலங்கை அனுமதிக்கிறது. இச்சகலதுமடங்கிய கோட்பாடு 1949 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க (எஸ் 77) இராணுவச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதோடு அது இராணுவத்தினரை உட்படுத்தி இராணுவக் குற்றங்கள் வரிசையினை வழங்கும் இராணுவ நீதி அமைப்பொன்றை ஏற்படுத்துகிறது. இராணுவ நீதி அமைப்பு இராணுவத்தினர் ஈடுபடும் சகல சிவில் குற்றங்கள் மற்றும் இராணுவக் குற்றங்கள் அனைத்தும் மீதும் ஆதிக்கம் கொண்டுள்ளது. சிவில் சட்டத்தைப் போன்றே, இராணுவச் சட்டம் போர்க்குற்றங்கள் அல்லது மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் அல்லது சட்டத்தின் படி இராணுவத்தினருக்காக கட்டளைப் பொறுப்பு ஆகியவை பற்றிய பொறுப்பினை குறிப்பிடவில்லை.



367. இராணுவ வீரர்கள் புரிந்த மனித உரிமைகள் மீறல்களான அவர்களது நடத்தை மீது இராணுவ சட்டவாதிக்கத்தை சர்வதேச சட்டம் தடுக்காத போதிலும், அத்தகைய விடயங்கள் இராணுவ நீதித் அமைப்பினூடாகப் பயனுறு விதத்தில் மேற்கொள்ளப்படாது மற்றும் தண்டனை விலக்களிப்பில் போய் முடியக் கூடும் என்பதால் சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்கள் அத்தகைய விடயங்கள் மீது சிவிலியன் ஆதிக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டி அதற்கானதொரு வலுவான விருப்பத்தைக் குறிக்கிறது.



368. "இராணுவ, கடற்படை மற்றும் வான்படைச் சட்டங்களின் கீழ் மீறல்களில் சந்தேகிக்கப்படும் ஆயுதப் படை உறுப்பினர்களை இராணுவ நீதிமன்றம் அல்லது சிவிலியன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம். பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன' என்பதாக குழுவுக்கு அரசாங்கம் சமர்ப்பித்த எழுத்து மூலமான வாக்குலத்தில் குறிப்பிட்டுள்ளது. பல வழக்குகள் என்பது இராணுவ நீதியின் ஆதிக்கம் தொடர்பானவையா அல்லது யுத்தத்தின் இறுதிக் கட்டம் சம்பந்தப்பட்டவையா என்பது தெளிவற்று இருக்கிறது.



யுத்தம் டிந்த பின் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான மீறல்கள் தொடர்பாக இராணுவத்தினரைப் பொறுப்புக்கூறுவதற்கு மேற்கொள்ளப்படும் உண்மையானதொரு யற்சி எனக் கருத டியாது. மேலும், மிக உயர் மட்டங்களில் கட்டளையிடப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்டதற்கான உருமாதி பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ள போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக தற்போது பதவியிலிருக்கும் அல்லது முன்னாள் உயர் மட்ட இராணுவ (அல்லது சிவிலியன்) அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக தெரியவில்லை.



369. இலங்கையின் இராணுவ நீதி அமைப்பு, அதனால் இங்காணப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவோ அல்லது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் எழுந்த ஏனைய மீறல்கள் தொடர்பாகவோ பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதியொன்றை செயற்படுத்துகிறது என்பதற்கான எந்த அடையாளத்தையும் குழுவினால் காண முடியவில்லை.



4. பாதிக்கப்பட்டோர் நீதி மன்றம் செல்வதற்கான வசதி 370. இலங்கையில் பாதிக்கப்பட்டோர், கொள்கையளவில், சர்வதேச சட்டத்தின் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக பொறுப்புக்கூறலுக்குப் பங்களிக்கும் வகையில் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். ஆயினும், செயல் முறையில்.

அரசாங்கத்தின் வெளிப்படையான மீறல்களைத் தடுப்பதில் நீதித்துறையின் தலையீடு தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்பதற்கு இலங்கையின் அரசியல மைப்பின் வரலாறு சாட்சி பகர்கிறது. நீதி மன்ற மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்ட பரவலான அவசரகால அதிகாரங்களின் விளைவாக சட்டத்தின் நல்லாட்சி நலிவடைதல் மற்றும் அரசாங்க அதிகாரிகளைப் பொறுப்புக்கூற வைக்கும் அரசியல் மனவுறுதி அற்ற நிலையிலான தட்டிக்கேட்க ஆளில்லை என்றதொரு கலாசாரம் எல்லாமாகச் சேர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை கிரமமாகப் புறக்கணிக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளன.



371.அண்மைய வருடங்களில், இலங்கை நீதித்துறையின் தலைமையில் இருக்கும் உயர் நீதி மன்றம், தன் னைப்பினைக் கொண்ட பிரதம நீதியரசர் ஒருவருடன், அரசின் அதிகாரத்தை வலியுறுத்தி சர்வதேசக் கடப்பாடுகளை ஒதுக்கி வைக்கும் விதத்தில் சகலவற்றையும் மேவும் தன்னிறைமை என்றதொரு நோக்கத்தைக் கொண்டதாக அணுகுறையின் கீழ் அதிக அளவில் அரசியலில் சிக்க வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு உயர் நீதி மன்றத்தின் தீர்மானங்கள் பல ஐ.சி.சி.பி.ஆர் இன் கீழான இலங்கையின் கடப்பாடுகளை மீறுவதாகவும், ன்னைய சர்வதேச சட்டத் தரங்களை அனுசத்து நடப்பதை விட்டும் அது விலகிப் போகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.



நீதியரசர்களை நீக்கும் செயற்பாட்டுக்குப் பொறுப்பான, பிரதம நீதியரசர் தலைமை தாங்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் சர்வதேசச் சட்டத்துக்கு ரணாகச் செயற்படுவதாகக் காணப்பட்டுள்ளது.

இறுதியாக, அண்மையில் சட்டமாக்கப்பட்ட 18ஆவது திருத்தம் பாராளுமன்றக் குழுவொன்றுடன் குறைந்த அளவிலான கலந்துரையாடலொன்றைத் தொடர்ந்து நேரடியாக நியமனங்களைச் செய்யும் பரந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கியிருப்பதால், சிரேஷ்ட நீதித் துறையினன் சுயாதீனம் மேலும் நலிவடைந்துள்ளது.



(அ)அடிப்படை உரிமைகள் மனுக்கள் மற்றும் ஏனைய பகிரங்க சட்ட நடவடிக்கை கள் 372. அரசியலமைப்பின் உறுப்புரைகள் 17 மற்றும் 126 ஒன்றாக, நிறைவேற்றுச் செயற்பாடு காரணமாக அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க டியும் என்பதற்கான ஏற்பாட்டினைக் கொண்டுள்ளன. ஆயினும், இப்பகாரத்தின் பயனுறு தன்மை மட்டுப்பட்டதாயுள்ளது.

தலில் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றிய அட்டவணை முழுமையானதாக இல்லை என்பதோடு அவற்றில் உள்ள உரிமைகள் சர்வதேச நீதியுடன் ஒத்துப்போகாத விதத்தில் அரசியலமைப்பினால் வரையறைப்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.

இராண்டாவதாக, அத்தகைய மனுக்கள் கடுமையான நடைமுறைகளுக்குக் கீழ்ப்படிவதாயிருக்கின்றன மீறலின் சுபாவம் எதுவாக இருந்த போதிலும் அது ஒருவர் விடயத்தில் எவ்வளவு பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட மீறல் நடைபெற்று ஒரு மாதத்தினுள் மனுதாரர்கள் அத்தகைய மனுவை உயர் நீதி மன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.



ன்றாவதாக, தனது சொந்த உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதாக அல்லது அவர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ஊடாகஅடிப்படை உரிமைகளுக்கான பகாரத்தை வேண்டி நிற்பதை விடுத்து ஏதும் ஒரு காரணத்துக்காக நேரடித் தரப்புக்கு டியாமல் அல்லது அத்தரப்பு செய்யாது என்ற நிலையில் நண்பரொருவர் அல்லது பொது நலன் வழக்குத் தொடரலை அது தடுக்கிறது.



373. இப்பகாரத்தின் கடந்த கால வழக்கத்தை நோக்குமிடத்து, 2000 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கிடையிலான உயர் நீதி மன்றத்தின் சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் விதத்தில் நடத்தப்பட்டது தொடர்பான அடிப்படை உரிமைகள் தீர்ப்புக்கள் வேதனையளிக்கும் விதத்தில் ன்னுக்குப் பின் ரணானவையாக இருக்கின்றன என்பதை அண்மைய ஆய்வொன்று எடுத்துக் காட்டுகிறது.

பாதிக்கப்பட்டவர் சார்பான உறுதியான தீர்மானங்கள், உயர் தொகையிலான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் தெளிவாக காவல்துறையின் துக்ஷ்பிரயோகத்தைக் கண்டிப்பது போன்றவை வழங்கப்பட்ட தீர்ப்புகளில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.



பாதிக்கப்பட்ட ஒருவர் அடிப்படை மனுவொன்றை முன் வைத்ததுடன், மனுதாரர் அதிக அளவில் விதிகளுக்குக் கட்டுப்படாத மற்றும் ன்னறிந்து கூறுவதற்கு டியாத சட்டச் செயற்பாடொன்றை எதிர் நோக்க வேண்டியேற்படுகிறது.



அத்தகைய மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்குத் தேவைப்படும் நிதி மற்றும் சட்ட வளங்கள் அத்துடன் அத்தகைய மனுக்கள் விசாக்கப்படும் இடமான கொழும்புக்கான பிரவேசம் ஆகியவை காரணமாக இப்படியாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான மிகச் சீரற்ற ஒரு நிலையையும் ஆய்வு கண்டது.



374. மனுதாரர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர் நீதி மன்றம் ஏற்றுக் கொண்ட போதிலும், அது பயனுறு குற்றவியல் புலனாய்வு மற்றும் வழக்குத்தாக்கல் செய்தலுக்கு வழிகோலுவதாகக் கொள்ள டியாது.

மேலும், துஷ்பிரயோகமாக நடத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்குகள் வெற்றி யான போதிலும், அதனைத் தொடர்ந்து பயனுறு குற்றவியல் புலனாய்வு மற்றும் நீதி மன்றச் செயற்பாடு ஏற்பட்டதாகவும் இல்லை. மேலும், துஷ்பிரயோகமாக நடத்தப்பட்ட குற்றச்சாட்டு பற்றிய அடிப்படை உரிமைகள் வழக்குகள் வெற்றி பெற்ற போதிலும், நஷ்டஈடு அரசாங்கத்துக்கு எதிராக அல்லது தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழங்கப்பட்டதா, இழப்பீட்டின் தொகை மற்றும் தீர்ப்பில் செலவுகளை உள்ளடக்குவது போன்ற தெளிவுபடுத்தப்படாத மற்றும் விதிகளுக்கு உட்படாததாகத் தோன்றும் மாறுபாடுகளைக் காணக் கூடியதாகவுள்ளது.



375. இருந்தபோதிலும், "பல அடிப்படை உரிமைகள் மனுக்கள், ஆட்கொணர் மனுக்கள் மற்றும் அழைப்பாணை மனுக்கள் ஆயுதப் படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன' என அரசாங்கம் குழுவுக்கான அதன் எழுத்து மூலமான பதிலில் தெவித்துள்ளது. இவ்வடிப்படை உரிமைகள் அல்லது ஏனைய மனுக்கள் ஏதும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகள் பற்றியவையா என்பது தெளிவாக இல்�ல் குழு அதன் மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு ஏதுவாக அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பான தனிப்பட்ட விவரம் எதனையும் வழங்கவில்லை. இப்போது சமர்ப்பிக்கப்படும் ஏதும் அடிப்படை உரிமைகள் மனுக்கள் பொதுவாகக் காலம் கடந்தவை என ஒதுக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட மீறல் நடைபெற்ற ஒரு மாதத்தினுள் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை விதி காரணமாக அவை முழுமையாகச் செயலற்றவையாகி விடுகின்றன.



(ஆ)தனியார் சிவில் வழக்கு 376. அரசாங்கத்தின் நடத்தை பற்றி, "மீறல்கள் இருப்பின் சிவிலியன் அதிகாரிகளுக்கு எதிராகத் தனிப்பட்ட சிவில் வழக்குகளைத் தொடரலாம்' என அதன் எழுத்து மூலமான பதில்களில் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள போதிலும், அது பற்றிய உதாரணம் எதனையும் அது வழங்கவில்�ல. குழுவும் அப்படியான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் காணவில்லை. எல்...ஈ உறுப்பினர்களுக்கு எதிரான பொது மக்கள் இழப்பீடுகள் தொடர்பாக, "குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களினால் பாதிக்கப்பட்ட எவரும் குற்றஞ்சாட்டப்பட்ட எல்...ஈ இன் மீறல்களுக்கான இழப்பீட்டைக் கோரவில்லை' என அரசாங்கத்தின் எழுத்துலமான பதில்கள் கூறுகின்றன.







உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தெயாது நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்: (பாகம்) - 22





(இ) ஆட்கொணர்வு மனு மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பகாரத்தைப் பெறல் 377. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் தடுத்து வைப்பதற்கான சட்ட அனுமதியை யும் மற்றும் விடுதலைக்கான நிலைமை களைப் பெற்றுக் கொள்ளவும், நீதியின் போதிய அடிப்படை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் கொள்கையளவில் வழக்கமான வழியாக ஆட்கொணர்வு மனுவின் ஆதிக்கம் உள்ள போதிலும், தடுத்து வைத்தல் தொடர்பாக அதன்மூலம் நடவடிக்கை எடுப்பது மட்டுப்படுத்தப் பட்டதாகவே உள்ளது. இலங்கையில், "சட்டத்துக்கு விரோதமாக அல்லாது ஒழுங்கற்ற முறையில் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ தடுத்து வைக்கப்பட்டுள்ள' எந்த ஒரு நபரையும் பௌதீக உடலுடன் நீதி மன்றத்தின் முன் ஆஜர் படுத்தவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மேன்றையீட்டு நீதிமன்றத்துக்கு ஆட்கொணர்வு மனு மீதான ஆதிக்கத்தை அரசியலமைப்பும் வழங்கியுள்ளது.

378. அண்மைய ஆண்டுகளில், மனுதாரர்களுக்கு நிதி மற்றும் போக்கு வரத்துச் சிரமங்களை ஏற்படுத்துவதான பிரதிவாதிகள் நீதி மன்றத்தை மாற்றுமாறு அடிக்கடி வேண்டுகோள் விடுப்பது கடத்தியவர்களின் பெயர்களின் எழுத்தில் வித்தியாசம், அல்லது காவல்துறை தலைவர் அல்லது இராணுவத்தினர் குற்றச் சாட்டுக்களை வெறுமனே நிராகப்பதன் அடிப்படையில் மனுக்களை நிராகரித்தல் ஆகியவை உள்ளிட்ட நீண்ட கால தாமதம் மற்றும் வேறு பல காரணிகள் தொடர் காரணமாக அரசியலமைப்பினூடான ஆட்கொணர்வு மனு வழங்கும் பகாரம் செயல்றை பெறுமதியை இழந்துள்ளது.

சாட்சிகளை அச்சுறுத்தல், நீதித் துறை மீது பொதுமக்களுக்கு உண்டானதான நம்பிக்கை குறைவு, ஒரு செயலில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது பற்றிய அச்சம் ஆகியவை உள்ளிட்ட சூழல் சார்ந்த காரணிகளும் வெற்றிகரமான வழக்காட லுக்குப் பாதமாக உள்ளன. 1994 தல் 2002 வரை மேன்றையீட்டு நீதிமன்றம் வழங்கிய 844 தீர்ப்பபுக்களின் ஆய்வொன்றின் படி, 79 சதவீதமான ஆட்கொணர்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பாக 1980 ஆம் வருடங்கள் தல் 1990ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலம் வரை வலுக்கட்டாயமாகக் காணாமல் போனவர்கள் தொடர்பாக இவ்வழக்குகள் இருந்தன.

379. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களிலும் அதன் பின்னரும் தடுத்து வைக்கப்பட்ட பல்வேறு வகையினர் எந்த நீதியின் அடிப்படையில் அப்படித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய பாரிய நிச்சயமற்ற நிலைமை நிலவுகிறது.

விசாரணையின்றி பாரிய எண்ணிக்கை யிலான இடம்பெயர்ந்தோரை புறத் தொடர்பு அற்ற காம்களில் அடைத்து வைப்பதற் கான உய சட்ட அடிப்படை தெளிவற்ற தாகவே உள்ள அதே வேளையில், சந்தேகிக்கப்பட்ட எல்...ஈ. உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் தொடர்பாக அவசரகால ஒழுங்குவிதிகள், பிஏ சட்டம் மற்றும் சாதாரண குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் எடுத்துக் காட்டுகிறது. இவ்விரு வகையைச் சேர்ந்த தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் செயல்றையில் மற்றும் தேவையான சட்ட பிரதிநிதித்து வத்தையும் ஆட்கொணர் மனுவின் அதிகாரத்தைப் பிரயோகித்துப் பெறலாம் என்பதுவும் மிகக் கஷ்டமாகவே உள்ளது.

தடுப்புக் காவல் பற்றிய நீதி மன்ற மீளாய்வு "முறைசார்ந்த மனுவாக இருக்க வேண்டிய தில்லை, ஆனால் தடுப்புக் காவலில் உள்ளவர் வழங்கும் கடிதம் ஒன்றின்மூலம் அச்செயற்பாடு மேற்கொள்ளப்படலாம்' என அரசாங்கத்தின் எழுத்து மூலமான பதில்கள் உறுதியாகக் கூறினாலும், அவ்வாறு நடைபெற்ற சந்தர்ப்பங்களை அது குறிப்பிடவில்லை. அத்தகைய உரிமை பற்றி சகல தடுத்து வைக்கப்பட்டவர்களும் அறியச் செய்வதற்கான அரசாங்கத்தின் யற்சிகள் பற்றி குழு அறிந்திருக்கவில்லை.

380. "தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் களுக்காக சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்குச் சுலபமான வாய்ப்புண்டு மற்றும் சட்டத்தரணிகளை அமர்த்த டியாதவர்களுக்கு அரசாங்கத் தினால் நிதியளிக்கப்படும் சட்ட உதவியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது' என அரசாங்கத்தின் பதில்கள் மேலும் கூறுகின்றன. அத்தகைய சட்ட உதவி தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லோருக்கும் அல்லது குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு மாத்திரம் கிடைக்கக் கூடியதா என்பது தெளிவற்றதாக உள்ள தோடு, "சுலபமாகக் கிடைக்கிறது' என்பது பல்வேறு தடுப்பு காம்களில் புறத் தொடர்பு இன்றித் தடுத்து வைத்திருப்பதுடன் ஒத்துப் போகாமல் உள்ளது. "இராணுவத்தினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பல அடிப்படை உரிமைகள் மனுக்கள், ஆட் கொணர்வு மனுக்கள் மற்றும் அழைப் பாணைப் பத்திர மனுக்கள் சமர்ப்பிக்கப்பட் டுள்ளன' என அரசாங்கம் உறுதியாகக் கூறிய போதிலும், மோதலுடன் தொடர்புபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் சார்பி லேனும் வெற்றிகரமாக ஆட்கொணர்வு மனுவொன்று செயற்படுத்தப்பட்டது பற்றி அது அறிவிக்கவில்லை என்பதோடு அத்தகைய சம்பவமொன்றை குழுவினால் அறிந்து கொள்ளவும் முடியவில்லை.



381. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் நீதிமன்ற வழக்காடலுக்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்ட போதும், அவசரகால ஒழுங்குவிதிகள் அல்லது பிஏ சட்டத்தின் கீழ் அகற்றப்பட்டுள்ள நீதிமன்ற மீளாய்வு மற்றும் அச்சட்டங்களின் கீழ் வழங்கப்பட் டுள்ள கட்டாயமாகத் தடுத்து வைத்தல் காரணமாக ஆட்கொணர்வு மனுவொன்றை விசாக்கும் நீதிமன்றம் தடுத்து வைத்தி ருப்பதைப் பயனுறு விதத்தில் மீளாய்வு செய்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக் கும் என்பதையும் குழு குறிப்பிட வேண்டி யுள்ளது.



382. இவ்வாறாக, அதற்குக் கிடைக்கக் கூடிய தகவலின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அது சட்டபூர்வ மானதா என்பதைப் பட்சித்துப் பார்ப்பதற் கும் அவர்களைத் தடுத்து வைத்திருப்பதற் கான உண்மையான நியாயத்தை மதிப்பீடு செய்வதற்கான வினைத்திறன் கொண்ட தொரு பகாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பில்லை என குழு தீர்மானித்துள்ளது.



(உ) இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 383. 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தானாகவோ அல்லது புகார் ஒன்றை வைத்தோ அடிப்படை உரிமைகள் மீறல்கள் தொடர்பான விடயங்களை விசாரணை செய்வதற்கு விவான முறைசார்ந்த அதிகாரங்ககைளக் கொண்டுள்ளது.

உண்மையைக் கண்டறிதல் தொடர்ந்து தோதான அதிகார பீடங்களுக்குப் பரிந்துரை களை வழங்குவது மற்றும் சமாதானப் படுத்தல் அத்துடன் மத்தியஸ்தம் செய்தல் ஆகியவை அதனால் வழங்கப்படக் கூடிய நிவாரணங்களாகும். நடைமுறை பற்றிய தோதான சட்டங்கள் வகுக்கப்படும் வரை, பாரிய உரிமைகள் மீறல்கள் தொடர்பாக நேரடியாக நீதிமன்றங்களை அணுகவோ அத்தகைய விடயங்களை தோதான நீதி மன்றங்களுக்குச் சாட்டவோ அதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.



384. இதன் விளைவாக, கடந்த காலங் களில், காவல்துறையினால் மாத்திரமன்றி அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளினாலும் அதன் பரிந்துரைகள் அநேகமாக அப்பட்டமான முறையில் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ற்றிலும் வேறுபட்ட விதத்தில், ஏனைய நாடுகளில் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் இடைக்கால நீதி பற்றிய கேள்விகளை மேம்படுத்தும் விதத்தில் முக்கியமானதொரு பங்களிப்பை வழங்கியுள்ளன.



385. 2006 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அரசியலமைப்புச் சபையின் அனுமதி இன்றி அரசியலமைப்பின் தேவைப் படுத்தலை புறக்கணித்து ஆணைக்குழுவுக் கான உறுப்பினர்களை ஜனாதிபதி நியமித்த காரணத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சட்டத்துடன் உடன் பாடான தன்மை இல்லாதிருந்தது. 2007 ஆம் ஆண்டில், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப் பட்ட தேசிய மனித உரிமைகள் நிறுவனங் களுக்கான தரங்களின் (பாஸ் கோட்பாடு) விசேட மீளாய்வினைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு "ஏ' நிலையில் இருந்து "பி' நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டது. 2006 ஜூலை மாதம் சுமார் 2000 காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமை கள் ஆணைக்குழு கைவிட்டது அது எடுத்துக் கொண்ட விடயங்களில் ஒன்றாகும் என ஐ.சி.சி.என்.எச்.ஆர்.ஐ. குறிப்பிட்டது.

இலங்கையில் அவசரகால நிலைமை ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தேசிய மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று "அதன் ஆணையை நிறைவேற்றும் போது மிகக் கூடிய விழிப்புடனும் சுயாதீனத்துடனும் செயற்படும்' என எதிர்பார்ப்பதாக அது தெவித்தது. 386. ன்னைய ஆணைக்குழு உறுப்பினர் களின் உத்தியோகக் காலம் டிவடைந்ததும், இலங்கை மனித உரிமை கள் ஆணைக்குழுவுக்கு 2009 ஏப்ரலில் புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்க வில்லை. அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தம், குறுகிய கலந்துரையாடலுக்குப் பின் ஆணையாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியதைத் தொடர்ந்து, 2011 பெப்ரவ மாதம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான புதிய தலைவர் ஒருவரையும் மேலும் நான்கு ஆணையாளர்களையும் நியமித்தார்.



387. 2009 ஏப்பிரலில் அது காலாவதி யாவதற்கு ன்னர் யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான மீறல்கள் சம்பந்தப் பட்ட விடயங்கள் எதனையும் ன்னைய ஆணைக்குழு புலனாய்வு செய்ததா என்பதை குழு அறியவில்லை. உதாரணமாக, குழு அறிந்த வரை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஓமந்தை அல்லது வேறு ஏதும் காம்களில் அல்லது ஏனைய தடுப்புக்காவல் நிலையங்களில் பிரசன்னமாயிருக்கவில்லை. ஆயினும், கொள்கையளவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான மீறல்கள தொடர்பில் தானாகவோ அல்லது புகார் ஒன்றினைத் தொடர்ந்தோ ஆராய்வதற்கான ஆணையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டிருக்கும். புதிதாக அமைக்கப்பட்ட ஆணைக்குழு அவ்வாறு செய்யுமா என்பதோடு, அது அப்படிச் செய்தால், அதன் ன்னைய வரலாறு மற்றும் அனுபவத்தை வைத்து அது சுயாதீனம் மற்றும் வினைத்திற முன் தொடர்பில் சர்வதேச தரங்களை திருப்திப்படுத்துகிறது என்பதாகுமா என்பதைக் காத்திருந்தே பார்க்க வேண்டும்.



388. குழுவுக்கு வழங்கப்பட்ட "எல்.எல்.

ஆர்.சி.யின் இடைக்கால பரிந்துரைகளின் அமலாக்கம் பற்றிய ன்னேற்ற அறிக்கை' யில் அரசாங்கம் பின்வருமாறு வாதிடுகிறது: காணாமற் போனவர்கள் தொடர்பாக எல்.எல்.ஆர்.சி. சேகத்த சாட்சியங்கள் தொடர்பாக, காணாமற் போனதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அநேகமானவர்கள் கடைசியாக எல்...ஈ. அணிகளுடன் இருப்பதாகக் காணப்பட்டனர். எனவே, ஒன்றில் அவர்கள் எல்...ஈ. போராளிகள் என யுத்த களத்தில் கொல்லப்பட்டிருப் பார்கள் அல்லது பாதுகாப்புப் படையினடம் சரணடைய யற்சி எடுக்கும் போது எல்...ஈ. இனால் சுடப்பட்டிருப்பார்கள்.



389. இவ்வறிக்கை எந்தவிதத்திலும் மேலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு காணாமற் போனவர்களில் சிலருக்குத் தான் பொறுப்பாக இருக்கக் கூடும் என்ற சாத்தியக்கூற்றினை மறுப்ப தாகவும் அது தென்படுகிறது. "காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்களை தீர்ப்பதை நோக்காகக் கொண்ட கருத்திட்ட மொன்றின் ஒன்றிணைந்த பகுதியாக' ஆட்களின், சொத்துக்களின் மற்றும் கைத் தொழில்களின் புனருத்தாபன அதிகார சபையின் தரவுத் திரட்டொன்றை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பேணுவ தாக அரசாங்கம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

அது இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்குக் கைமாற்றப்படும் என அது உறுதிப்படுத்தியுள்ளது. இக்கருத்திட்டத்தின் நிலைச் சக்தியைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றிருந்த போதிலும், காணாமற் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை ன்னெடுத்துச் செல்வதற்கு புதிதாக மீளமைக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு திறன் உண்டா என்பதில் குழுவுக்கு ஆழ்ந்த ஐயப்பாடு உண்டு. தாம் "சமூகத்துக்குச் சேவை செய்வதற்காக சுயாதீனமாகச் செயற்பட வேண்டும்' என ஆணைக்குழு வின் தலைவர் கூறியிருப்பதற்கேற்ப அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு, "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் மீது (ஆளுமை) செலுத்தும் சட்டத் துக்கான திருத்தம் இன்றி பயனுறு விதத்தில் செயற்பட டியாது என்பதால் அவர்கள் இது பற்றி அரசாங்கத்துக்கு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கு ஏகமனதாக இணங்கியுள்ளனர்' என்பதையும் குழு கவனத்துக்கு எடுத்துள்ளது.



390. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் லச் சட்டம், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலனைக் கண்காணித்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பசோதனை செய்வதற்கான அதிகாரத்தை அதற்கு வழங்குகிறது.

உண்மையிலேயே. தடுத்து வைத்தல் மற்றும் தடுத்து வைத்துள்ள இடம் பற்றி 48 மணித்தியாலங்களுக்குள் ஆணைக்குழு வுக்கு அறிவிக்க வேண்டும் என்பதையும் அதிகா ஒருவர் வேண்டுமென்றே அப்படி அறிவிக்கத் தவறும் பட்சத்தில் அதனைக் குற்றமாகக் காண்பதையும், அத்தகைய தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குள் புகுந்து அவற்றைப் பசோதனை செய்வதை யும் அச்சட்டம் தேவைப்படுத்துகிறது.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டவர் எவரைப் பற்றியும் இலங்கை மனித உரிமை கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதா என்பது தெளிவற்றதாக உள்ளது. இது தொடர்பாக புதிய ஆணைக்குழு அதன் ஆணையை உறுதியாக செயற்படுத்த வேண்டும். இப்படி அறிவிக்க வேண்டிய தேவை கிரமமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் அப்படிச் செய்வது விசேடமாக முக்கியமானதொரு அரசியல் மனவுறுதியின் சமிக்ஞையாக இருக்கும். தடுத்து வைத்தல் பற்றி ஆணைக்குழுவுக்கு அறிவிக்கத் தவறியமைக்காக எச்சந்தர்ப்பத்திலும் எவரும் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி குழு அறியவில்லை.

(ஊ) மரணத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடு 391. இலங்கையில் நடந்தேறிய யுத்தத்தின் இறுதி மாதங்களைத் தொடர்ந்து, மற்றும் அதற்குப் பின்னரும் அவர்கள் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி பலர் அறியாதிருப்பதோடு, அப்படி நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாசு, காணி உரிமைகள் மற்றும் மறுமணம் போன்றவற்றை உள்ளிட்ட பாதிக்கப்பட்டோரின் சொந்தக்காரர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை மரண உறுதிப்படுத்தல் இன்றித் தீர்ப்பது மிகக் கஷ்டமான காயமாகும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த அல்லது காணாமற் போன நிலைச்சக்தியினைக் கொண்டதொரு சந்தர்ப்பத்தை சமாளிப்பதில் 1954ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் போதியதாக இல்லை.

392. 2010 டிசம்பர் மாதம், 2010 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மரணப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், மரண அத்தாட்சிப் பத்திரங்களின் விநியோகத்தை எளிதாக்குவதற்காக இயற்றப்பட்டது.

"பயங்கரவாத அல்லது நாசகார அல்லது சிவில் கொந்தளிப்பு விளைவாக காணாமற் போனதாக அறிவிக்கப்படும் இறந்தவர்களின் பதிவுக்கான' ஏற்பாட்டை, ஏனையவற்றுக் குப் புறம்பாக, இச்சட்டம் வழங்குகிறது. எது எவ்வாறிருப்பினும், கடந்த ன்று வருடங் களாக அலில் இருக்கும் இச்சட்டம், அத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் காட்டக்கூடியவாறாக ஒருவர் காணாமற் போனதாக அறிவிக்கப்பட்டு குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு அவரைப் பற்றிய எதுவித தகவலும் இல்லாத நிலையில் பதிவாளர் நாயகம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட பிறப்பு மற்றும் மரணப் பதிவாளருக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை வழங்குவதற்கு அனுமதி அளிக்கிறது.

393. "சிவில் கொந்தளிப்பு' என்ற சட்டத் தின் கருத்து யுத்தத்தின் கடைசிக் கட்டங் களையும் உள்ளடக்குகிறதா அல்லது அர சாங்கத்தின் கையில் இருக்கும் போது காணா மற் போயிருக்கக் கூடியவர்களையும் அது உள்ளடக்குகிறதா என்பது தெளிவற்றதாக வுள்ளது. அது அவ்வாறே என குழு கருது கிறது என்பதோடு அப்படி உள்ளடக்காது என்பதான விளக்கம் தெளிவாகவே ஏற்றுக் கொள்ள டியாததொன்றாகும். பாதிக்கப் பட்ட பிரதேசங்களில் இப்புதிய பொறிய மைப்பை அரசாங்கம் எவ்வளவு தூரம் பகிரங்கப்படுத்தியுள்ளது மற்றும் செயல் முறையில் அதன் பிரயோகம் பற்றியும் குழுவுக்குத் தெளிவற்றதாகவே உள்ளது.

394. வடக்கிலும் கிழக்கிலும் எல்.எல்.ஆர்.

சி. முன்னிலையில் சாட்சியம் அளிக்க முன் வந்த பாதிக்கப்பட்ட கணிசமான எண்ணிக் கையினர் அவர்கள் சொந்தங்கள் காணாமற் போனதாக கூறினர். ஆயினும், குழுவுக்கான அதன் எழுத்து மூலமான அறிக்கையில் அரசாங்கம்: "எல்.எல்.ஆர்.சி. யின் அறிக்கை யும் பரிந்துரைகளும் வெளியாகும் வரை, இத்தருணத்தில், ங்2010 சட்டத்தின்சி ஏற்பாடு களைச் செயற்படுத்தும் நிலையில் தாம் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளது.

எல்.எல்.ஆர்.சி.யின் அறிக்கை பகிரங்கப் படுத்தப்படுமா என்ற உத்தரவாதம் கூட இல்லாத நிலையில், எல்.எல். ஆர். சி. அதன் அமர்வுகளை டித்துக் கொள்ளும் வரை மரண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற உரிமையுள்ளவர்கள் காத்து நிற்க வேண்டி யது தேவையற்றதும் பொருத்தமற்றதும் என்பது குழுவின் கருத்தாகும். 395. உறவினர் ஒருவன் வேண்டுகோளுக் கேற்ப மரண அத்தாட்சிப் பத்திரத்தை துரிதமாக விநியோகிப்பதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், ஏனைய நாடுகளின் அனுபவத்தை இங்கு வலியுறுத்தி, மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை வழங்குவது மரணத்தைச் சூழவுள்ள சந்தர்ப்பங்களை தித்துக் கூறவோ அல்லது மறைக்கவோ உபயோகப்படுத்தலாகாது என்பதை குழு வலியுறுத்துகிறது. நிருவாகச் செயற்பாடொன்றைத் தொடர்ந்து மரண அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை வழங்குவது சர்வதேச தரங்களை நிறைவு செய்யும் விதத்தில் ஒருவன் மரணம் பற்றிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை உண்மையான முறையில் புலனாய்வு செய்வதற்குப் பரிகாரமாகாது சொந்தக்காரர் ஒருவர் மரண அத்தாட்சிப் பத்திரமொன்றைப் பெற்றுள்ளார் என்பது எதிர்காலத்தில் மேலும் சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதான சட்ட ரீதியிலான தடையாக அமையக் கூடாது என்பதும் முக்கியமாகும்.

எ. தீர்மானங்கள் 396. சர்வதேசச் சட்டங்கள் மற்றும் அதன் உள்நாட்டுச் சட்டங்கள், இவ்வறிக்கையில் விவக்கப்பட்டவை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்து தேவையானவிடத்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கையைத் தேவைப் படுத்துகின்றன. இராணுவ தியாக கிளர்ச்சி யொன்று தோற்கடிக்கப்பட்ட வேறு சந்தர்ப் பங்கள் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் அனுபவம், இலங்கை போன்ற சூழ்நிலைப் பொருத்தத்தில் உண்மை, நீதி மற்றும் இழப்பீடு தொடர்பாக பொறுப்புக்கூறலை அடைவதற்காக எவ்வாறு இடைக்கால நீதிப் பொறித்தொகுதிகள் வடிவமைக்கப்படலாம் என்பதற்கான முக்கியமான ஒப்பீட்டள விலான வழிகாட்டல்களை வழங்குகின்றன.

397. நீதியை மீண்டும் நிலைநாட்டும் அதன் மனவுருவை இலங்கை அரசாங்கம் மேம்படுத்தியுள்ளது. தன் பிரஜைகளை "பயங்கரவாதத்தில்' இருந்து காப்பாற்றத் தவறியமைக்காகக் கடந்த கால அரசாங்கங் களின் அரசியல் பொறுப்பினை ஆராய்வதற்கும் உயிரோடிருக்கும் சில எல்...ஈ.

உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளிப்பதுமூலம் அல்லது சிறியதொரு எண்ணிக்கை யிலான விடயங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுமூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் எல்.எல்.ஆர்.சி. யினை அது பிரயோகிக்கிறது என்பதோடு அவ்மனவுருவின் பிரதிபலன் தீர்க்கமற்றதாக இருப்பதோடு, பொறுப்புக்கூறல் விடயத்தை அணுகுவதற்கான அரைவாசி நடவடிக்கை யாகவும் அமைந்துள்ளது. இவ்வறிக்கையில் விபக்கப்பட்டுள்ள, அவை நிரூபிக்கப் பட்டால், சர்வதேச சட்டத்தின் பாரிய மீறல்களாக அமையக்கூடிய, நம்பகமான குற்றச்சாட்டுக்கள் அல்லது வேறு செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பசோதிப்பதற்காக எதுவும் கருதப்பட வில்லை. அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மரணத்துக்குப் பங்களிப்பைச் செய்திருக்கக் கூடிய அரசாங்கத்தின் கொள்கை தீர்மானங்கள் அல்லது நிருவாக செயற்பாடுகள் பற்றிய உண்மையானதொரு புலனாய்வு அல்லது யுத்தத்தின் பின்னணிக்கான காரண காயங்கள் பற்றியதொரு ஆழமான பரிசீலனையையும் இம்மாதி கருதவில்லை.

398. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது புரியப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பாக மற்றும் நியாயமான பொறுப்புக்கூறலை வழங்குவதற்காக இலங்கையின் உள்நாட்டு பொறித் தொகுதிகள் இதுகாலவரை பயனுறு விதத்தில் செயற்படவில்லை. குறிப்பாக: (அ) எல்.எல்.ஆர்.சி. மனவுருவிலும் அதன் நடைமுறையிலும் ஆழமான குறைபாட்டைக் கொண்டதாகவுள்ளது. அது உறுதியற்ற பொறுப்புக்கூறல் கருத்தின் மேல் உருவாக் கப்பட்டிருப்பதால் அதன் மனவுரு குறை பாடுள்ளதாகவுள்ளது. சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற தன்மை, பாதிக்கப்பட்ட வர்களை நடாத்தும் விதம், சாட்சிகளுக்கான பாதுகாப்பு அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவற்றுக்கான சர்வதேச தரங்களை அது நிறைவு செய்யாததால் அது நடைமுறையிலும் குறைபாடுள்ளதாகவே யுள்ளது. மொத்தமாக, பயனுறு பொறுப்புக் கூறல் பொறித்தொகுதியொன்றுக்கான சர்வதேச தரங்களை அது நிறைவு செய்ய வில்லை என்பதால் பொறுப்புக்கூறல் செயற்பாடு பற்றிய இலங்கை ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகத்தின் கூட்டு உறுதிப்பாட்டை அது நிறைவு செய்யாது.

மற்றும் அதனால் நிறைவு செய்ய முடியாமலுமிருக்கிறது.



தமிழ் இராணுவத் தலைமைப்படைகளை கலைத்து அவர்களுக்கெதிராக வழக்குத் தொடர வேண்டும் (பாகம்)- 23



ஆ. உரிமைகள் மீறல்கள்



குறிப்பாக அரச ஊழியர்களால் மேற் கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவை தொடர்பாக நேர்மையான, உடனடி மற்றும் பக்கசார்பற்ற நீதியை வழங்குவதற்கான அதன் திறனை இலங்கையின் குற்றவியல் நீதித் திட்டம் அண்மை ஆண்டுகளில் வெகுவாக இழந்துள்ளது. அத்தகைய புலனாய்வுகள் மற்றும் வழக்குத் தொடர்வதை மேற்கொள்வதற்கான அரசியல் மனவுறுதி தெளிவாகவே இல்லாது காணப்படுவதோடு, தலைமை வழக்கறிஞராகிய சட்ட மா அதிபன் சுயாதீனத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது.

பரந்த அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பில் தோன்றுவதற்கு நீதித் துறையும் வழக்காடல் அதிகாரிகளும் காட்டும் தயக்கம் தண்டனை விலக்களிப்புக் கலாசாரமொன்றை தோற்றுவித்துள்ளது. இன்று வரை யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை குற்றவியல் நீதித் திட்டம் வழங்கவில்லை.

(இ) சட்டத்தின் கீழ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பானவை உள்ளிட்ட முக்கியமான புலனாய்வு அதிகாரங்கள் உண்டு. பாஸ் கோட்பாடுகளுக்கு இணங்கியொழுகாமை தொடர்பில் ன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அந்தஸ்து குறைக்கப்பட்டதை மற்றும் அதன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான திறன்களை நோக்குமிடத்து, குறிப்பாக காணாமற் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை ன்னெடுத்துச் செல்வதற்கான அண்மையில் மீளமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் திறன் பற்றி குழுவுக்குப் பாரிய சந்தேகம் உள்ளது. அதன் சுயாதீனத்தையும் செயற்றிறனையும் எடுத்துக் காட்டுவதற்காக அது துரிதமாகச் செயற்பட வேண்டியுள்ளது.

(ஈ) தமது குடும்பங்களின் வாழ்வினை மீளக்கட்டியெழுப்ப யற்சித்துக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பாரிய மனிதாபிமானத் தேவைகளை மரண அத்தாட்சிப்பத்திரங்கள் நிறைவேற்றலாம் என்ற போதிலும், யுத்தத்தின் பின்னர் மரண அத்தாட்சிப் பத்திரங்களை வழங்குவது மெதுவாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. அத்தகைய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெறும் நடைமுறையை சுலபமாக்குவதற்காக அண்மையில் சட்டம் இயற்றப்பட்ட போதிலும், பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கவே செய்கின்றன.

எதிர்காலத்தில் உறவினர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதில் அல்லது அத்தகைய மரணங்களைப் புலனாய்வு செய்வதற்கான அரசின் தனியான பொறுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தாத விதத்தில் அத்தகைய அத்தாட்சிப் பத்திரங்களை உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவசரமாக மற்றும் அதிகாரிகளின் தீர்மானங்கள் இன்றிவழங்குவதற்கான ஒரு திட்டம் தேவைப்படுகிறது.

399. இந்நான்கு காரணிகளும் இலங்கையில் பொறுப்புக்கூறலுக்குக் குறுக்கே இருக்கும் முக்கியமான தடைகள் என்பது குழுவின் கருத்தாகும். அடுத்த அத்தியாயத்தில், பொறுப்புக்கூறலுக்கு மேலும் தடங்கலாகவிருக்கும் பரந்த அமைப்புக் காரணிகளை குழு ஆராயும்.

ஙஐ. பொறுப்புக்கூறலுக்கான மேலும் தடைகள்



400. பயம் மௌனம் பொறுப்புக்கூறலின் எதிகளாகும்.

மீறல்கள் தற்காலத்திலும் தொடர்ந்து இருந்தால் கடந்த கால மற்றும் மேலும் பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றி ஒரு தேசம் நடவடிக்கை எடுப்பது மிகக் கடினமாகவிருக்கும். பொறுப்புக்கூறலை அடைவதற்கானதொரு செயற்பாட்டுக்கு சுயாதீன நிறுவனங்களுக்கு என்ன நேர்ந்தது மற்றும் யுத்தத்துக்கு இட்டுச் சென்ற மற்றும் அதனை ஊக்குவித்த ஆதாரங்கள் என்ன என்பது பற்றிய திறந்த கருத்துப்பமாறலுக்கான ஒரு சூழலும் அவசியமாகும். ஆழ்ந்த வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பிரஜைகளிடையே மோதலுக்குப் பின் திறந்ததொரு கருத்துப் பமாறலை மேற்கொள்வது எங்கும் இலேசானதாக இருந்ததில்லை. ஆனால், அதுவே தேவைப்படுகிறது. தீர்க்கப்படாமல் விடப்பட்டால், பொறுப்புக்கூறலை தொடர்ந்து தடைப்படுத்துவது மாத்திரமல்லாமல், மீளிணக்கப்பாடு மற்றும் நிலைத்தகவுள்ள சமாதானம் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பங்களை அழித்து விடவும் கூடிய பல சமகாலத்திய பிரச்சினைகள் இலங்கையில் காணப்படுவதை குழு கவலையுடன் அவதானிக்கிறது. இத்தகைய சில ஆதாரங்களை இப்பிரிவு சுருக்கமாக விளக்குகிறது.

--தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும்..
(201-300) பாகம் 3 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/201-300-3.html
(101-200) பாகம் 2 ஐப் படிக்க http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html
(1-100) பாகம் 1 ஐப் படிக்க     http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html

நன்றி:
வீரகேசரி இதழ்
http://tamilweb.do.am/news இணையதளத்தில் இருந்து எடுத்து இங்கு மறு பதிவிடப்பட்டுள்ளது.

Thursday, August 11, 2011

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (201-300) - பாகம் 3

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (201-300) - பாகம் 3

(101-200) பாகம் 2  ஐப் படிக்க ..  http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html
(1-100) பாகம்  1  ஐப் படிக்க ..     http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html 

(ஈ)பொதுமக்களுக்கு எதிராகக் கண்மூடித்தனமான மற்றும் அளவுமீறிய தாக்குதல்கள் மீதான தடை


201.
பின்வருமாறு கருதப்படுபவை மீதான வகைதொகையற்ற தாக்குதல்களை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது: (70)

குறிப்பானதொரு இராணுவ இலக்குக்கு எதிராக மேற்கொள்ளப்படாத (ஆ) ஒரு குறிப்பிட்ட இராணுவ இலக்குக்கு எதிராகச் செலுத்த டியாத யுத்த றையை அல்லது வழியைப் பிரயோகிக்கும் ஒன்று, அல்லது (இ) சர்வதேச மனிதாபிமான சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுவதற்கேற்ப விளைவுகளை மட்டுப்படுத்த டியாத யுத்த றையை அல்லது வழியைப் பிரயோகிக்கும் ஒன்று மற்றும் அதன் விளைவாக பாகுபாடின்றி இராணுவ இலக் குகளையும் பொதுமக்களையும் அல்லது பொது இடங்களையும் தாக்கும் சுபாவத் தைக் கொண்டதொன்று. (விதி 11 13, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

202.
தன்னால் பிரகடனப்படுத்தபட்ட யுத்த சூன்ய வலயங்களில் அமைந்துள்ள மற்றும் ஆஸ்பத்திகள் உணவு விநியோக வசைகளை உள்ளிட்ட வித்தி யாசமின்றிப் பொதுமக்களைத் தாக்கக் கூடிய ஆனால் குறிப்பிட்ட இராணுவ இலக்குகளை மாத்திரம் குறி வைக்காத விதத் தில் இலங்கை இராணுவம் பீரங்கிகளைப் பிரயோகிப்பதன் லம் மீறல் ஒன்றைச் செய்ததாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

அதிகமாகப் பொதுமக்கள் உள்ள இலக்குப் பார்த்த பிரதேசங்களுக்கு எதிராக கன ரக ஆயுதங்களைப் பாவித்ததாக அல்லது அவ்விடங்களில் பரவலாக பீரங்கிகளைப் பாவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தாமாகவே அவை கண்டித்தனமானவையாகும் என்பதைக் குறிப்பிடுபனவாக உள்ளது.

203.
"எதிர்பார்க்கப்படும் உறுதியான மற்றும் நேரடி இராணுவ பயனை விஞ்சக் கூடிய, தற்செயலாக பொதுமக்கள் உயிரிழப்பை, பொதுமக்கள் காயமடைவதை, பொது இடங்களைச் சேதப்படுத்துவதை அல்லது அவை இணைந்தவற்றை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதையும் சட்டம் தடை செய்கிறது. (விதி 14, ஐ.சி.ஆர்.சி.) எதிர்பார்க் கப்படும் அளவுக்கதிகமான பொதுமக்கள் மரணத்தை மற்றும் காயத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அளவுக்கதிகமான பலத்தைப் பிரயோகிப்பதையும் இவ்விதி முறை தடை செய்கிறது.

சகல சம்பவங்கள் பற்றிய தகவலும் குழுவிடம் இல்லாத அதே வேளையில், யுத்த சூன்ய வலயங்கள் மீதான தாக்குதல்கள் அத்தகைய தாக்குதல்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் இராணுவப் பயனை விட அதிகமாக இருந்ததால் இவ்வேற்பாடு பலமுறை மீறப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன. யுத்த சூன்ய வலயங்களில் கன ரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்தியுள்ளதாக பலதடவை அரசாங்கம் தெவித்துள்ளதைக் கொண்டு அவற்றின் பிரயோகம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பது பற்றி அது அறிந்திருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.


(உ)தாக்குதல்களுக்கு முன்பும் அவற்றின் போதும் முன்னேற்பாடுகளின் தேவை

204.
இலக்குகள் இராணுவம் சம்பந்தப் பட்டவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது, பொதுமக்கள் இறப்பு மற்றும் காயமடைவதைக் குறைப்பதற்கான யுத்த முறைகளையும் வழிகளையும் தேர்ந்தெடுப்பது மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இடமளிப்பின் பயனுறு முன்னெச்சரிக்கை ஆகியவற்றை உள்ளிட்ட பொதுமக்கள் கொல்லப்படுவதை அல்லது காயமடைவதைக் குறைப்பதற்கான முடியுமான சகல தற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தரப்பினர் மேற்கொள்வதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தேவைப்படுத் துகிறது (விதி 1520, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

(71)

205.
பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற் படுத்தக் கூடிய விதத்தில் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட தாக்குதல்கள் பற்றிப் பொதுமக்களுக்கு எந்தவித அல்லது போதிய முன்னெச்சரிக்கையை இராணுவத்தினர் வழங்கவில்லை என்பதாக இவ்வேற்பாடு மீறப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடு கின்றன. வன்னியில் இடைக்கிடையே விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் குறிப்பான தாக்குதல்கள் பற்றிப் போதிய முன்னேற்பாடக அமையவில்லை.

மேலும், பொதுமக்களைச் செல்லுமாறு அரசாங்கம் பணித்த யுத்த சூன்ய வலயங்களை, இவ்விதியைக் கவனிக்காது இலங்கை இராணுவம் பின்னர் செல் வீசித் தாக்கியது காரியம் சாதிப்பதற்காக மேற் கொள்ளப்பட்ட சாதுர்யமான செயலாகவே இருக்கிறது.

2. ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமான இலக்குகள் மீதான செல் வீச்சு (அ) ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3 206. அவை தெளிவாக அடையாளமிடப்பட்டு அவற்றின் அமைவிடங்கள் அரசாங்கத்திற்குத் தெந்திருந்த போதி லும், மேலே குறிப்பிட்ட ஆஸ்பத்திகள் மற்றும் மனிதாபிமான தலங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய நம்பகமான குற்றச் சாட்டுக்கள், உறுப்புரை 3 இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ள "நோயாளர் மற்றும் காயற்றோருக்குப் பராமரிப்பு வழங்குதல்' என்ற கடப்பாட்டின் மீறலாக அமைகிறது.

அறிந்திருந்தும் மக்கள் அதிகமாக உள்ள ஆஸ்பத்திரி அமைவிடங்கள் மற்றும் மனிதாபிமான தலங்களை நேரடியாகவோ அல்லது கண்மூடித்தனமாகவோ குறி வைப்பது அத்தாக்குதல் மரணத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை தாக்குதல் நடத்தியவர்கள் அறிந்துள்ளார்கள் என்பதைக் குறிப்பதாகவுள்ளதோடு அவை பொது உறுப்புரை 3 இனை மீறிய கொலை என்பதாகவும் உள்ளது.

(ஆ)மருத்துவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் தலங்களுக்கான விசேட பாதுகாப்புக்கான தேவை

207.
தரப்பினர் சகல மருத்துவ ஆளணியினர், மருத்துவ அலகுகள், மருத்துவப் போக்குவரத்துக்கள், மனிதாபிமான உதவியாட்கள் அத்துடன் மனிதாபிமான உதவித் தலங்கள் ஆகியவற்றை மதித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தேவைப்படுத்துகிறது.

(விதிகள் 25, 28, 31 மற்றும் 32, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). குறிப்பான ஜெனீவா உடன்படிக்கைகளின் சின்னங்கள், இலங்கையைப் பொறுத்த வரை, செஞ்சிலுவை அல்லது ஐ.சி.ஆர்.சி. கொடியினை தெளிவாகக் காட்டும் வைத்திய ஆளணியினர் மற்றும் தலங்களை தரப்பினரைத் தாக்கலாகாது (விதி 30, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

நேர காலத்தோடு இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட தெளிவான சின்னங்கள் அல்லது அறிவிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட பல்வேறு ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமான தலங்கள் மீதான செல் தாக்குதல் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இவ்விதியின் மீறலைக் குறிக்கின்றன.

அதே போன்று, ஐக்கிய நாடுகள் கொடி தெளிவாகப் பறக்கவிடப்பட்டிருந்த முதலாவது யுத்த சூன்ய வலயம் போன்ற ஐக்கிய நாடுகள் வளாகம் மீதான தாக்குதல்களும் இதே தீர்மானத்தையே குறிக்கின்றன.

(72)
(இ)பொதுமக்கள் மீது அல்லது பொதுமக்கள் தலங்கள் மீதான தாக்குதலுக்கான தடை

208.
ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமானத் தலங்கள் மீதான தாக்குதல்களும் பொதுமக்கள் தலங்கள் மீதான சட்ட விரோதத் தாக்குதலைக் குறிக்கின்றன.

சில ஆஸ்பத்திரிகளில் (புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால்) காயமடைந்த எல்...ஈ.
உறுப்பினர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேறொரு பிவு இருந்தது என்பது இத்தளங்களின் பொதுமக்கள் சுபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆயினும், இவ் வாஸ்பத்திரிகள் பலமுறை தாக்கப்பட்டன அவை வேண்டுமென்றே குறிபார்க்கப்பட்டன என்ற ஊகத்தை ஏற்படுத்துகிறது.

3.மனிதாபிமான உதவியை மறுத்தல்.

(அ) ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3

209.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் "நோயாளிகளுக்கும் காயமடைந்தவர்களுக் கும் பராமரிப்பை வழங்குதல்' என்ற கடமை தொடர்பாக, ஐ.நா. ஒழுங்கு செய்த வாகனத் தொடர்கள் அல்லது ஐ.சி.ஆர்.சி.

கப்பல்கள் மூலமான அடிப்படை மருந்துப் பொருட்கள், குறிப்பாக அறுவைச் சிகிச்சைக்கான பொருட்கள், யுத்த வலயத்தைச் சென்றடைவதை அரசாங்கம் அதிகமாகக் கட்டுப்படுத்தியது. உயிர் காப்பதற்கான சத்திர சிகிச்சைக்குத் தேவையான மருந் துப் பொருட்களை பிரதேச மாவட்ட வைத் திய அத்தியட்சகர் பலமுறை வேண்டிய போதும் அது அதனைக் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அது கப்பல் மூலமாக அனுப்பும் மருந்துப் பொருட்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தும் காய டைந்தவர்கள் எடுத்துச் செல்வதற்காக வந்த கப்பல்களுக்கு அருகில் துப்பாக்கியால் சுட்டும் செல் வெடிகளைச் செலுத்தியும் காயமடைந்த பொதுமக்களுக்கு உதவுவதில், பாரபட்சமான முறையில் மனிதாபிமான உதவியை அது வழங்குகிறது என சர்வதேச விதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதலும், ஐ.சி.ஆர்.சி.க்குக் கடுமையான தடைகள் ஏற்படுத்தப்பட் டன.

(ஆ) மருத்துவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தளங்களுக்குமான விசேட பாதுகாப்புக்கான தேவைப்படுத்தல்கள் 210. மேலே 2இல் கலந்துரையாடப் பட்ட ஆஸ்பத்திரிகள் மீதான செல் தாக்குதலுக்குப் புறம்பாக, இலங்கை இராணு வத்தினால் பல மனிதாபிமான தளங்கள், குறிப்பாக வாகனத்தொடர் 11, புதுமாத்தளனுக்கு அருகில் ஐக்கிய நாடுகள் வளாகம், முதலாவது யுத்த சூன்ய வலயத்தில் மற்றும் அம்பலவன் பொக்கணையில் உணவு விநியோக பாதை மற்றும் ஐ.சி.ஆர்.சி. கப்பல்களுக்கு அருகே செல் தாக்குதலை மேற்கொள்ளல் இந்த விதியின் மீறலைக் குறிக்கின்றன.

பாலியல் சார்ந்த வன்றைக்கு சாதகமான முகாம்களின் சூழலை மாற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது: ஐ. நா. நிபுணர்குழு அறிக்கை (பாகம்) - 12

(73)

(இ) பொதுமக்களின் பட்டினிச் சாவு மற்றும் மனிதாபிமான நிவாரண நிராகரிப்பு மீதான தடை 211. பட்டினிச் சாவை யுத்த முறையாகப் பாவிப்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது.

"பாரபட்சமற்ற முறையிலும் மற்றும் எதுவித பாதகமான வித்தியாசமின்றி, கட்டுப்படுத்தும் அவர்களின் உரிமைக்கு ஏற்ப தேவையை எதிர்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கான மனிதாபிமான நிவாரணம் சென்றடைவதை அனுமதித்து மற்றும் தீவிரமாகவும் தடையின்றியும் செல்வதற்கான வசதியை வழங்குவதை' தரப்பினர் மீது சர்வதேச மனிதாபிமான சட்டம் தேவைப்படுத்துகிறது. (விதிகள் 53 மற்றும் 55, ஐ.சி.ஆர்.சி ஆய்வு)

212.
(டி) குறைந்த அளவிலான உணவு நிவாரணத்தை நியாயப்படுத்துவதற்காக வேண்டுமென்றே மற்றும் பகிரங்கமாக பொதுமக்கள் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டு, (டிடி) மனிதாபிமான வாகனத்தொடர்கள் மற்றும் கப்பல்கள் யுத்த வலயத்தைச் சென்றடைவதற்கு இடையூறு விளைவித்து, மற்றும் (டிடிடி) தெந்து கொண்டே மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோருக்கு அருகில் செல் தாக்குதலை நடாத்தி இந்த ஏற்பாட்டை அரசாங்கம் மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

அதன் விளைவாக குறிப்பாக இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகள் கிட்டாமற் செய்யப்பட்டது. குறிப்பாக அதன் உதவி அரசாங்க அதிபரிடம் இருந்து அதற்குக் கிடைத்த அறிக்கைகள் அரசாங்கம் இந்த விளைவுகளை அறிந்திருந்தது எனக் குற்றம் சாட்டலாம்.

4. பாதிக்கப்பட்டோர் மற்றும் யுத்தத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் அனுபவித்த மனித உரிமைகள் மீறல்கள்

213.
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இவ்வகையான அரசாங்க நடவடிக்கைகள் நடைபெற்றதால், அவற்றை சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உமைகள் சட்டம் ஆகிய இரண்டின் கீழும் குழு ஆராய்கிறது.

(அ) ஜெனீவா உடன்படிக்கைகளின் 3ஆவது பொதுவான உறுப்புரை

214.
"சுய மரியாதை, குறிப்பாக அவமானப்படுத்தும் மற்றும் இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துவதைக் கொண்ட அட்டூழியங்கள்' தடை தொடர்பாக, கொலை செய்யப்படுமுன் அல்லது தடுத்து வைக்கப்படுமுன், இராணுவத் தடுப்புக் காவலில் இருக்கும் போது பெண்கள் மற்றும் சிறுமிகள், குறிப்பாக எல்...ஈ. சந்தேக நபர்கள், மீது இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட கற்பழிப்பு அல்லது பாலியல் குற்றங்கள் மூலம் இந்த ஏற்பாடு மீறப்பட்டுள்ளதற்கான நம்பத்தகு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

வேண்டுமென்றே நிர்வாணமாக்கப்பட்ட பெண்களின் உடம்புகளைக் கொண்ட குறிப்பாக சனல் 4 வீடியோ மற்றும் புகைப்படங்களை உள்ளிட்ட இறந்த ஒரு பெண் உறுப்பினர் எனக் காணப்படும் ஒருவன் புகைப்படம் அதனோடு வரும் இலங்கை இராணுவ வீரர்களின் மோசமான குறிப்புக்களும் கொலை செய்ய ப்படுவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ கற்பழிப்பு அல்லது பாலியல் வன்றை நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கான உறுதியான ஊகத்தை வழங்குகிறது.

புதுப்பித்தெடுக்கும் செயற்பாட்டின் போது இடம் பெயர்ந்த பெண்கள் மிக இழிவாக நடாத்தப்படுவதையும் நம்பகமான குற்றச்சாட்டுகள் எடுத்தியம்புகின்றன.

(74)

(ஆ) வலுக்கட்டாயமாக காணாமப்போதல்கள் மீதான தடை

215.
வலுக்கட்டாயமாகக் காணாமல்போதல்களை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது.

(விதி 98, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). இலங்கை இராணுவ மற்றும் துணைப் படைப் பிவுகள் பல்வேறு அமைவிடங்களில் இருந்து, பிரித்தெடுக்கும் செயற்பாட்டின் போது மற்றும் சரணடையும் இடங்களில், நபர்களை எடுத்துச் சென்று அதன் பின்னர் அவர்கள் காணப்படவில்லை மற்றும் அவர்கள் பற்றிய தகவல் இல்லை என்பதற்கேற்ப நம்பகமான குற்றச்சாட்டுக்களின் படி இந்த ஏற்பாடு மீறப்பட்டுள்ளது.

கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் அமர்வுகளின் போதும் இந்த விடயம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

(இ) தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு குறைந்த பட்சத்திலான பராமரிப்புக்கான தேவைப்படுத்தல்கள்

216.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதியளவு உணவு, நீர், உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதியினை தரப்பினர் வழங்க வேண்டும் என்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தேவைப்படுத்துகிறது (விதி 118, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்தவர் களை குறைந்த பட்ச நிலைமைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தடுத்து வைத்ததைக் கொண்டு ஆயுதந்தாங்கிய மோதலின் போது இந்த ஏற்பாடுகள் மீறப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.

(ஈ) இறந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான தேவைப்படுத்தல்கள்

217.
இறந்தவர்களைத் தேடி, அவர்களுக்குத் தக்க மரியாதையை வழங்கி, புதைகுழிகளின் அமைவிடங்கள் பற்றிப் பதிந்து, காணாமற் போனவர்களுக்கு நேர்ந்த கதி பற்றிக் குடும்பத்தினர்களுக்கு அறிவிப்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தரப்பினரைத் தேவைப்படுத்துகிறது (விதிகள் 112, 113, 115, 116 மற்றும் 117, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு)

218.
இறந்த பொதுமக்கள் அல்லது போராளிகள் பற்றித் தேடுவதற்காக அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வில்லை என்பதால் இந்த ஏற்பாடுகளை மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இவர்களுள் அநேகர் வன்னியில் அடையாளமிடப்படாத புதை குழிகளில் புதைக்கப்பட்டார்கள்.

கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாடு பற்றிய ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டது போன்று சரணடைபவர்களை மீட்பிக்கும் செயற்பாட்டின் போது சிலர் காணாமற் போயிருக்கலாம், கணிசமான எண்ணிக்கையிலான முன்னாள் போராளிகளையும் பொதுமக்களையும் புறத் தொடர்பற்ற முகாம்களில், அவர்களுக்கு நேர்ந்தது பற்றிக் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்காமல் அல்லது குடும்பங்களை ஒன்று சேர்ப்பதற்கு தேடுதல் திட்டம் ஒன்றை ஏற்படுத்தாமல் அது அடைத்து வைத்தது.

"இறந்தவர்கள் மரியாதையுடன் புதைக்கப்பட்டு புதை குழிகளுக்கு மரியாதை வழங்கி அவை பேணப்பட வேண்டும்' என்ற சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் விதியை குழு நினைவூட்டுகிறது.
(விதி 115, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

நிர்வாணமான பெண்களின் சடலங்கள் உள்ளிட்ட சடலங்களை மிகவும் மரியாதைக் குறைவாக இலங்கை இராணுவத்தினர் போன்று தென்படுவோர் நடாத்துவதைக் காட்டும் வீடியோ சுருள்களையும் புகைப்படங்களையும் குழு கண்டது.

(75)

(உ) உயிர் வாழ்வதற்கான, பௌதிகப் பாதுகாப்பு மற்றும் ஆட்களின் உரிமை

219.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் உயிர் வாழ்வதற்கான உரிமையை சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையில் இருந்து பாதுகாத்து மனிதர்களின் பௌதிக பாதுகாப்புக்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது (ஐ.சி.சி.பி.ஆர், உறுப்புரைகள் 6 மற்றும் 9). சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, இரக்கமற்ற அல்லது இழிவாக்கும் விதத்தில் நடாத்துதல் அல்லது தண்டனை வழங்குதல் ஆகியவற்றுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் இவற்றோடு நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது. (சி.சி.பி.ஆர்.

உறுப்புரை 7 மற்றும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை).

பாலியல் மற்றும் ஆண்பெண் வித்தியாசத்தின் அடிப்படையிலான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பையும் இவ்வுரிமைகள் உள்ளடக்குகின்றன.

(76)

220.
வரவேற்றுத் தடுத்து வைக்கப்பட்ட ஆரம்ப கட்டங்களில், போதியளவு உணவு, நீர் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதற்கு அது தவறிய காரணத்தினால், மெனிக் பாமில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்துக்குள் தடுக்க முடிந்த மரணங்கள் காரணமாக இந்த ஏற்பாடு மீறப்பட்டுள்ளதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

துணைப்படைகள் முகாம்களுக்கு நுழைய வழிவிட்டு தொடர்ந்தும் மக்களை எடுத்துச் செல்ல அதிகாரத்தை வழங்குவதன் மூலம் இடம்பெயர்ந்தோன் பௌதிகப் பாதுகாப்பை அரசாங்கம் உத்தரவாதம் செய்யவில்லை.

சிஐடி மற்றும் ஐடியினால் விசாரணை செய்யப்படும் போது கொடூரமான, இரக்கமற்ற மற்றும் இழிவு படுத்தும் விதத்தில் நடாத்தப்படுதல், கற்பழிப்பு அல்லது சித்திரவதை நேர்ந்திருக்கலாம்.

(ஊ) விசாரணை இன்றித் தடுத்து வைத்தலைத் தடை செய்தல்

221. விசாரணை இன்றி தடுத்து வைத்தல் மற்றும் சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சுதந்திரத்தைச் சகலருக்கும் சர்வதேச மனித உமைகள் சட்டம் உறுதிப்படுத்துகிறது (ஐ.சி.சி.பி.ஆர், உறுப்புரை 9 இனைப் பார்க்கவும்).

எவரும் கைது செய்யப்பட்டால் அவன் கைதுக்கான காரணங்கள் மற்றும் ஏதும் குற்றங்கள் பற்றி அவருக்கு அறிவிக்கப்படல் வேண்டும். சட்டத்தை மீறிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட எவரும் உடனடியான சட்ட அதிகாரி ஒருவர் முன்னிலைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு நியாயமானதொரு காலப்பகுதிக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட அல்லது விடுதலை செய்யப்பட உரித்துடையாவார்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவரை பொதுவாக தடுப்புக் காவலில் வைக்கப்படலாகாது.

222.
பாரிய எண்ணிக்கையில் நீண்ட காலங்களுக்கு மற்றும் வழக்கறிஞர் அல்லது நீதி மன்றங்களுக்கான பிரவேசம் இன்றி விசாரணை இல்லாமல் திட்டமிட்டுத் தடுத்து வைப்பது தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.



மெனிக் பாம் போன்ற புறத் தொடர்பற்ற முகாம்களில் பாரிய எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்தோரை அடைத்து வைப்பது குறிப்பாக இதனுள் அடங்கும். ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரை, 290,000 வரையிலானவர்கள் அடைக்கப்பட்டு கட்டுப்பாடுகளை அனுபவிக்க நேட்டது.

இடம் பெயர்ந்தோர் அனைவரும் விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டனர்.

மேலும், முன்னாள் எல்...ஈ. இனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சுமார் 12,000 பேர்கள் நடைமுறைப் பாதுகாப்பு மற்றும் ஐ.சி.ஆர்.சி. இனால் சந்திக்க முடியாதவாறு வேறான இடங்களில் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

இவ்விடங்களில் தடுத்து வைக்கப்பட்ட பெரும்பாலோர் மீது எந்தவொரு குற்றம் சுமத்தப்படவில்லை என்பதோடு, குற்றம் சாட்டப்பட்டோரை வழக்கு நடைபெறும் வரை தடுத்து வைப்பது பொதுவானதொரு விதியாகவே இருந்தது.

(எ) உணவு மற்றும் நீர், உடை மற்றும் தங்குமிடம் அத்துடன் சுகாதாரம் ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமைகள்

 223.
சகலருக்கும் போதியளவு உணவு, உடை மற்றும் இருப்பிட வசதி ஆகியவற்றுக்கு சர்வதேச மனித உமைகள் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது (பொருளாதார, சக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர்.

உறுப்புரை 11). "சுய விருப்பின் அடிப்படையில் அவசியமான சர்வதேச ஒத்துழைப்புக்கான இதன் விளைவுகளை இனங்கண்டு, இவ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்கு தோதான நடவடிக்கைகளை எடுப்பதற்கு' அரசாங்கங்கள் தம்மை அர்ப்பணித்துள்ளன. மேலும், (77)

அடைய முடிந்த ஆகக் கூடிய பௌதிக மற்றும் மனம் சார்ந்த சுகாதாரத்தை அனுபவிப்பதற்கான உரிமை சகலருக்கும் உண்டு (ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர். உறுப்புரை 12). சுத்த நிலைமைகள், நோய் தடுப்பு மற்றும் பரிகாரம் அத்துடன் போதிய மருத்துவக் கவனிப்பு ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக அரசாங்கங்கள் தோதான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

224.
தான் பகிரங்கமாக அறிவித்ததை விட மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உண்மையிலேயே யுத்த வலயத்தில் இருந்து வெளியேறுவார்கள் மற்றும் அவர்களுக்குப் போதிய பராமரிப்பை வழங்க வேண்டும் என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது அல்லது அறிந்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்காக முற்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்ய அல்லது தேவை தெளிவாகியதும் நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் தவறியது என்பதால் இந்த ஏற்பாடு மீறப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.

மெனிக்பாம் மற்றும் ஏனைய முகாம்களைப் புறத் தொடர்புகள் இன்றி வைத்து இடம் பெயர்ந்தவர்களை விடுவிக்காததோடு, இடம் பெயர்ந்தோர் தம் உறவுகளுடன் இருப்பதற்கும் அது அவர்களை அனுமதிக்கவில்லை.

யுத்தத்தின் பின் மெனிக்பாமில் தடுக்கக் கூடிய மரணங்கள் நேர்ந்ததோடு நோய் மற்றும் மனிதர்களுக்கு ஒவ்வாத நிலை இருந்ததைக் கொண்டான மீறல்கள் பற்றிக் குற்றச் சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

(ஏ) ஒன்று கூடுவதற்கும் ஒன்று சேர்ந்து பழகுவதற்குமான சுதந்திரங்கள்

225.
ஒன்று கூடுவதற்கும் சேர்ந்து பழகுவதற்குமான சுதந்திரத்தையும் சர்வதேச மனித உமைகள் சட்டம் உறுதிப்படுத்துகிறது (ஐ.சி.சி.பி.ஆர், உறுப்புரைகள் 21 மற்றும் 22).

சட்டத்தினால் விதிக்கப்பட்டால் மற்றும் தேசிய பாதுகாப்பு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு, பொது அமைதி, பொதுமக்கள் சுகாதாரத்தை அல்லது நல்லொழுக்கத்தைப் பாதுகாத்தல் அல்லது ஏனையோன் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் தேவைகள் ஆகியவற்றுக்காக இவ்வுரிமைகள் கட்டுப்படுத்தப்படலாம்.

எந்தவொரு கட்டுப்பாடும் அளவின் பொருத்தத்தை திருப்திப் படுத்த வேண்டும்.

226.
பிரித்தெடுக்கும் இடங்களில் அல்லது மெனிக்பாமில் இடம்பெயர்ந்தோர் சர்வதேச அமைப்புக்களுடன் அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வதை உள்ளிட்ட கூட்டங்கள் மற்றும் ஒன்று சேர்ந்து பழகுவதைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாக அவசரகால அதிகாரங்கள் மற்றும் இராணுவத்தின் தேவை முன்வைக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்புக்கான எந்தவொரு நியாயமான மதிப்பீட்டையும் விட அளவில் இக்கட்டுப்பாடுகள் அதிகமாகவுள்ளதோடு, யுத்தத்தில் உயிர் தப்பியவர்களுடன் புறத் தொடர்புகளைத் தடுப்பதற்காகவும் அவை ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாகத் தென்படுகிறது.

(78)

(ஐ) பெண்களின் உரிமைகள்
227.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், எந்தவொரு பாகுபாடுமின்றி சகல சிவில், அரசியல், பொருளாதார, சக மற்றும் கலாசார உரிமைகளை அனுபவிக்கும் சம உரிமைகளை பெண்களுக்கு உறுதிப்படுத்துவது அரசாங்கங்களின் கடப்பாடாகும். (ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை 2(1), உறுப்புரை 3 பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களையும் அகற்றுவதற்கான உடன்படிக்கை). பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களையும் அகற்றுவதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் கடமையை இக்கடப்பாடு உள்ளடக்குகிறது. மீறல்களைத் தடுப்பதற்கு, புலனாய்வு செய்வதற்கு மற்றும் மீறல்களைத் தண்டிப்பதற்கு அத்துடன் நஷ்டஈடு வழங்குவதற்கு, அவை பொது அல்லது தனிப் பாத்திரம் மேற்கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்துக்கு ஒரு கடப்பாடு உண்டு.

228.
புலனாய்வு செய்யப்படாத, மெனிக்பாமில் நடந்தேறிய பாரதூரமான கற்பழிப்புச் சம்பவங்கள் உள்ளிட்ட முகாம்களில் மற்றும் மீள்குடியமர்த்தல் செயற்பாட்டின் போது, பெண்கள் பாலியல் தொடர்பான வன்றைக்கு ஆளாக்கப் பட்டனர் என்பதால் இவ்வுரிமைகள் மீறப்பட்டதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பாலியல் சார்ந்த வன்முறைக்குச் சாதகமான முகாம்களின் சூழலை மாற்றுவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

விதவைகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், இளம் தாய்மார்கள், தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் மனைவிமார் மற்றும் தாய்மார்கள் ஆகியவர்களை உள்ளிட்ட இலகுவில் தாக்கமுறக் கூடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் மற்றும் பாலியல் வேற்றுமை காரணமாக வன்முறைக்கு ஆளானவர்கள், சந்தேகிக்கப்பட்ட எல்...ஈ. மற்றும் முன்னாள் பெண் போராளிகள் ஆகியோரின் தேவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக எந்தவொரு விசேட ஏற்பாடுகளும் இருக்கவில்லை.

(ஒ) குடும்பங்களுக்கான விசேட பாதுகாப்பு 229. சர்வதேச மனித உமைகள் சட்டம் குடும்ப அலகுக்கு விசேட கத்துவத்தை வழங்குகிறது என்பதோடு.

அதனைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான கடப்பாடு அரசுக்கு உண்டு (ஐ.சி.சி.பி.ஆர், உறுப்புரைகள் 17 மற்றும் 23, ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர், உறுப்புரை 10) யுத்த வலயத்தில் இருந்து தப்பியபோது, மீட்பிக்கும் செயற்பாட்டின் போது மற்றும் ஆஸ்பத்திரிகள் மற்றும் முகாம்களுக்கு மாற்றும் போது, குடும்ப அலகைப் பேணுவதற்கு, பிந்த குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலை வழங்குவதற்குக் கிஞ்சித்தேனும் கவனம் செலுத்தாது அரச பராமரிப்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மீட்பிக்கப்பட்டனர் என்பதால் இக்கடமைகள் மீறப்பட்டமைக்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. போதியதொரு மாற்றுவழியை ஏற்படுத்தாமல் குடும்பங்களைக் கண்டு பிடிப்பதில் மிகத் திறமையுடன் கூடிய ஐ.சி.ஆர்.சி. இனை அரசாங்கம் காரணமின்றி புறம் தள்ளியது.

(79)

(ஓ) குழந்தைகளுக்கான விசேட பாதுகாப்பு

230.
அவர்கள் இலகுவில் தாக்கமுறக் கூடியவர்கள் என்பதைக் கவனத்திற் கொண்டு, குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தேவைப்படுத்துகிறது.

(ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை 4.

ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர். உறுப்புரை

10, குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை).

பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இல்லாத நிலையில் தனியாக உள்ள குழந்தைகள் விடயத்தில் இக்கடப்பாடு தீவிரத் தன்மையைக் கொள்கிறது, மீட்பிக்கும் இடங்களில் அல்லது ஆரம்பக் கட்டத்தில் மெனிக்பாமில் அத்தகைய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மீறல் என்பதை குறிக்கும் நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மேலும் புனர்வாழ்வு என்ற சாட்டில் சரணடையும் சிறுவர்கள் வழக்கின்றி அரசாங்கத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் புனரமைப்பு மத்திகளுக்கிடையே மாற்றப்பட்டதோடு, அதனால் அவர்கள் இருக்கும் இடங்களைக் கண்டு பிடிப்பது மற்றும் குடும்பத்தினர் அவர்களைச் சந்திப்பது சிரமமாகவிருந்தது.

பொதுமக்கள் மீது பரவலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன: ஐ. நா. நிபுணர்குழு அறிக்கை (பாகம்) - 13

(80)
(ஒள) நீதி மன்றங்களுக்கான பிரவேசத்தை உள்ளிட்ட பயனுறு உபகாரத்துக்கான உரிமை

231.
சர்வதேச சட்டத்தின் கீழ், வாதிடக்கூடிய மீறலைக் கொண்ட மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கான பயனுறு உபகாரத்தை வழங்க அரசாங்கம் தேவைப்படுத்தப்படுகிறது (ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை. 2).

 உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பௌதீகப் பாதுகாப்பு மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்து பொறுப்பானவர்களுக்கெதிராக வழக்குத் தொடர்வதை இப்பரிகாரம் உள்ளடக்குகிறது. தடுத்து வைத்தலின் சட்டபூர்வமான தன்மையைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக மற்றும் மீறல்கள் தொடர்பில் பரிகாரம் வழங்குவதற்காக நியாயமானதும் பாரபட்சமற்றதுமான நீதிமன்றங்களுக்கான பிரவேசம் பாதுகாப்புச் சட்டகத்தின் அடித்தளமாக அமைகிறது (ஐ.சி.சி.பி.ஆர்., உறுப்புரைகள் 2, 9, 14 மற்றும் 26).

இக்கடப்பாடு அத்தியாயத்தில் மேலும் விரிவாகக் கலந்துரையாடப் பட்டுள்ளது.

232. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களில் ஒரு சில மாத்திரமே புலனாய்வு செய்யப்பட்டு அத்தோடு அப்படி மேற்கொள்ளப்பட்டவையும் சர்வதேச பயனுறு தன்மை மற்றும் சுயாதீனம் பற்றிய கட்டளைகளை நிறைவு செய்யாது என்பதால் இவ்வேற்பாடுகளும் மீறப்பட்டுள்ளதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் நீதி மன்றங்களுக்குச் செல்வது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு அல்லது சட்டத்தினால் நிறுத்தப்பட்டு மற்றும் பழக்கத்தினால் சுருக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் கீழ் தமது உத்தியோக அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அரச ஊழியர்கள் தொடர்பில் எவரும் நீதி மன்றம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை.

இவ்வதிகாரங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தடுத்து வைப்பதற்கான பிரத்தியேகமான நியாயப்படுத்தலை மீளாய்வு செய்வதற்கு நீதி மன்றங்களுக்கு மிகக் குறைந்த அதிகாரமே உள்ளது.

5. யுத்த வலயத்திற்கு வெளியே மனித உமைகள் மீறல்கள்
(அ) காணாமற்போதல் மீதான தடை

233.
 அரச தரப்பொன்றினுள் காணாமல் போதல்களை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தடை செய்கிறது. காணாமல் போதல் ஒருவன் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஒரு மீறல் ஆக உள்ளது (ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை 9)

234.
அரசாங்க முகவர்கள் அரசாங்கத்தின் சார்பில் நடாத்திய காணாமல் போதல்கள் யுத்தத்தின் கடைசிக் கட்டங்களுக்கு முன்பும், அப்போதும் மற்றும் அதற்குப் பின்னரும் இலங்கையில் பரவலாகக் காணப்பட்டதொரு நடவடிக்கை என்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன. அநேக சந்தர்ப்பங்களில் இப்படித் தாக்கமடைந்தோர் சந்தேகிக்கப்பட்ட எல்...ஈ. உறுப்பினர்கள், சக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் அல்லது மனித உரிமைகள் காப்பாளர்களாவர். சிலர் மீட்பித்தெடுக்கும் செயற்பாட்டின் காணாமற் போனார்கள். இத்தகையவர்கள் கடத்தப்படடு வெள்ளை வான்களில் எடுத்துச் செல்லப்பட்டபின் அவர்களைக் காணவேயில்லை என்ற பொதுவானதொரு வழக்கத்தை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் விபரிக்கின்றன.

(81)

(ஆ) கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம்

235.
தகவலை வெளியிடுவதற்கும் அதனைப் பெறுவதற்கும் மற்றும் கருத்தொன்றைக் கொண்டிருக்கவும் கருத்துக்களை வெளியிடுவதற்குமான சுதந்திரத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் பாதுகாக்கிறது (ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை 19).

சட்டத்துக்கிணங்க மற்றும் ஏனையோன் உரிமை அல்லது நற்பெயரை அல்லது தேசியப் பாதுகாப்பை அல்லது பொது அமைதியை, பொதுமக்கள் சுகாதாரத்தை அல்லது நல்லொழுக்கத்தைப் பாதுகாக்க மாத்திரம் இவ்வுரிமைகள் மட்டுப்படுத்தப்படலாம். சம விகித அளவின் பரிசீலனையை எந்த மட்டுப்படுத்தலும் திருப்திப்படுத்த வேண்டும்.

236.
சுயாதீன ஊடகவியலாளர்கள் யுத்தப் பிரதேசத்துக்குச் செல்வதை முழுமையாகத் தடை செய்வது ஏதும் பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கங்களை விஞ்சியதாக இருப்பதால் இவ்வேற்பாட்டினை மீறியதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

2008இல் விதிக்கப்பட்ட ஊடக வழிகாட்டல்கள் யுத்தம் பற்றி அறிக்கை விடுப்பதைக் கடுமையாக மட்டுப்படுத்தியதோடு, ஊடக சுதந்திரத்தையும் பாதித்தது.

அரசாங்கத்தின் கருத்துக்கு மாறான கருத்துக்களை வெளியிட முனைந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பலவிதமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு சிலர் கொல்லப்பட்டோ, காணாமற்போய் அல்லது கடுமையாகத் தாக்கப்பட்டது தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

(உ) தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள்

1. பொதுமக்களைத் தாக்குதலைத் தடுக்கும் பொறியாகப் பாவித்தல்

237.
 ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3: ஆயிரக்கணக்கான பொதுமக்களை, அநேகமாகக் கொலை அச்சுறுத்தலை விடுத்து, யுத்தத்தின் கடைசிக் கட்டங்களின் போது தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இருக்குமாறு கட்டாயப்படுத்தி அப்பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முனைந்தவர்களைச் சுட்டுக் கொலை செய்து இக்கட்டுப்பாட்டை அமல் செய்வதன் மூலம் பணயக் கைதிகளைப் பிடிப்பதைத் தடை செய்யும் பொது உறுப்புரை 3 இனை மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எல்...ஈ. பொதுமக்களை யுத்த வலயத்தில் இருந்து செல்ல அனுமதிக்காதது பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, அத்தகைய யுத்தக் குற்றம் பற்றிய சம்பிரதாய விளக்கம் தேவைப்படுத்துவதற்கேற்ப இராணுவ இலக்குகளைத் தாக்குவதை விட்டும் பாதுகாப்பதற்காக எல்...ஈ.
பொதுமக்களை அங்கு செலுத்தியதற்கான நம்பகமான சாட்சிகள் கிடைக்காததால், அந்நடவடிக்கைகள் சட்டத்தின் பிரகாரம் பொதுமக்களை தாக்குதலைத் தடுப்பதற்கான பொறியாகப் பாவித்ததாகாது என குழு நம்புகிறது. (விதி 97, ஐசிஆர்சி ஆய்வு)

2. எல்...ஈ. கட்டுப்பாட்டிலிருந்து தப்ப முயன்ற பொதுமக்களை கொலை செய்தல்

238.
ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3: குறிப்பாக இராண்டாம் மற்றும் மூன்றாம் யுத்த சூன்ய வலயங்களில், எல்...ஈ. இன் பக்கத்தில் யுத்த முனைகளில் வலுக்கட்டாயமாக பொதுமக்கள் சனத்தொகையைப் பேணும் முயற்சியாக, யுத்த வலயத்தில் இருந்து தப்புவதற்கு முயன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளை உள்ளிட்ட பொதுமக்களை எல்...ஈ. வேண்டுமேன்றே சுட்டுக் கொலை செய்து பொது உறுப்புரை 3 (கொலை) இனை மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

(82)
3. பொதுமக்களுக்கு அருகில் இருந்து இராணுவத் தளபாடங்களைப் பாவித்தல்

239.
சனநெருக்கடியுள்ள பகுதிகளுக்கு அருகில் இராணுவ இலக்குகளை அமைத்தல்: சாத்தியமாயின் சன நெருக்கடியுள்ள பொதுமக்கள் பிரதேசங்களில் இராணுவ இலக்குகளை அமைத்தலை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது. (விதி 2324 ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). மோட்டார் செலுத்திகள், ஏனைய கனமற்ற பீரங்கிகள், இராணுவ வாகனங்கள், மோட்டார் குழிகள், பதுங்கு குழிகள் மற்றும் அகழிகள் ஆகியவற்றை எல்...ஈ. வேண்டுமென்றே பொதுமக்கள் பிரதேசங்களுக்கு அருகில் அமைக்கும் அல்லது பிரயோகிக்கும் போக்கினால் இந்த ஏற்பாட்டினை மீறுவதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆஸ்பத்திரிகள் மற்றும் யுத்த சூன்ய வலயத்தை உள்ளிட்ட இடம்பெயர்ந்தோர் கூடியிருக்கும் இடங்களை இவ்வமைவிடங்கள் உள்ளடக்கின. பிரித்தறிவது மற்றும் சரிசம விகிதம் தொடர்பான விதிகளை மதிப்பதை உறுதிப்படுத்துவதற்காக மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இயைவாக இலங்கை இராணுவம் நடப்பதிலிருந்து அவர்கள் பொறுப்பை இச்சட்ட விரோத நடவடிக்கைகள் நீக்காது.

4. வலுக்கட்டாயமாக குழந்தைகளை ஆட்சேர்த்தல்

240.
குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பது மீதான தடை: குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது.

வயது எல்லை பற்றிய சர்ச்சை இருந்த போதிலும், குறைந்த பட்சம் அது 15 என அரசாங்கங்கள் இணங்கியுள்ளன (விதி 136, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). குறிப்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் 14 வயது சிறுவர்கள் மற்றும் சிறுமியரைக் கூட எல்...ஈ. வலுக்கட்டாயமாக அணிதிரட்டியதன் மூலம் இவ்வேற்பாட்டை மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.

இறுதி யுத்தங்களின் போது மரணிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் போது, இப்படியான வலுக்கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் இளவயதினரை தம் குடும்பங்களில் இருந்து பிரிப்பதும் கொடூரமாக நடாத்துவதான பொது உறுப்புரை 3 இனை மீறுவதாகும்.

5. வலுக்கட்டாய உழைப்பு

241. வலுக்கட்டாய உழைப்பு மீதான தடை: சரி ஈடு செய்யப்படாத அல்லது துஷ்பிரயோகமான வலுக்கட்டாய உழைப்பை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது (விதி 95, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). சில சமயம் ஆபத்தான சூழ்நிலைகளில் மற்றும் அநேகமாக தம் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு அரண்களை அமைப்பதற்காகவும் யுத்த முயற்சிக்கு வேறு பங்களிப்புக்களை வழங்குவதற்காகவும் பல பொது மக்களை எல்...ஈ. வலுக்கட்டாயமாக தேவைப்படுத்தி மீறல் பற்றி நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

யுத்தத்தின் கடைசி கட்டங்கள் போன்ற உயிருக்கு ஆபத்து அல்லது உடம்புக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள நிலைமைகளில் இவ்வழக்கம் கொடூரமாக நடாத்துவதானது பொது உறுப்புரை 3 இனை மீறுவதாகும்.

(83)

6. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொலை செய்தல்

242.
ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3: பொதுமக்களுக்கு எதிராக யுத்த வலயத்துக்குள்ளும் வெளியேயும் பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை எல்...ஈ. மேற்கொண்டுள்ளதான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் பொது உறுப்புரை 3 (கொலை) இனை மீறியதைக் குறிக்கிறது.

2009 பெப்ரவ 09ஆம் திகதி முல்லைத்தீவில் பிரிக்கும் மத்தியொன்றில் அல்லது 2009 மார்ச் 10ஆம் திகதி அமைச்சர் மஹிந்த விஜேசேகர மீதான தாக்குதல் போன்ற பொதுமக்கள் பலரைக் கொன்ற தாக்குதல்கள் உள்ளிட்ட பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் யுத்த வலயத்திற்கு வெளியே எல்...ஈ. மேற்கொண்டது.

மேலே ஆராயப்பட்ட பொதுமக்கள் மீதான வேண்டுமென்றோ அல்லது கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இத்தடையின் தெளிவான மீறல் எனக் குழு கருதுகிறது. தற்கொலைத் தாக்குதல்கள் எல்...ஈ. அதன் காலம் பூராவும் மேற்கொண்டதொரு பொதுவான நடவடிக்கையாகும் என்பதோடு தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிய அச்சம் அரசாங்கத்தின் மீறல்களுக்கான பங்களிப்பை அப்படிச் செய்யவில்லை மற்றும் அதனை நியாயப்படுத்த முடியாது வழங்கியிருக்கலாம்.

243.
இறுதியாக, நாடு சாராத பாத்திரங்களின் மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் தொடர்பான குழுவின் கருத்தின் அடிப்படையில், (மேலே அ 2 இனைப் பார்க்கவும்) சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் என அது குறிப்பிட்டவற்றை விஞ்சிய மனித உரிமைகள் மீறல்களை குழு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

தம் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அப்பால், நாடு சாராத பாத்திரங்களுக்கு மனித உரிமைகள் பற்றிய கடப்பாடுகள் உண்டா என்பதைச் சூழவுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக யுத்த வலயத்துக்கு வெளியே எல்...ஈ. இன் துஷ்பிரயோகங்களை குழு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

(ஊ) சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றத்திற்கான தனிநபர் பொறுப்பு

244.
மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட பல சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் தனி நபர் பொறுப்பினைக் கொண்டுள்ளன. ஆயுதந் தரித்த மோதலில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சாராரினதும் குறிப்பிட்டதொரு தனிநபரின் பொறுப்புப் பற்றிக் கவனம் செலுத்துவது குழுவின் ஆணையல்ல. கீழே உள்ள தீர்மானங்கள், நம்பகமான குற்றச்சாட்டுக்கள், நிரூபிக்கப்படின், சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக இருக்குமா என்பதைக் குறிப்பிடுவதற்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றச் செயலுக்குப் பொறுப்பான நபர்களை இனங்காண்பதற்காக மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அவர்களது மனோநிலையை மதிப்பீடு செய்வதற்கு மேலும் புலனாய்வு தேவைப்படும்.

(84)

245.
இலங்கை தரப்பினரான உடன்படிக்கைகளில் விளக்கப்பட்ட குற்றங்கள் அல்லது மரபுவழக்கான சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் ஆகியவற்றுக்கு குழு அதன் கவனத்தை மட்டுப்படுத்தி, நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குற்றம் ஒன்று நடந்ததைக் குறிக்கிறதா என்ற பகுப்பாய்வில் கவனம் செலுத்துகிறது.

முன்பு போல், மிகவும் பாரதூரமான குற்றங்களை மாத்திரமே குழு கலந்துரையாடுகிறது.

பின்னால் இவ்வறிக்கையில், இலங்கை மீது அவை சுமத்தும் கடமைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட செயல்களின் பின்விளைவுகளை மற்றும் ஏனைய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான பங்கினையும் அது கவனத்துக்கெடுத்துக் கொள்கிறது.

1. போர்க் குற்றங்கள்

246.
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் சில ஆனால் எல்லாவற்றையும் உள்ளடக்காத மீறல்களுக்கு தனிநபர் குற்றப் பொறுப்புக்கான ஏற்பாட்டினைச் சர்வதேச சட்டம் வழங்குகிறது. உள்நாட்டு ஆயுதந் தரித்த மோதல்களின் போதான அத்தகைய மீறல்களை ஜெனீவா உடன்படிக்கைகள் வரிசைப்படுத்தவோ அல்லது விளக்கம் அளிக்கவோ இல்லை என்ற போதிலும், ஏனைய அதிகாரபூர்வமான சர்வதேச சட்ட மூலங்கள் இக்குற்றங்கள் பற்றி விளக்கியுள்ளதோடு அவற்றின் குற்றத் தன்மை இப்போது சந்தேகத்திடமற்றதாகவுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம், குறிப்பாக உறுப்புரைகள் 8(2)(இ) மற்றும் 3 இது தொடர்பில் கவனிக்கத்தக்கதாகும்.

அச்சட்டத்துக்கு இலங்கை ஒரு தரப்பினராக இல்லாத போதிலும், சர்வதேசம் சாராத யுத்தங்களின் போர்க் குற்றங்களின் பட்டியல் மற்றும் விளக்கங்கள் மரபுவழக்கான சர்வதேச சட்டத்தினை துல்லியமாகப் பிரதிபலிக்காவிட்டாலும் பொதுவாக அதனை எடுத்துக் காட்டுக்கள் வாயிலாக தெளிவாக்குவதாகவுள்ளது.

ஐ.சி.ஆர்.சி.இன் மரபுவழக்கமான சட்டத்தின் விரிவான ஆய்வின் மீதும் குழு சார்ந்திருக்கிறது.

247.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் செயற்படும் நபர்கள் பின்வரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் மீறல்கள் எடுத்தியம்புவதாக குழு நம்புகிறது.

(அ) குறிப்பாக சகல விதமான கொலைகள், உருக்குலைத்தல், கற்பழித்தலை உள்ளிட்ட கொடூரமாக நடாத்தல் மற்றும் சித்திரவதை, சொந்த கௌரவம் மீதான அட்டூழியங்கள், குறிப்பாக இழிவுபடுத்தும் மற்றும் பண்பிழந்த விதத்தில் நடாத்துதல், காயமடைமந்தோரையும் நோயாளிகளையும் சேகரித்துப் பராமரிக்கத் தவறியமை ஆகியவற்றை உள்ளிட்ட பொது உறுப்புரை 3 இன் பாரிய மீறல்கள் (ஆ) வேண்டுமென்றே பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் (இ) கண்மூடித்தனமான அல்லது ஒவ்வாத தன்மையுடைய பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் (ஈ) மனிதாபிமான வாகனத்தொடர்கள் மற்றும் செஞ்சிலுவை குறித்துரைத்த வசதிகள் ஆகியவற்றை உள்ளிட்ட மருத்துவ மற்றும் மனிதாபிமானத் தலங்கள் மீதான தாக்குதல்கள் (உ) மக்களை பட்டினியில் வைத்தல் மற்றும் மனிதாபிமான நிவாரணத்தை மறுத்தல் மற்றும் (ஊ) வலுக்கட்டாயமாக காணாமல்போதல்கள். (85)

248.
எல்...ஈ.இன் சார்பில் செயற்படும் நபர்கள் பின்வரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் மீறல்கள் எடுத்தியம்புவதாக குழு நம்புகிறது: (அ) உயிருக்கும் உடலுக்குமான வன்முறைகள் உள்ளிட்ட குறிப்பாக சகல விதமான கொலைகள், உருக்குலைத்தல், கொடூரமாக நடாத்தல் (கட்டாயப் பணி உட்பட) மற்றும் சித்திரவதை அத்துடன் பணயக் கைதிகளைப் பிடித்தல் போன்ற பொது உறுப்புரை 3 இன் பாரிய மீறல்கள், மற்றும் (ஆ) வலுக்கட்டாயமாக குழந்தைகள் ஆட்சேர்த்தல்.

2. மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள்

249.
பொதுமக்கள் மீது பரவலான அல்லது திட்டமிடப்பட்ட விதத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதலின் அமைப்பைக் கொண்ட சில துஷ்பிரயோகங்கள் சர்வதேசக் குற்றம் ஆகலாம் எனவும் சர்வதேச சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஐசிவை, ருவண்டா பற்றிய சர்வதேச குற்றவியல் குழு மற்றும் ஐ.சி.சி. சட்டங்கள் உள்ளிட்ட பல சர்வதேச உடன்படிக்கைப் பத்திரங்கள் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை பொருள் வரையறை செய்துள்ளன. தேவைப்படும் அடிப்படைக்கூறு நிறைவேற்றப்பட்டிருப்பின், ஒரு ஆயுதந் தத்த மோதலுடன் தொடர்பு இருந்தாலும் இல்லாவிடினும் அவை குற்றச் செயல்களாகும்.

250.
பொது மக்களுக்கு எதிரான பரவலான அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்று இருப்பதானது மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்கான பிரவேசமாகும்.

பொதுமக்கள் என்ற அர்த்தம் தொடர்பில், இராணுவம் சம்பந்தப்பட்டதை அல்லது போராளிகளை பொதுமக்களிடையே உட்புகுத்துவது பொதுமக்கள் என்ற நிலைமையை மாற்றாது. தாக்குதலை மேற்கொள்பவர் அது பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதை ஐ.சி.சி. சட்டம் தேவைப்படுத்துகிறது. ஆயினும், இந்த மனோநிலை தாக்குதலின் சகல விபரங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்பதை அவசியப்படுத்தவில்லை.

251.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களிலும் அதற்கு முந்தியும் இருக்கலாம், வன்னிப் பொது மக்கள் மீது பரவலான அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பெரும் அளவிலான இடம்பெயர்ந்தோர் மீதான பரவலான செல் தாக்குதல், யுத்தத்தைத் தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள், உணவு மற்றும் மருந்து வகைகளைத் தடுத்தல், பாரிய அளவிலான சிறைப்பிடித்தல், மற்றும் பாரபட்ச அடிப்படையிலானவற்றை உள்ளிட்ட ஏனைய வன்முறைகள் ஆகியவற்றை இத்தாக்குதல் உள்ளடக்கியது. மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகவுள்ள குறிப்பிட்ட செயல்கள் தொடர்பாக, நம்பகமான குற்றச்சாட்டுக்களும் வன்முறைகளும் மனித இனத்துக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட பின்வரும் குற்றங்களைக் குறிப்பதாகவுள்ளன: (86)

(அ) கொலை: "குற்றம் சுமத்தப்பட்டவன் செயல்கள் அல்லது புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவன் மரணம் கொலையின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டாதகவுள்ளதோடு, அவ்விடத்தில் குற்றவாளி நடந்து கொண்ட விதம் பாதிக்கப்பட்டவன் மரணத்துக்குக் கணிசமான காரணமாயிருந்தது' என ஐசிவை குறிப்பிடுகிறது.

கொலைக்கான அதற்குத் தேவைப்படும் மனோ நிலை மனித இனத்துக்கு எதிரான குற்றமாகக் கொள்ளப்படுவதற்கு திட்டமிடுவதற்கு மாத்திரம் மட்டுப்பட்டதாயில்லை என்பதோடு, மனித உயிரைத் துச்சமாக மதிப்பதை உள்ளடக்குகிறது. இலங்கை இராணுவம் பரவலான செல் தாக்குதல் மூலம் பொது மக்களைக் கொலை செய்தது மனித இனத்துக்கு எதிரான குற்றமான கொலை என்பதை நம்பகமான குற்றச்சாடடுக்கள் ஆதக்கின்றன.

(ஆ) நிர்மூலமாக்குதல். ஐசிசி இன் சட்டத்தின் கீழ், "சனத்தொகையின் ஒரு பகுதியின் அழிவை ஏற்படுத்துவதற்காக ஏனையவற்றுள் உணவு மற்றும் மருந்து வகைகளுக்கான பிரவேசத்தைத் தடுத்து வேண்டுமென்றே வாழ்க்கை நிலைமைகளை ஏற்படுத்தல்' இனை நிர்மூலமாக்குதல் உள்ளடக்குகிறது (உறுப்புரை 7(2)(ஆ).

நிர்மூலமாக்கப்படுவதற்கான சனத்தொகையின் பகுதி "கணிசமான எண்ணிக்கையாக' இருத்தல் வேண்டும்.

யுத்த சூன்ய வலயத்தில் இறுதி மாதங்களில் பொதுமக்கள் மீது விதிக்கப்பட்ட நிலைமைகள் பொதுமக்களின் கணிசமானதொரு பகுதியை அழிப்பதை நோக்காகக் கொண்டிருந்தன என்பதால், நிர்லமாக்கும் மனித இனத்துக்கு எதிரான குற்றம் பற்றிய தீர்ப்புக்கு நம்பகமான குற்றச்சாட்டுக்கள ஆதாரமாக இருக்கின்றன.

(இ) சிறை பிடித்தல்:
பொதுமக்கள் நியாயமான காரணங்கள் இன்றி, விசாரணையின்றி அல்லது சட்ட அடிப்படையின்றி தடுத்து வைக்கப்படுவது சிறைபிடித்தலை மனித இனத்துக்கு எதிரானதொரு குற்றமாக்குகிறது.
நியாயமான காரணங்கள் இன்றி ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோரை மெனிக் பாமில் தடுத்து வைப்பபது மூலம் சிறை பிடிப்பது தொடர்பான மனித இனத்துக்கு எதிரான குற்றத்தின் தீர்ப்புக்கு நம்பகமான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமாக உள்ளன.

(ஈ) துன்புறுத்தல்: தனி நபர் ஒருவரின் அடிப்படை அல்லது அடிப்படை உரிமையினை அனுபவிப்பதை மீறுவதை நோக்காகக் கொண்டு சாதி, மத அல்லது அரசியல் மீதான பாரபட்சமான செயல் அல்லது புறக்கணிப்பு துன்புறுத்தலாகும் என்பதோடு, மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகக் கணிக்கப்படும் ஏனைய செயல்களின் அதே பாரதூரத்தன்மையை அவை கொண்டுள்ளன.

இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய செயல்கள் போன்று எல்...ஈ.
இன் ஆதரவாளர்கள் என அரசாங்கம் நினைக்கும் வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான சாதி அல்லது அரசியல் காரணங்களின் அடிப்படையிலான செயல்கள் மனித இனத்துக்கு எதிரான துன்புறுத்தலாகும் என்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் ஆதக்கின்றன.

(உ) காணமற்போதல்:
" அரசாங்கம் ஒன்றின் அல்லது அரசியல் அமைப்பொன்றின் அல்லது அதன் அதிகாரத்துடன், ஆதரவுடன் அதன் உடன்பாட்டுடன் நபர்களை கைது செய்தல், தடுத்து வைத்தல் அல்லது கடத்தல், தொடர்ந்து சுதந்திரம் மறுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதை நிராகரித்தல் அல்லது அவர்களை நீண்டதொரு காலத்துக்கு சட்டத்தின் பாதுகாப்பில் இருந்து அகற்றுவதற்கான நோக்குடன் அவர்களுக்கு நேர்ந்த கதி அல்லது அவர்கள் பற்றிய தகவலை வழங்க மறுத்தல்' இனை காணாமற்போதலுக்கு ஐசிசி சட்டம் பொருள் வரையறை செய்கிறது.

(உறுப்புரை 7(2)(டி). யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதும் அதன் பின்னரும் அரசாங்கத்தின் அணுகுறையினை விமர்சிக்கும் அல்லது எல்...ஈ. க்கு ஆதரவான பலர் காணாமற் போனதைக் கொண்டு மனித இனத்துக்கு எதிரான காணாமற்போதல் குற்றம் பற்றிய கண்டுபிடிப்புக்களுக்கு நம்பகமான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமாகவுள்ளன.

புலிகளும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை புந்துள்ளனர்: (பாகம்) -14

(87)

252.
எல்.ரீ.ரீ.ஈ. இனைப் பொறுத்த வரை, மேற்படி நம்பகமான குற்றச்சாட்டுகளும் மீறல்களும், யுத்தத்தின் கடைசிக் கட்டங்களின் போது பொதுமக்களை அவர்கள் விருப்பத்துக்கு எதிராகத் தடுத்து வைத்தல் மற்றும் தப்பிச் செல்ல முயன்றவர்கள் சிலரைச் சுட்டுக் கொலை செய்வது மூலம் வன்னியில் பொது மக்கள் மீது பரவலான அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதலைக் குறிக்கின்றன. மனித இனத்துக்கு எதிரான குற்றமாக அமையும் குறிப்பான நடவடிக்கைள் தொடர்பாக, யுத்தத்தின் போது தப்பிகயோட முயற்சித்தவர்களைக் கொலை செய்வது மற்றும் பொதுமக்களுக்கு எதிராக தற்கொலைக் குண்டுதாரிகளைப் பிரயோகிப்பதை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி விளக்கத்தின் படி, எல்...ஈ. மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்திருப்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பதாக குழு தீர்மானித்துள்ளது.

3.தனிநபர் பொறுப்பின் நோக்கெல்லை

253.
அத்தகைய செயல்களைப் புரியும் தனி நபர்கள் மற்றும் இராணுவக் கட்டளைத் தளபதிகள் மற்றும் சிவிலியன் உயர் அதிகாகள் ஆகிய இரு சாராரையும் குற்றத்துக்கான பொறுப்புதாரிகள் என சர்வதேச சட்டம் இனங்காண்கிறது.

அத்தகைய செயல்களைப் புரியும் தனி நபர்களைப் பொறுத்த வரை, குற்றத்தைப் புரிவது (டி) குற்றச் செயல்களை நேரடியாகச் செய்தல், (டிடி) நேரடியாக ஈடுபடுபவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவது, (டிடிடி) குற்றச் செயலைத் திட்டமிடல் அல்லது அதனைத் தூண்டுதல், (டிதி) குற்றச் செயலைப் புரிய கட்டளையிடுதல் மற்றும் (தி) அவற்றைப் புரிவதற்காக இணைந்த அல்லது கூட்டான முயற்சி அல்லது சதி ஆகியவற்றை மேவுகிறது என சட்டங்களும் சர்வதேச சட்ட ஆய்வுத்துறை மற்றும் சட்ட மன்றங்கள் இனங்கண்டுள்ளன.

254.
இராணுவ கட்டளைத் தளபதிகள் மற்றும் சிவிலியன் மேற்பார் வையாளர்களைப் பொறுத்த மட்டில், பின்வரும் விடயங்களில் குற்றத்துக்கான பொறுப்பையும் சர்வதேச சட்டம் விதிக்கிறது (டி) ஈடுபட்ட குற்றங்கள் அல்லது ஈடுபடவுள்ள குற்றங்கள் பற்றிய நிஜமான அல்லது ஆக்கபூர்வமான அறிவினைக் கொண்ட உயர் அல்லது கீழ்த் தரத்திலான தொடர்பு, (டிடி) நேரடியாக ஈடுபடுபவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவது (டிடிடி) அது நடைபெறுவதைத் தடுக்க, அடக்க அல்லது தண்டனை வழங்க தேவையான மற்றும் நியாயமான நடவடிக்கைகளை எடுக்க கட்டளைத் தளபதி அல்லது மேற்பார்வையாளர் தவறுதல்.

255.
இலங்கை இராணுவக் கட்டளைத் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அத்துடன் இராணுவ மற்றும் சிவிலியன் எல்...ஈ. தலைவர்கள் இவ்வகையான பொறுப்பின் கீழ் சர்வதேச குற்றங்களுக்கான குற்றப் பொறுப்பை சுமந்துள்ளார்கள் என்பதை குழுவுக்கு வழங்கப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுக்கள தெவிக்கின்றன.

(எ) இலங்கைச் சட்டத்தின் கீழ் தனி நபர் குற்றப் பொறுப்பு

256.
சுயாதீனமான உள்நாட்டு நீதிமன்றங்களே அச்சட்டத்தை விளக்கிப் பொருள் கூறுவதற்கு சிறந்ததொரு நிலையில் உள்ளன என்பதை இனங்காண்பதோடு, இலங்கைச் சட்டத்தின் கீழ் தனி நபர் குற்றப் பொறுப்பு வரிசையை சுருக்கமாகக் குறிப்பிட குழு விரும்புகிறது. இலங்கையின் குற்றச் சட்டக் கோவை தோதான குற்றச் சட்டத்தின் பிரதான மூலமாகும். ஏனைய சட்டங்கள் குற்றச் சட்டக் கோவையின் குறை நிரப்பும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.

(88)

257.
நம்பகமான குற்றச்சாட்டுக்கள், யுத்தத்தில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்போ அல்லது இரு தரப்பினருமோ குற்றச் சட்டக் கோவையின் கீழ் பின்வரும் குற்றச் செயல்களைச் செய்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன: அரசுக்கு எதிராக யுத்தம் புரிதல் (எஸ் 114). யுத்தம் புரிவதை நோக்காகக் கொண்டு ஆட்கள் மற்றும் ஆயுதங்களைத திரட்டல் (எஸ் 116). மனஸ்தாபத்தை தூண்டிவிடுதல் (எஸ் 120). சட்ட விரோதமான கூட்டங்கள் மற்றும் கிளர்ச்சி (எஸ் 138155). கொலை மற்றும் தண்டனைக்குள்ளாக்கத்தக்க மனிதக் கொலை (எஸ்எஸ் 293295).

புறக்கணிப்பால் ஏற்படும் மரணம் (எஸ் 298). புறத்தூண்டுதலற்ற நிலையில் காயம் ஏற்படுத்தல் அல்லது படுகாயமேற்படுத்தல் (எஸ்எஸ்310326).

மனித உயிரை அல்லது ஏனையோர் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குதல் (எஸ்327). மூர்க்கமாக மனித உயிரை அல்லது ஏனையோர் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதன் மூலம் காயமேற்படுத்தல் அல்லது படுகாயமேற்படுத்தல் (எஸ்எஸ்328329).

தவறான முறையில் கட்டுப்படுத்தி வைத்தல் அல்லது அடைத்து வைத்தல் (எஸ்எஸ்330333). விசேட பிவில் தவறான முறையில் அடைத்து வைத்தல் (எஸ்எஸ்334339). பலவந்தமாகக் கடத்திச் செல்லல் (எஸ்எஸ்353359).

கற்பழிப்பு (எஸ்எஸ் 363364).தாக்குதல் மற்றும் சட்டவிரோதமான பலத்தைப் பிரயோகித்தல் (எஸ்எஸ்340349).

வலுக்கட்டாயப் பணி, அடிமைத்தனம் மற்றும் யுத்தத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தல் (எஸ் 358ஏ). பாரிய பாலியல் துஷ்பிரயோகம் (எஸ் 365பி).மற்றும் அச்சுறுத்திப் பணம் பறித்தல் (எஸ் 372378).

இதே போன்று, சித்திரவதை (கெட் சட்டத்தின் எஸ்2) மற்றும் யுத்த செய்தியைப் பரப்புரை செய்தல் மற்றும் தேசிய சாதி அல்லது சமய வெறுப்பை ஆதரித்து வாதாடல் (கெட் சட்டத்தின் எஸ்2) போன்ற குற்றங்களைக் குறிக்கும் நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மேலும், இழிவான நடத்தை (எஸ் 107), கொடூரமான, ஒழுக்கக்கேடான அல்லது இயற்கைக்கு மாறான விதத்திலான செயல் ஒன்றைச் செய்தல் (எஸ் 109(உ), தேவையற்றவாறு தடுத்து வைத்தல் (எஸ்112 (அ), மற்றும் நல்ல கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உண்டாக்கக் கூடிய நடத்தை ஆகியவற்றை உள்ளிட்ட இராணுவச் சட்டத்தின் கீழான இராணுவக் குற்றங்களை இராணுவத்தினர் புரிந்ததைக் குறிக்கும் நம்பகமான குற்றச்சாட்டுக்கள் (எஸ்129(1). இப்பட்டியல் மிகவும் பாரதூரமான குற்றங்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஏ. தீர்மானங்கள்

258.
 இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் கடைசிக் கட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த காலப்பகுதி சில போர்க்குற்றங்களாக மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகக் கூட இருக்கும்படியாக சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றை பரவலாக இலங்கை அரசாங்கம் எல்ஈயும் மீறியதொரு சுபாவத்தைக் கொண்டிருந்தன. யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினரால் சர்வதேச நியதிகள் மூர்க்கத்தனமாகப் புறக்கணிக்கப்பட்டதால் 300,000 க்கும் அதிகமான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டனர். யுத்தம் மற்றும் சமாதானம் நிலவும் ஆகிய இரு காலங்களிலும் தனி மனிதர் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக அமைந்த சர்வதேச சட்டத்தின் முழுச் சட்டகத்தையும் உண்மையிலேயே பாரிய முறையில் தாக்குதலுக்குள்ளாக்கியதை அவர்கள் போர் புரிந்த விதம் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் போது இவ்விதிகளை புறக்கணிக்கலாம் எனும் அளவுக்கு யுத்தத்தின் ஒரு தரப்பு அடைந்த வெற்றி சிலருக்கு தைரியமூட்டுவதாயிருந்தது.

(89)
259.
குழுவின் சட்ட மதிப்பீட்டை சுருக்கமாக வழங்குவதற்கு:
(அ) அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல், ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3 இன் மீறல்கள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வித்தியாசத்தைக் காண்பதற்கான தேவை, பொதுமக்கள் அல்லது பொதுமக்கள் தலங்கள் மீதான தாக்குதலுக்கான தடை, கண்மூடித்தனமான அல்லது அளவுக்கு அதிகமான பலத்தை பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலின் போது பிரயோகித்தல், தாக்குதல்களுக்கு முன்பும் அவற்றின் போதும் முன்னெச்சரிக்கைக்கான தேவைப்படுத்தல், மருத்துவ மற்றும் மனிதாபிமான ஈடுபாட்டாளர்களை மற்றும் தலங்களுக்கான விசேட பாதுகாப்புப் பற்றிய தேவைப்படுத்தல், பொதுமக்களைப் பட்டினிக்கு உள்ளாக்குவதற்கான மற்றும் மனிதாபிமான நிவாரணத்தைத் தடுப்பதற்கான தடை, வலுக்கட்டாயமாகக் காணாமற்போதல் மீதான தடை, சுதந்திரம் இழக்கச் செய்யப்பட்டவர்களின் குறைந்த பட்ச நடத்தலுக்கான தேவைப்படுத்தல்கள் அத்துடன் இறந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான தேவைப்படுத்தல்கள் ஆகியவற்றின் மீறல்களை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. மனித உரிமைச் சட்டங்களைப் பொறுத்த வரை, உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பௌதிகப் பாதுகாப்பு மற்றும் ஆட்களின் முழுமை, விசாரணையின்றித் தடுத்து வைத்தல், உணவு, நீர், உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரத்துக்கான உரிமைகள், கூடுவதற்காகவும் இணைந்து செயற்படுவதற்குமான சுதந்திரம், பெண்களின் உரிமைகள், குடும்பங்களுக்கான விசேட பாதுகாப்பு, குழந்தைகளுக்கான விசேட பாதுகாப்பு, பயனுறு பகாரத்துக்கான உரிமை, காணாமற்போதல்களுக்கு எதிரான தடை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை அரசாங்கம் மீறியுள்ளதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

(ஆ) எல்...ஈ. இனைப் பொறுத்த வரை, ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3, பொதுமக்கள் செறிவாக உள்ள இடங்களில் இராணுவ பொருட்களை அமைப்பதற்கான தடை.
குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஆட்சேர்த்தலுக்கு எதிரான தடை, வலுக்கட்டாய பணிக்கெதிரான தடை ஆகிய மீறல்களை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

(இ) அரசாங்கத்தின் சார்பில் செயற்படும் தனி நபர்கள் பின்வரும் போர்க் குற்றங்களைப் புரிந்ததைக் குறிப்பிடுவதாகவும் நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன: ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3 இன் பாரிய மீறல்கள், வேண்டுமென்றே பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கண்மூடித்தனமான அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகித்து மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், மனிதாபிமான வாகனத் தொடர்கள் மற்றும் செஞ்சிலுவையினால் குறிப்பிடப்பட்ட வசதிகளை உள்ளிட்ட மருத்துவ மற்றும் மனிதாபிமான தலங்கள் மீதான தாக்குதல்கள், பொது மக்களைப் பட்டினிக்கு ஆளாக்குதல் மற்றும் மனிதாபிமான நிவாரணத்தை மறுத்தல் அத்துடன் வலுக்கட்டாயமான காணாமற்போதல்கள்.

(90)

(ஈ) எல்...ஈ. ஆளணியினர் பின்வரும் போர்க்குற்றங்களைப் புரிந்ததை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன: பொது உறுப்புரை 3இன் பாரிய மீறல்கள் மற்றும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஆட்சேர்த்தல்.

(உ) அரசாங்கம் பின்வரும் போர்க்குற்றங்களைப் புரிந்ததை நம்பகமான குற்றச்சாடடுக்கள எடுத்தியம்புகின்றன: கொலை, நிர்மூலமாக்குதல், சிறைபிடித்தல், துன்புறுத்தல் மற்றும் காணாமற்போதல்கள்.

(ஊ) மனித இனத்துக்கு எதிரான குற்றமாகிய கொலையினை எல்...ஈ.
புரிந்ததற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

(எ) போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய இரண்டு விடயத்திலும், தமக்குக் கீழுள்ளவர்களின் நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகளின் பொறுப்புப் பற்றி நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

260.
இந்த நம்பகமான குற்றஞ் சாட்டப்பட்ட மீறல்கள், பாரதூரமான புலனாய்வு மற்றும் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை வற்புறுத்துகின்றன.

தி. பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கையின் அணுகுறை

261.
இவ்வத்தியாயத்தில், அத்தியாயங்கள் டிடிடி மற்றும் டிதி இல் பகுப்பாய்வு செய்யப்பட்ட மீறல்களின் நோக்கெல்லை மற்றும் சுபாவம் ஆகியவற்றைக் கவனத்துக்கெடுத்து, சர்வதேசத் தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையின் அணுகுமுறையை குழு மதிப்பீடு செய்கிறது.

அ. தோதான சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள்

262.
யுத்தத்தில் இருந்து மீண்ட பல நாடுகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதான நிலைச்சக்தியைக் கொண்ட, இலங்கைக்கு ஒத்த மீறல்களை அனுபவித்துள்ளன.

மிகவும் தீவிரமான வேறுபாடுகளைக் கொண்ட நாடுகளின் அவ்வனுபவங்கள், அத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கத் தேவையான சர்வதேசத தரங்களை வெளியிடும் மற்றும் அத்தகைய குற்றங்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கான பலவகையான செயற்படுத்தக் கூடிய அணுகுமுறைகளையும் கொண்ட அத்தரங்களுக்கு ஏற்ற பூலோக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

263.
இலங்கை தரப்பினராக உள்ள, பல மனித உரிமைகள் ஒப்பந்தங்கள், புலனாய்வு தொடர்பான கடப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஐ.சி.சி.பி.ஆர். இன் உறுப்புரை 2(3), மனித உரிமைகள் மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் பயனுறு பகாரத்தை வழங்குவதைத் தேவைப்படுத்துகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் விளக்கத்திற்கேற்ப, உடன்படிக்கையின் சகல மீறல்களையும் நாடுகள் புலனாய்வு செய்வதைத் தேவைப்படுத்துவதோடு, பாரிய மீறல்கள் அல்லது சர்வதேசக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வரை, அதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதையும் தேவைப்படுத்துகிறது.

(91)
மேலும், இலங்கை தரப்பினராகவுள்ள சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவாக நடாத்துதல் அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கையின் 12ஆம் உறுப்புரை, சித்திரவதையாகிய சர்வதேச குற்றத்தைப் புரிந்த சகலரையும் புலனாய்வு செய்து அவர்கள் மீது வழக்குத் தொடர (அல்லது வழக்குத் தொடருவதற்காகத் தேடிவரும் இன்னொரு நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு) நாடுகளைத் தேவைப்படுத்துகிறது.

264.
பிராந்திய மனித உரிமைகள் உடன்படிக்கைகள் மற்றும் ஐ.சி.சி.சி.பி.ஆருக்கு ஐ.நா. மனித உமைகள் குழு அளித்துள்ள விளக்கத்தின் கீழ், பிராந்திய மனித உரிமைகள் நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் சபைக்கு சுயாதீன நிபுணர்கள் அண்மையில் வழங்கிய அறிக்கை புலனாய்வுக்கான பிரயோசனமிக்க சட்டத் தரங்களை முன் வைக்கிறது. சுயாதீனம், பக்கச்சார்பற்றதன்மை, முழுநிறைவான, பயனுறு மற்றும் உடனடியான என்பவற்றை இக்கட்டளைகள் உள்ளடக்குகின்றன.

265.
இவ்வுடன்படிக்கைகளின் கடப்பாடுகளுக்குப் புறம்பாக, புலனாய்வு செய்வதற்கான கடமை வேறு பல சர்வதேச அமைப்புக்கள் மற்றும் தீர்மானங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.

பொதுச் சபையும், புலனாய்வு செய்வதற்கான கடமையை மனித உரிமைகள் சட்டம் உள்ளடக்குவதாக அதன் சர்வதேச மனித உரிமைகள மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் மற்றும் நஷ்டஈடு பெறுவதற்கான உரிமை பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் என்ற அதன் 2006 ஆம் ஆண்டின் 60/147 தீர்மானததில் விளக்கியுள்ளது. பாதுகாப்புச் சபையும் போர்க்குற்றங்களுக்கு மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தலை உள்ளிட்ட மனித கௌரவத்துக்கு எதிரான பாரிய துஷ்பிரயோகங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கீட்டுமையை அப்புறப்படுத்துவதன் முக்கியத்துவத்தை, யுத்தத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய அதன் 1674 (2006) தீர்மானத்தை உள்ளிட்டவாறு பலமுறை வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டு யுத்தம் ஒன்று சம்பந்தப்பட்ட நாட்டு நிலைமைகளில் பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் தண்டனையிலிருந்து விலக்கீட்டுமையை அப்புறப்படுத்தும் விடயத்தில் அதே அணுகுறையை அது கடைப்பிடித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் பங்குபற்றிய வேர்ல்ட் சம்மிட் அவுட்கம் மாநாட்டில் 2005 இல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 60/1 யுத்தம், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இனத்துவச் சுத்திகரிப்பு மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து தமது மக்களைப் பாதுகாப்பதற்கான நாடுகளின் பொறுப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

266.
மேலும், பொறுப்புக்கூறல் பற்றி முக்கியமான தரங்களையும் சட்டகங்களையும் ஐக்கிய நாடுகள் செயற்பாடுகள் தொகுத்துள்ளன. 2005இன் தண்டனையிலிருந்து விலக்கீட்டுமையை எதிர்ப்பதற்கான செயற்பாடு மூலம் மனித உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கோட்பாட்டுத் தொகுதி குறிப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஐ.நா.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டளைப் பிரகாரம் நிபுணர்களால் தொகுக்கப்பட்ட இந்த ஆவணம் சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று அடிப்படை உரிமைகள் உண்டு என்ற உள்ளார்ந்த அறிவினை வழங்குகிறது: உண்மையை அறிவதற்கான உரிமை, நீதியைப் பெறுவதற்கான உரிமை மற்றும் மீண்டும் ஏற்படாது என்ற நிறுவக தியிலான உத்தரவாதத்தை உள்ளிட்ட நஷ்டஈட்டுக்கான உரிமை.

(92)

267.
ஐக்கிய நாடுகளின் உறுப்புக்களின் இந்நடவடிக்கைகளுக்கு அப்பால், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான தண்டனையிலிருந்து விலக்கீடு அளிப்பதை விட்டும் அநேகமான நாடுகள் தவிர்ந்து கொண்டுள்ளன அல்லது முன்னர் வழங்கப்பட்ட விலக்கீடுகளை இரத்து செய்வதற்கு நீதி அல்லது சட்டவாக்க ரீதியிலான நடவடிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளன. சர்வதேச நீதி மன்றங்கள் அத்தகைய குற்றங்களுக்கான மன்னிப்புக்கள் வழங்கமுடியாதவை என அதே போன்று தீர்ப்பு வழங்கியுள்ளன.

இதுவே ஐக்கிய நாடுகளின் கொள்கை நிலையாகவும் உள்ளது. இலங்கை அரசாங்கம் கூட, "மன்னிப்புக்கள் உள்ளார்ந்தவாறு விலக்கீட்டுக் கலாசாரமொன்றை ஊக்குவிக்கிறது என்பது எமது நன்காய்ந்த கருத்தாகும் என்பதோடு எனவே அவை உகந்ததல்ல' எனக் குறிப்பிட்டுள்ளது.

268.
உள்நாட்டு ஆயுதந்தரித்த மோதல் ஒன்றில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் தொடர்பாக, பாரிய மீறல்களை புலனாய்வு செய்து, ஆதாரம் இருப்பின், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை உறுதியாக ஆதரிப்பதற்கான சர்வதேச வழக்கம் அரசாங்கங்கள் மீது சட்டப்படியிலான கடமையொன்றுக்கான நீதித்துறையிலான எடுத்துக்காட்டான முன்னோடி நிகழ்வும் தற்போது உள்ளன. குறிப்பாக, அத்தகைய மீறல்களை சர்வதேச யுத்தங்களில் புலனாய்வு செய்வதற்கான கடமையினை ஏற்று ஆனால் உள்நாட்டு ஆயுதந்தாங்கிய மோதலில் அப்படியில்லை என்ற விளக்கம் தொடர்ந்தும் வழக்கில் இல்லை.

ஐ.சி..வை இன் கூற்றுப்படி, "எந்தவொரு யுத்த நடவடிக்கையிலும் கட்டாயக் குறைந்த பட்சமாக பொதுவாக இனங்காணப்பட்டுள்ள மனிதாபிமானத்தின் அடிப்படைக்கூறின் ஆய்வுகளை மனிதாபிமான சட்டத்தின் கோட்பாடுகளும் விதிகளும் பிரதிபலிக்கின்றன. சம்பந்தப்பட்ட செயல்களின் பாரதூரமான தன்மையையோ அவற்றைத் தடை செய்வதில் சர்வதேச சமூகத்தின் அக்கறையையோ ஒருவரும் சந்தேகிக்க முடியாது.' உள்நாட்டு யுத்தத்தில் பாரிய மீறல்களை புலனாய்வு செய்வதற்கான கடப்பாட்டினை பொதுச் சபையும் ஏகமனதாக தீர்மானம் 60/147 இல் உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்ட விளக்கத்தில் விசேட இடத்தை வகிக்கும் ஐசிஆர்சி, நாடுகளின் பழக்கங்கள் பற்றிய விவான மீளாய்வின் அடிப்படையில், உள்நாட்டு யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களை புலனாய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதை மரபுவழக்கான சர்வதேச சட்டம் அரசாங்கங்கள் மீது கடமையாக்குகிறது எனக் கண்டுள்ளது.

269.
சர்வதேச மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் குறிப்பான பொறித்தொகுதிகளை ஏற்படுத்தும் தற்போதுள்ள அரச வழக்கம் மேலே விளக்கப்பட்ட சட்ட கடப்பாடுகளையும் தரங்களையும் ஊக்குவிப்பதாகவுள்ளது.

பாரிய அளவிலான மீறல்களில் இருந்து மீண்டு நிலைத்தாகவுள்ள சமாதானத்தையும் சிறந்ததொரு எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப முனையும் நாடுகள் கடந்த காலத்துக்குப் புறமுதுகு காட்டாமல் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அத்தகைய வழக்கம் குறிக்கிறது.

மோதலுக்குப் பிந்திய அல்லது மாற்றமடைந்து வரும் நிலைமைகளில், "பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, நீதியை வழங்கி மீளிணக்கப்பாட்டை அடைவதற்காக சமூகத்தின் கடந்த கால பாரிய துஷ்பிரயோகங்கள் பற்றி உடன்பாட்டுக்கு வருவது தொடர்பான முழுமையான செயற்பாடுகளையும் பொறித்தொகுதிகளையும்' அமைப்பதில் நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இச்செயற்பாடுகளும் பொறித்தொகுதிகளும் கூட்டாக இடைக்காலத்திற்குரிய நீதி என அழைக்கப்படுகிறது.

இலங்கை தூதுக்குழு சட்டமா அதிபர் தலைமையில் விளக்கமளித்தது: (பாகம்) - 15

270.
கடந்த கால மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட நடவடிக்கைத் தொகுதியான இடைக்கால நீதி மனவுரு இப்போது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இடைக்கால நீதி தனிப்பட்ட மீறல்களை ஆராய்வதோடு, அவற்றுக்கு அப்பாலும் சென்று உருமாதிரிகளை மற்றும் சிக்கலான அமைப்பு முறையிலான அநீதிகளினால் விளையும் வன்முறையின் கடந்தகாலத் தொடர்பு ஆகியவற்றையும் பகுப்பாய்வு செய்கிறது. மீண்டும், செயலாளர் நாயகம் கூறுவதன் பிரகாரம், " ஒன்றிணைந்த மற்றும் சுயாதீன ரீதியில் மீறல்களின் முழுமையான அமைப்பு பற்றிய நடவடிக்கை எடுக்க முயல்வதனால், மேலும் மோதலைத் தடுத்து சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மீளிணக்கப் பாட்டுக்குமான விசாலமான நோக்கங் களுக்கான பங்களிப்பை இடைக்கால நீதி வழங்கும்.

271.
கடந்த காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிராமல் அல்லது பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்றிராமல் இருப்பது இடைக்கால நீதியின் விவேகமாகும். மாறாக, வன்முறைச் சக்கரத்தை நிறுத்தி, தண்டனை விலக்களிப்பீட்டுக்கு மற்றும் நிராகரிப்புக்கு எதிராகச் செயற்பட்டு கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை ஏற்றுக் கொள்வதை இடைக்கால நீதி நோக்காகக் கொண்டுள்ளது. மோதலுக்கு முன்பிருந்த அல்லது அதற்குப் புறம்பாகவுள்ள காரணிகள் மற்றும் அநீதிகளை அதிக விசாலமாக கவனத்துக்கெடுத்து பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை உள்ளிட்ட ஆனால் மீறல்களின் சுபாவம் மேல் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் மோதலின் அனுபவங்கள் ஆகியவற்றின் மீதும் அது கவனம் செலுத்த நாடுகிறது.

பிரஜைகள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையில் விசுவாசத்தை கட்டியெழுப்பி சட்டத்தின் நல்லாட்சியை பலப்படுத்தி, அதன் மூலம் எதிர்காலத்தில் மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பங்களிப்பை அது வழங்குகிறது. இவ்வாறாக, தென் ஆபிக்காவில் நிகழ்ந்தது போன்று ஆழ்ந்த இனவாத அரசில் இருந்து "ஜனநாயக பெறுமானங்களை, சக நீதியை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட' ஒரு சமூகமாக மாறியது போன்று இடைக்கால நீதி முக்கியமாக எதிர்காலத்தை நோக்கியதாகவுள்ளது.

272.
இலங்கை பொறுப்புக் கூறல் பற்றிய அதன் அணுகுமுறையை கூர்ந்து நோக்கக் கூடியதொரு பிரயோசனமிக்க கண்ணாடி வில்லையாக இடைக்கால நீதி உள்ளது.

உதாரணமாக பெரு நாட்டைப் போன்று அரசாங்கம் கிளாச்சியொன்றை முறியடித்துள்ளதை உள்ளிட்ட ஏதும் மோதலுக்குப் பின்னரான நிலைமைகளுக்கு அது ஏற்புடைத்தாகும். குறிப்பாக, இலங்கை சர்வதேச தரங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் இடைக்கால நீதிக்கான அணுகுறையின் முக்கியமானதொரு அங்கமான உண்மை, நீதி மற்றும் நஷ்டஈடு தொடர்பாக பாதிக்கப்பட்டோன் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முனைய வேண்டும்.

273.
வலுக்கட்டாயமாகக் காணாமல்போதல்கள் மற்றும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான உறவினர்களின் உரிமை ஆகியவை தொடர்பாக உண்மைக்கான உரிமை ஆரம்பத்தில் ஐ.நா.மனித உரிமைகள் குழுவின் மற்றும் அமெக்காவுக்கிடையிலான ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்மானங்களினூடாக தோன்றியதொன்றாகும். குறிப்பாக உண்மை முழுமையாகத் தெரியாத போது, அரசாங்கத்தினால் அல்லது வரலாற்றின் மறு ஆய்வு செய்து திருத்தலினால் அல்லது திட்டமிட்டவாறு தாக்கமுற்றோன் குரல் அடக்கப்படும் போது சம்பவங்கள் பற்றிய சர்ச்சை எழும்போது உண்மைக்கான உரிமையை உறுதிப்படுத்தி அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முக்கியமானதாகும்.

274.
உண்மைக்கான உரிமை முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ள ஒரு வழி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களை அமைப்பதாகும் மீறல்களின் போக்கினை வெளிப்படுத்தி, மோதலைத் தொடரச் செய்யும் அடிப்படையான பிரிவுகளை இனங்கண்டு நிறுவாகப் பொறுப்புக்களை குறிக்க உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களால் முடியும்.

உண்மையின் இவ்வம்சங்களை நிலைநிறுத்துவதற்காக மாத்திரமன்றி, பெண்கள் அல்லது குழந்தைகள் போன்ற குறிப்பிட்ட ஓரங்கட்டுதலை எதிர்நோக்கும் குழுக்களை உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அனுபவங்களைத் தெரிவிப்பதற்குச் சந்தர்ப்பமளிப்பது மூலம் செயற்பாடு மற்றும் அதன் உற்பத்திக்குப் பொதுவாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் அழுத்தம் கொடுக்கும்.

கடந்த பத்து வருடங்களின் 21 இனை உள்ளிட்ட 1974 - 2009 வரையிலான 40 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் பற்றி அண்மையில் வெளியான புத்தகம் ஒன்று கணிப்புத் தெவித்துள்ளது. அவற்றுள் எட்டு அமெரிக்கக் கண்டத்திலும், ஒன்று ஐரோப்பாவிலும், ஏழு ஆப்பிரிக்காவிலும் மற்றும் ஐந்து ஆசியாவிலும் உள்ளன (அவற்றுள் பல அண்மையில் அமைக்கப்பட்டவையாகும்).

275. நீதிக்கான உரிமை பல சர்வதேச உடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பினும், 1993 இல் முன்னாள் யூகொஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் குழு மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்புள்ள 1994ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ருவாண்டாவுக்கான குற்றவியல் குழு ஆகியவற்றைத் தொடர்ந்து நீதிக்கான உரிமையை அமல் படுத்துவது தொடர்பான பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. (இலங்கை இதுவரை தரப்பினராகச் சேராத) 114 நாட்டுத் தரப்பினரை தற்போதுள்ள உள்ளடக்கிய 2002 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோமாபுரிச் சட்டங்கள் இதனை மேலும் வலுப்படுத்தின. மனித இனம் அறிந்திருக்கும் சில மிக மோசமான குற்றங்களைத் தடை செய்யும் சர்வதேச சட்டத் தோற்றத்தின் முக்கியமானதொரு முன்னேற்றமாக ரோமாபுரிச் சட்டம் உள்ளது.

பல நாட்டுத் தரப்பினர் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை உள்நாட்டு நீதி மன்றங்களில் வழக்காடுவதற்கான கடப்பாட்டை ஏற்படுத்தும் தேசிய சட்டவாக்கத்தை அமல் செய்துள்ளன.

அதிகமாக, உள்நாட்டு யுத்தமொன்றின் போது போர்க்குற்றமாகக் கணிக்கப்படக் கூடிய பாய மீறல்களுக்காக ஒரு நாடு தனது பிரஜைகளுக்கு எதிராக உள்நாட்டு நீதிமன்றங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை ஆர்ஜன்டீனா, பங்களாதேஷ், பொஸ்னியா, சிலி, கொலம்பியா, கொங்கோ ஜனநாயக குடியரசு, கௌத்தமாலா, பெரு. சேர்பியா, ருவண்டா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் காணக்கூடியதாகவுள்ளது.

கொசோவோ (1999), டிமோர் லெஸ்தி (2000), சியர்ரா லியோன் (2002), கம்போடியா (2003) மற்றும் பொஸ்னியா (2004) ஆகியவற்றை உள்ளிட்ட ஏனைய நாடுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகத் தேசிய மற்றும் சர்வதேச அமைப்பைக் கொண்ட கலப்பினத் தன்மையுடன் கூடிய நீதிக் குழுக்களை அமைத்துள்ளன.

276.
பாரிய மீறல்களைத் தொடர்ந்து நஷ்டஈட்டுக்கான உரிமை நன்கு இனங் காணப்பட்டுள்ளதோடு, சட்ட மற்றும் நிருவாக ஆகிய இரு வழிகள் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் அது அமல் செய்யப்பட்டுள்ளது. ஆர்ஜன்டீனா, சிலி, தென் ஆபிக்கா, கௌத்தமாலா, பெரு, சியர்ரா லியோன், டிமோர் லெஸ்தி, மொரொக்கோ மற்றும் லைபீ ஆணைக்குழுக்களை உள்ளிட்ட பல உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுக்கள் நஷ்டஈட்டினை பரிந்துரைத் துள்ளன. நஷ்டஈடு மூன்று முக்கிய குறிக்கோள்களை நிறைவு செய்கிறது: (டி) பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை ஏற்றுக் கொள்வது, (டிடி) பாதிக்கப்பட்டோர் அனுபவித்த இழப்பு மற்றும் துன்பங்களை இனங்காணல், (டிடிடி) அவர்கள் அனுபவித்த தீமையை ஈடு செய்வது முடியாத காயம் என்றிருந்த போதிலும், பாதிப்படைந்தோருக்கு சின்னமாக அல்லது பொருளாக நிஜ நன்மைகளை வழங்குதல்.

277. நஷ்டஈடுகள் தனிநபர்களுக்கோ சமூகங்களுக்கோ வழங்கப்படலாம் என்பதோடு, உரிமைகளை மீட்டல், ரொக்கத்திலான கொடுப்பனவு, மருத்துவ மற்றும் மனோதத்துவ சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு, கல்விக்கான உதவி, சொத்துக்களை திரும்பக் கையளித்தல் அல்லது அவற்றுக்கான இழப்பீட்டினை வழங்கல் அத்தோடு உத்தியோகபூர்வமான பகிரங்க மன்னிப்புக்கோரல், நூதன சாலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தல் மற்றும் உத்தியோக ஞாபகார்த்த தினங்களை ஏற்படுத்தல் போன்ற பலவிதமான அமைப்புக்களில் இழப்பீட்டினை வழங்கலாம். பொது அபிவிருத்தி முயற்சிகளில் இருந்து மாறுபட்டதாகக் கூட்டுச் சுபாவத்தினைக் கொண்ட இழப்பீடு இருப்பதோடு அது மீறப்பட்ட உரிமைகள் பற்றியதொரு உத்தியோகபூர்வமான இனங்காணலுடன் சேர்ந்திருக்க வேண்டும். இறுதியாக மற்றும் முக்கியமாக, இழப்பீட்டின் பொது அம்சங்கள் பற்றி அதிகரித்து வரும் உணர்வு உள்ளதோடு, பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்பில் குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் அமலாக்கம் ஆகியவற்றின் விளைவுகளை ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது.

ஆ, பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கையின் நிலைப்பாடு

278.
பொறுப்புக்கூறல் தொடர்பில், "ஒரே அளவு எல்லோருக்கும் பொருந்தும் என்ற வாய்ப்பாட்டினை மற்றும் வெளிநாட்டு மாதிரிகளின் இறக்குமதியை' ஐக்கிய நாடுகள் ஆதப்பதில்லை என்பதோடு, "தேசிய மதிப்பீடுகள், தேசிய பங்கேற்கல், மற்றும் தேசிய தேவைகள் மற்றும் அபிலாஷைகள்' என்பதில் அதன் ஆதரவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆயினும், இது சர்வதேச தரங்களின் முக்கியத்துவத்தை குறைக்காது என்பதோடு அத்தரங்கள் ஏதும் தேசிய மாதிரிக்குள் ஒன்றிணைக்கப்படல் வேண்டும். இவ்வாறாக, பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கையின் அணுகுமுறை, யுத்தத்தினால் பாதிப்படைந்தோர் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அது எவ்வாறு பயனுறு விதத்தில் பங்காற்றுகிறது என்பதை நன்கு புந்து கொள்வதற்காக அதனை சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்களுக்கெதிரே மதிப்பீடு செய்ய வேண்டும்.

279.
குழுவின் கேள்விகளுக்கான எழுத்து மூலமான பதில்கள் மற்றும் 2011 பெப்ரவ 22ஆம் திகதி நியூயோர்க்கில் குழுவின் முன்னிலையில் ஐக்கிய நாடுகளுக்கும் சட்ட மா அதிபர் மோஹான் பீஸ் இன் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவொன்றுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது பொறுப்புக்கூறலுக்கான அதன் அணுகுறையை உருவாக்கும் சித்தாந்தம் பற்றியதொரு விளக்கத்தை இலங்கை அரசாங்கம் வழங்கியது. (1) சில எல்...ஈ. உறுப்பினர்களுக்கு எதிரான சட்ட ரீதியிலான நடவடிக்கை, மற்றும் (2) இலங்கை மக்களையும் அதன் நிலப்பரப்பையும் எல்...ஈ. இடம் இருந்து பாதுகாப்பதற்கான அவர்களது அரசியல் யாப்பு கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிய ஒன்றன் பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களின் அரசியல் பொறுப்பு என்றவாறாக இரு முனை கொண்டதாகவுள்ள பொறுப்புக்கூறல் மனவுரு ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலைப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நாடுவதாக.சட்ட மா அதிபர் விளக்கிக் கூறினார். மேலும், அதன் எழுத்து வடிவிலான பதிலில், இம்மேலதிகக் கருத்துக்களையும் அரசாங்கம் முன் வைத்தது: கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் முழுச் செயற்பாடு நீதியை மீண்டும் செயற்பாட்டுக்குக் கொண்டுவரும் சித்தாந்தத்தின் மீது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை சரியாக மதிப்பீடு செய்வது முக்கியமாகும். சிவில் அல்லது குற்றப் பொறுப்பின் முக்கியத்துவம் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு சித்தாந்தமாகும் அது. பெரும்பான்மைச் சமூகம் உள்ளிட்ட சகல சமூகங்களும் கடந்த காலத்தில் நடந்தவற்றை வரலாற்றுக்கு ஒப்படைப்பதை இந்த பெருமுயற்சி முழுமையாகத் தேவைப்படுத்துகிறது.

ஜனநாயகச் செயற்பாடொன்றினுள் சட்டத்தின் நல்லாட்சியின் ஆதிக்கத்தின் கீழ் தவறிழைத்தவர் தவறுக்கான வருத்தத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது அதனைத் தொடர வேண்டும்.

280.
இவ்வணுகுறையின் மையமாக அமைந்துள்ள கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு, தனி நபர் பொறுப்புக் கூறலை குவிமையமாகக் கொள்ளாது அதன் பிரஜைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு அரசுக்கு உண்டு என்ற அரசியல் பொறுப்பு பற்றிய விசாலமான கருத்து மீது கவனம் செலுத்துகிறது. எல்.எல்.ஆர்.சி. இன் இவ்வம்சத்துக்கு அது போன்றதொரு ஆணையைக் கொண்ட ஐக்கிய இராஜதானியின் ஈராக் விசாரணை (சில்கொட் விசாரணை) உணர்வினை வழங்கியதாக சட்ட மா அதிபர் விளக்கினார்.

281.
யுத்தத்தை மேற்கொள்வதில், குறிப்பாக இறுதிக் கட்டங்களின் போது, அது எவ்வாறு நடந்து கொண்டது என்பதற்கான பொறுப்புக்கூறல் பற்றிய எந்தவொரு கருத்தும் அரசாங்கத்தின் இரு முனை மனவுருவில் காணப்படவில்லை.

எல்.எல்.ஆர்.சி. இன் செயற்பாடு மேலும் புலனாய்வு செய்யப்பட வேண்டியுள்ள "குறிப்பிட்டதொரு பொறுப்பு' பற்றிய விடயம் ஒன்றுக்கு வழிவகுத்தால் அது சட்டமா அதிபன் அலுவலகத்திலுள்ள "வேறானதொரு அலகு' க்கு தீர்மானத்துக்கு விடப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் தெவித்துள்ளது. ஆயினும், இது வரை எல்.எல்.ஆர்.சி.க்கு அளிக்கப்பட்ட சாட்சியங்கள் அத்தகைய பொறுப்புக்குக் காரணம் கற்பிக்கக் கூடிய தனி நபர் களையோ குழுக்களையோ இனங்காணவில்லை என அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. "இராணுவ வீரர்களினால் வரம்பு கடந்த செயல்கள் நேரடியும் என்பது பற்றி விழிப்பாகவும் உணர்வுடனும்' அது உள்ளது எனவும் காவல்துறை மற்றும் இராணுவ வீரர்களுக்கு எதிரான சில வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் குறிப்பிட் டுள்ளது. ஆயினும் இந்த சூத்திரம் பாரிய அளவிலான அல்லது திட்டமிடப்பட்ட மீறல்கள் நேர்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதைக் கவனமாகப் பார்ப்பதாகத் தெரியவில்லை. அது அப்படியாயிருந்தால், மீறல்கள் கொள்கை அடிப்படையிலானவை, மிக உயர்ந்த அரசியல் மற்றும் இராணுவ மட்டத்தில் கட்டளையிடப்பட்ட அல்லது பொறுத்துக் கொள்ளப்பட்டவை என ஊகிக்கப்படக் கூடியதாகவுள்ளது.

282.
தென் ஆப்பிரிக்காவின் உண்மை அறியும் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு அத்துடன் வேறு இடங்களில் உள்ள ஆணைக்குழுக்களின் முன்மாதிரிகளின் அடிப்படையில் அதன் அணுகுறையின் மீட்கும் பகுதி அமைந்துள்ளதாக விளக்கும் அரசாங்கம், சுமார் 1,500 "கடினமான எல்...ஈ.' இன ருக்கு எதிராக மாத்திரம் குற்றம் சுமத்துவதற்கும் எஞ்சியுள்ளோருக்கு "புனர்வாழ்வு' அளிப்பதற்கான தன் விருப்பத்தையும் குறிப்பிடுகிறது. சகல விடயங்களிலும், "சிறைத்தண்டனை அற்ற தாராளமானதொரு பொறியமைப்புடன் மிகக் குறைந்த தடைகளையுடைய தண்டனை விதிக்கும் கொள்கைகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன'.

இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அலுவல கத்தின் சிரேஷ்ட அலுவலர் ஒருவன் தலைமையிலான நான்கு உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று சந்தேகிக்கப்படும் எல்...ஈ. உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை மீளாய்வு செய்து வருவதாக சட்ட மா அதிபர் தெவித்தார்.

283. இழப்பீடு வழங்குவதற்கான அதிகாரத்தையும் எல்.எல்.ஆர்.சி.
கொண்டிருந்த போதிலும் அது எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பது தெளிவற்றதாகவுள்ளது.

"வெற்றியாளர்களோ தோல்வியடைந்தவர்களோ இல்லை', யுத்தத்தினால் முழுத் தேசம் துன்பத்துக்குள்ளாகியது மற்றும் "எல்லோரும் இழந்தனரே அன்றி வெற்றி பெற்றோர் எவருமிலர்' என்பதாக அரசாங்கம் அடிக்கடி அழுத்தமாகக் கூறிவந்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சகலதுமடங்கிய அபிவிருத்தியினால் பாதிக்கப்பட்ட அனைவரும் நன்மையடைவதோடு, வடக்கு (மற்றும் கிழக்கின்) முழுமையான மீள்கட்டுமானம் சமாதானத்தை மீள ஏற்படுத்துவதற்கான பங்களிப்பை வழங்கும் என அது குறிப்பிட்டுள்ளது. தான் அதன் காரியங் களைச் செய்யும் போது, அது அதன் மக்களின் "இதயங்களையும் மனங்களையும்' தொடும் விதத்தில் "வருத்தத்தைத் தெரிவிப் பதாக' இலங்கை அரசாங்கம் தெவித் துள்ளது. ஏனைய நடவடிக்கைகளுக் கிடையே, "ஓரளவுக்கு நாட்டின் ஏனைய பாகங்களின் தேவைகளைத் தியாகம் செய்து' வடக்கிலும் கிழக்கிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீடமைப்புத் திட்டங்களுக்காக அது பணத்தைச் செலவு செய்து முதலீடு செய்கிறது.

284.
பழிக்குப் பழி வாங்குவதை விடுத்து மீளமைத்தல் அணுகுமுறையைத் தேர்ந் தெடுத்துள்ளது என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அப்படிச் செய்யும் போது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களை அமைத்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் அனுபவத்தில் இருந்து நன்மையடைந்துள்ளதாகவும் ஆனால் அது வழக்காடலைத் தொடரவில்லை என்ற விளக்கம் பற்றியும் குறிப்பிட குழு கடமைப்பட்டுள்ளது. இவ்வனுபவங்கள் மீது சார்ந்திருப்பது வேறொரு மாதிரிக்கு வழிகோலும். தென் ஆப்பிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவக மற்றும் தனியார் பொறுப்புக்கள் பற்றிய முழுமையானதொரு புலனாய்வினை மேற்கொண்டு பல வருடங்களாக இன ஒதுக்கீடு தொடர்வதை அனுமதித்த அடிப்படைக் காரண காரியங்களை எடுத்துக் காட்டியது. தமது நடவடிக்கைகள் பற்றிய முழுத் தகவலையும் ஈடுபட்டவர்கள் வழங்குவதற்காக முன்வந்து அவர்கள் புரிந்த குற்றங்கள் அரசியலினால் உந்தப்பட்டவையாக விருந்தால் தனித்தனியாக மன்னிப்புக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அது தேவைப்படுத்தியது. மேலும், அச்செயற்பாடு உள்ளார்ந்ததாகவே பாதிக்கப் பட்டவர்களை மையமாகக் கொண்டு மீறல்கள் பற்றி பாதிக்கப்பட்டோர் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கான மற்றும் நஷ்டஈட்டைக் கோருவதற்கான வசதியையும் ஆதரவையும் வழங்குவதாகவும் இருந்தது. கீழே கலந் துரையாடப்படுவதற்கேற்ப இலங்கையின் எல்.எல்.ஆர்.சி. தொடர்பில் விடயம் அப்படியாக இல்லை. மேலும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் உள்ள பல நாடுகளில், அவை குற்ற வழக்குத் தாக்கல் செய்வதை தடுக்கவில்லை; மாறாக ஆர்ஜன்டீனா, சிலி, கௌத்தமாலா, பெரு, சியர்ரா லியோன், மோர் லெஸ்தி மற்றும் ஏனையவற்றை உள்ளிட்ட நாடுகளில் அவற்றைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

285.
ஆரம்ப விடயமாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரச சார்பில் பாரிய குற்றங்களைப் புரிந்தவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாத நடைமுறைத் தீர்மானம் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளின் தெளிவானதொரு மீறலாகும் என்பதோடு அது அனுமதிக்கப்படக் கூடிய இடைக்கால நீதிக்கான ஒரு தெரிவல்ல. சர்வதேச சட்டத்தின் கீழ் தண்டனைகளின் வடிவம் பற்றி சில வளைந்து கொடுக்கும் தன்மை இருந்த போதிலும், புலனாய்வுகள் மற்றும் சட்ட நடவடிக்கை தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு உட்பட்டதல்ல என்பதோடு எல்.எல்.ஆர்.சி.
போன்றதொரு ஆணைக்குழுவினை அமைப்பது இவ்விடயத்தில் அரசாங்கத்தின் கடமையை அதனூடாகவே நிறைவு செய்வதாக இல்லை.

286. "மீளமைக்கும் நீதி' மீதான தர்க்கம் தொடர்பாக, தென் ஆப்பிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட்ட பின் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய காலத்தின் பின் உலக நீதியின் தோற்றம் மாற்றமடைந்து, சில குற்றங்களுக்கு மன்னிப்பை வழங்கமுடியாது என்பது இப்போது பரவலாக இனங்காணப்பட்டுள்ளது. மன்னிப்புக்கள் ஏற்புடைத்தாகாது என்பதை இலங்கை இனங்கண்டுள்ள போதிலும், அதன் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் பொறுப்புக்கூறல் பற்றி அது எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதோடு, எல்...ஈ.
உறுப்பினர்களுக்குச் சிறைவாசம் தவிர்த்த நடவடிக்கைகளை அது தேர்ந்தெடுக்கலாம் எனவும் பொறுப்புக்கூறல் பற்றிய ஏனைய பிரச்சினைகளை ஆராய்வதற்காக எல்.எல்.ஆர்.சி.க்குப் பொறுப்புச் சாட்டலாம் எனவும் அது வாதிடுகிறது. இது தொடர்பாக, எல்...ஈ.க்கு எதிரெதிராய் இலங்கையின் அணுகுமுறை கொலம்பியாவின் நீதி மற்றும் அமைதி பற்றிய சட்டடத்தின் (2005) ஆரம்ப நகலின் சில அம்சங்களுடன் ஒத்திருக்கிறது. அதன் அரசியல் யாப்பு நீதிமன்றத்தால் 2006 இல், நகல் சட்டத்தின் முக்கிய பிரிவுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவனவல்ல எனக் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறைவாசம் அற்ற தீர்ப்புத் தெரிவு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குற்றங்களின் பாரதூரத் தன்மையுடன் ஒத்துப் போவதில்லை எனக் காணப்பட்டுள்ளது. மேலும், உண்மையின் உத்தரவாதம் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு சம்பந்தமாக அச்சட்டம் வலுவாக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் யாப்பு நீதி மன்றம் தேவைப்படுத்தியது.

287.
மேலும், மீறல்களைப் புலனாய்வு செய்து குற்றங்களுக்காக சட்ட நடவடிக்கை எடுத்து, உண்மை மற்றும் இழப்பீட்டை உள்ளிட்ட பாதிக்கப்பட்டோருக்கான ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சர்வதேச தரங்கள் அரசாங்கங்கள் உறுதிப் படுத்துவதைத் தேவைப்படுத்துகின்றன என்பதால் "மீளமைத்தல்' மற்றும் "தண்டனை விதித்தல்' ஆகிய நீதியின் இரண்டுக்கும் இடையில் ஒரு தெரிவு உண்டென்ற யோசனை பொய்யான இரண்டாகப் பிளவு செய்யும் அடிப்படை யைக் கொண்டதாகும். குற்றத்துக்கான நீதி உரிய தண்டனைக்கு அப்பால் பல நோக்கங்களை, முக்கியமாக விதிமுறைகளை வலியுறுத்துவதன் மூலம் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தி ஒரு சமூகத்தினுள் சகல பிரஜைகளுக்கும் அது ஏற்புடைத்தாகும் என்பதை எடுத்துக் காட்டி, எதிர்காலத்தில் அத்தகைய குற்றங்கள் நிகழ்வதைத் தடுப்பதை கொண்டுள்ளதால், குற்றத்துக்கான தண்டனை விதித்தல் என்ற நீதிக்கு அதனைச் சமமமாக் கொள்வது சரியல்ல.

நல்லிணக்க ஆணைக்குழு எமக்கான பதிலை அனுப்பியிருந்தது: (பாகம்) - 16

288.
அபிவிருத்தித் திட்டங்களும் மனிதாபிமான உதவியும் இழப்பீட்டுடன் சரிநிகராய் கொள்ளக் கூடாது என்பதையும் வலியுறுத்த வேண்டியுள்ளது. இழப்பீடுகள் அரசாங்கத்தின் சார்பில் உண்மையென்று ஒப்புக் கொள்வதைப் பிரதிநிதித்துவப் படுத்தல் வேண்டும் என்ப தோடு, மக்களுக்கு அவர்கள் உரிமைகள் மீறப் பட்டதால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொன்றாகும், மனிதாபிமானக் காரணங்களுக்காக அல்ல, அவை முக்கியமாக இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அரசாங்கம் வாதிடுவதைப் போன்று பயங்கரவாதத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு இயலாமல் போனதை விட அப்பால் சென்று போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரிய அளவில் மக்களின் உரிமைகளை அரசாங்கம் நேரடியாக மீறியதை கொண்டிருக்கலாம் என்பதை இவ்வறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

பொறுப்புக்கூறலை மூடி மறைப்பதற்காகவன்றி மீறல்களை உண்மையாகவே ஒப்புக் கொள்வதை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக மற்றும் பாதிக் கப்பட்டோருக்கான பரிகாரமாகவே இலங்கை அரசாங்கம் இழப்பீடுகளைச் செய்ய வேண்டும்.

இழப்பீடாக மற்றும் சமூகத்துக்கான இழப்பீடு போன்ற இழப்பீட்டின் ஒரு பகுதியாக அபிவிருத்தியை மேம்படுத்தல் திட்டங்கள் இருந்த போதிலும், தவறை ஒப்புக் கொள்ளல் இவ்வணுகு றையில் மையமாக இருத்தல் வேண்டும்.

289.
இறுதியாக, ஆர்ஜன்டீனாவில் இருந்து தென் ஆபிரிக்கா வரை மற்றும் மொரோக்கோவில் இருந்து மோ லெஸ்டி வரையிலான ஏனைய பல சமூகங்களில் பாதிக்கப்பட்டோர் குழுக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களினால் பேச்சு வார்த்தை, கலந்தாலோசித்தல் மற்றும் ஆர்வம் ஆகியவற்றுக்கு அதிகரித்த இடவசதியை வழங்கும் சூழ்நிலைப் பொருத்தத்தில் இடைக் கால நீதிச் சட்டகமொன்றினுள் பொறுப்புக்கூறல் துடிப்பானதொரு சிவில் சமூகத்தினால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அத்தகையதொரு முன்னெடுப்புக்கு இலங்கையில் நிலவும் நிலைமை சாதகமாக இல்லை. மேலும் அதிக அரசியல் இடவசதியைத் திறந்து கொடுத்து, சுதந்திரமான விவாதத்தை அனுமதித்து யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது என்ன நடைபெற்றது என்ற உண்மையை ஆவணப்படுத்த சுயாதீன முயற்சிகளுக்கு அனுமதியை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதபட்சம், சிறப்பாகத் திட்ட மிடப்பட்ட இடைக்கால நீதிக்கான அணுகுமுறை பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான மதிப்புக்கான வினைத்திறனுள்ள பங்களிப்பை வழங்க மாட்டாது.

இ. கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு 290. 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த ஒரு வருடத்தின் பின்னர், 2002 ஆம் ஆண்டில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததில் இருந்து 2009 மே மாதம் யுத்தம் முடிவடையும் வரையிலான நிகழ்வுகளை பரிசீலிப்பதற்காக, 1948 இன் விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக் குழுவை எல்.எல்.ஆர்.சி. நியமித்தார். செயலாளர் நாயகம் நாட்டுக் கான விஜயத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து 2009 மே 23ஆம் திகதி இலங்கை அரசாங்கம் செயலாளர் நாயகத்துக்குக் கொடுத்த உறுதிப் பாட்டின் படி, யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட பொறுப்புக்கூறல் சிக்கல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளும் பரவலான சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக மேற்கொண்ட அழுத்தத்தைத் தொடர்ந்து எல்.எல்.ஆர்.சி. அமைக்கப்பட்டது.

291. முன்னாள் சட்ட மா அதிபரான, சித்தன் ரஞ்சன் டி சில்வாவின் தலைமையிலான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு, அதன் வார்த்தைகளில் "இலங்கையின் சகல பிரஜைகளும், இனத்துவம் மற்றும் சமயம் எதுவாக இருந்தாலும், கௌரவத்துடனும் சுதந்திர உணர்வுடனும் வாழ்வதற்காக, யுத்தத்தின் காரண காரியங்கள் மற்றும் மக்கள் மீதான அதன் விளைவுகள் மீது கவனம் செலுத்தி தேசிய ஐக்கியத்தையும் மீளிணக்கப்பாட்டையும் மேம்படுத்துவதை எதிர்பார்க்கிறது'. மேலும் அது, "யுத்தம் கணிசமான அளவு வாழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய தனி மனிதர்களுக்கு இழப்பீட்டுக்கான ஒரு பொறித் தொகுதியினை இனங்காண்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது' கொழும்பைத் தளமாகக் கொண்ட எல்.எல்.ஆர்.சி., அதன் அமர்வுகளை 2010 ஆகஸ்ட் 11ஆம் திகதி ஆரம்பித்ததோடு, ஆரம்பத்தில் 2010 நவம்பரில் அது தனது அறிக்கையை ஜனாதிபதிக்குக் கையளிக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டது. விரைவில், "ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான தொடர்ச்சியான பொது மக்கள் வேண்டுகோள் மற்றும் மேலும் பல மாவட்டங்கள் அத்துடன் இடங்களுக்கு விஜயம் செய்ய வேண்டி ஏற்பட்டது' என விபரித்த ஒரு நிலையை அது எதிர் கொண்டது. எனவே, அதன் ஆணையை நீடிக்கு மாறு ஆணைக்குழு கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக, 2010 நவம்பல், இலங்கை ஜனாதி பதி 2011 மே 15ஆம் திகதி வரை அதன் ஆணையை மேலுமொரு ஆறு மாதத்துக்கு நீடித்தார். மே 2011க்கு அப்பாலும் எல்.எல்.ஆர்.சி.
நீடிக்கப்படுவதற்கான குறிகள் காணப்படுகின்றன.

292.
யுத்தத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு அதன் உள்நாட்டுப் பதிலளிப்புக்கான முக்கிய மானதொரு பொறித்தொகுதி எல்.எல்.ஆர்.சி. என இலங்கை அரசாங்கம் அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளது. சர்வதேச தரங்கள் வழங்கிய சட்டகத்தைப் பிரயோகித்து, அதன் தோற்றம் மற்றும் இன்றுவரையிலான அதன் செயற்பாடுகள் மூலம் எல்.எல்.ஆர்.சி. எந்த அளவுக்குப் பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதியாகவுள்ளது என்பதை குழு மதிப்பீடு செய்துள்ளது. குறிப்பாக, அடிப்படை சிக்கல்களான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எல்.எல்.ஆர்.சி.யின் திறனை அது கவனத்துக்கு எடுத்துக் கொள்கிறது.

293. ஆரம்பத்தில் இருந்தே, அதன் செயற்பாடுகளை மேலும் சிறப்பாக அறிந்து, சிக்கல்கள் மற்றும் கேள்விகளை நேரடியாக ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி மற்றும் சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்கள் அத்துடன் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் ஆகியவை பற்றி எல்.எல்.ஆர்.சி. உடன் கலந்து செயற்பட குழு நாடியது. பலறை முயற்சி செய்தும் அரசாங்கத்துடனான நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு எல்.எல்.ஆர்.சி.யுடன் தொடர்பு கொள்ள அதற்கு முடியவில்லை. எனவே, மாறாக, 2011 ஜனவ 28ஆம் திகதி ராஜதந்திர வழிகள் மூலம் கேள்விகள் தொகுதியொன்றை குழு எல்.எல்.ஆர். சி.க்குச் சமர்ப்பித்தது (இணைப்பு 2.14). 2011 பெப்ரவ 16ஆம் திகதியிடப்பட்ட செயலாளர் நாயகத்துக்கான ஒப்பமிடப்படாத மூன்றாம் தரப்பு ராஜதந்திரக் குறிப்பொன்று மூலம், இலங்கையின் நிரந்தர தூதுக்குழு, அக்கேள்விகள் பலவற்றுக்கான பதிலை, ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பொன்றின் மூலம் அனுப்பி வைத்தது (இணைப்பு 2.15)

294.
இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்டு எல்.எல்.ஆர்.சி.யின் செயற்பாட்டை நேரடியாக அவதானிப்பதற்கு குழுவினால் சாத்தியப்படவில்லை என்ற போதிலும், அரசாங்கத்தின் பதிலுக்கு மேலதிகமாக, குறிப்பாக எல்.எல்.ஆர்.சி. அதன் இணையத்தளத்தில் பகிரங்கமாகப் பிரசுரித்த அமர்வுகளின் எழுத்துப் படிகளைப் பெற்றுக் கொள்ளவும், ஏனைய அரச மூலங்களில் இருந்து இலக்கியங்களுக்கான பிரவேசத்தைப் பெற்றுக் கொள்ளவும் குழுவுக்கு முடிந்தது. அது தேசிய மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளையும் தேசிய மற்றும் சர்வதேச சிவில் சமூகத்தின் சாட்சியத்தையும் எல்.எல்.ஆர். சி.யுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களின் விளக்கங்களையும் பகுப்பாய்வு செய்தது.

295.
இது போன்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது ஆணைக்குழுவாக எல்.எல்.ஆர்.சி. இல்லை. எல்.எல்.ஆர்.சி. இனை உள்ளிட்ட இவ்வாணைக்குழுக்கள் விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (1948) கீழ், பொதுச்சேவைகளின் நிருவாகத்தை மற்றும் அரச ஊழியர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கானதொரு சட்டகத்தை வழங்குவதற்காகவன்றி, அப்படியாக மனித உரிமைகள் மீறல்கள் மீது நடவடிக்கைகை எடுப்பதற்கான பொறித்தொகுதியொன்றாக அமைக்கப்பட வில்லை. ஆயினும், சட்டத்தின் பொதுவான மக்கள் பாதுகாப்பு மற்றும் நலன்புரி உட்பிவு மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான சட்ட அடிப்படையை வழங்குவதற்குப் போதுமானதாக உள்ளது. இச்சட்டம் ஜனாதிபதிக்கு விரிவான அதிகாரங்களை வழங்குவதோடு, அவை கடந்த காலத்தில் ஆணைக்குழுக்களைக் கட்டுப்படுத்தி பாரிய முறையில் அவற்றின் சுயாதீனத் தன்மையையும் தாக்கத்தையும் பாதித்துள்ளது.

296.
பாரிய மற்றும் திட்டமிடப்பட்ட மனித உரிமைகளின் துஷ்பிரயோகம் பற்றிய பொறுப்புக் கூறலுக்கான வேண்டு கோள்களுக்குப் பதில் அளிக்குமுகமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்ச்சியாக சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடியவை என்ற அனுபவம் உண்டு.

30 வருடக் காலப்பகுதியொன்றில் 1977 சன் சோனி ஆணைக்குழுவுடன் ஆரம்பித்து, இவ் வாணைக்குழுக்கள் பல தவறுகள் காரணமாக அவற்றின் நடவடிக்கைகளைச் சரிவரச் செய்ய முடியாமலிருந்துள்ளன. இப்பாரிய கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், சில ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறிவதில் ஓரளவு மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய முக்கியமான பந்துரை களைச் செய்துள்ளன. இருந்தபோதிலும், குழு முன்னிலையில் உள்ள தகவலின் படி, 1977 இல் இந்த ஆரம்பப் பொறித்தொகுதி ஆரம்பிக்கப்பட்ட 33 வருடக் காலப்பகுதியில், ஆணைக்குழுவொன்றின் கண்டுபிடிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் தனி நபர் அல்லது அமைப்பு மட்டத்தில் மிகக் குறைந்த அளவிலான பொறுப்புக்கூறலை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளன. சர்வதேசத் தரங்களுடன் ஒத்திருக்கும் விதத்தில் பொறுப்புக் கூறல் விடயங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றன் பின் ஒன்றாக பதவிக்கு வந்த அரசாங் கங்கள் காட்டிய அரசியல் மனவுறுதிப்பாடின்மை இந்த முன்னைய செயற்பாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய முக்கிய பாடங்களாக வுள்ளன. எல்.எல்.ஆர்.சி. எவ்வளவு தூரத்துக்கு உண்மையான பொறுப்புக் கூறலுக்கான பங்களிப்பை வழங்குவதற் கான நிலைச்சக்தியைக் கொண்டிருப்பது என் பதை மதிப்பீடு செய்வதற்கு இந்த கடந்த கால அனுபவம் தோதான தாயிருக்கிறது.

1. எல்.எல்.ஆர்.சி.இன் ஆணை

297.
பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதியாகச் எல்.எல்.ஆர்.சி. இன் நிலைத்தகவினை மதிப்பீடு செய்வதற்கு அதன் ஆணை முக்கிய ஆக்கக்கூறுகளை வழங்குகிறது. 2010 மே 15ஆம் திகதி ஜனாதிபதி ஆணையில் குறித்துள்ளபடி, எல்.எல்.ஆர்.சி. "2002 பெப்ரவ 21 ஆம் திகதி மற்றும் 2009 மே 19ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலான பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அதாவது: (டி) 2002 பெப்ரவ 27ஆம் திகதி அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்கு வழிகோலிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் மற்றும் 2009 மே 19ஆம் திகதி வரை அதன் பின்னர் நிகழ்ந்த நடவடிக்கைளின் தொடர்; (டிடி) இது தொடர்பாக ஏதும் ஒரு நபர், குழு அல்லது நிறுவாகம் நேரடியாக அல்லது மறைகமாக ஏற்கவேண்டிய பொறுப்பு; (டிடிடி) மீண்டும் நேராமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நாம் அந்நிகழ்வில் இருந்து மற்றும் அவற்றுடன் சார்ந்த அவதானங்கள் தொடர்பில் கற்கக் கூடிய பாடங்கள்; (டிதி) அந்நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட ஏதும் நபர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்போர் அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டினை செயற்படுத்தக் கூடிய முறைமைகள்; (தி) அத்தகைய அவதானங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நேர்வதைத் தடுப்பதற்காக, சகல சமூகங்களுக்கிடையேயும் மேலும் தேசிய ஐக்கியம் அத்துடன் மீளிணக்கப்பாட்டை மேம்படுத்து வதற்காக மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிறுவக, நிருவாக மற்றும் சட்டவாக்கு நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகள்.; 298. அதன் ஆணைக்கு எவ்வாறு அது விளக்கமளிக்கிறது என்பதை எல்.எல்.ஆர்.சி. தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதோடு, அதன் முன் ஆஜராக விரும்புவோருக்கு இவ்விட யத்தில் ஏதும் வழிகாட்டல்களை வழங்கவுமில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்வியைத் "தொடர்ந்து வந்த நிகழ்வுகளின் தொடர்' பற்றி ஆராய்வதற்காக தெளிவாக எல்.எல்.ஆர்.சி.
பணிக்கப்பட்ட போதிலும், அதன் ஆணையின் விதிகள் பொறுப்புக்கூறலை பொதுவான சொற்களில் அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களைக் குறிப்பாகவோ தெளிவான முறையில் அணுகவில்லை.

299.
எல்.எல்.ஆர்.சி.இனைக் குழு நேரடியாகச் சந்திக்க முடியாதிருந்ததால், எல்.எல்.ஆர்.சி. பற்றிய குழுவின் கேள்விகளுக்கு ஜனாதிபதிச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தின் எழுத்து மூலமான பதில்கள் மற்றும் பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது சட்ட மா அதிபர் இவ்விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய கருத்துக்கள் மீது குழு மாறாகத் தங்கியிருந்தது. உண்மையிலேயே யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயங்களை ஆராய்வதற்கான ஆணை எல்.எல்.ஆர்.சி.க்கு வழங்கப்பட்டுள்ளதாக விளக்கிய சட்ட மா அதிபர், பொறுப்புக்கூறல் பற்றிய கருத்து பொறுப்புடன் சமமானதொன்றாகும் என உறுதிப்படுத்தி ஆணைக்குழு அத்தகைய ஏதும் விடயங்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெவித்தார்.

ஆயினும், சர்வதேசத் தரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மீறலுக்குப் பொறுப்பு எனக் காணப்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விளைவுகளை அமர்த்துவதன் மூலம் பொறுப்புக்கூறல் முன் செல்வதால், இரு மன வுருக்களும் நன்கு வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. பொறுப்பினைச் சாட்டுவது பொறுப்புக் கூறலுக்கு நிலைச்சக்திகொண்ட முக்கியமான முன் நிபந்தனையாக இருந்த போதிலும், மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரிய மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய கடமையிலிருந்து அது ஒரு அரசாங்கத்தை விடுவிக்காது.

300.
தென் ஆபிரிக்காவின் .ஆர்.சி. மற்றும் ஐக்கிய இராஜதானியின் ஈராக் பற்றிய விசாரணை (சில்கொட் விசாரணை) ஆகியவற்றின் அனுபவத்தை அரசாங்கம் பெற்றதாகக் குறிப்பிட்ட சட்ட மா அதிபர், எனவே அவ்வமைப்புக்களுக்குச் சமமானதொன்றாக எல்.எல்.ஆர்.சி. கணிக்கப்பட வேண்டும் என்றார். ஆயினும், இரு விடங்களிலும் முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலே கூறப்பட்டது போன்று, எல்.எல்.ஆர்.சி.க்கு முற்றிலும் மாறுபட்டதாக, சம்பந்தப்பட்ட ஆட்களின் மற்றும் நிறுவனங்களின் அடையாளத்தை உள்ளிட்ட பாரிய மனித உரிமைகள் மீறல்களைப் புலனாய்வு செய்வதற்கு தென் ஆபிரிக்க .ஆர். சி.க்குத் தெளிவானதொரு ஆணை வழங்கப்பட்டி ருந்தது. இதுபோன்று சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட சிலி மற்றும் கென்யா போன்ற ஏனைய உதாரணங்கள் உள்ளிட்ட, ஏனைய நாடுகள் அபிவிருத்தி செய்த சிறந்த பழக்கங்கள் அவர்களது ஆணைக்குழுக்களுக்கு பாரிய மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் மீறல்களைப் புலனாய்வு செய்யுமாறு ஆணையை வழங்கியிருந்தன.

--தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும்..

(101-200) பாகம் 2 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html

(1-100) பாகம் 1 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html

நன்றி:
வீரகேசரி இதழ்
http://tamilweb.do.am/news இணையதளத்தில் இருந்து எடுத்து இங்கு மறு பதிவிடப்பட்டுள்ளது.